முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சதயம்- 3.
செவ்வாய்: உத்திராடம்- 2.
புதன் : திருவோணம்- 3.
குரு: சதயம்- 4.
சுக்கிரன் : உத்திராடம்- 1.
சனி: அவிட்டம்- 1.
ராகு: கிருத்திகை- 2.
கேது: விசாகம்- 4.
கிரக மாற்றம்:
மாசி 15 (27-2-2022) மகரச் சுக்கிரன் (காலை 10.20).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- தனுசு.
27-2-2022 பகல் 2.22 மணிக்கு மகரம்.
1-3-2022 மாலை 4.31 மணிக்கு கும்பம்.
3-3-2022 இரவு 8.03 மணிக்கு மீனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய் தனது உச்சவீடான 10-ல் சுக்கிரன், புதன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கௌரவ மான பதவி உங்களை நாடிவரும். கொடுத்த வாக்குறுதி களை எளிதில் காப்பாற்றமுடியும். உடல் ஆரோக்கி யம் சிறப்பாக இருந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் செலவுகள் குறைந்து சேமிக்குமளவுக்கு சூழ்நிலை உண்டாகும். குரு, சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகமுண்டு. உறவினர்களுடைய ஆதரவு சிறப்பாக இருக்கும். நீங்கள் எதில் ஈடுபட்டாலும் அதில் சாதிக்கமுடியும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டு. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மேலும் அனுகூல மான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி அதிகப்படியான லாபங்களை அடைவீர்கள். கூட்டாளிகள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கடந்தகாலப் பிரச்சினைகள் விலகி தொழிலில் நிம்மதியுடன் பணியாற்றமுடியும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைக்கும். பயணங்கள் மூலமாக ஆதாயம் அடையமுடியும். விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாற்றியும், சனிக்கு எள்தீபம் ஏற்றியும் வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரித்த சுக்கிரன் 27-ஆம் தேதிமுதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்ப தால் படிப்படியான வளர்ச்சி யினை அடைவீர்கள். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் விலகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்ப தால் கணவன்- மனைவி யிடையே கருத்து வேறுபாடு கள் ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்களின் ஆதர வால் உங்களுக்குள்ள கஷ்டங்கள் விலகி நிம்மதி ஏற்படும். சிலருக்கு வெளியூர்மூலமாக மகிழ்ச்சி யான செய்தி கிடைக்கும். தக்கநேரத்தில் பண வரவுகள் ஏற்பட்டு அன்றாட செலவுகளை எளிதில் சமாளிக்கும் சூழல் உண்டாகும். சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்து டன் செயல்பட்டு நற்பலனை அடையும் யோகமுண்டு. தொழில், வியாபாரத்தில் இருந்த பொருட் தேக்கங்கள் விலகி முன்னேற் றங்களை அடையமுடியும். குரு 10-ல் சஞ்சரிப்ப தால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத் துடன் செயல்பட்டால் லாபங்களை அடைய லாம். கூட்டாளிகளை அனுசரித்துச் செயல் படுவதன்மூலம் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகரீதியாக உங்களுக்கிருந்த கடுமையான நெருக்கடிகள் விலகி வேலையில் சிறப்பாகப் பணியாற்றமுடியும். தற்போது பொறுமையுடன் செயல்பட்டால் விரைவில் ஏற்படவிருக்கும் கிரக மாற்றங்கள் உங்களுக்கு நல்ல வளர்ச்சியினை தரும். முருகனையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டுவந்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
சூரியன், குரு சேர்க் கைப்பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தால் பொருளாதாரநிலை நன்றாக இருந்து அனைத் துத் தேவைகளும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் பூர்த்திசெய்ய முடியும். ராசியாதிபதி புதன், சனி, செவ்வாய் சேர்க்கைப்பெற்று 8-ல் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மனைவி, பிள்ளைகளின் உடல்நலத்திற் கும் சற்று முக்கியத்துவம் தருவது உத்தமம். உடன்பிறந்தவர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்படும் நேரமென்பதால் முடிந்தவரை பேச்சைக் குறைத்துக்கொண்டு பொறுமை யுடன் இருக்கவும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் நெருக்கடி கொடுத்தாலும், 6-ல் கேது சஞ்சரிப்பதால் சாமர்த்தியமாக செயல்பட்டு லாபங்களை ஈட்டுவீர்கள். கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால், சிறுசிறு பிரச்சினைகளை எளிதில் எதிர்கொள்ளமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பது மட்டுமல்லாமல், மற்றவர்கள் பணியையும் சேர்த்துச் செய்யவேண்டியிருக்கும். என்றாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர் கள். வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைத்து கடந்தகாலக் கடன்கள் சற்று குறையும். மகாவிஷ்ணுவையும், ஆஞ்சனேயரையும் வணங்குவது நன்மை தரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 7-ல் புதன், சுக்கிரன் இவ்வாரத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து எதையும் சமாளிக்கமுடியும். சனி, செவ்வாய் 7-ல் சஞ்சரிப் பதால் கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குரு, சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவு களைக் குறைத்துக்கொள்வதும், அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனத்துடன் இருப்பதும் உத்தமம். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எதிலும் உற்சாகத்துடன் செயல்படமுடியும். புதன், வியாழக்கிழமைகளில் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். தொழில், வியா பாரத்தில் பல்வேறு நெருக்கடி கள் நிலவினாலும், ராகு 11-ல் இருப்பதால் எதிர் பாராத உதவிகள் சில கிடைத்து எதையும் எதிர்கொள்ள முடியும். அரசுவழி அதிகாரி கள் தரும் கெடுபிடியால் தொழிலில் நிம்மதி குறையும். எந்த செயலிலும் முனைப்புடன் செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வேலை தேடிக்கொண்டிருப்ப வர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. மற்றவர்களை நம்பி வாக்குறுதி கொடுப்பது போன்ற வற்றைத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கவும். விரைவில் ஏற்படவிருக்கும் குருப்பெயர்ச்சி மூலம் உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றங் கள் ஏற்படும் என்பதால், தற்போது பொறுமை யுடன் இருக்கவும். பிரதோஷத்தன்று சிவனுக்கும் நந்திக்கும் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசிக்கு 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சியில் எதிர்பார்த்ததைவிட சிறப்பான ஆதாயங்களை அடைவீர்கள். குரு 7-ல் ராசியாதிபதி சூரியன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால், பணவரவுகள் சிறப்பாக இருந்து சகலவிதத்திலும் அனுகூலங் களைப் பெறுவீர்கள். கடன்கள் குறைந்து நிம்மதியடைய முடியும். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் தற்போது கைகூடும். கடந்தகால வம்பு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக் கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டு மல்லாமல் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், எடுத்த பணிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிக்க முடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் தொழிலுக் குக் கிடைப்பார்கள். கூட்டாளிகள்மூலம் அனுகூல மான பலன்களைப் பெறுவீர் கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப் பளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரியமுடியும். பெரிய மனிதர்களுடைய தொடர்புகள் கிடைத்து நல்ல வளர்ச்சியைப் பெறுவீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பாக தூரப் பயணங்கள் செல்லும் வாய்ப்பும், அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் பெறுவீர்கள். துர்க்கை யம்மனுக்கு நெய்தீபமேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சுபகாரியங்கள் கைகூடும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன், 2, 9-க்கு அதிபதியான சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 5-ல் சஞ்சரிக்கவிருப்பது அற்புதமான தர்ம கர்மாதிபதி யோகம் என்பதால், கடந்தகால பொருளாதார நெருக்கடிகள் முற்றிலும் விலகி பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எதிர் பாராத உதவிகள் கிடைத்து நிம்மதியடைவீர் கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்ப தால் உங்கள் செயல்களுக்கு ஆதாயம் கிடைக்கும். உடல்ரீதியாக இருந்த சிறுசிறு பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர்த் தொடர்புகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வீண் செலவுகள் குறைந்து சேமிக்கமுடியும். பூர்வீக சொத்துவழியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பிள்ளைகள் வழியிலிருந்த மனக் கவலைகள் விலகும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், நீண்டநாட்களாக உள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக இருந்த தேக்கங் கள் விலகி போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பதால் எதிலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகரீதியாக சற்று பொறுமையுடன், கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போது பயன் படுத்திக்கொண்டால் விரைவில் ஏற்படவிருக் கும் குருப்பெயர்ச்சிக்குப்பிறகு வாழ்வில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். சனிக்கிழமையன்று சனிக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி எள்தீபமேற்றி வழிபடுவதும், பெருமாள் வழிபாட்டை மேற்கொள்வதும் நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று 4-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கிருந்த அலைச்சல்கள் எல்லாம் குறைந்து எதிலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். குரு 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவு மிகச்சிறப்பாக இருக்கும். என்றாலும் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. சனி, செவ்வாய் 4-ல் இணைந்து சஞ்சரிப்பதால் உடன்பிறந்த வர்கள் வழியில் தேவையற்ற மனஸ்தாபம், வாகனங்கள்மூலம் செலவுகள் ஏற்படும். ராகு 8-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் ஏற்றம்மிகுந்த பலன்களை எளிதில் அடையமுடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் நல்ல ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல், வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலங்கள் ஏற்படும். வேலையாட்கள் சிறுசிறு நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், உங்களின் தனித்திறமையால் எதிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல வளர்ச்சியைப் பெறுவீர்கள். தொழில் தொடர்பான விஷயங்களை புதிய நபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகப்படியான வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஊக்கத் தொகைகளை அடைவீர்கள். மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர்சாற்றி நெய்தீபமேற்றி வழிபட்டுவந்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். .
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய், சனி சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத் துடன் செயல்பட்டு வளமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய தேவையற்ற வாக்குவாதங்கள் விலகி ஒற்றுமை ஏற்படும். உறவினர்களுடைய ஆதரவு மிகச் சிறப்பாக இருப்பதால் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து எதிலும் தெம்புடன் செயல்படுவீர்கள். குரு 4-ல் இருப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. சூரியன் 4-ல், ராகு 7-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அனுகூலங்களைப் பெறுவீர்கள். தொழில் நிமித்தமாக புதிய யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல வளர்ச்சியினை அடையமுடியும். வேலையாட்கள் உதவியாக இருப்பதால் பெரிய ஆர்டர்களைக்கூட எளிதில் முடித்து லாபம் பெறமுடியும். கூட்டாளிகளை மட்டும் சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. வங்கிமூலம் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் பொறுமையுடன் செயல்பட்டால் பெரிய பதவியினை அடையமுடியும். ஆன்மிகத் தலங்களுக்குச் சென்றுவரக்கூடிய யோகம் இவ்வாரத்தில் உண்டு. சிவ வழிபாடு, பிரதோஷ விரதமிருப்பது, தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால், நல்லதாகப் பேசினா லும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளும் நேரமென்பதால் பேச்சில் நிதானத் துடன் இருக்கவும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. குரு 3-ல் இருப்பதால் பணவரவில் தேவையற்ற நெருக்கடிகள் நிலவினாலும், சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் வாய்ப்புண்டாகும். புதன், சுக்கிரன் 2-ல் சஞ்சரிக்கவிருப்பதால் எதிர் பாராத உதவிகள்மூலம் உங்கள் கஷ்டங்கள் குறையும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு ஆதாயம் கிடைக்கும். தொழிலில் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பொறுமையுடன் பயன்படுத்திக்கொள்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தள்ளிவைக்கவும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக செயல்பட்டால்தான் நஷ்டங்களைத் தவிர்க்கமுடியும். அரசுவழி அதிகாரிகளுடைய தேவையற்ற நெருக்கடிகள் மன அமைதியைக் குறைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு மற்றவர்கள் பணியையும் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடிகள் நிலவும். வீண் பழிச்சொற்கள் எதிர்கொள்ள நேரிடும். முருகப் பெருமானுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானத்துடன் செயல்படவேண்டிய நேரமாகும். அதிக அலைச்சல், உடல் அசதி ஏற்படும் நேரமென்பதால் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பிள்ளைகள்வழியில் தேவையற்ற கவலைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சுக்கிரன், புதன் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவிருப்பதால் பலமான தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதாலும், குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் பொருளாதார நிலையானது திருப்திகரமாக இருந்து உங்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். கடந்தகால வீண் செலவுகள் குறைந்து, உங்கள் கடன் களை பைசல் செய்யமுடியும். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் ஆதாயங் களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் சற்று முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுப்பது மட்டு மல்லாமல் நல்ல லாபங்களை அடையமுடியும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிலவிய கடுமையான நெருக்கடிகள் குறைந்து தற்போது சரளமான பொருளாதார அனுகூலங்களை அடையமுடியும். உத்தியோகரீதியாக உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுப்பீர்கள். வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும். பிரதோஷத்தன்று சிவபெருமான் வழிபாட்டையும் சனி பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் சகல பிரச்சினைகளும் விலகும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சனி- செவ்வாய், புதன், சுக்கிரனுடன் 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், வீண் அலைச்சல் ஏற்படும் நேரமாகும். நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும் காலமென்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, முடிந்தவரை உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. நியாயப்படி நடக்கவேண்டிய காரியங்களகூட தடைப்படும் நேரமென்பதால் எதிலும் அவசரப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. குரு பார்வை 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால், குடும்ப உறுப்பினர்களின் உதவியால் நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் ஆதாயம் தரும் சில நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் நிதானமாக இருப்பது, அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்ப்பது நல்லது. வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படும். அரசாங்கவழி அதிகாரிகளிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்காது. வேலைக்குச் செல்பவர்கள் மன உளைச்சலை எதிர்கொள்ள நேரிடும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும் நேரமாகும். சிறிது காலத்திற்கு பொறுமையுடன் செயல்பட்டால், விரைவில் ஏற்படவுள்ள கிரகப் பெயர்ச்சிகள் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். முருக வழிபாடு, சனிபகவான் வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்வது மிக நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, செவ்வாய், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால், எல்லாவகையிலும் அனுகூலமான பலன் களை அடைவீர்கள். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருந்து கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். குடும்பத்தில் தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்து மகிழ்ச்சி ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல், எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் வரும் நாட்களில் நிறைவேறும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் அரங்கேறும். கௌரவமான பதவிகள் உங்களை நாடிவரும். ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதில் ஈடுபட்டாலும் இரட்டிப்பு அனுகூலங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக இருந்து போட்ட முதலீட்டைவிட அதிகப்படியான ஆதாயங்களை அடைய முடியும். வேலையாட்களால் இருந்த பிரச்சினைகள் வரும் நாட்களில் குறைவது மட்டுமல்லாமல், திறமைவாய்ந்த ஆட்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த அரசு ஒப்புதல்கள் எளிதில் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறைந்து சுமுகமான நிலை ஏற்படும். நீண்டநாட்களாக வேலைவாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் நல்லது.