முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: சதயம்- 2.
செவ்வாய்: மூலம்- 3 (வ).
புதன்: பூரட்டாதி- 1.
குரு: ரோகிணி- 3.
சுக்கிரன்: உத்திரட்டாதி- 4.
சனி: பூரட்டாதி- 2.
ராகு: உத்திரட்டாதி- 1.
கேது: உத்திரம்- 3.
கிரக மாற்றம்:
24-2-2025 செவ்வாய் வக்ர முடிவு காலை 7.17 மணிக்கு
27-2-2025 மீன புதன் இரவு 11.42 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: தனுசு.
24-2-2025 இரவு 12.56 மணிக்கு மகரம்.
27-2-2025 அதிகாலை 4.36 மணிக்கு கும்பம்.
1-3-2025 அதிகாலை 5.57 மணிக்கு மீனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். கடந்த காலங்களில் இருந்துவந்த இடையூறுகள் எல்லாம் விலகி பல்வேறு வகையில் வளமான பலன்களைப் பெறுவீர்கள். மங்களகரமான சுபகாரியங்கள் குடும்பத்தில் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். ஒருசிலருக்கு திறமை வாய்ந்த வேலை ஆட்கள் கிடைப்பதால் தொழில் நிமித்தமாக இருந்த பிரச்சினைகள் தற்போது குறையும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உறவினர்களால் அனுகூலங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகரிகளுடைய ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர்- ஆசிரியருடைய பாராட்டுதலை பெறுவார்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைபெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நற்பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27, 28.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன், ராகு சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பிறருக்கு தந்த வாக்குறுதி களை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தோடு இருக்கவேண்டும். முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைக்கு தற்போது ஒரு நல்லமுடிவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்தோடு இருந்தால் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். மாணவ- மாணவியர்கள் சக நண்பர்களிடம் பேசுகின்றபொழுது சற்று பக்குவத்தோடு இருப்பதுமூலம் படிப்பில் நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களை அடைய முருக வழிபாடு மேற்கொள்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 1.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன் இந்த வாரத்தில் 9, 10-ல் சஞ்சரிப்பதாலும், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்ப தால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத் தோடு இருப்பது நல்லது. கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த உடல் உபாதை கள் சற்று குறைந்து அனுகூல மான பலன்களை அடையக் கூடிய அமைப்புகள் உண்டு. பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருந்தால்தான் தற்போது இருக் கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்க முடியும். பிள்ளைகள்வழியில் தேவை யில்லாத மனக்கவலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிலும் அவசரம் காட்டாமல் பொறுமை யோடு செயல்பட்டால் தான் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்போதைக்கு தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் வேலை செய்பவர்களால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமாகும். மற்றவர்கள் பேச்சைக் கேட்காமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்து விட்டு படிப்பில் கவனத் தோடு இருந்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன்மூலம் அனுகூலமான பலன்களை அடைய முடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 1.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு, பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பணவரவுகள் மிகமிகச் சிறப் பாக இருந்து சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். பிறர்க்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் சூரியன், சனி, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மிகமிக நல்லது. உறவினர் களை அனுசரித்துச் செல்வதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இல்லாவிட்டாலும் நீங்கள் எதிலும் சிறப்பாக செயல்பட்டு போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருப்பதால் ஓய்வு நேரம் குறைந்தாலும் உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை அடையக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் உடல் பாதிப்பால் ஞாபகமறதி ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களை அடைய ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 23, 23, 25, 26.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 7-ல் சஞ்சரிப்பதாலும், 8-ல் சுக்கிரன், ராகு சஞ்சரிப்பதாலும் எந்த விஷயத்திலும் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய காலமாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருசில அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகள்மூலமாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் உடன் இருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லலாம் என்பதால் மற்றவர்களிடம் பேச்சில் சற்று கவனத் தோடு இருப்பதன்மூலம் நல்லபெயர் எடுக்கமுடியும். பணி நிமித்தமாக தேவையற்ற பயணங்கள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப் பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்களை வேற்று பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவதுமூலம் ஏற்றத்தை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27, 28.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானம் என வர்ணிக்கப் படக்கூடிய 6-ஆம் வீட்டில் சனி, சூரியன், 9-ல் குரு சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். உங்களது பலமும் வ-மையும் கூடும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் மிகமிகச் சிறப்பாக இருக்கும். உங்களின் நீண்டநாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதால் ஏற்ற மிகுந்த பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக அனுகூலங்கள் ஏற்படக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பது மட்டுமில்லாமல் நீங்கள் எதிர்பார்த்த கௌரவ பதவிகள் கிடைக்கும். கடந்த காலங்களில் உங்கள்மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசு பெறக்கூடிய நேரமாகும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 1.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சனி, சூரியன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர் நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு ஏற்படும். தனக்காரகன் குருபகவான் தற்போது 8-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் சற்று பொறுமையோடும் நிதானத்தோடும் செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஒரு நல்ல வாய்ப்புகள் கூட தாமதப்படக்கூடிய நேரமாகும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருந்துவிட்டு உங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங்கள்மூலமாக வீண் செலவுகள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்லபெயர் எடுக்கமுடியும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 1.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 7-ல் குரு சஞ்சரிப்பது அற்புதமான அமைப் பாகும். உங்கள் ராசிக்கு 4, 5-ல் புதனும், லாப ஸ்தானத் தில் கேதுவும் சஞ்சரிப்பதால் நீங்கள் எண்ணியதெல்லாம் நிறைவேறக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பொருளாதாரநிலை மிக சிறப் பாக இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், சனி, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக உடல் அசதி, வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கும். உடனிருப்பவர்கள் ஒருசில இடையூறுகளை ஏற்படுத்தலாம் என்பதால் எந்த விஷயத்திலும் சற்று முன்னெச்சரிக்கையுடனும் கவனத்தோடும் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய அனுகூலங்கள் இருக் கிறது. மாணவ- மாணவியர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, சூரியன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும். பணவரவுகள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருப்பதால் உங்களின் அனைத்து தேவை களும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருக்கக்கூடிய கடன்களை பைசல் செய்யக்கூடிய அளவிற்கு உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலை யினை எட்டுவீர்கள். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த வம்பு, வழக்குகளுக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல முடிவு கிடைத்து அனுகூல மான பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைத் பெற குரு பகவானுக்கு மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 27, 28.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய நேரமாகும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக தடைப்பட்டுவந்த சுப காரியங்கள் வரும் நாட்களில் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. சனி, சூரியன் 2-ல் இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் உத்தமம். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை நீங்கள் அடையக்கூடிய நேரம் என்றா லும் தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் தற்போது குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீங்கள் விரும்பிய பதவி உயர்வுகளை அடையக்கூடிய நேரமாகும். உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மருத்துவ செலவுகள் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சை குறைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். பெண்கள்மூலமாக ஒருசில எதிர்பாராத உதவிகளை பெறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 1.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், சனி, 4-ல் குரு சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குறிப்பாக உங்களது முன் கோபத்தை சற்று குறைத்துக் கொண்டால்தான் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். மிகவும் நம்பியவர்களே உங்களுக்கு வீண் பிரச்சினைகளைத் தருவார்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இருக்காது. ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பது மட்டு மில்லாமல் தேவையில்லாத பழிச்சொற்களை எதிர்கொள்ளக்கூடிய நேரமென்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு ஞாபகமறதி ஏற்படக்கூடிய நேரம் என்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 27, 28.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 12-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் தேவையில்லாத நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடிய நேரமாகும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள்கூட தாமதமாகி உங்கள் மன அமைதியைக் குறைக்கும். வண்டி, வாகனங்கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய நேரமாகும். தொழில் வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். வேலையாட்களை சற்று அனு சரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். முடிந்தவரை அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்துவது, சக ஊழியர்களிடம் பேசுகின்றபோது பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது தற்போதைக்கு உத்தமம். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது. இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 26, 1.