இந்த வார ராசிபலன் 25-4-2021 முதல் 1-5-2021 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-25-4-2021-1-5-2021

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்வினி- 4, பரணி- 1, 2, 3.

செவ்வாய்: மிருகசீரிடம்- 4, திருவாதிரை- 1, 2.

புதன்: பரணி- 4, கார்த்திகை- 1, 2, 3.

குரு: அவிட்டம்- 4.

சுக்கிரன்: பரணி- 2, 3, 4.

சனி: திருவோணம்- 1.

ராகு: ரோகிணி- 3.

கேது: கேட்டை- 1.

கிரக மாற்றம்:

28-4-2021- ரிஷப புதன்.

26-4-2021- சுக்கிரன் அஸ்தமனம் நிவர்த்தி.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

26-4-2021- துலாம்.

28-4-2021- விருச்சிகம்.

30-4-2021- தனுசு.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

வாரத் தொடக்கத்தில் மேஷ ராசிநாதன் செவ்வாய் புதன் வீட்டிலும், அவருக்கு வீடுகொடுத்த புதன் செவ்வாயின் வீட்டிலும் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். பரிவர்த்தனை பெறும் கிரகங்கள் அவரவர் வீட்டில் ஆட்சியாக இருப்பதற்கு சமம். எனவே, செவ்வாய் மேஷத்திலும் புதன் மிதுனத்திலும் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஜென்ம ராசி என்பது உங்கள் திறமை, பெருமை, செல்வாக்கு, செயல்பாடு இவற்றைக் குறிக்கும். 3-ஆமிடம் என்பது தைரியம், சகாயம், சகோதரம் இவற்றைக் குறிக்குமிடம். எனவே, சகோதர சகாயம், ஒற்றுமை, தைரியம், பராக்கிரமம் எல்லாவற்றையும் தரக்கூடும். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பு, மரியாதை, கௌரவம், அந்தஸ்து உயரும். செயற்கரிய செயல்களைச் செய்து பாராட்டுப் பெறலாம். சாதி சங்கங்களில் முக்கிய அங்கம் பெறலாம். சமுதாயப் பணிகளில் ஈடுபட்டுப் பாராட்டுப் பெறலாம். ஒருசிலர் கோவில் வழிபாடு, ஆன்மிகத்தொண்டு, அருள்நெறி திருக்கூட்டம் இவற்றில் பங்குகொள்ளும் பாக்கியமும், முக்கியப் பொறுப்புகள் அடையும் வாய்ப்பும் உருவாகும். ஓய்வுபெற்ற அரசுப் பணியாளர்கள், பென்ஷன் வாங்குகிறவர்கள் பொழுதுபோக்கு அம்சமாக ஏதாவது ஒரு டிரஸ்ட் உருவாக்கி சமூகப் பணியாற்றலாம். வியாபார நோக்கமின்றி தொண்டு மனத்தோடு பொதுப்பணிகளில் ஈடுபட்டுப் பொழுது போவதோடு பாராட்டுக்குரியவராகலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் தன் ராசிக்கு 12-ல் அஸ்தமனமாக இருக்கிறார். 26-ஆம் தேதி அஸ்தமனம் நீங்கி உதயமாகிறார். பொதுவாக சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கும் கிரகங்கள் புதனும் சுக்கிரனும் ஆவார்கள். அவர்களுக்கு அஸ்தமன தோஷம் பாதிக்காது. தினசரி நமது வீட்டுக்கு வரும் வருகையாளர்களுக்கு விருந்து உபசாரம் முக்கியமாக இருக்காது. எப்போதும் வராத விருந்தாளி வந்தால் உபசாரம் தடபுடலாக அமையும். அதுபோலத்தான் புதனுக்கும் சுக்கிரனுக்கும் முக்கியத்துவம் அமையாது. ஜென்ம ராகு- சபத்ம கேது- ஸ்பீடு பிரேக்மாதிரி சிலசமயம் உங்களுக்கு வேகத்தடையை உண்டு பண்ணலாம். இருந்தாலும் 26-ஆம் தேதி சுக்கிரன் அஸ்தமனம் நிவர்த்தி ஆவதால் ராசிநாதனுக்கு பலம் அமைந்துவிடும். செயல்வேகம் புயல்வேகமாக மாறிவிடும். அக்காலம் ஜென்ம ராகுசப்தம கேது தோஷம் விலகிவிடும். சிலருக்கு நாக தோஷம், களஸ்திர தோஷத்தை உண்டு பண்ணலாம். அல்லது தாமதத் திருமண யோகத்தை ஏற்படுத்தலாம். களஸ்திர தோஷம் என்றால் தாரமிழந்து மறுதாரம் அமையும். தாமதத் திருமணம் என்றால் ஆணுக்கும் பெண்ணுக்கும் 30 வயது கடந்துகூட திருமணமாகலாம். அப்படி இருந்தால் அவரவர் ஜாதகப்படி அதற்குரிய பரிகாரங்களைச் செய்துகொள்ளலாம். ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமமும், பெண்களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமமும், இருவருக்கும் பொதுவாக காமோகர்ஷண ஹோமமும் செய்யவேண்டும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் செவ்வாய் வீட்டிலும், செவ்வாய் புதன் வீட்டிலும் தொடக்கத்தில்

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்வினி- 4, பரணி- 1, 2, 3.

செவ்வாய்: மிருகசீரிடம்- 4, திருவாதிரை- 1, 2.

புதன்: பரணி- 4, கார்த்திகை- 1, 2, 3.

குரு: அவிட்டம்- 4.

சுக்கிரன்: பரணி- 2, 3, 4.

சனி: திருவோணம்- 1.

ராகு: ரோகிணி- 3.

கேது: கேட்டை- 1.

கிரக மாற்றம்:

28-4-2021- ரிஷப புதன்.

26-4-2021- சுக்கிரன் அஸ்தமனம் நிவர்த்தி.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

26-4-2021- துலாம்.

28-4-2021- விருச்சிகம்.

30-4-2021- தனுசு.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

வாரத் தொடக்கத்தில் மேஷ ராசிநாதன் செவ்வாய் புதன் வீட்டிலும், அவருக்கு வீடுகொடுத்த புதன் செவ்வாயின் வீட்டிலும் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். பரிவர்த்தனை பெறும் கிரகங்கள் அவரவர் வீட்டில் ஆட்சியாக இருப்பதற்கு சமம். எனவே, செவ்வாய் மேஷத்திலும் புதன் மிதுனத்திலும் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஜென்ம ராசி என்பது உங்கள் திறமை, பெருமை, செல்வாக்கு, செயல்பாடு இவற்றைக் குறிக்கும். 3-ஆமிடம் என்பது தைரியம், சகாயம், சகோதரம் இவற்றைக் குறிக்குமிடம். எனவே, சகோதர சகாயம், ஒற்றுமை, தைரியம், பராக்கிரமம் எல்லாவற்றையும் தரக்கூடும். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பு, மரியாதை, கௌரவம், அந்தஸ்து உயரும். செயற்கரிய செயல்களைச் செய்து பாராட்டுப் பெறலாம். சாதி சங்கங்களில் முக்கிய அங்கம் பெறலாம். சமுதாயப் பணிகளில் ஈடுபட்டுப் பாராட்டுப் பெறலாம். ஒருசிலர் கோவில் வழிபாடு, ஆன்மிகத்தொண்டு, அருள்நெறி திருக்கூட்டம் இவற்றில் பங்குகொள்ளும் பாக்கியமும், முக்கியப் பொறுப்புகள் அடையும் வாய்ப்பும் உருவாகும். ஓய்வுபெற்ற அரசுப் பணியாளர்கள், பென்ஷன் வாங்குகிறவர்கள் பொழுதுபோக்கு அம்சமாக ஏதாவது ஒரு டிரஸ்ட் உருவாக்கி சமூகப் பணியாற்றலாம். வியாபார நோக்கமின்றி தொண்டு மனத்தோடு பொதுப்பணிகளில் ஈடுபட்டுப் பொழுது போவதோடு பாராட்டுக்குரியவராகலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் தன் ராசிக்கு 12-ல் அஸ்தமனமாக இருக்கிறார். 26-ஆம் தேதி அஸ்தமனம் நீங்கி உதயமாகிறார். பொதுவாக சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கும் கிரகங்கள் புதனும் சுக்கிரனும் ஆவார்கள். அவர்களுக்கு அஸ்தமன தோஷம் பாதிக்காது. தினசரி நமது வீட்டுக்கு வரும் வருகையாளர்களுக்கு விருந்து உபசாரம் முக்கியமாக இருக்காது. எப்போதும் வராத விருந்தாளி வந்தால் உபசாரம் தடபுடலாக அமையும். அதுபோலத்தான் புதனுக்கும் சுக்கிரனுக்கும் முக்கியத்துவம் அமையாது. ஜென்ம ராகு- சபத்ம கேது- ஸ்பீடு பிரேக்மாதிரி சிலசமயம் உங்களுக்கு வேகத்தடையை உண்டு பண்ணலாம். இருந்தாலும் 26-ஆம் தேதி சுக்கிரன் அஸ்தமனம் நிவர்த்தி ஆவதால் ராசிநாதனுக்கு பலம் அமைந்துவிடும். செயல்வேகம் புயல்வேகமாக மாறிவிடும். அக்காலம் ஜென்ம ராகுசப்தம கேது தோஷம் விலகிவிடும். சிலருக்கு நாக தோஷம், களஸ்திர தோஷத்தை உண்டு பண்ணலாம். அல்லது தாமதத் திருமண யோகத்தை ஏற்படுத்தலாம். களஸ்திர தோஷம் என்றால் தாரமிழந்து மறுதாரம் அமையும். தாமதத் திருமணம் என்றால் ஆணுக்கும் பெண்ணுக்கும் 30 வயது கடந்துகூட திருமணமாகலாம். அப்படி இருந்தால் அவரவர் ஜாதகப்படி அதற்குரிய பரிகாரங்களைச் செய்துகொள்ளலாம். ஆண்களுக்கு கந்தர்வராஜ ஹோமமும், பெண்களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமமும், இருவருக்கும் பொதுவாக காமோகர்ஷண ஹோமமும் செய்யவேண்டும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் செவ்வாய் வீட்டிலும், செவ்வாய் புதன் வீட்டிலும் தொடக்கத்தில் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். 28-ஆம் தேதி ராசிநாதன் புதன் ரிஷபத்திற்கு மாறுவதோடு மறைவு ஸ்தானமாகிறார். எப்போதும் புதனுக்கு அஸ்தமன தோஷமோ, மறைவு தோஷமோ, பாதிக்காது. ஏனென்றால் சதாசர்வ காலமும் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கும் கிரகம் புதனாகும். முந்தைய ராசியில் குறிப்பிட்டபடி தினசரி ஓசிப்பேப்பர் படிக்கவரும் பக்கத்துவீட்டு நண்பருக்கு முக்கியத்துவம் இருக்காது. எப்போதும் வராத விருந்தாளி வந்தால் முக்கியத்துவம் உண்டு. 6, 11-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் இருந்து 4-ஆமிடம், 7-ஆமிடம், 8-ஆமிடங்களைப் பார்ப்பதால் பூமி, வீடு, வாகனம் போன்றவகையில் உங்கள் திட்டங்கள் நிறைவேறும். அதற்காகக் கடன் வாங்கும் யோகமும் அமையும். கடன் வாங்கிக் கடன் கொடுப்பவர்கள் மரம் ஏறிக் கைவிட்டவனுக்குச் சமம் என்பார்கள். ஆனால் அவசரத் தேவைக்கும் அத்தியாவசியத் தேவைக்கும் கடன் வாங்குவது தவறில்லை. அதேசமயம் தரமில்லாதவர்களிடமும் அநியாய வட்டி வாங்குகிறவர்களிடமும் கடன் வாங்கக்கூடாது. பசித்தாலும் புலி புல்லைத் தின்னாது' என்பதுபோல சுய கௌரவத்தையும், சுயமரியாதையையும் கடைப்பிடிக்கவேண்டும். அதுதான் தன்மான உணர்ச்சி.

wee

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 8-ல் குரு மறைவது ஒருவகையில் பலக்குறைவு என்றாலும், 10-க்குடைய செவ்வாயின் சாரம் பெற்று 10-க்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து சாரம் கொடுத்த செவ்வாயைப் பார்ப்பதால் மறைவுதோஷம் நிறைவாகிவிடும். மேலும் 9-க்குடையவர் 8-ல் மறைவது குற்றம் என்றாலும், 6-க்குடையவர் 8-ல் மறைவது நன்மையாகும். 8-ல் மறையும் குரு 12-ஆமிடம், 2-ஆமிடம், 4-ஆமிடங்களைப் பார்க்கிறார். எனவே, மறைவு தோஷத்திற்கு முக்கியத்துவம் இல்லை. வேத பாராயணம் செய்யும் ஒரு அந்தணர் தாசி வீட்டில் இருப்ப தாகக் கேள்விப்பட்டு அவர் தந்தை அங்கு போனாராம். அப்போது அவர் மகன் துண்டை மறைத்துக்கொண்டு தண்ணீர் குடித்தாராம். (தாசி பார்க்கக்கூடாது என்று). அதைப் பார்த்த தகப்பனார் "பரவா யில்லை; தன் மகன் ஆசாரத்தோடுதான் கெட்டுப்போகிறான்' என்று திருப்தி அடைந் தாராம். அதுபோல முடிவில் மறைவுதோஷம் நிறைவாகிறது. 7-ல் உள்ள சனியை 12-ல் உள்ள செவ்வாய் பார்ப்பது ஒருவகையில் கெடுதல் என்றாலும், சனி ஆட்சிபெற்றவர் ராசிநாதன் சந்திரனின் சாரம் பெறுவதால் விதிவிலக்கு ஏற்படுகிறது. அத்துடன் செவ்வாயும் வாரத்தொடக்கத்தில் சுயசாரம் பெறுவதாலும் குற்றமில்லை. 10-ல் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பதால் அலைச்சலும் திரிச்சலும் தவிர்க்கமுடியாத பயணங்களும் காணப்படலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 9-ல் உச்சம் பெறுகிறார். அவருடன் 2, 11-க்குடைய புதனும் 3, 10-க்குடைய சுக்கிரனும் சேர்க்கை. மேலும் 26-ஆம் தேதி சுக்கிரன் அஸ்தமன நிவர்த்தியாகிறார். 28-ஆம் தேதி புதன் ரிஷபத்திற்கு மாறுகிறார். உங்களுடைய தொழில், வாழ்க்கை, வேலை எல்லாவற்றிலும் இது வரை நிலவிய இடையூறு கள் விலகும். முன்னேற் றத்தை நோக்கி அடி யெடுத்து வைப்பீர்கள். எந்தச் செயலை செய்தா லும் அந்தச் செயல் சீரும் சிறப்புமாக நிறைவேறும். இடையூறுகளும் தடை களும் விலகும். புது முயற்சிகள் கைகூடும். 10-க்குடைய புதன் 9-ல் இருப்பது தர்மகர்மாதி பதி யோகம். 9-ஆமிடம் தர்மஸ்தானம் திரிகோண ஸ்தானம். 10-ஆமிடம் கர்மஸ்தானம். கேந்திர ஸ்தானம். கேந்திரம் என்பது முயற்சி. திரி கோணம் என்பது தெய்வ அனுகூலம். இந்த திரிகோண ஸ்தானத்தை லட்சுமி ஸ்தானம் என்றும், கேந்திர ஸ்தானத்தை விஷ்ணு ஸ்தானம் என்றும் சொல்வார்கள். எனவே, லட்சுமி கடாட்சமும் விஷ்ணு கடாட்சமும் உங்களுக்கு அமைவதால் உங்கள் செயல்கள் சிறப்பாக அமையும். செய்முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அதுமட்டுமல்ல; 5, 8-க்குடையவர் குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டமும் உங்களை வந்து தழுவும். சொல்வதைச் செய்வீர்கள். செய்வதையே சொல்வீர்கள்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 8-ல் மறைந் தாலும் புதன், செவ்வாய் வீட்டிலும், செவ்வாய், புதன் வீட்டிலும் பரிவர்த்தனை பெறுவதால் அவரவர் ராசியில் அவரவர் ஆட்சிபெறுவதாக அர்த்தம். அதனால் பூர்வபுண்ணிய பாக்கியம் பரிபூரணமாகி உங்களுக்கு நல்லது செய்யும். அது மட்டுமல்ல; 9-ல் ராகு நிற்பதும் கேது பார்ப்பதும், குலதெய்வ கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது தெளிவு. இஷ்டதெய்வம், குலதெய்வம் இரண்டும் உங்களுக்கு பக்கபலமாக அமைவதால் எதிலும் தோல்வி ஏற்படாது. வெற்றிகள் தொடரும். அதனால் 6-ல் மறையும் குருவுக்கும், 8-ல் மறையும் சூரியன், புதன், சுக்கிரனுக்கும் மறைவுதோஷம் விலகிவிடும். யுத்த தர்மத்தில் மறைந்திருந்து யுத்தம் புரியும் முறை உண்டு. அது தர்மமாக ஏற்றுக்கொள்ளப்படும். இராணுவத்தில் அதை கொரில்லா போர் என்பார்கள். ஸ்ரீ இராமபிரானே வாலியை வதம் செய்யும்போது மறைந்திருந்துதான் அம்பு எய்தார். எப்போதும் இராமபானம் எதிரியை சாய்த்துவிட்டு மீண்டும் இராமரி டமே வந்துவிடுமாம். ஆனால் வாலியின் மார்பில் தைத்த அம்பு மீண்டும் இராமரிடம் வரவில்லை. வாலியின் மார்பிலேயே நின்று விட்டது. அப்போது வாலி "உன் மனைவியைப் பிரிந்த சோகத்தால் என்னை மறைந்திருந்து தாக்கிவிட்டாயோ' என்று சொல்கிறான். இராமருக்குக் களங்கம் ஏற்படுத்திய இரண்டு நிகழ்வுகள்- ஒன்று வாலியின் வதம். இன் னொன்று சீதைக்கு அக்னிப் பரீட்சை வைத்தது.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் தன் சொந்த நட்சத்திரமான பரணியில் சஞ்சரிக்கிறார். அத்துடன் 7-ல் அமர்ந்து தன் ராசியைத் தானே பார்க்கிறார். 26-ஆம் தேதி அஸ்தமன தோஷம் நிவர்த்திபெறுகிறார். அதனால் உங்கள் கௌரவம், மதிப்பு, மரியாதை, செல்வாக்கு எல்லாம் சிறப்புடையும். அதேபோல திருமணமானவர்களுக்கு மனைவிவகையில் அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும். புராணத்தில் ஒரு அசுரனைக் கொல்வதற்கு கிருஷ்ண பகவானுக்கு பாமா உதவினார். 7-க்குடைய செவ்வாய் 9-ல் இருப்பது ஒரு யோகம். மனைவிவகையில் யோகம். 9-ஆமிடம் பூர்வபுண்ணிய ஸ்தானம். அங்கு 7-க்குடையவர் இருப்பதாலும், 7-க்கு பாக்கியாதிபதியான குரு கும்பத்தில் நின்று 7-க்குடைய செவ்வாயைப் பார்ப்பதாலும் "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்பதற்கு ஏற்ப நல்ல மனைவியும் யோக மனைவியுமாக அமையும். மனைவிக்கு இல்லாள் என்று ஒரு பெயர் உண்டு. இல்லத்தை ஆள்கிறவள் இல்லாள். எல்லாம் உடையவர்- லட்சுமி கடாட்சம் உடையவர் என்று அர்த்தம். அதற்கு ஆண்பால் கணவனுக்கு இல்லான் என்றால் அர்த்தமே மாறிவிடும். எதுவுமே இல்லாதவன் என்று அர்த்தமாகிவிடும். "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை' என்று வள்ளுவர் எழுதியுள் ளார். அதாவது மனைவி நற்பண்பு உடைய வளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் நிற்க, விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைகிறார். மழைவிட்டும் தூறல் நிற்காத நிலைபோல ஏழரைச் சனி விலகியும், அதன் இடையூறுகள் உங்களைவிட்டு விலகாதபடி நீறுபூத்த நெருப்பாகச் சுடுகிறது. ராசிக்கு 6-ல் சூரியன், புதன், சுக்கிரன் மறைகிறார்கள். இதில் புதனும் செவ்வாயும் பரிவர்த்தனை என்பதால் விதிவிலக்கு ஏற்படும் என்றா லும், வாழ்க்கை ஜீவனாதிபதி சூரியனும் 7-க்குடைய களஸ்திரகாரகன் சுக்கிரனும் மறைகிறார்கள். மனைவி, குடும்ப வாழ்க்கை, தொழில் எல்லாவற்றிலும் எதிர்நீச்சல் அடிக்கும் நிலை தொடர்கிறது. ராசிநாதன் 8-ல் மறையும் பலக்குறைவு அதற்கு ஒரு காரணம். என்றாலும் ராசிநாதனை குரு பார்ப்பதால் முள்ளில் விழுந்த ஆடையை கிழியாமல் எடுப்பதுபோல பிரச்சினைகளை சமாளிக்கலாம். அதற்குக் காரணம் 5-க்குடைய குரு ராசிநாதனைப் பார்ப்பது. 6-க்குடையவரும் 8-க்குடையவரும் பரிவர்த் தனை என்பதால் (ரிஷபத்திற்கு புதன் மாறுவதற்குள்) எதிர்பாராத அதிர்ஷ்டமும் யோகமும் ஏற்படுமென்று எதிர்பார்க்கலாம். பெரும்பாலும் மணமானவர்களுக்கு அந்த யோகம் மனைவிமூலமாக அமையும். மணமாகாதவர்களுக்கு தாய்மூலமாக வரலாம். அதனால்தான் தாய்க்குப்பின் தாரம் என்றார்கள். 3-க்குடைய சனி ஆட்சிபெற்று செவ்வாயின் பார்வையைப் பெறுவதால் சகோதர சகாயம் எதிர்பார்க்கலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைந்தாலும் அவருக்கு வீடுகொடுத்த சனி 2-ல் ஆட்சிபெறுகிறார். குருவுக்கு சாரம் கொடுத்த செவ்வாய் குருவுக்கு வீடுகொடுத்த சனியைப் பார்க்கிறார். எனவே, ஏழரைச்சனி நடந்தாலும் அது உங்களுக்கு பொங்குசனியாகத் திகழும். 25, 30 வயதிற்குள் வரும் கோட்சார ஏழரைச்சனி மங்குசனி. 30 வயதிற்குமேல் வரும் கோட்சார ஏழரைச்சனி பொங்குசனி. 65 வயது 70 வயதிற்குமேல் வரும் ஏழரைச்சனி மரணச் சனி என்பது பொதுவிதி. ஆனால் உங்களுக்கு வரும் ஏழரைச்சனி முதல் சுற்றாக இருந்தாலும் சரி- இரண்டாம் சுற்றாக இருந்தாலும் சரி- பொங்குசனிக்கு உண்டான பலனையே தருவார் என்பது தெளிவு. பொதுவாக சனி, செவ்வாய் சேர்க்கையும் பார்வையும் கெடுதல் என்பது விதி. ஆனால் உங்கள் கிரக அமைப்பின்படி சனி, செவ்வாய் சம்பந்தம் (பார்வை) யோகம்தான். ராசிநாதன் குரு செவ்வாயைப் பார்க்க, குருவின் பார்வையைப் பெற்ற செவ்வாய் சனியைப் பார்க்க- இது ஒரு யோகமான கூட்டணியாகும். ஆகவே, தனுசு ராசிக்காரர் களுக்கு ஏழரைச்சனி, பொங்குசனி என்பதில் சந்தேகமில்லை. அதேபோல சிலருக்கு பயண யோகங்களும், சிலருக்கு புதியவீடு கட்டும் யோகமும், சிலருக்கு எதிர்பாராத தனப்ராப்தி யும் உண்டாகும் என்று நம்பலாம். அதை வலுவாக்க அவரவர் ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்துகொள்ளுங்கள்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி ஜென்மத்தில் ஆட்சி. 12-க்குடைய விரயாதிபதி குரு 2-ல் இருக்கிறார். பொருளாதாரத்தில் பற்றாக் குறை அவ்வப்போது ஏற்பட்டாலும் சமாளிக் கும் ஆற்றலும் சூழலும் உருவாகும். 4-க்கு டைய செவ்வாய் 6-ல் நின்று ஜென்ம ராசி யையும் ராசியிலுள்ள சனியையும் பார்க்கிறார். அதனடிப்படையில் செவ்வாய், சனி பார்வை பல காரியங்களில் தடை ஏற்படுத்தலாம். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமல் இழுபறியாகலாம். என்றாலும் வாழ்க்கையின் அடிப்படைத் தேவை கடைசி நேரத்தில் பூர்த்தி யாகும். எதிர்கால நலன்கருதி எடுக்கும் முயற்சி களில் சிறு தாமதமான பலன்களை சந்திக்க நேரலாம். 6, 9-க்குடைய புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். அவர் 28-ஆம் தேதி ரிஷப ராசிக்கு மாறுகிறார். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வில்லங்கம், விவகாரம் இவற்றில் சாதகமான பலன்கள் எதிர்பார்க்கலாம். தந்தைவழியில் சிலருக்கு ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். 10-க்குடைய சுக்கிரன் 10-ஆமிடத்தையே பார்க்கிறார். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கும் நன்மதிப்புக்கும் ஆளாகலாம். உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றமும் ஏற்படும். தொழில் துறையில் அல்லது தனியார்துறையைச் சார்ந்தவர்களுக்கு லாபகரமான மாற்றங்கள் உண்டாகும். 5-ல் உள்ள ராகு உங்களது எண்ணங்க ளிலும் நினைவுகளிலும் சங்கடத்தை உண்டுபண்ணினாலும், 3-ஆமிடத்தைப் பார்க்கும் சனி அவற்றை எதிர்கொண்டு சமாளிக்கும் தைரியத்தையும் ஆற்றலையும் தருவார். 6-ல் உள்ள செவ்வாய் கடன்களை ஏற்படுத்தி னாலும் அது சுபக்கடனாக அமையும். ஆரோக்கியத்தில் தொந்தரவு ஏற்படலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைந்தாலும் ஆட்சி பலம் பெறுவதால் மறைவுதோஷம் பாதிக்காது. பொதுவாக எந்த ஒரு கிரகமும் ஆட்சி, உச்சம் பெறும் போது அதற்கு மறைவு தோஷம் பாதிக்காது. உதாரணமாக துலா ராசிக்கு 8-ல் ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சிபெற்றால் மறைவு தோஷம் இல்லை. மேடையில் காரசாரமாக ஒருவரை யொருவர் தாக்கியப் பேசிக்கொள்ளும் அரசியல் தலைவர்கள், அவர்கள் வீட்டு விசேஷ விழாக்களில் கலந்துகொள்ளும் போது காழ்ப்புணர்ச்சியில்லாமல் சிரித்த முகத்துடன் வரவேற்று உபசரிப்பார்கள் அல்லவா! அதுபோல பகை கிரகங்கள் சில சமயம் தற்காலி! நட்பு கிரகங்களாக மாறி நற்பலன் தரக்கூடும்! எந்த ஒரு கிரகம் இருந்த ராசிக்குடையவன் அதற்கு 2, 3, 4, 10, 11, 12-ல் இருந்தால் அந்த கிரகம் தற்காலிக மித்திரன்- நட்பு கிரகமாக மாறிவிடும். இந்த விதி ஆற்காடு பஞ்சாங்கத்தில் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அந்த கிரகம் நின்ற வீட்டுக்கு முன்னால் மூன்று ராசியிலும் பின்னால் மூன்று ராசியிலுமுள்ள கிரகம் தற்காலிக நட்பாகும்! பொதுவாக குருவும் சுக்கிரனும் பகை கிரகம் என்று சொல்லப்பட்டாலும், சுக்கிரன் குருவின் வீடான மீனத்தில்தான் உச்சம் பெறுவார். அப்படியானால் பகை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? சுக்கிரன், அசுர குரு, வியாழன் (குரு தேவகுரு அவ்வளவுதான். வாதியின் வக்கீலும் பிரதிவாதியின் வக்கீலும் நீதிமன்றத்தில் காரசாரமாக வாதம் புரிந்தா லும், கேட்டுக்கு வெளியே சேர்ந்து ஹோட்டலில் போய் காப்பி குடிப்பார்கள் அல்லவா? வாதிக்கும் பிரதிவாதிக்கும்தான் பகை உணர்வே தவிர, அவர்களுக்காக வக்காலத்து வாங்கும் வக்கீல்களுக்குள் பகை, விரோதம், வருத்தம் இல்லையே! அதுபோல கிரகங் களுக்குள் பகை, நட்பு என்பதும் மாறுதலுக்கு உட்பட்டதாகும்!

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு தன் ராசிக்கு 12-ல் மறைவு என்றாலும் அவருக்கு வீடு கொடுத்த சனி ஆட்சிபெறுவதால் குருவின் மறைவுதோஷம் நிவர்த்தியாகிறது. எந்த ஒரு கிரகம் 6, 8, 12-ல் மறைந்தாலும், அவருக்கு வீடு கொடுத்த கிரகம் அதற்கு கேந்திர திரிகோண மாக இருந்தாலும் அல்லது ஆட்சி, உச்சமானா லும் அந்த கிரகத்துக்கு மறைவுதோஷம் பாதிக்காது. வீட்டு உரிமையாளர் வெளியிடத் தில் வாழ்கிறார் என்றால், குடியிருப்போர் தன் இஷ்டத்துக்கு சுவற்றில் ஆணியடிப்பது முதல் எல்லாவகையிலும் சுதந்திரமாக செயல் படுவார் அல்லவா? அதனால்தான் "உடையவர் இல்லையென்றால் ஒரு முழம் கட்டை' என்றார் கள். 2, 9-க்குடைய செவ்வாய் 4-ல் புதன் வீட்டிலும், செவ்வாய்க்கு வீடுகொடுத்த புதன் மேஷத்தில் செவ்வாயின் வீட்டிலும் பரிவர்த்தனை யோகமாக இருக்கிறார்கள். பொதுவாக செவ்வாயும் புதனும் பகை கிரகம் என்றாலும் இங்கு தற்காலிக நட்பு கிரகமாக மாறி நல்லதே செய்வார்கள். எனவே தேக ஆரோக்கியம், தன் சுகம், தாயின் சுகம்- பூமி, வீடு, வாகன யோகம் போன்றவகையில் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். 3-ல் ராகு நிற்க, கேது பார்க்க, 3-க்குடைய சுக்கிரன் தன் ராசிக்கு 12-ல் மறைவதால் சிலருக்கு உடன் பிறந்தோர்வகையில் செலவுகளும் பிரச் சினைகளும் வருத்தங்களும் ஏற்பட இட முண்டு. எனவே எந்த ஒரு பிரச்சினை யையும் பெரிதுபடுத்தாமல் சாதாரணமாக ஆக எடுத்துக்கொள்ளவேண்டும். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து நடக்கவேண்டும். இந்த ஜென்மாவில் ரத்தபந்த சொந்தமாகப் பிறந்து விட்டோம். அடுத்த ஜென்மாவில் யார் யாரோ எங்கெங்கேயோ- யாருக்குத் தெரியும்? இருக்கும் காலம்வரை எல்லாருக்கும் நல்லவராக- இனியவராக இருப்போமே!

bala300421
இதையும் படியுங்கள்
Subscribe