முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரம்- 4. செவ்வாய்:
மிருகசீரிடம்- 1.
புதன்: உத்திரம்- 3 (வ).
குரு: உத்திரட்டாதி- 2 (வ).
சுக்கிரன்: உத்திரம்- 2.
சனி: அவிட்டம்- 1 (வ).
ராகு: பரணி- 3.
கேது: விசாகம்- 1.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்.
25-9-2022 பகல் 11.20 மணிக்கு கன்னி.
27-9-2022 மாலை 6.17 மணிக்கு துலாம்.
29-9-2022 இரவு 11.25 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 12-ல் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்து கடந்தகால நெருக்கடிகள் குறையும் யோகமுண்டு. சூரியன் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். தற்போதைய நிலையில் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய நேரமென்பதால் உணர்ச்சிவசப்படாமல் கோபத்தைக் குறைத்துக் கொண்டு பொறுமையோடு செயல்படவேண்டியது மிகமிக முக்கியமான ஒன்றாகும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையும் யோகம், வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்பு, கடந்தகால நெருக்கடிகள் குறையும் யோகம் இவ்வாரத் தில் உண்டு. கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான நிலை ஏற்படும். உங்கள்மீது வீண் பழிச்சொல் சொன்னவர்கள்கூட தற்போது நட்பாகப் பழகுவார்கள். புதிய வாய்ப்பை எதிர் பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத் திலிருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றி கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு நெய்தீபம் ஏற்றுவது, கந்தசஷ்டி கவசம் படிப்பது, இல்லாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்று.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிநாதன் சுக்கிரன் புதனுடன் 5-ல் சஞ்சரிப்பதால் உங்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து சிறப்பான பலன்களை அடைவீர்கள். குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொண்டு பொறுமையுடன் செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் அரங்கேறும். பூர்வீக சொத்துவழியில் அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. உங்களுடைய தகுதிகளை உயர்த்திக் கொள்வதற்கான புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் வரும் நாட்களில் ஏற்படும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சிறிது நெருக்கடி கள் இருந்தாலும் உங்களின் தனித் திறமை யால் சிறப்பாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். வெளிநபர்களிடம் தொழில் தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப் பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். கடினமான பணியைக்கூட நீங்கள் எளிதில் கையாண்டு நல்லபெயர் எடுப்பீர்கள். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சிவன் தலங்களுக் குச் சென்றுவருவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரம்- 4. செவ்வாய்:
மிருகசீரிடம்- 1.
புதன்: உத்திரம்- 3 (வ).
குரு: உத்திரட்டாதி- 2 (வ).
சுக்கிரன்: உத்திரம்- 2.
சனி: அவிட்டம்- 1 (வ).
ராகு: பரணி- 3.
கேது: விசாகம்- 1.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்.
25-9-2022 பகல் 11.20 மணிக்கு கன்னி.
27-9-2022 மாலை 6.17 மணிக்கு துலாம்.
29-9-2022 இரவு 11.25 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 12-ல் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்து கடந்தகால நெருக்கடிகள் குறையும் யோகமுண்டு. சூரியன் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். தற்போதைய நிலையில் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய நேரமென்பதால் உணர்ச்சிவசப்படாமல் கோபத்தைக் குறைத்துக் கொண்டு பொறுமையோடு செயல்படவேண்டியது மிகமிக முக்கியமான ஒன்றாகும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையும் யோகம், வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்பு, கடந்தகால நெருக்கடிகள் குறையும் யோகம் இவ்வாரத் தில் உண்டு. கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான நிலை ஏற்படும். உங்கள்மீது வீண் பழிச்சொல் சொன்னவர்கள்கூட தற்போது நட்பாகப் பழகுவார்கள். புதிய வாய்ப்பை எதிர் பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத் திலிருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றி கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு நெய்தீபம் ஏற்றுவது, கந்தசஷ்டி கவசம் படிப்பது, இல்லாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்று.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிநாதன் சுக்கிரன் புதனுடன் 5-ல் சஞ்சரிப்பதால் உங்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து சிறப்பான பலன்களை அடைவீர்கள். குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொண்டு பொறுமையுடன் செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் அரங்கேறும். பூர்வீக சொத்துவழியில் அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. உங்களுடைய தகுதிகளை உயர்த்திக் கொள்வதற்கான புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் வரும் நாட்களில் ஏற்படும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சிறிது நெருக்கடி கள் இருந்தாலும் உங்களின் தனித் திறமை யால் சிறப்பாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். வெளிநபர்களிடம் தொழில் தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப் பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். கடினமான பணியைக்கூட நீங்கள் எளிதில் கையாண்டு நல்லபெயர் எடுப்பீர்கள். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சிவன் தலங்களுக் குச் சென்றுவருவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4, 5-க்கு அதிபதியான புதன், சுக்கிரன் இணைந்து 4-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகும். 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும், 10-ல் குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதாலும் சகல சௌபாக்கியங்களையும் அடையும் வாய்ப்பு, தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக் கூடிய யோகம் ஏற்படும். அசையும்- அசையா சொத்துவகையில் குடும்பத் திற்கு மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். சூரியன் 4-லும், செவ்வாய் 12-லும் சஞ்சரிப்பதால் உறவினர்களை அனுசரித்துச்செல்வது- குறிப்பாக பங்காளியிடம் வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. வசதிவாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படக்கூடிய நேர மாகும். அதிக அலைச்சல் காரணமாக ஓய்வு நேரம் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கும் வாய்ப்பு, எதிர் பாராத அனுகூலங்களை அடையும் யோகம் வரும் நாட்களில் உண்டு. வேலை யாட்கள் ஒத்துழைப்பு சிறப் பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் வாடிக்கை யாளர்களுக்கு சப்ளை செய்யமுடியும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப் பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புண்டு. வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளும்பொழுது கவனமாக இருப்பது- குறிப்பாக இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஞாயிறு, வெள்ளி, சனி ஆகியவை உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்கள் நடக்கக்கூடிய நாட்களாக இருக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர் களுக்கு முடிந்த உதவியைச் செய்வது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு உபஜெய ஸ்தான மான 3-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பென்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எந்த செயலிலும் தைரியத்தோடு செயல்பட்டு சிறப்பான பலனையடையும் யோகமுண்டு. குறிப்பாக எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைத்து பொருளாதார நெருக்கடிகள் விலகும். மன நிம்மதியும், பூரிப்பும் ஏற்படும். நீண்டநாட்களாக எண்ணிய காரியங்களைத் தற்போது செயல்படுத்த முயற்சித்தால் அதற்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை மட்டும் குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்பட்டால் வளமான பலன்களைப் பெறமுடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை அடையும் யோகமுண்டு. புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் அதனை சிறப்பான முறையில் பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். அரசுவழியில் எதிர்பார்க்கும் உத்தரவுகளை வரும் நாட்களில் அடையமுடியும். கடந்தகால சட்டச் சிக்கல்கள் தற்போது விலகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நெருக்கடிகள் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். ஒருசிலருக்கு வேலை நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்பும், அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் ஏற்படும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, துர்க்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது கெடுதியைக் குறைக்கும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன், 3-ல் கேது சஞ்சரிப்பதால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நெருங்கியவர்களின் உதவியால் ஆதாயங்களை அடைவீர்கள். பேச்சுத் திறனால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சனி பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் விலகக்கூடிய நிலையும், எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகக்கூடிய நிலையும் ஏற்படும். குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து வியக்குமளவிற்கு உயர்வான நிலையினை எட்டுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகள் தற்போது முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டாலும், உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். பணியிலுள்ள அலைச்சல் காரணமாக ஓய்வுநேரம் குறையும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் பணவரவுகள் மிகவும் திருப்திகரமாக இருந்து ஆதாயங்களை அடைவீர்கள். மகாவிஷ்ணு வழிபாடு, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையன்று மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத் துக்கொள்வது, உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால், பண வரவுகள் தகுந்த நேரத்தில் வராத காரணத்தினால் மன அமைதி குறையும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் மிகவும் நம்பியவர்களே கடைசி நேரத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். மனைவி, பிள்ளைகள்வழியில் தேவையில்லாத செலவுகள் ஏற்படும். வீண் பயணங்கள்- அதன்மூலமாக கையிருப்பு குறையக்கூடிய சூழல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கவேண்டிய நேரத்தில் உடனிருப்பவர்களே அந்த வாய்ப்புகளை அடைய இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களை நம்பாமல் நீங்கள் நேரடியாக ஈடுபட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக நிம்மதிக்குறைவு, மற்றவர்கள் பணியையும் நீங்கள் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் இந்த நாட்களில் நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். துர்க்கையம்மனுக்கு நெய்தீபம் ஏற்றுவது, விநாயகரை வழிபடுவது, மாணவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்வது மிகவும் நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், புதன், சூரியனுடன் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு, ஒன்றுமேயில்லாத விஷயத்திற்குக்கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எந்த செயல் செய்வதென்றாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் நல்லதாக ஒரு செயல் செய்தாலும் அதனை உடனிருப்பவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. முடிந்தவரை இரவுப் பயணங்களைத் தள்ளிவைப்பது நன்று. தொழில், வியாபாரத்தில் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும். சிலநேரங்களில் சில சட்டச் சிக்கல்களை சந்திக்கும் நிலைகூட ஏற்படலாம். வேலையாட்களை அனுசரித்துச்செல்வது, சிறு வாய்ப்பிருந்தாலும் அதனைத் தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்வது தற்போதைய நேரத்திற்கு மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் கவனத்தோடு இருப்பதும், அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்ப்பதும் நல்லது. குறிப்பாக பிறர் சொல்வதைக் கேட்காமல் உங்களுடைய காரியத்தில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிடைக்கவேண்டியது விரைவில் கிடைக்கும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து நெருக்கடிகள் சற்று குறையும். மகாலட்சுமி வழிபாடு, சஷ்டி விரதமிருப்பது, சூரிய நமஸ்காரம் செய்வது நன்று.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 11-ஆம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக வரும் நாட்கள் இருக்கும். எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான ஆதாயங்களை அடைவீர்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர் கள். ராசிக்கு 3-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப் பது பல்வேறுவகையில் அனுகூலத்தைத் தரும் அமைப்பென்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடையமுடியும். வீடு, வாகனம் வாங்க விரும்பியவர்களுக்கு எண்ணங்கள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படு மளவுக்கு உயர்வான நிலையை எட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்புண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைப்பது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக் கெல்லாம் தற்போது நல்லதோர் சன்மானம் கிடைக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன் தொல்லைகளெல்லாம் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு அதிகப்படியான அனுகூலங்களை அடையும் வாய்ப்புண்டாகும். விநாயகர் வழிபாடு, கந்தசஷ்டிக் கவசம் படிப்பது, செவ்வாய்க் கிழமையன்று முருகனுக்கு அர்ச்சனைசெய்வது கெடுதியைக் குறைக்கும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதால் எல்லா வகையி லும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். சூரியன், புதன், சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் விலகி நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருந்து கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். உங்களுக்கிருந்த அவப்பெயர்கள் விலகி நிம்மதி ஏற்படும். ஒரு பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் சட்டரீதியான சிக்கல்கள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ராசிக்கு சனி 2-ல் சஞ்சரிப்ப தால் யோசித்துப் பேசினால் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். சந்தை சூழ்நிலை சாதகமாக மாறுவதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். வெளியூர், வெளிநாடுகள்மூலம் அனுகூலமான செய்திகள் வரும். உத்தியோகரீதியாக நல்ல நிலையை எட்டும் வாய்ப்பு, கடந்தகால சிக்கல்கள் விலகும் சூழ்நிலை உண்டாகும். அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பதால் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். ஒருசிலருக்கு பெரிய நிறுவனத்திலிருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகவும் அனுகூலமான நாட்களாக இருக்கும். வியாழக்கிழமை குரு ஸ்தலங்களுக்குச் சென்று குருவுக்கு அர்ச்சனை செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்வது, அன்னதானம் செய்வது நன்மையைத் தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதாலும், 4-ல் ராகு சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். முடிந்தவரை உடனிருப்பவர்களை அனுசரித் துச்செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதன் காரணமாக சில எதிர்பாராத உதவிகள் கிடைத்து நெருக்கடியான நிலையிலிருந்து தப்பிக்கமுடியும். குறிப்பாக நெருங்கிய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் சிக்கனமாக இருப்பது, கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன் படுத்திக்கொள்வது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்போதைக்குத் தள்ளிவைப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் பொருளாதார அனுகூலங்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருக்க வேண்டும். குடும்ப விஷயங்களை வெளிநபர் களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. எதிலும் பொறுமையோடு செயல் படுவது, பேச்சில் நிதானத்தோடு இருப்பது நல்லது. வெளியூர்ப் பயணங்கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை பயணங்களைத் தள்ளிவைக்கவும். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார உதவிகள் கிடைத்து நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். பெருமாள் வழிபாடு, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது நன்மை தரும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள் )
ராசிக்கு 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்தவொரு செயலிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். எளிதில் முடியவேண்டிய காரியங்களும் தாமதமாகும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது மட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். பண விஷயத்தில் மிகவும் சிக்கனத் தோடு இருக்கவேண்டும். சக்திக்குமீறிய செலவுகள் ஏற்படலாம். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் இடையூறு கள் உண்டாகும். வாகனங்கள்மூலமாக செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்காது. சில இடைத்தரகர்களின் செயல்களால் மன அமைதி குறையும். தற்போதைக்கு நெருக்கடி யான நேரமென்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிறிது காலத்திற்கு பொறுமை யோடு இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். பிறர் சொல்வதைப்பற்றிக் கவலைப் படாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வெள்ளி, சனி ஆகிய நாட்களில் தாராள தனவரவுகள், முயற்சிகளுக்கு நல்ல ஆதரவுகள் கிடைக்கும் வாய்ப்புண் டாகும். முருக வழிபாடு, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும். இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யவும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப் பென்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். 7-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத் தில் மகிழ்ச்சி, பண வரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, நவீனகரமான பொருட் களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டு மல்லாமல் நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்பவர்களுக்குக்கூட தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற் றம் உண்டாகும். வெளியூர்மூலமாக நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களுடைய முதலீடுகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கடந்தகால நெருக் கடிகள் விலகும். கூட்டாளிகள்மூலம் அதிகப் படியான ஆதாயங்களை அடைவீர்கள். ராகு 2-ல் இருப்பதால் முன்கோபத்தை மட்டும் குறைத்துக்கொண்டு, உடனிருப்பவர் களை அனுசரித்துச்செல்வது நல்லது. உத்தி யோகரீதியாக உங்களின் மனக்கவலைகள் விலகி பல்வேறு அனுகூலமான பலன்களை அடைவீர்கள். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப் பாக இருப்பதால் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். குரு பார்வை 5, 7, 9 ஆகிய ஸ்தானங் களுக்கு இருப்பதால் பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, திருமண சுபகாரியங்கள் கைகூடக் கூடிய யோகம் ஏற்படும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் முக்கிய முயற்சியில் ஈடுபட்டால் பரிபூரண வெற்றி கிடைக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, பாம்புப் புற்றுக்குப் பால்விடுவது, உக்கிர தெய்வங்களை வழிபடுவது நல்லது.