முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: பூராடம்- 1.
சந்திரன்: கேட்டை- 2.
செவ்வாய்: பூசம்- 2 (வ).
புதன்: கேட்டை-2.
குரு: ரோகிணி- 3 (வ).
சுக்கிரன்: அவிட்டம்- 3.
சனி: பூரட்டாதி- 1.
ராகு: உத்திரட்டாதி- 2.
கேது: உத்திரம்- 4.
கிரக மாற்றம்:
4-1-2025 தனுசு புதன் பகல் 12.05 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: விருச்சிகம்
29-12-2024 இரவு 11.22 மணிக்கு தனுசு.
1-1-2025 காலை 6.01 மணிக்கு மகரம்.
3-1-2025 பகல் 10.47 மணிக்கு கும்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் கேது, லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். இருக்கும் இடத்தில் உங்களுடைய செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய நேரமாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். சூரியன் 9-ல் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நேரமாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக விளங்கி நல்ல மதிப்பெண்களை எடுத்து பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்று.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3, 4.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் புதன், 10-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகங்கள் வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். கூட்டாளிகள்மூலமாக ஆதாயம் அடையக்கூடிய நேரமாகும். நவீனகரமான பொருட்களை வாங்குவதன்மூலம் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் அமையும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த தேவையற்ற பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். உடன்பிறந்தவர்கள்மூலமாக ஒருசில ஆதாயங்கள் அடையக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்றங்களை அடைய முடியும்.
வெற்றி தரும்
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: பூராடம்- 1.
சந்திரன்: கேட்டை- 2.
செவ்வாய்: பூசம்- 2 (வ).
புதன்: கேட்டை-2.
குரு: ரோகிணி- 3 (வ).
சுக்கிரன்: அவிட்டம்- 3.
சனி: பூரட்டாதி- 1.
ராகு: உத்திரட்டாதி- 2.
கேது: உத்திரம்- 4.
கிரக மாற்றம்:
4-1-2025 தனுசு புதன் பகல் 12.05 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: விருச்சிகம்
29-12-2024 இரவு 11.22 மணிக்கு தனுசு.
1-1-2025 காலை 6.01 மணிக்கு மகரம்.
3-1-2025 பகல் 10.47 மணிக்கு கும்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் கேது, லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். இருக்கும் இடத்தில் உங்களுடைய செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய நேரமாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். சூரியன் 9-ல் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நேரமாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக விளங்கி நல்ல மதிப்பெண்களை எடுத்து பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்று.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3, 4.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் புதன், 10-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகங்கள் வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். கூட்டாளிகள்மூலமாக ஆதாயம் அடையக்கூடிய நேரமாகும். நவீனகரமான பொருட்களை வாங்குவதன்மூலம் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் அமையும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த தேவையற்ற பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். உடன்பிறந்தவர்கள்மூலமாக ஒருசில ஆதாயங்கள் அடையக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்றங்களை அடைய முடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 3, 4.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொள்வது, எதிலும் சற்று யோசித்து செயல்படுவது உத்தமம். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக ஏற்றங் கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாகும். பிள்ளைகள் வழியில் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மனக்கவலைகள் எல்லாம் முழுமையாக விலகி அனுகூலங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைக் குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 31.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் புதன், ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய நேரமாகும். எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9-ல் ராகு சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்துவந்த பிரச்சினைக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த போட்டிகள் விலகி போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப் பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்வார்கள். இந்த வாரத்தில் காலபைரவர் வழிபாடு மேற்கொள்வது, முருகன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 30, 31, 1, 2.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 10-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களின் அன்றாட தேவைகள் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒருவருக்கொருவர் சுயகௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். சில விஷயங்களில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலம் இக்கட்டான நேரத்தில் அவர்களது உதவி எளிதில் கிடைக்கப்பெற்று அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய பணியும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் சில நேரங்களில் ஞாபகம் மறதி காரணமாக நல்ல மதிப்பெண்கள் எடுக்க இடையூறுகள் ஏற்படும். இந்த வாரத்தில் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3, 4.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக, ஸ்தானமான 6-ல் சனி, லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் சாதகமாக இருந்து மன நிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 7-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். குரு பகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள்கூட தேவையற்றவகையில் இடையூறுகள் ஏற்பட்டு உங்களது மன அமைதியைக் குறைக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைக்கும் என்றாலும் சில நேரங்களில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்படவேண்டிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச்சொற்களை சொல்வார்கள். மாணவ- மாணவியர்கள் பொழுது போக்கு விஷயங்களில் நேரத்தை செல விடுவதைவிட பயனுள்ள காரியங்களுக்கு நேரத்தை செலவிட வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 3, 4.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சனி சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதும், முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் ஏற்படும். பொன்னவன் என போற்றப் படக்கூடிய குருபகவான் தற்போது 8-ல் இருந்தாலும் வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் கிடைக்கும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழில் இணைவதால் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல விடிவு காலம் ஏற்படும். புதிய வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத் தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் எதையும் எளிதில் புரிந்துகொண்டு சிறப்பான மதிப்பெண்களை எடுத்து பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். இந்த வாரத்தில் லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபடுவது அனுகூலங்களை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 30, 31.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருக்க வேண்டும். குடும்பத்தில் நெருங்கிய வர்களை அனுசரித்துச் செல்வது, முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். குறிப்பாக சில விஷயங்களில் கௌரவம் பார்க்காமல் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருநல்ல நிலையை அடையமுடியும். முடிந்தவரை வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்துவது தற்போதைக்கு நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தேவையற்ற அவப்பெயர்கள் வரும் என்பதால் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இந்த வாரத்தில் காலபைரவரை வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 1, 2.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் சற்று பொறுமையோடு செயல்படவேண்டும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, இரவு நேரப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் சனி வலுவாக சஞ்சரிப்பதாலும், 6-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதாலும் இக்கட்டான நேரத்தில் பணவரவுகள் தக்கநேரத்தில் கிடைத்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் சின்னசின்ன நெருக்கடிகள் இருந்தாலும் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள் என்றாலும் சில நேரங்களில் அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு சற்று பொறுமையோடு நடப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் பழகக்கூடிய மாணவ- மாணவிகளால் சின்ன சின்ன பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். முருக வழிபாடு மேற்கொள்வது, வெங்கடேசப் பெருமாளைத் தரிசிப்பது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 30, 31, 3, 4.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தற்போது குருபகவான் வக்ரகதியில் இருப்பதாலும் மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 12-ல் சஞ்சரிப்பதாலும் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். எளிதில்முடிய வேண்டிய காரியங்கள்கூட சற்று தாமதமாகும். எதிர்பார்க்கின்ற பணவரவுகள் கிடைப்பதில் தாமதநிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். நியாயப்படி உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஒரு நல்ல வாய்ப்புகள்கூட தாமதப்படும். முடிந்தவரை சில விஷயங்களில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது வீண் பிரச்சினையை குறைத்துக்கொள்ள உதவும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகரிப்பது மட்டுமில்லாமல் அதன் காரணமாக ஓய்வுநேரம் குறையும். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது தற்போதைக்கு நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் சக மாணவ- மாணவியர்கள் உங்கள்மீது வீண்பழிச்சொற்களை சொல்வார்கள். எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 1, 2.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் செவ்வாய், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய யோகங்கள் உங்களுக்கு இருக்கிறது. சட்டரீதியாக உங்களுக்கு இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த வீண்செலவுகள் குறைந்து சேமிக்கக் கூடிய அளவிற்கு ஒரு சாதகமான சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு கௌரவமான நிலையினை அடையக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்கி பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய ஒரு காலமாகும். மாற்றுத் திறனாளி களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, காலபைரவரை தரிசிப்பதன்மூலம் வளமான பலனை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 31, 3, 4.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 9-ல் புதன், 10-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொண்டு ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுகளால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோனியம் அதிகரிக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பூர்வீக சொத்துவகையில் இருந்துவந்த பிரச்சினைக்கு தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகரீதியாக மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு இருந்தால் வளமான பலன்களைப் பெறலாம். இந்த வாரத்தில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 30, 31, 1, 2.