முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரோகிணி- 2.
செவ்வாய்: உத்திரட்டாதி- 2.
புதன்: கிருத்திகை- 2.
குரு: உத்திரட்டாதி- 2.
சுக்கிரன்: அஸ்வினி- 2.
சனி: அவிட்டம்- 3.
ராகு: கிருத்திகை- 1.
கேது: விசாகம்- 3.
கிரக மாற்றம்:
வைகாசி 20 (3-6-2022) புதன்
வக்ர நிவர்த்தி (பகல் 1.31).
வைகாசி 21 (4-6-2022) சனி
வக்ர ஆரம்பம் (பின்னிரவு 2.35).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
29-5-2022 பகல் 11.15 மணிக்கு ரிஷபம்.
31-5-2022 மாலை 11.30 மணிக்கு மிதுனம்.
3-6-2022 பகல் 12.20 மணிக்கு கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி குடும்பத் தேவைகள் அனைத் தையும் பூர்த்திசெய்ய முடியும். எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் உங்களது சங்கடங்கள் குறையும். எதிலும் துணிவோடு செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காணமுடியும். ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால், நீங்கள் எவ்வளவுதான் நிதானமாக செயல்பட்டாலும் தேவையற்ற சிக்கல்கள தேடிவரும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கான பலனை அடையும் வாய்ப்புண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான ஆர்டர்களைக்கூட எளிதில் செய்துமுடித்து லாபத்தை ஈட்டமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் அதிக முதலீடுகள் கொண்ட செயல் களைத் தற்போதைக்குத் தவிர்ப்பது நல்லது. வெளியூர்ப் பயணங்கள் மூலம் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எடுத்த பணியை சிறப்பாகச் செய்துமுடிக் கும் யோகமிருந்தாலும், வேலைப் பளு காரணமாக உடல் அசதி, உடன் வேலை செய்பவர்களால் சற்று மன உளைச்சல் ஏற்படும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும் என்பதால், மேற்கூறிய நாட்களில் முக்கிய செயல்களில் ஈடுபடுவது நல்லது. வேங்கடாசலபதி தரிசனம் செய்வது, ராகு காலங்களில் துர்க் கையம்மனுக்கு விளக்கேற்றுவதன் மூலம் கெடுதிகள் குறையும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 11-ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் பெயர், புகழ், அந்தஸ்து மேலோங்கும். பண வரவு மிகமிக நன்றாக இருந்து கடந்தகாலக் கடன்கள் குறைவது மட்டுமல்லாமல், முதலீடு செய்யு மளவுக்கு தாராள தனவரவு ஏற்படும். உங்களின் நீண்டநாள் கனவுகள் அனைத்தையும் வரும் நாட்களில் பூர்த்திசெய்ய முடியும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி நிம்மதியடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். சூரியன், புதன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டும் வாய்ப்புண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த வங்கி உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பதால் தொழிலை விருத்தி செய்யமுடியும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் கூட தற்போது நிலைமையை உணர்ந்து நட்பாகப் பழகுவார்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் திறமைகளைக் காட்ட சிறப் பான வாய்ப்புகள் கிடைக் கும். எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைத்து சிலருக்கு குடும்பத்துடன் இணையும் யோகமுண்டு. கடந்த காலங்களில் நீங்கள் உழைத்த உழைப்பிற்கான சன்மானம் தற்போது கிடைப்பதால் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். இவ்வாரத் தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்கள் மிகவும் சாதகமாக இருக்குமென்பதால், மனை வாங்க நினைப் பவர்கள் தற்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்லது ந
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரோகிணி- 2.
செவ்வாய்: உத்திரட்டாதி- 2.
புதன்: கிருத்திகை- 2.
குரு: உத்திரட்டாதி- 2.
சுக்கிரன்: அஸ்வினி- 2.
சனி: அவிட்டம்- 3.
ராகு: கிருத்திகை- 1.
கேது: விசாகம்- 3.
கிரக மாற்றம்:
வைகாசி 20 (3-6-2022) புதன்
வக்ர நிவர்த்தி (பகல் 1.31).
வைகாசி 21 (4-6-2022) சனி
வக்ர ஆரம்பம் (பின்னிரவு 2.35).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
29-5-2022 பகல் 11.15 மணிக்கு ரிஷபம்.
31-5-2022 மாலை 11.30 மணிக்கு மிதுனம்.
3-6-2022 பகல் 12.20 மணிக்கு கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி குடும்பத் தேவைகள் அனைத் தையும் பூர்த்திசெய்ய முடியும். எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் உங்களது சங்கடங்கள் குறையும். எதிலும் துணிவோடு செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காணமுடியும். ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால், நீங்கள் எவ்வளவுதான் நிதானமாக செயல்பட்டாலும் தேவையற்ற சிக்கல்கள தேடிவரும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கான பலனை அடையும் வாய்ப்புண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான ஆர்டர்களைக்கூட எளிதில் செய்துமுடித்து லாபத்தை ஈட்டமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் அதிக முதலீடுகள் கொண்ட செயல் களைத் தற்போதைக்குத் தவிர்ப்பது நல்லது. வெளியூர்ப் பயணங்கள் மூலம் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எடுத்த பணியை சிறப்பாகச் செய்துமுடிக் கும் யோகமிருந்தாலும், வேலைப் பளு காரணமாக உடல் அசதி, உடன் வேலை செய்பவர்களால் சற்று மன உளைச்சல் ஏற்படும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும் என்பதால், மேற்கூறிய நாட்களில் முக்கிய செயல்களில் ஈடுபடுவது நல்லது. வேங்கடாசலபதி தரிசனம் செய்வது, ராகு காலங்களில் துர்க் கையம்மனுக்கு விளக்கேற்றுவதன் மூலம் கெடுதிகள் குறையும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 11-ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் பெயர், புகழ், அந்தஸ்து மேலோங்கும். பண வரவு மிகமிக நன்றாக இருந்து கடந்தகாலக் கடன்கள் குறைவது மட்டுமல்லாமல், முதலீடு செய்யு மளவுக்கு தாராள தனவரவு ஏற்படும். உங்களின் நீண்டநாள் கனவுகள் அனைத்தையும் வரும் நாட்களில் பூர்த்திசெய்ய முடியும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி நிம்மதியடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். சூரியன், புதன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டும் வாய்ப்புண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த வங்கி உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பதால் தொழிலை விருத்தி செய்யமுடியும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் கூட தற்போது நிலைமையை உணர்ந்து நட்பாகப் பழகுவார்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் திறமைகளைக் காட்ட சிறப் பான வாய்ப்புகள் கிடைக் கும். எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைத்து சிலருக்கு குடும்பத்துடன் இணையும் யோகமுண்டு. கடந்த காலங்களில் நீங்கள் உழைத்த உழைப்பிற்கான சன்மானம் தற்போது கிடைப்பதால் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். இவ்வாரத் தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்கள் மிகவும் சாதகமாக இருக்குமென்பதால், மனை வாங்க நினைப் பவர்கள் தற்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்லது நடக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு, மகாவிஷ்ணுவை தரிசிப்பது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
சர்ப்ப கிரகமான ராகு, சுக்கிரனுடன் 11-ல் சஞ்சரிப்பதால் எதிலும் துணிவோடு செயல் பட்டு இலக்கை அடைவீர்கள். உடனிருப்பவர் களின் உதவியால் சமுதாயத்தில் நல்ல நிலையை எட்டும் யோகமுண்டு. செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் மட்டும் கவனமாக செயல்பட்டால் நிலைமையை சமாளித்து அனுகூலங்களை அடையமுடியும். சூரியன், புதனுடன் 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொண்டு சிக்கனத்தோடு இருப்பது நல்லது. கையிருப்பைக் கொண்டு செலவுசெய்தால் தேவையற்ற கடன் பிரச்சினைகளில் சிக்குவ தைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத் தில் சூழ்நிலைக்குத் தக்கவாறு யோசித்து செயல் பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடி யும். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பார் கள். சற்று நெருக்கடியான நேரமென்பதால் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் முடிந்தவரை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வது உத்தமம். தொழிலுக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்காது. உத்தியோகத்தில் இருப்பவர் கள் அதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டால் எதையும் சமாளிக்கமுடியும். சக ஊழியர்களை நம்பி முக்கிய விஷயங்களைப் பேசினால் வீண் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். இவ்வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். சூரிய நமஸ்காரம், தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
தனாதிபதி சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குரு 9-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணவரவுகள் நன்றாக இருந்து அனைத்து விதமான குடும்பத் தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமல்லாமல், நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத பிரச் சினைகள் எல்லாவற்றுக் கும் வரும் நாட்களில் தீர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உட னிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எதிர் பார்த்த அரசு உத்தரவுகள் தற்போது கிடைக்கும். கடந்த காலங்களில் வராமலிருந்த பணம் தற்போது வந்து உங்களின் நீண்டநாள் பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் தீரும். வெளியூர், வெளி மாநிலங்கள் மூலமாக மிகச்சிறப்பான வாய்ப்பு கள் கிடைக்கும். உத்தி யோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிக் காட்டுவதற்கு நல்ல வாய்ப்புகள் ஏற்படும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு தகுதிக் கேற்ற வாய்ப்பு தற்போது கிடைக்கும். சனி 8-ல் இருப்பதால் உடல்நலத்தில் சற்று அக்கறை செலுத்துவது, வாகனங்களில் நிதானத் தோடு செல்வது உத்தமம். ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் மிகவும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்வது, உக்ர தெய்வங்களை வழிபடுவது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசிநாதன் சூரியன், தன- லாபாதிபதி புதன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். குரு 8-ல் இருப்பதால் பொருளாதாரரீதியாக சற்று தேக்கநிலை இருந்தாலும், எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளும் பலம் ஏற்படும். உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலம் ஆதாயமடைவீர்கள். பெண்களின் உதவியால் உங்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக் கும். பெற்றோர் வழியில் அனுகூலமான பலன் களை அடையமுடியும். ராசிக்கு 7-ல் சனி, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் கணவன்- மனைவி யிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது, குடும்ப உறுப்பினர் களின் ஆரோக்கியத் திற்கு முக்கியத்துவம் தருவது நல்லது. உங்க ளின் உடல் நலத்திற்கும் சற்று நேரம் ஒதுக்குவது நன்று. தொழில், வியாபாரத்தில் முனைப் புடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல் படவும். வேலையாட்கள் சில இடர்ப்பாடுகளை ஏற்படுத்தினாலும் உங்களின் தனித்திறமை யால் எதையும் எதிர்கொள்வீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் தேவையற்ற அலைச்சல், உடல் அசதி, உடனிருப்பவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் எதிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது உத்தமம். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றுவது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருந்து அனைத்து வகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள். நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகமும் உண்டாகும். சூரியன் பாக்கிய ஸ்தானத் தில் ராசியாதிபதி புதனுடன் இருப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலம் ஏற்றங்களை அடையும் வாய்ப்புண்டு. ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது, உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அஜீரணக் கோளாறு, வயிறு சம்பந்தபட்ட உபாதைகள் ஏற்படலாம் என்பதால், உணவு விஷயத்தில் கவனத்துடனும், கட்டுப்பாடுடனும் இருப்பது உத்தமம். ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களைப் போட்டு அதில் வெற்றிபெறும் வாய்ப்புண்டு. தொழிலில் லாபங்கள் அதிகப்படியாகக் கிடைத்து கடந்த காலங்களில் வாங்கிய கடன்களை பைசல் செய்யமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருப்பதால் எதிலும் நிம்மதியுடன் இருக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படும் மனநிலை ஏற்படும். உங்களுக்குத் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்திய சக ஊழியர்கள் தற்போது உதவியாக இருப்பார்கள். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு, கிருத்திகையன்று முருகனுக்கு விரதமிருப்பது நன்று.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதா லும், உங்கள் ராசிக்கு 2, 7-க்கு அதிபதியான செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். குரு 6-ல் சஞ்சரிப்பதாலும், சூரியன் 8-ல் சஞ்சரிப்ப தாலும் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக் கமான நிலை, நெருங்கியவர்களால் நிம்மதிக் குறைவு ஏற்படும். குறிப்பாக கணவன்- மனைவி யிடையே ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு நடந்தால் பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். சந்தர்ப்ப சூழ்நிலையைப் புரிந்து கொண்டு செலவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் தேவையற்ற கடன்களைத் தவிர்க்கமுடியும். வயதில் மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக பூர்வீக சொத்து வழியில் பங்காளி களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சிந்தித்துச் செயல்படுவது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்சமயத்துக்குத் தள்ளிவைப்பது உத்தமம். ஒருசில இடைத்தரகர்கள் செய்யும் செயல் களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் தட்டிப்போகும். உத்தியோகஸ் தர்கள் மற்றவர்கள் சொல்லும் கருத்துகளைக் கேட்டு குழப்பிக்கொள்ளாமல் உங்கள் பணியில் மட்டும் கவனமாக செயல்பட்டால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. வெள்ளி, சனிக்கிழமைகளில், பிரதான கிரகங்கள் சாதகமற்றிருந்தாலும் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சிவத் தலங்களுக்குச் சென்று வருவது, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது நல்லது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் எல்லா வகையிலும் பொருளாதாரரீதியாக சுபிட்சமாக இருப்பீர்கள். கடந்தகால கடன்களை பைசல் செய்வது மட்டுமல்லாமல் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக விலகி மன நிம்மதி ஏற்படும். நீண்டநாட்களாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். ராசிக்கு 4-ல் சனி, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள், குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். சற்று பொறுமையோடு விட்டுக் கொடுத்துச் சென்றால் சகல சௌபாக்கியங் களையும் அடையமுடியும். தொழிலில் நீண்ட நாள் கனவுகளெல்லாம் நிறைவேறக்கூடிய காலமாக இருக்கும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் சென்றால் மிகவும் அனுகூல மான பலன்களை அடையலாம். தொழில் வளர்ச்சிக்காக வெளியாட்களிடம் எதிர் பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் கூடுதல் நேரம் பணிபுரிய நேர்ந்தாலும் அதற்கான சன்மானத்தை அடைய முடியும். எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர் கள். வாகனங்கள் மூலமாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள் ளும் அனைத்து செயல்களும் பரிபூரண வெற்றி யைத் தரும். நரசிம்மரை வழிபடுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்வதன் மூலமாக நன்மையை அடைய முடியும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
சூரியன் 6-ல் சிறப்பாக சஞ்சரிப்ப தால் கடந்தகால சிக்கலி-ருந்து விடுபட்டு கௌரவமான நிலையினை எட்டமுடியும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் புதிய முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால், குடும்பத்தில் சுபிட்சம், சுபகாரியங்கள் கைகூடி மனநிம்மதி ஏற்படும் நிலை இவ்வாரத்தில் உண்டு. கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாகத் தீராத பிரச்சினைகள் தற்போது முடிவுக்கு வரும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. தொழில்ரீதியாக உங்களுக்கிருந்த சோதனைகள் படிப்படியாகக் குறைந்து மனநிம்மதி ஏற்படும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் புதிதாகத் தொழிலில் இணைவார்கள். வேலை யாட்கள் உங்களிடம் வைத்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்ற முடியும். உடல்நலத்தில் சற்று அக்கறை செலுத்துவது, இயற்கை உணவு களை உட்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் எதிர்பார்த்த பதவி உயர்வை அடையமுடியும். மற்றவர்கள் பணியை எடுத்துச் செய்யவேண்டிய நிலை இருந்தாலும், அதன்மூலம் ஒரு நல்ல ஆதாயம் கிடைக்கும். அதிகாரிகள் சொல்படி நடந்து கொண்டால் விரைவில் நல்ல உயர்வினை எட்டமுடியும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். முருகனைப் பிரார்த்திப்பது, அஷ்ட லட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஏழரைச்சனி நடப்பதாலும், மூன்றில் குரு சஞ்சரிப்பதாலும் பொருளாதாரரீதியாக நெருக்கடி, உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். எந்தவொரு செயலி லும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் தான் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்போதைக்குத் தவிர்ப்பது நல்லது. ராசிக்கு 3-ல் செவ்வாயும், 4-ல் சுக்கிர னும் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடி கள் இருந்தாலும் தொழில், வியாபாரத்தில் உங்களின் சாமர்த்தியத்தால் ஒருசில அனுகூலங் களை அடைவீர்கள். வேலையாட்கள் சில நேரங்களில் சரிவர ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதால், நீங்கள் கால நேரம் பார்க்காமல் முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க முடியும். தொழிலுக்கு சம்பந்தமில்லாத ஆட்கள் ஏற்படுத்தும் இடையூறுகளால் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல் உங்கள்மீது வீண் பழிச்சொற்களும் ஏற்படும். வெளிநபர்களிடம் எதையும் பேசாமலிருந்தால் சூழ்நிலையை சமாளிக்கமுடியும். இவ்வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய யோகமுண்டு. சனிக்கிழமை சனிபகவானுக்கு எள்தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்வதன்மூலம் சங்கடங்கள் குறையும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
குரு பகவான் 2-ல், ராகு 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுக்கு எந்தவிதத்திலும் குறையிருக்காது. நினைத்த காரியத்தை எதிர்பார்த்ததைவிட சிறப்பாகச் செய்துமுடித்து எல்லா வகையிலும் வளர்ச்சியடைவீர்கள். ஏழரைச்சனி நடப்பதாலும், சூரியன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் தேவையில்லாத அலைச்சல், உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால், உடல் நலத்திற்கு முக்கியத்துவம் தருவது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. தாராள தனவரவால் குடும்பத்திற்குத் தேவையான நவீனப் பொருட்களை வரும் நாட்களில் வாங்கும் வாய்ப்பேற்படும். சிலருக்கு அசையா சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் வாங்கிய கடன்களைத் தற்போது பைசல் செய்யமுடியும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வங்கிக் கடன்கள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். நெருங்கிய நண்பர்களின் ஆலோசனையால் எடுத்த ஆர்டர்களை சிறப்பாகச் செய்துமுடித்து சமுதாயத்தில் தொழில்ரீதியாக ஒரு கௌரவ நிலையை அடைவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கடந்தகாலப் பிரச்சினைகள் விலகி நிம்மதியுடன் பணிபுரியமுடியும். வெள்ளி, சனிக்கிழமைகளில் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்ததைவிட சிறப்பான பலன்கள் கிடைக்கும். நெருங்கியவர்களின் உதவியால் ஏற்றங்களை அடைவீர்கள். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் சிக்கனமாக செயல்பட்டால் எதையும் எதிர்கொள்ள முடியும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் ராகு சஞ்சரிப்பதால், எதிலும் உணர்ச்சிவசப்படாமல் சற்றுப் பொறுமையோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில்ரீதியாக சற்று முனைப்புடன் செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். வேலையாட்கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் நீங்கள் முன்னின்று செயல்படுவது நல்லது. தொழில் விஷயங்களை புதிய நபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது மிகவும் உத்தமம். அரசாங்க வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் தற்போது கிடைத்து நிம்மதி கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு மிகவும் கவனமாக செயல்படவேண்டிய நேரமாகும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்குமென்றாலும் வேலைப்பளு கூடுதலாகவே இருக்கும். வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும் நேரமென்பதால் சற்று கவனத்தோடு செயல்பட்டால் பொருளாதாரப் பிரச்சினைகளை சமாளித்துவிடலாம். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாயன்று எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கும். துர்க்கையம்மனை வழிபடுவது, கிருத்திகையன்று விரதமிருப்பது நல்லது.