முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மகம்- 3.
செவ்வாய்: உத்திரம்- 3.
புதன்: உத்திரம்- 1.
குரு: பரணி- 3.
சுக்கிரன்: ஆயில்யம்- 1 (வ).
சனி: சதயம்- 1 (வ).
ராகு: அஸ்வினி- 2.
கேது: சித்திரை- 4.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- தனுசு
28-8-2023
காலை 10.40 மணிக்கு மகரம்.
30-8-2023
காலை 10.18 மணிக்கு கும்பம்.
1-9-2023 காலை 9.35 மணிக்கு மீனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவான் ஜென்ம ராசியில் அமைந்து தனது சிறப்பு பார்வையாக 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்வதால் சகல சௌபாக்கியங்களும் நீங்கள் பெறக் கூடிய வாய்ப்புகள், குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. உங்கள் ராசியாதிபதி செவ்வாய் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் அசட்டு தைரியத்துடன் செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்களுக்கு இருந்துவந்த வம்பு, வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சூரியன் 5-ல் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்களுடைய ஆதரவு உங்களுக்கு தக்க நேரத்தில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கக்கூடிய நிலையும், அரசுவழி ஆதரவும் கிடைக்கும். மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய அமைப்பும், உடன் இருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய நிலையும் வரும் நாட்களில் உண்டு. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்தும் முழுமையான வெற்றி தரும். அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை யம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், குரு- ராகு சேர்க்கைப்பெற்று விரைய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு செய-லும் நீங்கள் சற்று கவனத் தோடும் நிதானத்தோடும் செயல்பட வேண்டிய நேரமாகும். சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டிய காலமாகும். சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள்கூட தேவையற்ற வகையில் தாமதமாகும் என்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. இருப்பதை அனுபவிக்க தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 2, 5-க்கு அதிபதியான புதன் 4-ல் சஞ்சரிப்பதாலும், கேது 6-ல் சஞ்சரிப்பதாலும் நெருக்கடியான நேரத்தில் எதிர் பாராதவகையில் உதவிகள் கிடைத்து இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் ஒவ்வொரு செய-லும் நீங்கள் சற்று கவனத்தோடும் நிதானத் தோடும் செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை நீங்கள் அடைய முடியும். காலநேரம் பார்க்காமல் தற்போது நீங்கள் கஷ்டப்பட்டால் அதற்கான பலனை விரைவில் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப் பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் காலை ஆகிய நேரங்களில் தேவையற்ற மன குழப்பங்களும் வீண் அலைச்சலும் உண்டாகும். புதன், வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளில் உங்கள் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். வரும் நாட்களில் சிவன் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன்- சூரியனுடன் 3-ல் சஞ்சரிப்பதால் உங்களது நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் வரும்
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மகம்- 3.
செவ்வாய்: உத்திரம்- 3.
புதன்: உத்திரம்- 1.
குரு: பரணி- 3.
சுக்கிரன்: ஆயில்யம்- 1 (வ).
சனி: சதயம்- 1 (வ).
ராகு: அஸ்வினி- 2.
கேது: சித்திரை- 4.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- தனுசு
28-8-2023
காலை 10.40 மணிக்கு மகரம்.
30-8-2023
காலை 10.18 மணிக்கு கும்பம்.
1-9-2023 காலை 9.35 மணிக்கு மீனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவான் ஜென்ம ராசியில் அமைந்து தனது சிறப்பு பார்வையாக 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்வதால் சகல சௌபாக்கியங்களும் நீங்கள் பெறக் கூடிய வாய்ப்புகள், குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. உங்கள் ராசியாதிபதி செவ்வாய் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் அசட்டு தைரியத்துடன் செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்களுக்கு இருந்துவந்த வம்பு, வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சூரியன் 5-ல் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்களுடைய ஆதரவு உங்களுக்கு தக்க நேரத்தில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கக்கூடிய நிலையும், அரசுவழி ஆதரவும் கிடைக்கும். மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய அமைப்பும், உடன் இருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய நிலையும் வரும் நாட்களில் உண்டு. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்தும் முழுமையான வெற்றி தரும். அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை யம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், குரு- ராகு சேர்க்கைப்பெற்று விரைய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு செய-லும் நீங்கள் சற்று கவனத் தோடும் நிதானத்தோடும் செயல்பட வேண்டிய நேரமாகும். சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டிய காலமாகும். சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள்கூட தேவையற்ற வகையில் தாமதமாகும் என்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. இருப்பதை அனுபவிக்க தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 2, 5-க்கு அதிபதியான புதன் 4-ல் சஞ்சரிப்பதாலும், கேது 6-ல் சஞ்சரிப்பதாலும் நெருக்கடியான நேரத்தில் எதிர் பாராதவகையில் உதவிகள் கிடைத்து இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் ஒவ்வொரு செய-லும் நீங்கள் சற்று கவனத்தோடும் நிதானத் தோடும் செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை நீங்கள் அடைய முடியும். காலநேரம் பார்க்காமல் தற்போது நீங்கள் கஷ்டப்பட்டால் அதற்கான பலனை விரைவில் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப் பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் காலை ஆகிய நேரங்களில் தேவையற்ற மன குழப்பங்களும் வீண் அலைச்சலும் உண்டாகும். புதன், வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளில் உங்கள் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். வரும் நாட்களில் சிவன் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன்- சூரியனுடன் 3-ல் சஞ்சரிப்பதால் உங்களது நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் எளிதில் நிறைவேறி மன மகிழ்ச்சி உண்டாகும். ஆண்டுகோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு- ராகு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானத்தை சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உங்கள் செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பிள்ளைகள்வழியில் இருந்து வந்த மனக்கவலைகள் எல்லாம் மறைந்து மகிழ்ச்சியான நிலை உண்டாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய ஒரு பலமும் வ-மையும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு வாய்ப்புகளும் தொழில் நிறுவனத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் வரும் நாட்களில் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு மதிப்பு, மரியாதைகள் அதிகரிப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளை கூட நீங்கள் செய்துமுடித்து நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத வகையில் அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திங்கள், செவ்வாய், புதன் காலை நேரங்களில் உங்களுக்கு வீண் குழப்பங்கள், எடுக்கும் முயற்சியில் தடைகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் காமாட்சியம்மன் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரத் தேங்காய் உடைப்பது உத்தமம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஒரு ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் தக்க நேரத்தில் உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடினமான பணிகளைக்கூட உங்களின் தனித்திறமையால் சுலபமாக சமாளித்து எளிதில் பணிகளை முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 8-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நன்மையை தரும். வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. பெண்கள்வழியில் தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். எதிலும் சிக்கனத்தோடு இருக்கவும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சற்று நிதானத்தோடு செயல்படுவதும் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தால் எதிர்காலத்தில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இருக்காது. ஒருசில நேரங்களில் அதிக நேரம் உழைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப் பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து சகலவிதத்தி லும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். புதன், வியாழன், வெள்ளி காலை நேரங்களில் வீண் குழப்பங்கள், எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய ஒரு நிலை இருப்பதால் எதிலும் பக்குவ மாக நடந்துக்கொள்வது நல்லது. உடல் ஊனமுற்றவர் களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத் துக்கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. ஒருசில நேரங்களில் நெருங்கியவர்களிடம் வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் நீங்கள் பொறுமையோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் பணபரிமாற்ற விஷயங்களில் மிகவும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றக்கூடிய ஒரு பலம் உண்டாகும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிகப்படியான லாபங்களை ஈட்டுவது மட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்த வம்பு, வழக்குகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வரும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் அதிகப்படியான ஆதாயங்களை அடையக்கூடிய நாட்களாக இருக்கும். வெள்ளி, சனிக்கிழமைகளில் தேவையற்ற அலைச்சல், வீண் குழப்பங்கள் ஏற்படக்கூடிய நேரமாக இருக்கும் என்பதால் எதிலும் நிதானத்தோடு இருப்பது, புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். குரு, ராகு 8-ல் சஞ்சரிப்பதாலும் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் எதிலும் பொறுமையோடு இருக்கவேண்டும். நம்பியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் தேவையில்லாத இடையூறுகளை எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் நிதானமாக இருந்தால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு நியாயப்படி கிடைக்கவேண்டிய வாய்ப்புகள்கூட தடைப் படும். சட்டரீதியாக சிறுசிறு சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருப்பதால் ஓய்வு நேரம் குறையும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது தற்போதைக்கு சிறப்பு. பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பிரத்திங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதாலும், மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- புதன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு இருக்கும். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீராத இருந்த பிரச்சினைக்கு தற்போது ஒருமுடிவு கிடைக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது விலகி அன்யோனியம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைப்பதால் அதிகப்படியான லாபங்களை ஈட்டுவீர்கள். தகுதி வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு மதிப்புமிகுந்த பதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் ஒரு சிலருக்கு வெளியூர்மூலமாககூட அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கடந்த காலங்களில் உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் விலகி தற்போது ஒரு சுமூகமானநிலை உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். துர்க்கை யம்மனுக்கு தீபமேற்றுவது, விநாயகருக்கு அர்ச்சனைசெய்வது உங்கள் வாழ்க்கையை வளமாக்கும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசி அதிபதி செவ்வாய் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்வதால் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பாக்கியஸ்தனமான 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக் கெல்லாம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், ருண, ரோக ஸ்தானமான 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும் தொழில், வியாபாரத்தில் மிகச்சிறப் பாக செயல்பட்டு நல்ல லாபத்தை அடைவீர்கள். தொழில்ரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகி நீங்கள் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கூட்டாளிகள் ஆதரவு மிகச்சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவீர்கள். மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளைகூட நீங்கள் செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் நீங்கள் ஏதாவது ஒரு முக்கிய செய-ல் ஈடுபட்டால் அதில் முழுமையான வெற்றியினை அடையமுடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, ஏழை மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதுமூலம் வாழ்வில் வளமான பலன்களை அடையமுடியும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குரு பஞ்சமஸ்தானமான 5-ல் வலுவாக சஞ்சரிப்பதும், உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானமான 9-ல் சூரியன், புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் குறைவது மட்டும் இல்லாமல் நீங்கள் வாங்கிய கடன்களை வருகின்ற நாட்களில் பைசல் செய்யமுடியும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள்மூலமாக எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். ஒருசிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து நவீன கருவீகள் வாங்கமுடியும். பெண்கள்வழியில் தேவையில்லாத வீண்செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைவது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்களை அடையக்கூடிய யோகம் உண்டு. புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு புகழ்பெற்ற நிறுவனத்தி-ருந்து வருகின்ற நாட்களில் அழைப்பு வரும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான நாளாக இருக்கும் என்பதால் மேற்கூறிய நாளில் நீங்கள் செய்யக்கூடிய செயல்களுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும். வரும் நாட்களில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் குரு, ராகு சஞ்சரிப்பதாலும், அஷ்டமஸ்தானமான 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். நீங்கள் எண்ணிய காரியங்களை குறித்த நேரத்தில் முடிப்பதில் இடையூறுகள் ஏற்படும். சனிபகவான் 2-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குறிப்பாக இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதை தள்ளிவைப்பது மிகவும் நல்லது. பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பரச்செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயப்படியான வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். அரசு அதிகாரியிடம் பேசுகின்றபொழுது வீண் பேச்சை குறைத்துவிட்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு சற்று பொறுமையோடு நடந்துகொள்ளவும். வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வு நேரம் குறைவது மட்டுமில்லாமல் அதிகாரிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் சந்திரன் அணுகூலமாக சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியும் சமாளித்து உங்களுடைய அன்றாட தேவைகளை எளிதில் பூர்த்திசெய்து கொள்ளமுடியும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் சூரியன், அஷ்டமஸ்தானமான 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய நேரமென்பதால் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உங்கள் ராசிக்கு 3-ல் குரு சஞ்சரிப்பதால் பணபரிமாற்ற விஷயங்களில் ஒரு ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பிறருக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியாது. உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 7-ல் புதனும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய சில முடிவுகளால் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் சமாளித்து போட்ட முதலை எடுக்கமுடியும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்கலாம். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும். உங்களது உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது வெளியூர் பயணங்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் ஒருசில காரணங்களால் உடன் வேலை செய்பவர்கள் உடைய வேலையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். வெளிநபர்களிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்கள் எதிர்பாராத பொருளாதார அணுகூலங்கள் ஏற்பட்டு உங்களுடைய நெருக்கடிகள் குறையும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குருபகவான் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகமிக நன்றாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக எதிர்பாராத லாபங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதாலும், சுக்கிரன் பஞ்சமஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதாலும் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் குறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். நீண்டநாட்களாக நீங்கள் எண்ணிய காரியங்களைத் தற்போது நிறைவேற்ற முடியும். சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டு மில்லாமல் உங்களுக்கு இருந்துவந்த வீண்செலவுகள் குறையும். ஒருசிலருக்கு அசையும் அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு தற்போது பிரதிபலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலை ஆட்களால் இருந்துவந்த வீண்தொல்லைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வெளியூர் செல்லக் கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஒருசிலருக்கு பதவி உயர்வுகள் அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, லஷ்மி நரசிம்மரை தரிசிப்பது நன்மையை தரும்.