முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
ரக பாதசாரம்:
சூரியன்: திருவாதிரை- 2.
செவ்வாய்: ரேவதி- 4.
புதன்: ரோகிணி- 3.
குரு: உத்திரட்டாதி- 3.
சுக்கிரன்: கிருத்திகை- 4.
சனி: அவிட்டம்- 3.
ராகு: பரணி- 4.
கேது: விசாகம்- 2.
கிரக மாற்றம்:
ஆனி 13 (27-6-2022) மேஷ செவ்வாய் (அதிகாலை 5.40).
ஆனி 18 (2-7-2022) மிதுன புதன் (காலை 9.45).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- ரிஷபம்.
28-6-2022 அதிகாலை 5.32 மணிக்கு மிதுனம்.
30-6-2022 மாலை 6.23 மணிக்கு கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் இணைந்து சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பென்பதால் பொருளாதாரரீதியாக சிறப்புமிகு பலன்களை அடையும் யோகம் உண்டாகும். கடந்தகால நெருக்கடிகள் மளமளவென குறையும் வாய்ப்புண்டு. நெருங்கியவர்களின் உதவியால் நிம்மதி பெறுவீர்கள். சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைவது மட்டுமல்லாமல் நீண்டநாள் பிரச்சினைகள் எல்லாம் விலகும். குரு விரய ஸ்தானத்தில் இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. ராசியாதிபதி செவ்வாய் இதுவரை 12-ல் சஞ்சரித்து பல இன்னல்களை ஏற்படுத்தி இருந்தாலும், 27-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள் குறையும். அனுகூலங்களை அடையும் வாய்ப்பு ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முன்கோபத்தை மட்டும் சற்று குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் தொடர்புகள்மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுத்த பணியைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். விரும்பிய இடமாற்றத்தைப் பெறமுடியும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, உக்ர தெய்வங்களை வழிபடுவது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் ஜென்ம ராசியில் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதும், புதன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பென்பதால் உங்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கும். தனகாரகன் குரு 11-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் அரங்கேறி மகிழ்ச்சி ஏற்படும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவதால் கடந்தகால மனக் கசப்புகள் விலகி நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகரித்து கடன் பிரச்சினைகள் எல்லாம் குறையும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை வரும் நாட்களில் நிறைவேற்றமுடியும். சமுதாயத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படுவதால் போட்டிகள் குறைந்து அடைய நினைத்த இலக்கை அடைவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்புண்டாகும். வேலைக் குச் செல்பவர்கள் பணி யில் சிறப்பாக செயல்பட்டு நல்ல நிலையை அடைவதற் கான வாய்ப்புகள் உண்டா கும். பதவி உயர்வு எதிர்பார்த்த வர்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதிகப்படி யான அனுகூலங்களைப் பெறுவீர்கள். சிவத் தலங்களுக்குச் சென்றுவருவது, செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால், உணர்ச்சி வசப்படாமல் நெர
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
ரக பாதசாரம்:
சூரியன்: திருவாதிரை- 2.
செவ்வாய்: ரேவதி- 4.
புதன்: ரோகிணி- 3.
குரு: உத்திரட்டாதி- 3.
சுக்கிரன்: கிருத்திகை- 4.
சனி: அவிட்டம்- 3.
ராகு: பரணி- 4.
கேது: விசாகம்- 2.
கிரக மாற்றம்:
ஆனி 13 (27-6-2022) மேஷ செவ்வாய் (அதிகாலை 5.40).
ஆனி 18 (2-7-2022) மிதுன புதன் (காலை 9.45).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- ரிஷபம்.
28-6-2022 அதிகாலை 5.32 மணிக்கு மிதுனம்.
30-6-2022 மாலை 6.23 மணிக்கு கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் இணைந்து சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பென்பதால் பொருளாதாரரீதியாக சிறப்புமிகு பலன்களை அடையும் யோகம் உண்டாகும். கடந்தகால நெருக்கடிகள் மளமளவென குறையும் வாய்ப்புண்டு. நெருங்கியவர்களின் உதவியால் நிம்மதி பெறுவீர்கள். சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைவது மட்டுமல்லாமல் நீண்டநாள் பிரச்சினைகள் எல்லாம் விலகும். குரு விரய ஸ்தானத்தில் இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. ராசியாதிபதி செவ்வாய் இதுவரை 12-ல் சஞ்சரித்து பல இன்னல்களை ஏற்படுத்தி இருந்தாலும், 27-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள் குறையும். அனுகூலங்களை அடையும் வாய்ப்பு ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முன்கோபத்தை மட்டும் சற்று குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் தொடர்புகள்மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுத்த பணியைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். விரும்பிய இடமாற்றத்தைப் பெறமுடியும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, உக்ர தெய்வங்களை வழிபடுவது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் ஜென்ம ராசியில் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதும், புதன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பென்பதால் உங்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கும். தனகாரகன் குரு 11-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் அரங்கேறி மகிழ்ச்சி ஏற்படும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவதால் கடந்தகால மனக் கசப்புகள் விலகி நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகரித்து கடன் பிரச்சினைகள் எல்லாம் குறையும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை வரும் நாட்களில் நிறைவேற்றமுடியும். சமுதாயத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படுவதால் போட்டிகள் குறைந்து அடைய நினைத்த இலக்கை அடைவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்புண்டாகும். வேலைக் குச் செல்பவர்கள் பணி யில் சிறப்பாக செயல்பட்டு நல்ல நிலையை அடைவதற் கான வாய்ப்புகள் உண்டா கும். பதவி உயர்வு எதிர்பார்த்த வர்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதிகப்படி யான அனுகூலங்களைப் பெறுவீர்கள். சிவத் தலங்களுக்குச் சென்றுவருவது, செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால், உணர்ச்சி வசப்படாமல் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நன்று. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருக்கவும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது உத்தமம். உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் திங்கட்கிழமை முதல் லாப ஸ்தானத்தில் ராகு சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அன்றாடத் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் வயது மூத்தவர்களிடம் சற்று பொறுமையோடு பேசினால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வாகனங் கள்மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். இயற்கை உணவுகளை உட் கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட் டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலை யாட்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும், உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக் கூடிய பலம் ஏற்படும். எந்திரங்களைப் பழுதுபார்ப்பதற்காக எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். பணி நிமித்தமாக சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து நெருக்கடிகள் குறையும். அஷ்டலட்சுமி வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவிசெய்வது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சுக்கிரன், புதன் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் சிறப்பான பொருளாதாரநிலை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய யோக முண்டு. 9-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் திங்கட்கிழமை முதல் 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் நல்ல வாய்ப்புகள், கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். சனி அதிசாரமாக 8-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, இரவுப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. உங்களுக்கிருந்த வம்பு, வழக்குகள் எல்லாம் முழுமையாக மறைந்து நிம்மதியுடன் செயல்படுவீர் கள். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன் படுத்தி நல்ல லாபத்தை அடைவீர்கள். சில நபர் களால் ஏற்பட்ட இடையூறுகள் முழுமை யாக விலகி தொழிலில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலையாட்களை மட்டும் சற்று அனுசரித்துச்செல்லவும். சூழ்நிலைக்குத் தக்கவாறு நீங்களே தொழிலில் நேரடியாக இருந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணியைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படும் நேரமென்பதால் நிம்மதியுடன் எதிலும் செயல்படுவீர்கள். ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். சிவத் தலங்களுக்குச் சென்றுவருவது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். ராசிக்கு 10-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராள மாக இருந்து அன்றாடத் தேவைகளை எளிதில் பூர்த்திசெய்ய முடியும். வாங்கிய கடன்களை அடைக்குமளவுக்குப் பொருளாதாரநிலை சிறப் பாக இருக்கும். 8-ல் சஞ்சரித்த செவ்வாய் திங்கட்கிழமைமுதல் 9-ல் சஞ்சரிக்கவிருப்பதால் உங்களுக்கிருந்த சிறுசிறு உடல்நல பாதிப்பு கள் சற்று குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் வரும் நாட்களில் முழுமை யாக மறையும். ஒரு பெரிய மனிதரால் ஆதாயமடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி யினை எட்டும் வாய்ப்புண்டு. உங்களின் கடின உழைப்பால் நல்ல லாபத்தைப் பெற்று நிம்மதியடைவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் சற்று கவனத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். வெளியூர்த் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைவது மட்டுமல்லாமல் அதிகாரிகள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர் களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலத்தில் ஒரு உயர்வான நிலையை எட்டமுடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் எதிர்பார்த்ததைவிட சிறப்பான அனுகூலங்கள் கிடைக்கும். குரு பகவானுக்கு வியாழக்கிழமையன்று மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றுவது நன்று.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 1, 10-க்கு அதிபதியான புதன் 2, 9-க்கு அதிபதியான சுக்கிரன் சேர்க்கை பெற்று 9-ல் வலுவாக சஞ்சரிப்பது அற்புதமான தர்மகர்மாதிபதி யோகமாகும். உங்களின் நீண்டநாள் கனவுகளெல்லாம் வரும் நாட்களில் எளிதில் நிறைவேறும். 7-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். அசையா சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையவுள்ளீர்கள். அரசுவழியில் எதிர் பார்த்த உத்தரவுகள் வரும் நாட்களில் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் எளிதில் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைப்பது மட்டுமல்லாமல் உங்களுக்கிருந்த வேலைப்பளு வரும் நாட்களில் குறையும். பதவி உயர்வு எதிர்பார்த்த வர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உங்கள்மீதிருந்த வீண்பழிகள் முழுமையாக விலகும். ராசிக்கு 7-ல் சஞ்சரித்த செவ்வாய் திங்கட்கிழமைமுதல் 8-ல் ராகு சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்ளவும். தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது உத்தமம். உடன்பிறந்த சகோதர- சகோதரிகளிடம் வாக்குவாதங்களைத் தவிர்த்து, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். முருக வழிபாடு, துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது கெடுதிகளைக் குறைக்கும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசிநாதன் சுக்கிரன் புதனுடன் 8-ல் சஞ்சரிப்பதால் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. குரு 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். இதுவரை 6-ல் சஞ்சரித்த செவ்வாய் திங்கட்கிழமைமுதல் 7-ல் ராகு சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள், குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு ஏற்படும் நேரமென்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிலும் நிதானத்தோடு இருக்கவும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். ஒருசில பண உதவிகள் கிடைத்தாலும் உங்கள் சக்திக்குமீறி வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில், வியாபாரத்தில் தேவையில்லாத இடையூறுகள், மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். நீங்கள் நல்லதாகப் பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். வேலையாட்கள்மூலம் வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பது மட்டு மல்லாமல் உடன் இருப்பவர்கள் சொல்லும் பழிச்சொற்களால் மேலதிகாரியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்கள் பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்தால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். பிறர் விஷயத்தில் தலையிடாமல், குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். மகாவிஷ்ணு, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் சங்கடங்கள் குறையும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய் திங்கட்கிழமை முதல் ராகு சேர்க்கையுடன் 6-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் உங்கள் வலிமை கூடக்கூடிய இனிய நேரமாக இவ்வாரம் இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பொருளாதாரநிலை தாராளமாக அமையப் பெற்று சகலவிதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். ராசிக்கு 7-ல் சுக்கிரனும் புதனும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கடந்தகால கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதி ஏற்படும். நீண்டநாட்க ளாகத் தடைப்பட்ட சுப காரியங்கள் வரும் நாட்களில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்கள்மூலம் அனுகூலமான செய்தி கிடைக்கும். சூரியன் தற்போது 8-ல் சஞ்சரிப்பதால் வாகனங்களில் நிதானத் தோடு செல்வது, வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர் பார்த்ததைவிட நல்ல லாபங்களை அடைய முடியும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதால் உங்களுக்கிருந்த நீண்டநாளைய பொருளாதார நெருக்கடிகள் எல்லாவற்றையும் வரும் நாட்களில் சரிசெய்ய முடியும். வேலைக்குச் செல்பவர்கள் உயர்வான நிலையை அடையும் யோகமும், உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்களால் ஒருசில அனுகூலங்களை அடைவீர்கள். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். விநாயகர் வழிபாடு, சூரிய நமஸ்காரம் செய்வது நன்று.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசிக்கு 11-ல் கேது சஞ்சரிப்பதால், உங்கள் மன தைரியத்தால் எதையும் எதிர்கொள்ளும் பலம் ஏற்படும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு செயல்படவும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. புதன், சுக்கிரன் 6-ல் சஞ்சரிப்பதாலும், சூரியன் 7-ல் சஞ்சரிப்பதாலும் தேவையில் லாத நெருக்கடிகள், உடனிருப்பவர்களே மன அமைதியைக் குலைக்கும் நிலை, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற இடையூறுகள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள்கூட தாமத மாகும் நிலையும், இருப்பதை அனுபவிக்க இடையூறுகளும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியாத காரணத் தால் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுவீர் கள். எதிர்பார்த்த பணவரவுகள் தக்கநேரத்தில் கிடைக்காத காரணத்தால் சேமிப்புகள் கரையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாகவே இருக்கும். பிறர் சொல்வதைக் கேட்காமல், அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு நெருக்கடிகள் சற்று குறையும். துர்க்கையம்மன், குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஏழரைச்சனி நடப்பதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் பல்வேறு இன்னல்களை சந்தித்துவரும் உங்களுக்கு இவ்வாரத்தில் ஜென்ம ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான புதன், சுக்கிரன் இணைந்து 5-ல் சஞ்சரிப்ப தால் வலுவான தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். சூரியன் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும். உங்களுக்குள்ள மறைமுகப் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர் களின் உதவியால் மங்களகரமான சுபகாரியங் கள் கைகூடும். திங்கட்கிழமைமுதல் செவ்வாய் 4-ல் ராகு சேர்க்கைபெற்று சஞ்சரிப்ப தால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம். அசையா சொத்துவகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத் தில் காலநேரம் பார்க்காமல்- குறிப்பாக வேலையாட்களை எதிர்ப்பார்க்காமல் நீங்கள் முன்னின்று செயல்பட்டால் லாபத்தை எட்டமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் அதிகாரிகள் ஆதரவு மிக நன்றாக இருக்கும். மற்றவர்கள் பணியையும் நீங்கள் சேர்த்துச் செய்தாலும் அதற்கான சன்மானத்தை அடையமுடியும். இவ்வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைத்து உங்களின் நீண்டநாளைய பிரச்சினைகள் குறையும். உடல் ஊனமுற்றவர் களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி நெய் தீபமேற்றுவது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு மேம்படும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்புண்டாகும். 2-ல் சஞ்சரித்த செவ்வாய் திங்கட்கிழமைமுதல் 3-ல் ராகு சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதால், எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி கிடைக் கும். நீண்டநாட்களாக உங்களுக்கிருந்த இடையூறுகள் எல்லாம் வரும் நாட்களில் விலகும். குரு 2-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் பணவரவுக்கு எந்த விதத்திலும் பஞ்சமிருக்காது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பிள்ளைகள்வழியிலும் மகிழ்ச்சி ஏற்படும். உற்றார்- உறவினர்வகையில் இருந்த கடந்த கால மனக்கசப்புகள் விலகி ஒற்றுமை மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு உயர்வான நிலையை எட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்க்கும் உதவிகள் தகுந்த நேரத்தில் கிடைத்து உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும். வம்பு வழக்குகளில் சாதகமான தீர்ப்பைப் பெறுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் நிம்மதியுடன் செயல்படமுடியும். உத்தியோகரீதியாக சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுப்பீர்கள். நீண்டநாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு உயர்வான இடத்திலிருந்து அழைப்பு வரும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் புதிய முயற்சியில் ஈடுபட்டால் முழு வெற்றியினைப் பெறமுடியும். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, சிவத் தலங்களுக்குச் சென்று வருவது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்ப தால் தேவையற்ற அலைச்சல், நிம்மதிக் குறைவுகள் ஏற்படும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் திங்கட்கிழமை முதல் 2-ல் ராகு சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாகப் பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு, நெருங்கிய உறவுகளிடம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரித்து 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைத்து எதையும் சமாளிப்பீர்கள். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, குடும்ப உறுப்பினர் களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நல்லது. பணவரவில் ஏற்ற- இறக்க மான நிலையிருந்தாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறு வாய்ப்புக் கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படு வது நல்லது. வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் போட்டி, பொறாமைகளை சமாளித்து போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு செவிசாய்க்காமல் இருப்பது நல்லது. பணிச்சுமை சற்று அதிகப்படியாக இருந்தாலும் உழைப்பிற்கான பலனை விரைவில் அடைவீர்கள். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அனுகூலமான பலன்களை அடையமுடியும். துர்க்கையம்மனை தரிசிப்பது, சிவத் தலங்களுக்குச் சென்றுவருவது நல்லது.