முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மகம்- 4.
செவ்வாய்: ரோகிணி- 1.
புதன்: உத்திரம்- 4.
குரு: உத்திரட்டாதி- 3 (வ).
சுக்கிரன்: ஆயில்யம்- 3.
சனி: அவிட்டம்- 2 (வ).
ராகு: பரணி- 3.
கேது: விசாகம்- 1.
கிரக மாற்றம்:
ஆவணி 15 (31-8-2022) சிம்ம சுக்கிரன் (மாலை 4.18).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்.
29-8-2022 அதிகாலை 4.15 மணிக்கு கன்னி.
31-8-2022 பகல் 12.03 மணிக்கு துலாம்.
2-9-2022 மாலை 5.55 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத்தோடு செயல் பட்டால் நற்பலன்களைப் பெறலாம். பிறர் விஷயத்தில் தலையிடாமல் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிரதான கிரகங்களான குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிக நன்றாக இருக்கும். சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதால் நவீன பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். பூர்வீக சொத்துவகையில் ஆதாயங்களை அடை வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைத் தக்க நேரத்தில் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால பிரச்சினைகள் குறைந்து நல்ல லாபத்தை அடையும் வாய்ப்புண்டு. வேலையாட்கள் உறுதுணை யாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் அமையும். வேலை நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த இடமாற்றங் களைப் பெறமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எந்தவொரு பணியையும் குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல்ரீதியாக பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்போதைக்குத் தவிர்ப்பது உத்தமம். புதன்கிழமை முதல் சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக் கடிகள் இருந்தாலும் இலக்கை அடைந்து விடுவீர்கள். பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதன் 5-ல் ஆட்சி, உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் சாமர்த்தியமாக செயல் பட்டு பொருளாதார அனு கூலங்களைப் பெறுவீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் சேமிக்கமுடியும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் வியக்கத்தக்க ஆதாயங்களை அடைவீர்கள். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றிகாணமுடியும். வேலை யாட்கள் ஒத்துழைப்பு சொல் லிக்கொள்ளும்படி இல்லா விட்டாலும், நிலைமையை சிறப்பாகக் கையாண்டு லாபத்தை அடைவீர்கள். உத்தியோகரீதியாக உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கமுடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மனக்கவலைகள் விலகி நிம்மதி உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளைப் பராமரிப்பதற்காக சுபச் செலவுகள் செய்ய நேரிடும். பங்காளிவகையில் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் தற்போது முடிவுக்கு வந்து மன அமைதி ஏற்படும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது, கந்தசஷ்டி கவசம் படிப்பது மேன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 4-ல் ஆட்சி, உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சூரியன் 3-ல், ராகு 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்து பொருளாதார அனுகூலங்களைப் பெறுவீர் கள். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் குடும் பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடந்தகால நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும். சிலருக்கு வாகனங்கள் வாங் கும் எண்ணம் தற்போது நிறைவேறும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள்கூட தற் போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட வர்களுக்கு தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற் றம் இருக்கும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்குத் தற்போது தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்துவிடமுடியும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணை வார்கள். தொழில்ரீதியாக இருந்த பொருள் தேக்கங்கள் விலகி நல்ல வளர்ச்சி அடைவீர்கள். உத்தியோகரீதியாக கௌரவமான நிலை உண்டாகும். உடன் வேலைசெய்பவரிடம் நிலவிய கருத்து வேறுபாடுகள் தற்போது விலகி நிம்மதியுடன் பணியாற்றமுடியும். ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு அதிகப்படி யான ஆதாயங்கள் கிடைக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த பொருளாதார உதவிகள் செய்வது, மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கித்தருவது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ராசிக்கு 5, 10-க்கு அதிபதியான செவ்வாய் 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவு சிறப் பாக இருந்து அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்ய முடியும். சுக்கிரன் 1, 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வெளிநபர்களுடைய செயல்கள் காரணமாக தேவையற்ற நெருக்கடி களை எதிர்கொள்ள நேரிடும். வேலையாட் கள்மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். எந்திரங்கள் பழுதாவதால் எதிர்பாராத செலவு களை எதிர்கொள்ள நேரிடும். ஒருபுறம் சில நெருக்கடிகள் இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபங்களும் கிடைக்கும். உத்தி யோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடி இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டு குறித்த நேரத்தில் எடுத்த பணியை முடிப்பீர்கள். வாகனங்களில் பொறுமையைக் கடைப்பிடிப் பது மிகவும் நல்லது. பிறர் விஷயத்தில் தலை யிடாமல் உங்கள் செயலில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்தால் நெருக்கடி களைத் தவிர்க்கலாம். வேலை தேடிக்கொண்டி ருப்பவர்கள் தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்ல நிலையை அடையமுடியும். திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் புதிய செயல்களில் ஈடுபட்டால் பரிபூரண வெற்றி கிடைக்கும். சரபேஸ்வரர் வழிபாடு, அஷ்டலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது மேன்மையைத் தரும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசிநாதன் சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், 3-ல் கேது சஞ்சரிப்பதாலும் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். 2-ல் புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சுத் திறமையால் பல்வேறு வெற்றிகளைக் குவிப்பீர்கள். உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் கௌரவப் பதவிகள் தேடிவரும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் சந்தைச் சூழ்நிலை சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை அடையும் யோகமுண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எண்ணிய காரியங்கள் எல்லாம் தற்போது கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். வெளிநபர்கள்மூலம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு தூரப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும், அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல், நெருக்கடிகள் எல்லாம் விலகி பணியில் சுதந்திரமாக செயல்படமுடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப் பாக இருப்பதால் உடன் வேலைசெய்பவர்கள் ஏற்படுத்தும் சிறுசிறு இடையூறுகளை எளிதில் சமாளிக்கமுடியும். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களுக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது உத்தமம்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 12-ல் சூரியன், 8-ல் ராகு சஞ்சரிப்ப தால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. 7-ல் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரகதியில் இருப்பதால் பண விஷயத்தில் மிகவும் கவனத் தோடு இருக்கவேண்டும். நீங்கள் நல்லதாக ஒரு செயல் செய்தால்கூட அதனை உடனிருப்பவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்று வதில் இடையூறுகள் ஏற்படும். சக்திக்குமீறி செலவுகள் ஏற்படும் நேரமென்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப் பது நல்லது. கணவன்- மனைவி யிடையே தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்பட லாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியா பாரத்தில் எண்ணியது ஒன்றாக வும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளிவைக்கவும். கிடைக்கும் சிறு வாய்ப்பைக்கூட தவறவிடாமல் ஒவ்வொரு காரியத்திலும் கண்ணும் கருத்துமாக இருந்தால் போட்ட முதலீட்டை எடுத்துவிடலாம். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் பிறருடைய பணி யும் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை உண்டாகும். பிறர் சொல்வதைக் கேட்காமல் உங்கள் பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. அதிகாரியிடம் பேச்சை குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்பட்டால் நிலைமையை சமாளித்து விடலாம். திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனைசெய்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நன்று.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் இவ்வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல் லாம் நடக்கும். சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த மறைமுக நெருக்கடிகள் முழுமையாக விலகி பல்வேறு வெற்றிகளை அடைவீர்கள். சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற் கொண்டால் அனுகூலமான பலனை அடையமுடியும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத் தில் சாதகமான சூழல் நிலவுவ தால் லாபகரமான பலன்களை அடைவீர்கள். வேலையாட் கள் ஒத்துழைப்பு சிறப்பாக அமைந்து, நீங்கள் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கமுடியும். எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைப்பதால் கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிகாட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். ராகு 7-ல், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்ப தால் உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத் துச் செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு கைமேல் பலன் கிடைப்பதுடன், அதன்மூலம் அனுகூலங்களும் கிட்டும். முருக வழிபாடு, கந்தசஷ்டிக் கவசம் படிப்பது, அஷ்ட லட்சுமி தரிசனம் மிகவும் நல்லது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசிக்கு 6-ல் ராகு, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சுக்கிரன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டு மல்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நெருங்கியவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் விலகி நிம்மதியடைவீர்கள். எடுத்த பணியைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். புதன் லாப ஸ்தானத் தில் ஆட்சி, உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளைப் பயன்படுத்தி உயர்வான நிலையினை எட்ட முடியும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர் பார்த்த உதவிகளையும் உத்தரவுகளையும் வரும் நாட்களில் பெறமுடியும். தகுதிவாய்ந்த வேலை யாட்கள் கிடைப்பதால் உங்களுக்கிருந்த பணிச் சுமைகள் வரும் நாட்களில் குறையும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படமுடியும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் நீண்டநாட்களாக எண்ணியவற்றைத் தற்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கடந்தகாலங்களில் உழைத்ததற்கான சன்மானம் தற்போது கிடைத்து பொருளா தாரத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் உங்கள் எண்ணங்களை செயல் படுத்தினால் முழுமையான அனுகூலங்களைப் பெறமுடியும். விநாயகர் வழிபாடு, கந்தசஷ்டிக் கவசம் படிப்பது, ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 10-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த பிரச்சினைகள் எல்லாம் குறைந்து ஏற்றம் மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். பிரதான கிரகங்களான குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும்; கடன் பிரச்சினைகளும் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றும் பலம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் எளிதில் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் பெரியோர்களின் ஆதரவானது சிறப்பாக இருந்து தீர்க்கமுடியாத பிரச்சினை களுக்குக்கூட நல்ல தீர்வு கிடைக்கும். தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சுக்கிரன் வரும் புதன்கிழமைமுதல் 9-ல் சஞ்சரிப்பதால் வாரப் பிற்பாதியில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாண்டு நல்ல லாபத்தை அடைவீர்கள். உங்களுக்கிருந்த பொருள் தேக்கங்கள் விலகும். உங்களுடைய பொருட் களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைப்ப தால் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்துவிட முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் பணிபுரியமுடியும். அதிகாரியிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமூகநிலை உண்டாகும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் அனுகூலமாக சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன் களைப் பெறுவீர்கள். துர்க்கையம்மனை வழிபடுவது, சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது சிறப்பு.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்படுவது நல்லது. ராசிக்கு 4-ல் ராகு, 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பொருளாதாரரீதியாக நெருக்கடி இருப்பதால் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாத நிலை ஏற்படும். உடனிருப்பவர்களே உங்களின் அமைதியைக் குறைப்பார்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது மிகவும் நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சிறு வாய்ப்பைக்கூட தவறவிடாமல் ஒவ்வொரு செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். அரசுவழி அதிகாரிகள் செய்யும் கெடுபிடிகளால் உங்கள் செயல்களில் தாமதமும், அதன்மூலம் நிம்மதி க்குறைவும் ஏற்படும். முடிந்தவரை வேலையாட்களை அனுசரித்துச்செல்வது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல் களைத் தற்போதைக்குத் தள்ளி வைக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமல்லாமல் தேவையற்ற பழிச் சொற்களை எதிர் கொள்ள நேரிடும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீண்டநாள் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, மாணவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது நன்று.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். 2-ல் சஞ்சரிக்கும் குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும். வாகனங்கள்மூலமாக எதிர்பாராத விரயங்களை எதிர்கொள்வீர்கள். எளிதில் முடியவேண்டிய காரியங்கள்கூட தாமதமாகும். அதிக வேலைச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால், சாமர்த்தியமாக செயல்படக்கூடிய ஆற்றல் இருந்தாலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும், நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுத்துவிடமுடியும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தற்போதைக்குத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களுடைய பணியும் சேர்த்து செய்யவேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படலாம். வெளிநபர்களிடம் சிந்தித்துப் பேசுவது, முடிந்தவரை உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் உங்கள் வாழ்வில் ஏற்றங் களை ஏற்படுத்தக்கூடிய காலமாக இருக்கும். சிவ வழிபாடு, சனிபகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடுவது, கோவில்களில் வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம் செய்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான ஆதாயங்களைப் பெறுவீர்கள். வெளிநபர்களின் ஆதரவானது மிகவும் சாதகமாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத் துத் தேவைகளும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். நல்ல நட்புகள் உங்களை நாடிவரும். புதன் ராசிக்கு 7-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். நீண்டநாட்களாக எண்ணிய காரியங்கள் தற்போது நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். வேலையாட்களின் கோரிக்கைகளை நிறைவேற்றமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருப்பதால் அனைத்து செயலிலும் புதுத் தெம்புடன் செயல்படுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைக்கும். புதிய வேலையை எதிர்பார்ப்பவர்களுக்கு எண்ணங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்துவழியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் ஆதாயத்தை ஏற்படுத்தும் நாட்களாக இருக்கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.