முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: அனுஷம்- 2.

சந்திரன்: பூரம் 2.

Advertisment

செவ்வாய்: பூசம்- 3.

புதன்: கேட்டை- 4.

குரு: மிருகசீரிடம்- 1 (வ).

Advertisment

சுக்கிரன்: பூராடம்- 3.

சனி: சதயம்- 4.

ராகு: உத்திரட்டாதி- 2.at

கேது: உத்திரம்- 4.

கிரக மாற்றம்:

26-11-2024 விருச்சிக புதன் (வ) ஆரம்பம் காலை 8.12

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: சிம்மம்

25-11-2024 அதிகாலை 5.02 மணிக்கு கன்னி.

27-11-2024 மாலை 6.07 மணிக்கு துலாம்.

30-11-2024 அதிகாலை 6.02 மணிக்கு விருச்சிகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தாராள தன வரவுகள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். உங்களின் நீண்டநாளைய எதிர்பார்ப்புகள் தற்போது நிறைவேறும். ராசியாதிபதி செவ்வாய் 4-லும், சூரியன் 8-லும் சஞ்சரிப்பதால் வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு உடன் இருப்பவர்களால் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் நீங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். மேலதிகாரியிடம் பேசுகின்றபொழுது வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்துவது மிக மிக நல்லது. உறவினரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத் தோடு செயல்படுவது உத்தமம். இந்த வாரத்தில் துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27, 28, 29.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உடன்பிறந்தவர்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும். குருபகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் தடைபட்டுவந்த சுபகாரியங்கள் தற்போது கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். கடந்த காலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது பிரதிபலன்களை அடையக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 30.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், ராசியாதிபதி புதன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு ஆகும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒரு சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகமிக நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து சிறப்பான லாபத்தை ஈட்டுவீர்கள். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு உங்கள் தகுதிக்கு ஏற்ப நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருக்கக்கூடிய நட்புகள் உங்களுக்கு தேவையற்ற இடஞ்சல்களை ஏற்படுத்துவார்கள். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 30.

ss

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. குறிப்பாக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வதன் மூலமாக வீண்செலவுகளைக் குறைக்கமுடியும். சூரியன் 5-ல் சஞ்சரிப்பதால் உற்றார்- உறவினர்களிடம் பேசுகின்றபொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்ல மாற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஒருசில விஷயங்களில் கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவதன்மூலமாக தேவையற்ற நெருக்கடிகளைச் சமாளிக்க முடியும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு கூடுதலாக வேலை பளு இருக்கக்கூடிய நேரமென்பதால் உங்கள் பணியில் கவனத்தோடு இருப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் காரணமாக உங்களது மன அமைதி குறையக்கூடிய நேரமென்பதால் எதிலும் பொறுமை காப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தள்ளிவைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக படித்தாலும் ஞாபகம் மறதி ஏற்படலாம் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தோடு இருப்பது நல்லது. மாற்றுத்திறனாளிகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, சிவ வழிபாடு செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானாதிபதி புதன் கேந்திர ஸ்தானமான 4-ல் இருப்பதும், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வருடக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருப்பது மட்டுமில்லாமல் உங்கள் கடன்களை குறைத்துக்கொள்ளக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தற்போது கிடைத்து நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். ஒருசிலருக்கு வெளியூர், வெளிமாநிலங்கள்மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 7-ல் சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குக்கூட சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்கி பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, பிரத்தியங்கரா தேவிக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனை உங்களுக்குத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 28, 29.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 3-ல் சூரியன் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பென்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமான சனிபகவான் தற்போது 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் பல்வேறு சாதனைகளை செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். நீண்டநாட்களாக நீங்கள் எண்ணிய காரியங்கள் எல்லாம் தற்போது கைகூடி மனதில் பூரிப்பு ஏற்படும். சட்ட சிக்கல்கள் விலகி மன அமைதி உண்டாகும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்வது மட்டுமில்லாமல் நீங்கள் விரும்பிய பதவி உயர்வுகளை அடையக்கூடிய ஒரு நேரமாகும். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக மறைந்து சுமூக நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்கக்கூடிய நேரமாகும். விரும்பிய உயர்வுகள் உங்களுக்கு கிடைக்கும். ராகு காலத்தில் அம்மனுக்கு அர்ச்சனை செய்வது, பெருமாள் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதன்மூலம் வளமான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27, 30.

.துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் ராகு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தற்போது அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பு, தாராள தன வரவுகள் ஏற்படக்கூடிய யோகம், மங்கள நிகழ்வுகள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படக்கூடிய அமைப்புண்டு. புதன் உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் சாமர்த்தியமாக பேசி தீர்க்கமுடியாத பிரச்சினைகளைக்கூட எளிதில் தீர்ப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறைந்து நல்லமுன்னேற்றம் உண்டாகும். வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் வளமான பலன்களை பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். பெண்கள்மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாகும். அசையும், அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். உங்களுக்கு வெளியூர்மூலமாக ஒரு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறுவீர்கள். இந்த வாரத்தில் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவர் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களைப் பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 28, 29.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் 4-ல் சனி, குரு வக்ர கதியில் இருப்பதால் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நெருங்கியவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத் துக்கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று சிந்தித்துச் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய ஒரு சூழலும், மற்றவருடைய வேலையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலையும் உண்டாகும். வேலை தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. துர்க்கையம்மனை ராகு காலத்தில் தரிசிப்பது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலங்களை அடைய முடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26, 27, 30.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த இடையூறுகள் எல்லாம் விலகி பொருளாதாரரீதியாக ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக்கவலைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற் றத்திற்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். ஒருசிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகமானது இருக்கிறது. வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று நிதானத்தோடு இருப்பது, இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசு பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, அஷ்ட லட்சுமியை தரிசிப்பது நன்று.

வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27, 28, 29.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சனிபகவான் 2-லும், 7-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் நீங்கள் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் விளையாட்டுத் தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு இந்த வாரத்தில் 3-ல் ராகு, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலமும், சிறப்பான பணவரவுகள் கிடைக்கும் யோகமும் உண்டு. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களால் சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைத்து போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட்டால் எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கமுடியும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைக் குறைத்துக் கொண்டு படிப்பில் கவனமாக இருப்பது நல்லது. இந்த வாரத்தில் சனிபகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் தீபமேற்றுவது, வராகி அம்மனை தரிசிப்பது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 30.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் விலகி வளமான பலன்களை பெறுவீர்கள். ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் குடும்பத் தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. செவ்வாய் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் மிகவும் உற்சாகத் தோடு செயல்படுவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் குறையக்கூடிய நேரமாகும். நீங்கள் எதிர் பார்க்கக் கூடிய பொருளாதார உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசில நேரங்களில் வேலைப் பளு சற்று கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்துவந்த தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். உங்கள்மீது இருந்த பழிச்சொற் கள் எல்லாம் தற்போது குறைவதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் எதிலும் பொறுமையோடு செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாற்றுத்திறனாளி களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, துர்க்கையம்மனை தரிசிப்பதன்மூலம் வளமான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 30.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ராசியாதிபதி குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதும், உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். குடும்பத்தில் பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமுக நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். மற்றவர்கள் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி தற்போது இருக்கக்கூடிய வாய்ப்புகளை இழந்துவிட வேண்டாம். பூர்வீக சொத்துவகையில் உங்களுக்கு ஒருசில அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. ஒரு பெரிய இடத்து நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் நண்பர்களிடம் பேசுகின்றபொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் துர்க்கையம்மனை தரிசிப்பது, முருக வழிபாடு மேற்கொள்வது வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26.