இந்த வார ராசிபலன் 23-3-2025 முதல் 29-3-2025 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-23-3-2025-29-3-2025

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: உத்திரட்டாதி- 2.

செவ்வாய்: புனர்பூசம்- 3.

புதன்: உத்திரட்டாதி- 3 (வ).

குரு: ரோகிணி- 4.

சுக்கிரன்: உத்திரட்டாதி- 2 (வ).

சனி : பூரட்டாதி- 3.

ராகு: பூரட்டாதி- 4.

கேது: உத்திரம்- 2.

ss

கிரக மாற்றம்:

29-3-2025 மீன சனி இரவு 9.44 மணிக்கு

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: தனுசு

24-3-2025 பகல் 10.24 மணிக்கு மகரம்.

26-3-2025 மாலை 3.14 மணிக்கு கும்பம்.

28-3-2025 மாலை 4.47 மணிக்கு மீனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத் தோடு செயல்பட்டு எடுத்தக் காரியத்தை குறித்த நேரத்தில் முடிக்கும் பலம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்களின் அனைத்து தேவை களும் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்து களில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் மற்றவர் கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு உயர்வான நிலையினை எட்டுவீர்கள். கேது உங்கள் ராசிக்கு 6-ல் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகளை எளிதில் சமாளிக்கக்கூடிய பலம் உண்டா கும். சூரியன், சுக்கிரன், புதன் 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற வகையில் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேர மென்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரமென்பதால் நீங்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல் பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய நேரமாகும். உடன்பிறந்தவர்கள்மூலமாக ஒருசில ஆதாயங்கள் தற்போது கிடைக்கும். வரும் நாட்களில் வளமான பலன்க ளைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்க ளுக்கு சென்று வருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனு கூலங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26, 27, 28.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன், சூரியன், புதன், ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது மிகச்சிறப்பான அமைப்பு என்பதால் சகலவிதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். பணவிஷயத் தில் சில ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் எதையும் எதிர்க்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் பேச்சில் சற்று பொறுமை யோடு இருப்பதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. இவ்வார இறுதியில் ஏற்படக்கூடிய சனி மாற்றத்தின்மூலமாக சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருவார் என்பதால் மிகவும் அனுகூலமான பலன்களை வரும் நாட்களில் அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் உங்களுக்கு இருந்துவந்த தேவையற்ற இடையூறுகள் விலகி படிப்பில் சிறப்பாக செயல்பட முடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதன்மூலம் ஏற்றங்களை அடைய முடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 29.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியா

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: உத்திரட்டாதி- 2.

செவ்வாய்: புனர்பூசம்- 3.

புதன்: உத்திரட்டாதி- 3 (வ).

குரு: ரோகிணி- 4.

சுக்கிரன்: உத்திரட்டாதி- 2 (வ).

சனி : பூரட்டாதி- 3.

ராகு: பூரட்டாதி- 4.

கேது: உத்திரம்- 2.

ss

கிரக மாற்றம்:

29-3-2025 மீன சனி இரவு 9.44 மணிக்கு

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: தனுசு

24-3-2025 பகல் 10.24 மணிக்கு மகரம்.

26-3-2025 மாலை 3.14 மணிக்கு கும்பம்.

28-3-2025 மாலை 4.47 மணிக்கு மீனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத் தோடு செயல்பட்டு எடுத்தக் காரியத்தை குறித்த நேரத்தில் முடிக்கும் பலம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்களின் அனைத்து தேவை களும் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்து களில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் மற்றவர் கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு உயர்வான நிலையினை எட்டுவீர்கள். கேது உங்கள் ராசிக்கு 6-ல் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகளை எளிதில் சமாளிக்கக்கூடிய பலம் உண்டா கும். சூரியன், சுக்கிரன், புதன் 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற வகையில் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேர மென்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரமென்பதால் நீங்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல் பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய நேரமாகும். உடன்பிறந்தவர்கள்மூலமாக ஒருசில ஆதாயங்கள் தற்போது கிடைக்கும். வரும் நாட்களில் வளமான பலன்க ளைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்க ளுக்கு சென்று வருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனு கூலங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26, 27, 28.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன், சூரியன், புதன், ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது மிகச்சிறப்பான அமைப்பு என்பதால் சகலவிதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். பணவிஷயத் தில் சில ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் எதையும் எதிர்க்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் பேச்சில் சற்று பொறுமை யோடு இருப்பதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. இவ்வார இறுதியில் ஏற்படக்கூடிய சனி மாற்றத்தின்மூலமாக சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருவார் என்பதால் மிகவும் அனுகூலமான பலன்களை வரும் நாட்களில் அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் உங்களுக்கு இருந்துவந்த தேவையற்ற இடையூறுகள் விலகி படிப்பில் சிறப்பாக செயல்பட முடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதன்மூலம் ஏற்றங்களை அடைய முடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 29.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன், சுக்கிரன், சூரியன் சேர்க்கைப் பெற்று 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத் தோடு செயல்படுவது நல்லது. தேவையற்றவகையில் வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் உங்களுக்கு இருக்கக் கூடிய நெருக்கடிகளை எளிதில் சமாளிக்கக்கூடியப் பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய ஒரு சின்ன வாய்ப்பையும் உதாசீனப் படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும். ஒருசில நேரங்களில் உங்களது முன்கோபத்தை குறைப் பதன்மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமாக எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரம் ஆகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, வெங்கடேசப் பெருமாளைத் தரிசிப்பதன் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 23, 28, 29.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும், பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருந்து பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்கள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய யோகம், வெளியூர் தொடர்புகள்மூலமாக ஏற்றத்தை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. வரும் 29-ஆம் தேதி ஏற்பட உள்ள சனி மாற்றத்தின் மூலமாக உங்களுக்கு அஷ்டமச் சனி முடிவதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம், உடல் ஆரோக்கியரீதியாக இருக்கக் கூடிய பாதிப்புகள் குறையக் கூடிய அமைப்புகள், கடந்த கால மருத்துவச் செலவுகள் குறையும் நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைய முடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் உங்களுக்கு தற்போது இருக்கக்கூடிய சிக்கல்கள் எல்லாம் விலகி வரும் நாட்களில் படிப்பில் சிறப் பாக விளங்குவீர்கள். முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வ தன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25.

ss

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், சுக்கிரன், ராகு, புதன் சஞ்சாரம் செய்வதால் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தனக்காரகன் குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் சனிபகவான் இவ்வார இறுதியில் 8-ஆம் வீட்டுக்கு மாறுதல் ஆவதால் உங்களது ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத் தில் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தவிர்த்து விட்டு, கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதன்மூலம் அனுகூலமான பலன்களை அடையமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக உங்களது ஓய்வுநேரம் குறையும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் கவனத்துடன் செயல்பட்டாலும் ஒருசிலர் உங்களை வேற்று பாதைக்கு அழைத்துச் செல்லலாம் என்பதால் வீண் பேச்சை குறைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, ராகு காலத்தில் அம்மனுக்கு அர்ச்சனை செய்வது அனுகூலத்தைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26, 27.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன் 7-ல் சுக்கிரன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதும், 9-ல் குரு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். நெருங்கியவர்களின் ஆதரவு மிகச் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஒருசிலருக்கு உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து அனுகூலமான பலன்களை அடையமுடியும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக்கவலை எல்லாம் மறைந்து மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். வேலைக்குச் செல்பவர்கள் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணியைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு கௌரவம்மிகுந்த வாய்ப்புகள் தேடி வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப் பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக அனுகூலங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 29.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் மாதக் கோளான சூரியன்- ராகு சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதாலும், பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பண வரவுகள் கிடைத்து உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். பெண்கள்வழியில் தேவையில்லாத செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத் திலும் நிதானத்தோடு இருந்தால் அடையவேண்டிய இலக்கை அடைய முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துவகையில் தேவையில்லாத நெருக்கடி கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உறவினரிடம் பேசுகின்றபோது சற்று நிதானத்தோடு இருப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்துவிட்டு படிப்பில் கவனமாக இருந்தால்தான் நல்ல மதிப்பெண்கள் எடுக்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 23, 29.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சுக்கிரன், புதன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்திலும் உங்கள் எண்ணங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். உங்கள் ராசிக்கு 5-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உற்றார்- உறவினர் களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கக் கூடிய நேரமென்பதால் போட்ட முதலீடுகளை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் நீங்கள் சற்று கவனத் தோடு செயல்பட்டால் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். முடிந்தவரை சக ஊழியரிடம் பேசுகின்றபொழுது நிதானத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப் பாக செயல்படுவீர்கள் என்றாலும் சில நேரங்களில் ஞாபகமறதி ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத் தோடு இருப்பது உத்தமம். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்களின் தேவைகள் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒண்ணுமே இல்லாத விஷயத்திற்குகூட கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சுலபமாக செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் உற்சாகத்துடன் செயல்படமுடியும். ஒரு சிலருக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்புக்கு நேரத்தை செலவிட வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் வழிபாடு மேற்கொள்வது, முருகன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 23, 27, 28.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகு, 5-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சி களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக் கூடிய ஒரு நேரமாகும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். கடந்த ஏழரை வருடங்களாக நடைபெற்று வந்த ஏழரைச் சனி வருகின்ற சனிக்கிழமையன்று ஏற்படக்கூடிய சனிப் பெயர்ச்சியின்மூலமாக முழுமையாக முடிவதால் வரும் நாட்களில் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு மறுமலர்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்லமுன்னேற்றத்தை அடையக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு இருந்த இடையூறுகள் எல்லாம் விலகி உங்களது மதிப்பு, மரியாதை அதிகரிப்பது மட்டுமில்லாமல் கௌரவமான வாய்ப்பை அடைவீர்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் மிகச்சிறப்பாக விளங்குவது மட்டுமில்லாமல் மேற்படிப்புக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தந்து மனமகிழ்ச்சி ஏற்படும். வரும் நாட்களில் வளமான பலன்களைத் பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 29.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், ராகு, 4-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரமாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் அதனை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரமென்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்திக் கொண்டால் விரைவில் சில மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தேவையற்ற இடையூறு கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல லாபங்கள் தடைப்படக்கூடிய நேரமாகும். வேலை யாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் தேவை யற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் ஞாபக மறதி ஏற்படக்கூடிய ஒரு நேரமாக தற்போது இருப்பதால் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே நற்பலன்களை அடையமுடியும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, ராகுகால நேரத்தில் அம்மன் ஸ்தலங் களுக்கு சென்று அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 23, 27, 28.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சூரியன், ராகு, 3-ல் குரு சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் நிதானத் தோடு செயல்படவேண்டும். பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டு எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 12-ல் சனி சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-க மாக தவிர்ப்பது நல்லது. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது அதிகப்படியான வேலைகள் காரணமாக உங்களது ஓய்வுநேரம் குறையும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச் சொற்களைச் சொல்லக்கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. வண்டி, வாகனங்கள்மூலமாக எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனத்தோடு செயல்பட்டால் மட்டுமே நல்ல பெயர் எடுக்கமுடியும். உடனிருப்பவர்கள் உங்களுக்கு வீண் இடையூறுகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் எதிலும் சற்று கவனத் தோடு இருப்பது உத்தமம். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 29.

bala280325
இதையும் படியுங்கள்
Subscribe