இந்த வார ராசிபலன் 23-1-2022 முதல் 29-1-2022 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-23-1-2022-29-1-2022

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திராடம்- 4.

செவ்வாய்: மூலம்- 2.

புதன்: உத்திராடம்- 4.

குரு: சதயம்- 2.

சுக்கிரன்: பூராடம்- 2.

சனி: திருவோணம்- 4.

ராகு: கிருத்திகை- 3.

கேது: அனுஷம்- 1.

கிரக மாற்றம்:

தை 6 (29-1-2022) சுக்கிரன் வக்ர முடிவு பகல் 2.21 மணிக்கு.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

24-1-2022 இரவு 11.08 மணிக்கு துலாம்.

27-1-2022 அதிகாலை 3.12 மணிக்கு விருச்சிகம்.

29-1-2022 அதிகாலை 5.07 மணிக்கு தனுசு.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் 9-ல் சஞ்சரிப்பதால் உங்களது செல்வாக்கு மேலோங்கும். குருபகவான் 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக சிறப்பான வரவுகள் ஏற்பட்டு அனைத்துத்தேவைகளும் பூர்த்தி யாகும். சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் தேடிவரும். பெரியமனிதரின் உதவி கிடைப்பதால் குடும்பத்தில் நிலவிய சங்கடங்கள் மறைந்து நிம்மதி ஏற்படும். ராகு 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமை யுடன் இருப்பதும், நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடையும் யோகமுண்டு. பூர்வீக சொத்து வகையில் நீண்டநாட்களாக இழுபறியிலிருந்த பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் குறையும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மன மகிழ்ச்சி தரக் கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலனை அடையமுடியும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் உதவியாக இருப்பதால் தொழிலை அபி விருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறைந்து நல்லபதவியை வரும் நாட்களில் அடைய முடியும். சிலருக்கு வெளியூர்மூலமாக நல்ல செய்தி கிடைக்கும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வதும், பயணங்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. அம்மன் கோவில்களுக்குச் சென்று நெய்தீபமேற்றி வழிபட்டால் நற்பலன்களை அடையலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4லிஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2லிஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் வக்ரகதியில் செவ்வாய் சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்ப தால் எதிலும் நிதானமாக செயல்படவேண்டிய காலமாகும். எதிர்பார்த்த பணவரவுகள் கிடைப்ப தில் தடைகள் ஏற்படும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்லி மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பெண்கள்வகையில் சிக்கல்கள் ஏற்படும். குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் பணவரவு கள் ஏற்ற- இறக்கமாக இருக்கும். அசையா சொத்துவகையில் வீண் செலவுகள் ஏற்படலாம். ஆடம்பரத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. சனி- சூரியன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதால் ஒருசில உதவிகள் கிடைக்குமென்றாலும் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலமாகும். பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தா லும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர் பாராத உதவிகளை அடைய முடியும். சனிக் கிழமை தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். புதன் வக்ரகதியில் சஞ்சரிப்ப தால் தொழில், வியாபாரத்தில் நினைப்ப தொன்று- நடப்பதொன்றாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல்விஷயத்தில் கவன மாக இருந்தால்தான் கையிருப்பைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்பு கள் கிடைத்தாலும் தேக ஆரோக்கி யம் சுறுசுறுப்பாக செயல்பட ஒத்துழைக் காது. பணிச்சுமை காரணமாக மன அமைதிக் குறைவுண்டாகும். முருக வழிபாடு மற்றும் மகாலட்சுமி வழிபாடு மேன்மைகளை உண்டாக்கும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

குரு உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிப்ப தால் சகலவிதத்திலும் அனுகூலமான பல

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திராடம்- 4.

செவ்வாய்: மூலம்- 2.

புதன்: உத்திராடம்- 4.

குரு: சதயம்- 2.

சுக்கிரன்: பூராடம்- 2.

சனி: திருவோணம்- 4.

ராகு: கிருத்திகை- 3.

கேது: அனுஷம்- 1.

கிரக மாற்றம்:

தை 6 (29-1-2022) சுக்கிரன் வக்ர முடிவு பகல் 2.21 மணிக்கு.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கன்னி.

24-1-2022 இரவு 11.08 மணிக்கு துலாம்.

27-1-2022 அதிகாலை 3.12 மணிக்கு விருச்சிகம்.

29-1-2022 அதிகாலை 5.07 மணிக்கு தனுசு.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் 9-ல் சஞ்சரிப்பதால் உங்களது செல்வாக்கு மேலோங்கும். குருபகவான் 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக சிறப்பான வரவுகள் ஏற்பட்டு அனைத்துத்தேவைகளும் பூர்த்தி யாகும். சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் தேடிவரும். பெரியமனிதரின் உதவி கிடைப்பதால் குடும்பத்தில் நிலவிய சங்கடங்கள் மறைந்து நிம்மதி ஏற்படும். ராகு 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமை யுடன் இருப்பதும், நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடையும் யோகமுண்டு. பூர்வீக சொத்து வகையில் நீண்டநாட்களாக இழுபறியிலிருந்த பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் குறையும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மன மகிழ்ச்சி தரக் கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலனை அடையமுடியும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் உதவியாக இருப்பதால் தொழிலை அபி விருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறைந்து நல்லபதவியை வரும் நாட்களில் அடைய முடியும். சிலருக்கு வெளியூர்மூலமாக நல்ல செய்தி கிடைக்கும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வதும், பயணங்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. அம்மன் கோவில்களுக்குச் சென்று நெய்தீபமேற்றி வழிபட்டால் நற்பலன்களை அடையலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4லிஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2லிஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் வக்ரகதியில் செவ்வாய் சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்ப தால் எதிலும் நிதானமாக செயல்படவேண்டிய காலமாகும். எதிர்பார்த்த பணவரவுகள் கிடைப்ப தில் தடைகள் ஏற்படும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்லி மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பெண்கள்வகையில் சிக்கல்கள் ஏற்படும். குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் பணவரவு கள் ஏற்ற- இறக்கமாக இருக்கும். அசையா சொத்துவகையில் வீண் செலவுகள் ஏற்படலாம். ஆடம்பரத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. சனி- சூரியன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதால் ஒருசில உதவிகள் கிடைக்குமென்றாலும் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலமாகும். பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தா லும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர் பாராத உதவிகளை அடைய முடியும். சனிக் கிழமை தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். புதன் வக்ரகதியில் சஞ்சரிப்ப தால் தொழில், வியாபாரத்தில் நினைப்ப தொன்று- நடப்பதொன்றாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல்விஷயத்தில் கவன மாக இருந்தால்தான் கையிருப்பைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்பு கள் கிடைத்தாலும் தேக ஆரோக்கி யம் சுறுசுறுப்பாக செயல்பட ஒத்துழைக் காது. பணிச்சுமை காரணமாக மன அமைதிக் குறைவுண்டாகும். முருக வழிபாடு மற்றும் மகாலட்சுமி வழிபாடு மேன்மைகளை உண்டாக்கும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

குரு உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிப்ப தால் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. சிறப்பான பணவரவால் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் பலம், எந்தப் பிரச்சினையை யும் எதிர்கொள்ளும் திறனுண்டா கும். கேது 6-ல் இருப்பதால் மறை முகப் பிரச்சினைகள் எல்லாம் குறையும். குடும்பத்தில் சுப காரிய முயற்சிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும். ராசியாதி பதி புதன் வக்ரகதியில் சூரியன், சனி சேர்க்கைப்பெற்று 8-ல் சஞ்சரிப்ப தால் உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. சுக்கிரன், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்துச் செல்வது நல்லது. உறவினர் களிடம் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்குப் பரிபூரண வெற்றி கிடைக் கும். தொழில்ரீதியாக நல்ல முன்னேற்றங் கள் கிடைக்குமென்றாலும், வேலையாட் கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. வேலைக்குச் செல்பவர் களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். வரும் நாட்களில் தேவையற்ற தூரப் பயணங்கள், அதன்மூலம் செலவுகள் ஏற்படும். சிவ வழி பாடு, சனிக்குரிய பரிகாரங்கள், சனிக்கவசம் படிப்பது நல்லது.

tt

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சிறப்பாக சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். குரு பகவான் 8-ல் சஞ்சரிப்பதால் பொருளா தாரரீதியாக சற்று நெருக்கடிகள் இருக்கும் என்றாலும், ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள்மூலம் எதையும் எதிர்கொள்ளமுடியும். சூரியன்- சனி 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டா கும் என்பதால், விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பெரியவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வயிறு சம்பந்தபட்ட பிரச்சினை கள் ஏற்படும் என்பதால் இயற்கை உணவுகளாக எடுத்துக்கொள்வது நல்லது. 4-ஆம் அதிபதி சுக்கிரன் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் வாகனங் கள்மூலம் செலவுகள் ஏற்படும். இவ்வாரத்தில் புதிய செயல்களில் ஈடுபடவேண்டுமென் றால் அதனை ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் முயற்சித்தால் எளிதில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத் தில் இருக்கும் வாய்ப்புகளைத் தற்போது பாதுகாத்துக்கொள்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களை முடிந்த வரை தள்ளிவைக்கவும். அரசுவழி அதிகாரி களின் கெடுபிடியால் தொழிலை நிம்மதி யுடன் செய்ய முடியாது. வெளிநபர்களிடம் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பணியில் மட்டும் கவனத் துடன் இருக்கவும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது சிறப்பு. ஓரிரு மாதங் கள் இருப்பதைத் தக்கவைத்துக்கொண் டால் விரைவில் நல்லமுன்னேற்றங்கள் கிடைக்கும். சிவ பெருமானையும் விநாயகரை யும் வழி பட்டால் நன்மைகள் உண்டாகும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல் லாம் நடக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். குரு 7-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் பண வரவுகள் நன்றாக இருந்து அனைத்து வகையிலும் அனுகூலங்களை அடைவீர் கள். குடும்பத்தில் மங்கள கரமான சுபகாரியங்கள் கைகூடும். நீண்டநாட்க ளாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். கணவன்- மனைவி யிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு வீடு, வாகனங்கள் வாங்கும் ஆசை தற்போது பூர்த்தியாகும். மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றி நல்ல பெயர் எடுக்கமுடியும். இருக்கு மிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை அடையும் யோகமும், தொழிலை அபிவிருத்தி செய்யும் எண்ணமும் வரும் நாட்களில் நிறைவேறும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள், வம்பு, வழக்குகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகி நல்ல பதவியை அடையும் யோகமுண்டு. எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைந்து வாழும் நிலை ஏற்படும். உங்கள் திறமைகளை வெளிகாட்டுவதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். துர்க்கையம்மன் வழிபாடும் முருக வழி பாடும் உத்தமம்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், வக்ர சுக்கிரன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் தேவை யற்ற அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள்கூட தடைப்படும். குரு 6-ல் சஞ்சரிப்பதால் பண விஷ யத்தில் மிகவும் சிக்கனமாக இருப்பது, அனாவசிய செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ராசியாதிபதி புதன் 5-ல் சஞ்சரிப்பதாலும், கேது 3-ல் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர் களின் உதவியால் உங்களின் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். நெருக்கடிகள் இருந் தாலும் எதிலும் தைரியத்துடன் செயல்படு வீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் தேவையற்ற மனக்கவலை ஏற்படலாம். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் முயற்சிகள் எளிதில் வெற்றிபெற்று அதிர்ஷ்டகரமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள் என்றாலும், மறை முகப் போட்டி காரணமாக கிடைக்க வேண்டிய லாபங்கள் தாமதப்படும். உங்கள் தனித்திறமையால் படிப்படியான வளர்ச்சி களை அடைவீர்கள். வாக்குறுதி கொடுப்ப தைத் தற்போது தவிர்க்கவும். வேலைக்குச் செல்பவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும். வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் சக ஊழியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு வெளியூர் மூலமாக அனுகூலமான செய்தி கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். ராகு காலத்தில் பைரவருக்கு விளக்கேற்றி வழிபடுவது, சஷ்டியன்று விரதமிருந்து முருக வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் நீங்கள் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு பல்வேறு வளர்ச்சிகளை அடை வீர்கள். குரு 5-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் பணத் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமல்லாமல், சேமிக்குமளவிற்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் பூர்த்திசெய்து நிம்மதியடைவீர்கள். திருமணம் சார்ந்த சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத் தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு சனி, சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. ராகு 8-ல் சஞ்சரிப்பதால் வாகனங் களில் செல்கின்றபோது வேகத்தைக் குறைத் துக்கொண்டு நிதானத்துடன் செல்வது நல்லது. செவ்வாய், புதன், சனி ஆகிய நாட் களில் உங்கள் முயற்சிகளுக்கு எதிர்பார்ப்பதை விட அதிகப்படியான அனுகூலப் பலனை அடையமுடியும். தொழிலில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் நிலையும், நல்ல லாபத்தை அடையும் யோகமுமுண்டு. தொழிலில் சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக் காத காரணத்தினால் நீங்கள் எதிலும் முன்னின்று செயல்படவேண்டிய நிலை யிருக்கும். கடந்தகால நெருக்கடிகள் குறைந்து நல்ல வளர்ச்சியினை அடைவீர்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் வேலைப்பளு கூடுதலாக இருக்கும். முடிந்தவரை எதிலும் நிதானத்துடன் இருப்பது, குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ராகு காலத் தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், சனி இணைந்து சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு ஆதாயமடையும் யோகம் வரும் நாட்களில் உண்டு. பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். குரு பார்வை 8, 10 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் யோகமுண்டு. ராசியாதிபதி செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதாலும், ராகு 7-ல் சஞ்சரிப்பதாலும் பேச்சில் சற்று பொறுமையுடன் இருக்கவும். முடிந்தவரை கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குறிப்பாக நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய காலமாகும். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைத்து நல்ல லாபங்களை அடைவீர்கள். வங்கிகள்மூலம் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் எதிலும் உற்சாகத் துடன் செயல்படமுடியும். தொழில்ரீதியாக கூட்டாளிகளையும் உடனிருப்பவர்களையும் அனுசரித்துச் சென்றால் நல்ல முன்னேற்றங் களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். உங்கள்மீதிருந்த பழிச்சொற்கள் விலகி நல்ல பெயர் எடுக்கும் யோகமுண்டு. நீங்கள் எதிர்பார்த்த உயர்வை அடையமுடியும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு முல்லைமலர் சாற்றி தீபமேற்றி வழிபட்டால் செல்வநிலை உயரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பொறுமையுடன் செயல்படுவது நல்லது. சனி, சூரியன் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதால் பேச்சைக் குறைப்பது நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கவும். ராசியாதிபதி குரு 3-ல் சஞ்சரித்து ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு, பிள்ளைகள் வழியில் ஒருசில அனுகூலங்கள் நடக்கும். பணவிஷயத்தில் நெருக்கடிகள் நிலவுமென்பதால் சிக்கனமாக இருப்பதும், அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தள்ளிவைப்பதும் நல்லது. பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் திடீர் தனவரவுகள் ஏற்பட்டு நெருக்கடிகள் குறையும். ஆன்மிகத் தலங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்பு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருக்கும் வாய்ப்புகளை மிகவும் பொறுப்புடன் கையாண்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். தொழில் வளர்ச்சிக்காக எதிர் பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் வேலை செய்பவர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்க முடியும். சனி பகவானையும், விநாயகரையும், ஆஞ்சனேயரையும் வழிபட்டு வந்தால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாபதிபதி சனி ஜென்ம ராசியில் சூரியனுடன் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியத் தில் அக்கறை எடுத்துக்கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது உடல்நலத்திற்கு நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்குமென்றாலும், நெருங்கிய உறவினர்களின் செயலால் தேவையற்ற நிம்மதிக் குறைவு ஏற்படும். குரு 2-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பணவரவுக்கு எந்தவிதத்திலும் பஞ்சமில்லாமல் அனைத்துத் தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். வம்பு வழக்குகளிலுள்ள இழுபறி வரும் நாட்களில் முடிவுக்கு வரும். ஆரோக்கியரீதியாக எவ்வளவு பாதிப்புகள் இருந்தாலும் உங்கள் மன வலிமையால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சுக்கிரன்- செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அசையும்- அசையா சொத்துவகையில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். பிறர் விஷயங்களில் தலையிடுவதைத் தள்ளிவைக்கவும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் செயல்களுக்கு நல்ல பலனடையும் யோகமுண்டு. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சரிவர இருக்காதென்றாலும், நல்ல லாபங்களை அடைவீர்கள். கடந்தகால பொருட்தேக்கங்கள் விலகி போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிகாட்ட சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். வேலைப்பளு காரணமாக உடல் அசதி இருந்தாலும் தாராளமான சன்மானங்களைப் பெற்று கடன்களை சற்று குறைத்துக்கொள்ள முடியும். சஷ்டி நாளன்று விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சனி- சூரியன் சேர்க்கைப் பெற்று 12-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் மிகவும் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. எதிர்பாராதவகையில் நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் எந்த செயலிலும் சிந்தித்து செயல்படுவது, வெளி நபர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களுடைய உதவியால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டாகும். பூர்வீக சொத்துவகையில் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். இவ்வாரத்தில் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சுக்கிரன்- செவ்வாய் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான தர்மகர்மாதிபதி யோகமென் பதால், எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடைவீர்கள். நீண்டநாளைய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சிலருக்கு திடீர் கௌரவப் பதவிகள் தேடிவரும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சாதகமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் சற்று கவனத்துடன் செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். கூட்டாளிகளின் ஆதரவால் ஒரு சில ஆதாயங்களைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் அதிக முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக் கேற்ற நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும், மற்றவர்கள் பணியையும் இணைத்து செய்யவேண்டியிருக்கும். பைரவர், விஷ்ணு வழிபாடு நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு உச்ச கேந்திரமான 10-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர் கள். இருக்குமிடத்தில் உங்களது பெயர், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கௌரவப் பதவிகள் தேடிவரும். சூரியன், சனி, புதன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால், எல்லாவகையிலும் பொருளாதார மேன்மைகளை அடைந்து நிம்மதிபெறுவீர்கள். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் நல்ல செய்தி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் விலகி சேமிக்குமளவுக்கு பொருளாதார நிலை மேன்மையடையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கிருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி மருத்துவச் செலவுகள் குறையும். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் புதிய திட்டங்களைப் போட்டு வெற்றி பெறும் யோகமுண்டு. திறமை வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் எளிதில் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதியுடன் செயல்பட முடியும். தட்சிணாமூர்த்தி, அஷ்டலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் சகல நன்மைகளையும் பெறலாம்.

bala280122
இதையும் படியுங்கள்
Subscribe