முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி: 044 24881038, 2483 9532.

Advertisment

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திரட்டாதி- 3.

Advertisment

செவ்வாய்: திருவோணம்- 4.

புதன் : உத்திரட்டாதி- 1.

குரு: பூரட்டாதி- 2.

சுக்கிரன் : அவிட்டம்- 1.

சனி: அவிட்டம்- 2.

ராகு: கிருத்திகை- 2.

tt

கேது: விசாகம்- 4.

கிரக மாற்றம்:

பங்குனி 17 (31-3-2022)

கும்ப சுக்கிரன் (காலை 8.40).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மகரம்.

28-3-2022 இரவு 11.54 மணிக்கு கும்பம்.

31-3-2022 அதிகாலை 4.32 மணிக்கு மீனம்.

2-4-2022 பகல் 11.21 மணிக்கு மேஷம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் 2, 7-க்கு அதிபதி சுக்கிரன் சேர்க்கைபெற்று 10-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் காலமாகும். குரு லாப ஸ்தானமான 11-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பணவரவுக்குப் பஞ்ச மிருக்காது. கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் நீண்டநாளைய கனவுகள் வரும் நாட்களில் நிறை வேறும். சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப் பது நல்லது. பேச்சில் பொறுமை யோடு இருந்தால் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத் துச் செல்வது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியா பாரத்தில் உங்கள் செயல்களுக்கு அரசுவழியில் ஆதரவு கிடைப்ப தால், போட்ட முதலீட்டை எளிதில் எடுப்பது மட்டுமல்லாமல், அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி களை அடையமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலம் வரும் நாட் களில் ஆதாயமடைவீர்கள். மேலதி காரியிடம் பேசும்பொழுது வாக்கு வாதங்களைத் தவிர்த்து, எடுத்த பணியில் மட்டும் கவனம் செலுத்து வது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சிறப்பாக செய்து முடிக்க முடி யும். சிவ வழிபாடு, பிரதோஷத்தன்று விரத மிருப்பது, துர்க்கையம்மனை தரிசிப்பதன் மூலம் வளமான பலன்களை அடைய முடி யும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் இவ்வாரத்தில் 9, 10-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொரு ளாதாரநிலை சற்று சிறப்பாக இருக்கும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்பு கள்மூலம் அனுகூலங்களை அடையும் யோகமுண்டு. உங்கள் ராசிக்கு 4, 5-க்கு அதிபதியான சூரியன், புதன் இணைந்து லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் விலகி முன்னேற்றங்களை அடைவீர்கள். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத் துடன் இருந்தால் நற்பலனை அடைய முடியும். உறவினர்களின் ஆதரவால் குடும்பத் தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் அரங்கேறும். உங்கள் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அதிகப் படியான அனுகூலங்களை எளிதில் அடைய முடியும். தொழில், வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். தொழில் போட்டி காரணமாக நீண்டநாட்களாக உங்களுக்குள்ள பிரச்சினைகள் படிப்படியாக விலகி சமுதாயத்தில் உயர்வான நிலையினை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் யோசித்து செயல்பட்டால் ஆதாயங் களை அடையமுடியும். வேலைக்குச் செல்பவர் களுக்கு வேலைப்பளு கூடுத லாக இருந்தாலும் சாமர்த்திய மாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது சுபிட்சத்தை ஏற்படுத்தும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன், சூரியனுடன் இணைந்து தொழில் ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் வரும் நாட் களில் மிகச்சிறப்பான பலனை எளிதில் அடையமுடியும். உங்கள் எதிர் பார்ப்புகள் நிறைவேறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உற்றார்- உறவினரிட மிருந்த கருத்து வேறுபாடுகள் விரைவில் குறைந்து நிம்மதி உண்டாகும். குரு 9-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகள் முடிவுக்கு வரும் யோக முண்டு. தற்போது 8-ல் சஞ்சரிக்கும் சுக்கிரன் வியாழக்கிழமை முதல் 9-ல் சஞ்சரிப்பதால், வீண் செலவுகள் குறைந்து நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். இவ்வாரத்தில் சனி, செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் வாகனங் களில் செல்கின்றபொழுது வேகத்தைக் குறைத் துக்கொண்டு நிதானத்தோடு செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட சிறப் பான பலனை அடைய முடியும். அரசுவழி ஆதரவு கள் உங்கள் கவலையைப் போக்கும். வெளியூர் மூலம் நீங்கள் எதிர்பார்க் கும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர் களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவிருப்பதால் எதையும் எளிதில் சமாளிக்கமுடியும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ஆஞ்சனேயர் வழிபாடு, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் சுபிட்சத்தை அடையமுடியும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சனி, செவ்வாய் இணைந்து சஞ்சரிப்ப தால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமாகும். கணவன்- மனைவி யிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் அதிகரிக் கும். சில நேரங்களில் உங்களின் முன்கோபத் தால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர் கள். குரு 8-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள், வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும் நேரமா கும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்பது நல்லது. சுக்கிரன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் பெண் கள்மூலம் நிம்மதிக் குறைவு ஏற்படும். ஞாயிறு, திங்கள், சனிக்கிழமைகளில் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன் படுத்திக்கொள்வது நல்லது. தற்போது உங்களுக்கு கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டாலும் விரைவில் ஏற்படவிருக்கும் குரு மாற்றத் தின்மூலம் உங்களுக்குள்ள அனைத்து சங்கடங்களும், தொழில் நெருக்கடிகளும் விலகி நல்ல நிலையை அடைய முடியும். கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமாகும். பெரிய மனிதர்களின் ஆதரவிருப்பதால் ஒருசில ஆதாயங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உங்கள் பணியில் மட்டும் தற்சமயம் கவனம் செலுத்துவது நல்லது. முடிந்தவரை குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளவேண்டாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி யைச் செய்வது நல்லது.

tt

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 6-ல் சனி, செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்ச லோடு செயல்பட்டு பல்வேறு வளமான பலன்களை எளிதில் அடைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த வம்பு வழக்குகள் எல்லாம் வரும் நாட்களில் முடிவுக்கு வரும். குரு 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப் பாக இருந்து நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ராசியாதிபதி சூரியன் 8-ல் புதனுடன் இருப்பதால் உடல்நலத்தில் மட்டும் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, வயது மூத்தவரிடம் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் உங்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிகப் படியான ஆதாயங்கள் கிடைக்கும். முக்கிய நிகழ்வுகள் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில்ரீதியாக சிறப் பாக செயல்பட்டு லாபங்களை ஈட்டமுடியும். நவீன யுக்தி களைப் பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்த முடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் புதிதாக உங்கள் தொழிலில் இணைவார் கள். வங்கிமூலம் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வேலைக் குச் செல்பவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகத்தில் நல்லநிலை இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, சிவத் தலங்களுக்கு சென்று வருவது மிகவும் நல்லது.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன் 7-ல் சஞ்சரிப்ப தால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். சூரியன் 7-ல் சஞ்சரிப்ப தால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கமுடியும். உங்கள் ராசிக்கு 5-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் உடன்பிறந்தவர்களிடம்- குறிப்பாக பங்காளி வகையில் தேவையற்ற நிம்மதிக் குறைவு ஏற்படலாம். குரு 6-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளைத் தற்கா-கமாகத் தள்ளிவைக்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், எந்தவித நெருக்கடி களையும் எதிர்கொண்டு பொருளாதார அனு கூலங்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் பொறுமையுடன் செயல் படுவது, வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர் கள் கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்பட்டால் நெருக்கடியைத் தவிர்க்க முடியும். பணவிஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டிய நிலை இருந்தால் அதனை தற்போதைக்குத் தள்ளிவைப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடனிருப்ப வர்கள் உங்களுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். அதனால் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவத் தலங்களுக்குச் சென்றுவருவது, பிரதோஷ வழிபாடு மேற் கொள்வது, விஷ்ணு வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4, 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். குரு 5-ல் சஞ்சரிப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது நட்புடன் பழகும் நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல், உடல் அசதி, இருப்பதை அனு பவிக்க இடையூறுகள் ஏற்படும். முடிந்த வரை உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு இருப்பது, நெருங்கியவர்களிடம் பேச்சில் பொறுமையாக இருப்பது நல்லது. அசையா சொத்துவகையில் எதிர்பாராத வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். தூரப் பயணங் களில் பொறுமையுடன் செல்வது நல்லது. வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அதிகப்படியான ஆதாயங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் சில இடர்ப்பாடுகளை ஏற்படுத்தினாலும் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு எடுத்த ஆர்டர்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து லாபங்களை ஈட்டமுடியும். அரசுவழி யில் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கடுமையான வேலைப் பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங் கள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டி ருப்பவர்களுக்கு ஒருசில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு, துர்க்கையம்மனை தரிசிப்பதன்மூலம் சங்கடங்கள் குறையும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசியாதிபதி செவ்வாய் 3-ல் உச்சம்பெற்று, சனி சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சிறப்பான பலன்களை அடைவது மட்டுமல்லாமல், சமுதாயத்தில் உயர்வான நிலையினை எட்டமுடியும். சூரியன், புதன் 5-ல் சஞ்சரிப்பதால் சூழ்நிலைக்குத் தக்கவாறு செயல்பட்டு நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். குரு 4-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு செயல்பட்டால் பொருளாதார அனுகூலங் களை அடையமுடியும். உடல்நிலை சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படு வீர்கள். கடந்தகால மருத்துவச் செலவுகள் தற்போது குறையும். மனைவி, பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் முக்கிய முயற்சிகளில் ஈடுபட்டால் அதற்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீண்டநாள் கனவுகளெல்லாம் வருகின்ற நாட்களில் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த அரசு உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் பகலவனைக் கண்ட பனிபோல முழுமையாக மறைந்து, மனமகிழ்ச்சியுடன் எதிலும் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறைவது மட்டுமல்லாமல், எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை வரும் நாட்களில் அடையமுடியும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக விரைவில் ஏற்பட இருக்கக்கூடிய குருப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியினை உண்டாக்கும். மேலும் வளமான பலன்களைப்பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, படிக்கும் மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வது நல்லது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 2-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் மிகவும் நிதானமாக செயல்படவேண்டிய நேரமாகும். நல்லதாக நீங்கள் பேசினாலும் உடனிருப்பவர்கள் அதனைத் தவறாகப் புரிந்துகொண்டு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். ராசியாதிபதி குரு 3-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் நேரமாகும். எதிர்பார்த்த பணவரவுகள் தாமதப்படும். சூரியன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அலைச்சல், நிம்மதிக் குறைவு, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமல், அவர்கள் சொல்வதைக்கேட்டு செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். செவ்வாய், புதன்கிழமைகளில் சந்திரன் சாதகமாக இருப்பதால் ஒருசில ஆதாயங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மிகவும் நிதானமாக செயல்படவேண்டிய நேரமாகும். நியாயப்படி கிடைக்கவேண்டிய வாய்ப்புகளும் தட்டிப்போகும். அரசுவழி அதிகாரிகள் இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலை நெருக்கடி காரணமாக மனநிம்மதிக் குறைவு ஏற்படுவது மட்டுமல்லாமல், எதிலும் ஈடுபாடில்லாத நிலை ஏற்படும். தற்போது நேரம் சரியில்லாத காரணத்தினால் முடிந்தவரை பொறுமையோடு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஆஞ்சனேயர் வழிபாடு, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் நல்லது நடக்கும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமையுடன் செயல்பட்டால் ஏற்றங்களை அடையமுடியும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. குரு 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பு, எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றியடைவீர்கள். எதிலும் துணிவோடு செயல்பட்டு வளமான பலன்களை அடையும் யோகமுண்டு. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு பரிபூரண ஆதரவைப் பெறும் யோகமுண்டு. உற்றார்- உறவினர் களை சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்களின் தனித் திறமையால் லாபங்களை அடைவீர்கள். அரசு அதிகாரிகளுடைய உதவிகள் சிறப் பாக இருப்பதால் கடந்தகால நெருக்கடிகள் மறைந்து நிம்மதி ஏற்படும். ஏழரைச்சனி நடப்பதால் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடுதலாக இருந்தாலும், அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புக்காக காத்திருந்தவர்களுக்கு வரும் நாட்களில் நல்ல செய்தி கிடைக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் வளமான பலன்களை அடையமுடியும். சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது, சஷ்டி கவசம் படிப்பது ஏற்றத்தைத் தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சனி, செவ்வாயுடன் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பொருளாதாரரீதியாக நெருக்கடிகள், தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளக்கூடிய காலம் என்பதால், எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சூரியன் 2-ல் இருப்பதால் உங்கள் பேச்சால் வீண் பிரச்சினைகள் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் சஞ்சரிக் கும் குரு 5, 7 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். சுபகாரிய முயற்சிகளில் ஒருசில நல்லது நடக்கும். செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து நெருக்கடிகள் சற்று குறையும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். வேலையாட்கள் வீண் செலவுகளை ஏற்படுத்துவார்கள். தற்போது இருக்கும் வாய்ப்புகளை முடிந்தவரை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஏற்படவிருக்கும் குருப்பெயர்ச்சிமூலம் உங்களுக்குள்ள சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் அசதி, மன உளைச்சல் ஏற்படும். நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், நல்லபெயர் எடுப்பது மற்றவர்களாக இருப்பார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தற்போது பொறுமையோடு, உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் விரைவில் நல்லது நடக்கும். மகாவிஷ்ணு வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 11-ல் சனி, செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான வரவுகளைப் பெறுவீர்கள். கடந்த காலங்களில் வரவேண்டிய பணம்கூட, தற்போது உங்களுக்குக் கிடைத்து அனைத் துத் தேவைகளும் பூர்த்தியாகும். கடன்களை பைசல் செய்யமுடியும். அசையா சொத்து தொடர்பாக இருந்த வம்பு வழக்குகள் வரும் நாட்களில் உங்களுக்கு சாதகமாக முடியும். குரு 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத் தோடு செயல்பட்டால் அனுகூலங்களை அடையமுடியும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் அன்றாடப் பணிகளைத் தடையின்றி செய்துமுடிக்கமுடியும். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் எடுக்கும் முயற்சியில் எளிதில் வெற்றிபெற முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்களை ஈட்டக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டு. புதிய யுக்திகளைப் பயன்படுத்தி எளிதில் பல வெற்றிகளைப் பெறுவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் பெரிய ஆர்டர்களைக்கூட எளிதில் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துக்கொடுத்து பொருளாதார அனுகூலங்களை அடைவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை குறைந்து நிம்மதி ஏற்படும். இடமாறுதலை விரும்பியவர்களுக்கு தற்போது முயற்சித்தால் விரும்பிய வாய்ப்புகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சூரிய நமஸ்காரம் செய்வது வளமான பலன்களை ஏற்படுத்த உதவும்.