முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: திருவோணம்- 1.
செவ்வாய்: புனர்பூசம்- 3 (வ).
புதன்: உத்திராடம்- 2.
குரு: ரோகிணி- 3 (வ).
சுக்கிரன்: பூரட்டாதி- 3.
சனி: பூரட்டாதி- 1.
ராகு: உத்திரட்டாதி- 1.
கேது: உத்திரம்- 3.
கிரக மாற்றம்:
28-1-2025 மீன சுக்கிரன் காலை 7.02 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: விருச்சிகம்
26-1-2025 காலை 8.26 மணிக்கு தனுசு.
28-1-2025 பகல் 2.51 மணிக்கு மகரம்.
30-1-2025 மாலை 6.34 மணிக்கு கும்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதாலும், 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிகச் சிறப்பாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திறமைவாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழி-ல் இணைவார்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல விடிவு காலம் கிடைத்து பொருளாதார அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் சிறப் பான மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, பெருமாள் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 31, 1.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதாலும், 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத் தும் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையைக் கடைபிடிப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிப்பதாலும், குரு வக்ரகதியில் இருப்பதாலும் தொழில், வியாபாரத்தில் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் தொழிலை சிறப்பாக நடத்தமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. மாணவர்- மாணவியர்கள் சக நண்பர்களிடம் பழகுகின்ற பொழுது பார்த்து பழகுவது மிகவும் நல்லது. சில நேரங்களில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமை காப்பது உத்தமம். காலபைரவரை வழிபாடு செய்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் வளமான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 31, 1.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: திருவோணம்- 1.
செவ்வாய்: புனர்பூசம்- 3 (வ).
புதன்: உத்திராடம்- 2.
குரு: ரோகிணி- 3 (வ).
சுக்கிரன்: பூரட்டாதி- 3.
சனி: பூரட்டாதி- 1.
ராகு: உத்திரட்டாதி- 1.
கேது: உத்திரம்- 3.
கிரக மாற்றம்:
28-1-2025 மீன சுக்கிரன் காலை 7.02 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: விருச்சிகம்
26-1-2025 காலை 8.26 மணிக்கு தனுசு.
28-1-2025 பகல் 2.51 மணிக்கு மகரம்.
30-1-2025 மாலை 6.34 மணிக்கு கும்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதாலும், 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிகச் சிறப்பாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திறமைவாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழி-ல் இணைவார்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல விடிவு காலம் கிடைத்து பொருளாதார அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் சிறப் பான மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, பெருமாள் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 31, 1.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதாலும், 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத் தும் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையைக் கடைபிடிப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிப்பதாலும், குரு வக்ரகதியில் இருப்பதாலும் தொழில், வியாபாரத்தில் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் தொழிலை சிறப்பாக நடத்தமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. மாணவர்- மாணவியர்கள் சக நண்பர்களிடம் பழகுகின்ற பொழுது பார்த்து பழகுவது மிகவும் நல்லது. சில நேரங்களில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமை காப்பது உத்தமம். காலபைரவரை வழிபாடு செய்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் வளமான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 31, 1.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உங்களது முன்கோபத்தால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். ஒருசிலருக்கு உறவினர்கள் மூலமாக தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு 9-ல் சனி, 9, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளித்து போட்ட முதலை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலை யாட்களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலம் ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது அதிக அலைச்சல் காரணமாக உங்களது ஓய்வுநேரம் குறையக்கூடிய காலமாகும். நீங்கள் சிறப் பாக செயல்பட்டாலும் அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவ- மாணவியர்கள் படிப்பில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தேவையற்ற பழிச் சொற்களை எதிர்கொள்ளக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவதன்மூலம் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
வெற்றி தரும் நாட்கள்: 26, 27.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் சனி, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் யோசித்துச் செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, இரவு நேரப் பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், எதிர்பார்த்த பண வரவுகள் சற்று தாமதமாகக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும். பிறந்த ஊரைவிட வெளியூர் தொடர்புகள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருசில அனுகூலங்களை அடையக்கூடிய அமைப்பு இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பழிச் சொற்களை எதிர்கொள்ளக்கூடிய நேரமென்பதால் பிறர் பேச்சை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப் பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் சற்று சாமர்த்தியமாக செயல்படுவது நல்லது. இந்த வாரத்தில் காலபைரவரை வழிபாடு செய்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28, 29.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன், ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உங்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் நெருங்கியவர்களின் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். தற்சமயம் குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய ஒரு பலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்ப தால் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்களை அடையக்கூடிய நேரமாகும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் சென்றால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். ஒருசிலருக்கு வெளிமாநிலங்கள்மூலமாக ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாகும். கணவன்- மனைவி இடையே சற்று விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெறுவதற்கு உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 31, 1.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் சனி, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தற்போது 6-ல் சஞ்சரிக்கக்கூடிய சுக்கிரன் செவ்வாய்க்கிழமைமுதல் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவதுடன் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு உன்னதமான நிலையினை அடைவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரியுடைய ஆதரவு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பெரிய இடத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் உயர் படிப்புக்காக நீங்கள் நினைத்தது தற்போது கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நீங்கள் வளமான பலன்களைப் பெறுவதற்கு வரும் நாட்களில் அம்மன் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நற்பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 31, 1.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும் 8-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் எதிர் பாராத பண வரவுகள் கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் சற்று குறையும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், ஒருசிலருக்கு வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய சூழல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சற்று முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களுடைய உதவியை எதிர்பார்க்காமல் எந்த ஒரு விஷயத்திலும் நீங்களே நேரடியாக தலையிட்டு செயல்பட்டால் ஏற்றம் மிகுந்த பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. நம்பியவர் களே தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணியை செய்வது மட்டுமில்லாமல் உடனிருப்பவர்களுடைய பணியும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய காலமாகும். இந்த வாரத்தில் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன்மூலம் பிரச்சினைகள் விலகி நற்பலன் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 26, 27,28.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 4, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல் படுவீர்கள். தற்போது உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், குரு பகவான் வக்ரகதியில் இருப்பதாலும் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்க மான நிலை இருக்கக்கூடிய நேரமென்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு செயல்படவேண்டும். உடன்பிறந்த வர்களை சற்று அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒரு சில நல்ல ஆதரவுகள் கிடைக்கும் என்றாலும் மறைமுக எதிர்ப்புகள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய லாபங்கள் சற்று தாமதமாகக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச் சொற்களைச் சொல்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே வருகின்ற நாட்களில் தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு செய்வது, சர்பேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 30.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்))
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சனி சஞ்சரிப்பதும், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 4-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் உன்னதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ராசியாதிபதி குரு பகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து சகலவிதமான சௌபாக்கியங்களையும் நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை அடையக்கூடிய நேரமாகும். வேலையாட்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளை அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது தற்போதைக்கு சிறப்பு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய நேரமாகும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தக் கூடிய போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லக்கூடிய காலமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது அனுகூலப் பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 31, 1.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். நெருங்கியவரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பைகூட உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய ஒரு நேரம் ஆகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறைவதுடன் பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் வயது மூத்தவர்களிடம் பேசும்பொழுது பேச்சில் நிதானத் தைக் கடைபிடிப்பது, படிப்பில் கவனம் செலுத்துவது உத்தமம். இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 30.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, 2-ல் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நெருங்கியவர்களே தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்துச் செயல்பட வேண்டும். பணவரவில் தேவையற்ற நெருக்கடிகள் இருக்கும் என்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் முடிந்தவரை சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் பொறுமையோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். ஒருசிலருக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். உங்கள் நம்பிக்கைக்கு உரிய நபர்களே உங்களுக்கு நெருக்கடி களை ஏற்படுத்துவதால் மன அமைதியானது குறையும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியாது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உங்களுக்கு ஏற்படக்கூடிய சின்ன சின்ன உடல் உபாதைகள் காரணமாக பணியில் சுறுசுறுப்பாக செயல்பட இடையூறுகள் ஏற்படும். மாணவ- மாணவியர் கள் உங்களுக்கு தற்போது ஞாபகமறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. துர்க்கை யம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 31, 1.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களின் பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்து ஏற்றம் மிகுந்த பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஒருசில எதிர்பாராத தனச்சேர்க்கை ஏற்பட்டு வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். குறிப்பாக உங்களுக்கு இருந்துவந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் சற்று குறைந்து அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சில நேரங்களில் முன்கோபத்தை குறைத்துக்கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகரீதியாக பார்க்கின்ற பொழுது உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகளுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த அவப்பெயர்களைத் தற்போது விலக்கிக்கொள்ள முடியும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28, 29, 30.