முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: அஸ்வினி- 4.

செவ்வாய்: பூசம்- 2.

Advertisment

புதன்: உத்திரட்டாதி- 4.

குரு: மிருகசீரிடம்- 1.

சுக்கிரன்: உத்திரட்டாதி- 1.

Advertisment

சனி: பூரட்டாதி- 4.

ராகு: பூரட்டாதி- 4.

கேது: உத்திரம்- 2.

கிரக மாற்றம்:ss

இல்லை

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: மேஷம்

29-4-2025 அதிகாலை 2.53 மணிக்கு ரிஷபம்.

1-5-2025 அதிகாலை 3.15 மணிக்கு மிதுனம்.

3-5-2025 காலை 6.37 மணிக்கு கடகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதாலும், தனக்காரகன் குருபகவான் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதாலும் உங்களின் பொருளாதாரநிலை மிக சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்கள் தனித்திறமையால் எதிலும் சிறப்பாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். வெளியூர்மூலமாக வீண்விரயங்கள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று விரும்பிய மேற்படிப்பை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் அனுகூலமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 1, 2.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன், சனி, ராகு, புதன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த ஒரு செய-லும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். பெண்கள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய நேரமாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப் பாக இருக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில்ரீதியாக உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் வரும் நாட்களில் படிப்படியாக குறைந்து மனநிம்மதி ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் தற்போது கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய நேரம் ஆகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 3.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத் தில் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் தற்போது குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை சற்றுக்குறைத் துக்கொள்வது உத்தமம். தொழில் தொடர்பான விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும் என்றாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் பெற்றோர், ஆசிரியரிடம் பேசுகின்ற பொழுது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 1, 2.

ss

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் சகல சௌபாக்கியங் களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாதக் கோளான சூரியன் 10-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக தடைபட்டு வந்த சுபகாரியங்கள் தற்போது கைக்கூடி மனமகிழ்ச்சி ஏற்படும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த தேவையற்ற மருத்துவ செலவுகள் எல்லாம் தற்போது குறைந்து சேமிக்கக்கூடிய அளவிற்கு ஒரு அனுகூலமான நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் எண்ணங் கள் நிறைவேறுவது மட்டுமில்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லா மல் விரும்பிய இடமாற்றத்தை அடையக் கூடிய வாய்ப்பு கள் உண்டு. மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, வேங்கடேசப் பெருமாளை தரிசிப்பதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 29, 30, 3.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சனி, ராகு, சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும், 10-ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு இருக்க வேண்டும். தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறு கள் ஏற்படும். உடல்ரீதியாக ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருக்கவேண்டும். பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நம்பியவர்களே உங்களுக்கு வீண் நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். கூட்டாளிகள் அவர் களுடைய பங்கை கேட்டு உங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் நீங்கள் சிறப் பாக செயல்பட்டாலும் அதிகாரியிடம் தேவையில்லாத மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சூழலுக்கு ஏற்றவாறு பக்குவத்தோடு நடந்துகொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் எதிலும் கவனத்தோடு இருந்தாலும் ஞாபக மறதி, தேவையற்ற இடையூறுகள் ஏற்படும் என்பதால் எதிலும் எச்சரிக் கையோடு இருப்பது உத்தமம். வரும் நாட்களில் வளமான பலன் களைப்பெற துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவதன் மூலம் நல்லது நடக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 1, 2.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசி அதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கைப் பெற்று சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதும் 9-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மிகவும் அனுகூலமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை குறைத்துக்கொள்ளக்கூடிய நேரமாகும். மனைவி, பிள்ளைகளிடம் சுமூகமான நிலை நிலவுவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் தற்போது கைக்கூடி மனமகிழ்ச்சி ஏற்படும். உடன்பிறந்தவரிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது குறைந்து ஒற்றுமை உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய எண்ணங்களை குறித்த நேரத்தில் பூர்த்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களின் பொருளாதார நிலையும் மிகவும் சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் விரும்பிய பாடப்பிரிவை பெற்று மனமகிழ்ச்சி அடையமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக, ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 6-ல் சனி, ராகு சஞ்சரிப்பதாலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிலும் அசட்டு தைரியத்தோடு செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு இருந்தால் நற்பலன்களை அடைய முடியும். உங்களுக்கு இருந்துவந்த வம்பு, வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வந்து உங்களுக்கு மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். பிள்ளைகள்வழியில் தேவையற்ற மனக் கவலைகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கடந்தகாலங்களில் உடனிருப்பவரிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது விலகி பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவ- மாணவியர்கள் உங்கள் திறமைகளை சிறப்பாக வெளிகாட்டி நல்ல மதிப்பெண்களைப் பெறக் கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் வேங்கடேசப் பெருமாளை தரிசிப்பது, குருபகவானுக்கு மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 3.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன், 6-ல் சூரியன், 7-ல் குரு சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைக்கெல்லாம் வரும் நாட்களில் ஒருநல்ல தீர்வு கிடைக்கும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் வேலையாட்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். ஒருசிலருக்கு வெளியூர், வெளிநாடுகள்மூலமாக அனுகூல மான செய்திகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர் பார்த்த பொருளாதார உதவிகள் வரும் நாட்களில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள்வழியில் இருந்து வந்த மனக் கவலைகள் எல்லாம் தற்போது விலகி குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு இருந்த வேலைப்பளு எல்லாம் குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் பெற்றோர், ஆசிரியரின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, காலபைரவரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 29, 30.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்றாலும் 4-ல் சனி, ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக உடனிருப்பவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும். சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படுவதால் உங்களது சேமிப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். உடல் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய காலமாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பக்குவத்தோடு நடந்துகொள்வது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு தற்போது நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணா மூர்த்திக்கு வியாழக்கிழமையில் தீபமேற்றுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 1, 2.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசி அதிபதி சனி- ராகு சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதாலும், 5-ல் குரு சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து மன நிம்மதி ஏற்படக்கூடிய காலமாகும். அசையும்-அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்களுக்கு இருந்துவந்த வம்பு, வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் சிறப் பான முன்னேற்றமும், போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு. திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றக்கூடியப் பலம் உண்டாகும். உத்தியோகஸ் தர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைகூட சுலபமாக முடிக்கமுடியும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் எதிர் பார்த்ததைவிட அதிகப்படியான மதிப்புகளைப் பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் புதன், சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூத்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். உங்களது முன்கோபத்தால் உடனிருப்பவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மறைமுக எதிர்ப்புகள் நிலவினாலும் நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். ஒரு சிலருக்கு உடல்ரீதியாக பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருக்கவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள் என்றாலும் உடனிருப்பவர்கள் பணியும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை நிலவும். பணிநிமித்தமாக தேவையற்ற பயணங்களும் ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 3.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சனி, ராகு, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத் துக்கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டும். பணவரவில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சிக்கனத்தோடு செயல்படவேண்டும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியாது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரரீதியாக உங்கள் உழைப்புக் கான பலனை அடைய தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். ஒருசிலருக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் கையாள்வது நல்லது. முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி தற்போது இருக்கக்கூடிய வாய்ப்புகளை இழந்துவிட வேண்டாம். தற்போது இருக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுபாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் கவனத் தோடு இருக்கவேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 29, 30.