முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மிருகசீரிடம்- 3.
செவ்வாய்: ஆயில்யம்- 2.
புதன்: ரோகிணி- 3.
குரு: அஸ்வினி- 4.
சுக்கிரன்: ஆயில்யம்- 1.
சனி: சதயம்- 2(வ).
ராகு: அஸ்வினி- 3.
கேது: சுவாதி- 1.
கிரக மாற்றம்
ஆனி 9 (24-6-2023)
மிதுன புதன் (பகல் 12.43).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- மிதுனம்
20-6-2023 மாலை 3.58 மணிக்கு கடகம்
23-6-2023 அதிகாலை 4.18 மணிக்கு சிம்மம்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
சூரியன் 3-ல் சஞ்சரிப்பதாலும், சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவிருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். பூர்வீக சொத்துவகையில் ஆதாயமான பலன்களைப் பெறும் வாய்ப்புண்டு. பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்கள் நடக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கை கூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியா பாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த வேலைகளை குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியாக, உங்கள் உழைப்புக்கான ஊதியங்களைப் பெறக் கூடிய வாய்ப்பும், உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்களும் ஏற்படும். செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தூரப் பயணங்களைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிலும் நிதானமாக செயல்படுவது உத்தமம். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். சூழலுக்குத் தக்கவாறு உங்களை மாற்றிக்கொண்டு இலக்கை அடை வீர்கள். குரு விரய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களை தற்காலிகமாகத் தவிர்ப்பது நல்லது. சனி வக்ரகதி யில் சஞ்சரிப்பதாலும், 6-ல் கேது சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த பொருளாதார நெருக்கடிகள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலை எடுக்கமுடியும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும். ஒருசிலரின் செயலால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து தொழில், வியாபாரத்தில் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் குறைந்து சுமூகமான சூழ்நிலை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களைப் பெறுவீர் கள். உடன் வேலை செய்பவர் களிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழி வகுக்கக் கூடிய நாட்களாக இருக்கும். நீங்கள் செய்யும் செயல்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக ஆதாயங்கள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் ஜென்ம ராசியில் ஆட்சிபெற்று, 2-ல் சுக்கிரன் வலுவாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு, ராகு சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகமிக நன்றாக இருக்கும். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகளை பைசல் செய்வது மட்டுமல்லாமல் அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். நீண்டநாட் களாக தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப் படாமல் பொறுமையோடு செயல்படுவது நல்லது. பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டுவது மட்டுமல்லாமல் தொழில், வியாபாரத்தைத் தற்போது நீங்கள் அபிவிருத்தி செய்யக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழிலுக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டு. வேலைக்குச் செல்பவர் களுக்கு பணியில் சுமூகமான சூழ்நிலை உண்டாகும். அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகமிக நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பெண்கள்வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதல் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். முருகனுக்கு அர்ச்சனைசெய்வது, சூரிய நமஸ்காரம் செய்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது கெடுதியைக் குறைத்து நன்மையைத் தரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக் கும். குருபகவான் 10-ல் சஞ்சரிப்பதால் பணப் பரிமாற்ற விஷயங் களில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். அன்றாட செலவுகளைக் கையாள்வதற்கு கையிருப்பைக் செலவு செய்ய வேண்டியிருக்கும். வயது மூத்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல்ரீதியாக சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் அதில் சிறப்பாக செயல்பட உங்களது ஆரோக்கியமே இடையூறாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் மிக பொறுமையோடு இருப்பது, தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. தொழில்ரீதியான கணக்கு வழக்குகளை கவனத்தோடு கையாளவேண்டிய நேரமாகும். போட்டி, பொறாமைகளால் மன அமைதி குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய பணியையும் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடி உண்டாகும். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகி மனமகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, மகாவிஷ்ணு வழிபாடு நன்மை தரும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசிக்கு 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும், பாக்கிய ஸ்தானத்தில் குரு, ராகு சஞ்சரிப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பென்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எதிர்பாராத தனச் சேர்க்கை ஏற்பட்டு அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப் பாக இருக்கும். பூர்வீக சொத்துவகையில் அனுகூல மான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் உங்களுக் கிருந்த பிரச்சினைகள் தற்போது குறையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சிறப்பான பொருளாதார நிலையால் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக உங்களுக்கிருந்த கடன்களை எளிதில் பைசல் செய்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் விரும்பிய பதவிகள் உங்களைத் தேடிவரும். ஒரு பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாள் பிரச்சினைகளுக்குத் தற்போது தீர்வு கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமுண்டு. ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்களின் அனைத்து செயல்களிலும் எவ்வித தொய்வுமில்லாமல் வெற்றிகளை அடையமுடியும். பொன், பொருள் வாங்கும் யோகமுண்டு. ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு அர்ச்சனைசெய்வது கெடுதியைக் குறைக்கும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். 11-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிகவும் நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறும் வாய்ப்புண்டு. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து மன நிம்மதி உண்டாகும். உங்கள் பேச்சுத்திறமை யால் தீர்க்கமுடியாத பிரச்சினைகளையும் தற்போது தீர்க்கமுடியும். உடன்பிறந்தவகையில் அனுகூலமான பலன்களைப் பெறும் வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது மட்டுமல்லாமல் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். திறமை வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும், பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய பலமும் உண்டாகும். கடினமான பணிகளை உடன் வேலை செய்பவர்கள் பகிர்ந்துகொள்வதால் நீங்கள் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனு கூலமாக சஞ்சரிப்பதால் உங்களுடைய நீண்டநாள் எதிர்பார்ப்புகள் இந்த நாட்களில் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றி வழிபடுவது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையன்று மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், செவ்வாயுடன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்ககூடிய நேரமாகும். சூரியன், புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு கௌரவமான நிலையினை அடைவீர்கள். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் மிகச் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் மனம் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் குடும்பத் தில் கைகூடும். பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப் பான விலை கிடைக்கும். வாடிக்கையாளர்களு டைய தேவையை சிறப் பாக பூர்த்திசெய்வதால் உங்களுக்கிருந்த போட்டி, பொறாமைகள் விலகி அனு கூலமான பலன்களைப் பெறுவீர்கள். வெளியூர்த் தொடர்புகள்மூலமாக ஆதாயங்களைப் பெறமுடியும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் எடுத்த பணியை சிறப்பாக செய்துமுடிப்பது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள், வீண் பழிச்சொற்கள் எல்லாம் விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அதிகப் படியான ஆதாயங்களை அடையும் யோக முண்டு. துர்க்கைம்மனுக்கு ராகு காலத்தில் அபிஷேகம், அர்ச்சனைசெய்து வழிபடுவது, வேங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்வது நல்லது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசிக்கு 6-ல் குரு, 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எந்தவொரு செயலிலும் யோசித்து செயல்படவேண்டிய நேரமாகும். சக்திக்குமீறிய செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. பிறருக்குத் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்று வதில் இடையூறுகள் ஏற்படும். ராசிக்கு 6-ல் ராகு, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்ப தால் நெருக்கடியான நேரத்தில் தக்க உதவிகள் கிடைத்து உங்கள் தேவை களைப் பூர்த்தி செய்து கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் கவனத்தோடு செயல் பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். சிலரது செயல்களால் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்பு கள் தடைப்படும். வேலை யாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது வீண் வாக்குவாதம் செய்யா மல் சுமூகமாகப் பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, நேரத்திற்கு சாப்பிடுவது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக உடல் அசதி, நிம்மதியில்லாத நிலை ஏற்படும். உடன் வேலை செய்பவர்கள் நெருக்கடிகளைத் தருவார்கள். நீங்கள் எவ்வளவுதான் சரியாகப் பணிபுரிந்தாலும் உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் வரக்கூடிய நேரமென்பதால் நிதானத் தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் நிகழும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது கெடுதியைக் குறைக்கும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குரு 5-ல் சஞ்சரிப்ப தும், 7-ல் புதன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப் பென்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மிகச்சிறப் பாக இருக்கும். ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு உயர்வான நிலை யினை எட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத தனச்சேர்க்கை ஏற்பட்டு உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் குறையும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியும். மறைமுகப் போட்டிகள் குறைவதால் தொழில், வியாபாரத்தில் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்துக்கு தற்போது விடிவுகாலம் பிறக்கப் போகிறது. வரவேண்டிய சம்பள பாகிகள் தற்போது வந்தடைந்து குடும்பத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள முடியும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு, முருகனுக்கு அர்ச்சனைசெய்வது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
சனிபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து ஏற்றம் மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு யோககாரகனான சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் கடந்தகால சிக்கல்கள் குறையும். சட்டரீதியாக இருந்த பிரச்சினைக் கெல்லாம்கூட சாதகமான முடிவு கிடைக்கும். சிலருக்கு வெளியூர்மூலமாக ஆதாயங்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மற்றவர்களால் முடிக்கமுடியாத செயல்களைக்கூட நீங்கள் சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். ஞாயிறன்று நிதானத்தோடு செயல்படுவது நல்லது. புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் எதிர்பாராத அனுகூலங்களைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். துர்க்கையம்மனுக்கு நெய்தீபம் ஏற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு கெடுதியைக் குறைக்கும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதும், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். புதன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மறைமுகப் போட்டிகள் காரணமாக நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தற்போது முடிவுக்கு வந்து போட்ட முதலை எடுக்க முடியும். பொருளாதாரரீதியாக நெருக்கடி இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் விஷயத் தில் சிறப்பாக செயல்பட்டு எதையும் எளிதில் சமாளிப்பீர்கள். தற்போது சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த வெளியே சொல்லமுடியாத துயரங்கள் எல்லாம் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய அமைப்பும், பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற் கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல வளர்ச்சியை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருக்குமென்பதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் யோகமுண்டு. தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது, அஷ்டலட்சுமி தலங் களுக்குச் சென்றுவருவது நன்மை தரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குருபகவான் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதும், 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மிகவும் சாதகமான அமைப்பென்பதால் உங்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் வரும் நாட்களில் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து பிறருக்குத் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 4-ல் சூரியன் இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்துகொள்வது நல்லது. அதிக வேலைப்பளு காரணமாக அலைச்சல், டென்ஷன் உண்டாகும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்துச்செல்வது சிறப்பு. சனிபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொழில்ரீதியாக உங்கள் எண்ணங்களை நிறைவேற்றக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்போது மேற்கொண்டால் அதில் ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், எடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய பலமும் வரும் நாட்களில் உண்டு. சக ஊழியர்களால் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும் என்பதால், வேலைகளில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் நிலைமையை சமாளிக்க முடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் ஒருசில நற்பலன்களைப் பெறமுடியும். பிரத் தியங்கரா தேவி வழிபாடு, சிவன் தலங்களுக் குச் சென்றுவருவது நல்லது.