முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: கிருத்திகை- 4.
செவ்வாய்: உத்திரட்டாதி- 1.
புதன்: கிருத்திகை- 3.
குரு: உத்திரட்டாதி- 2.
சுக்கிரன் : ரேவதி- 4.
சனி: அவிட்டம்- 3.
ராகு: கிருத்திகை- 1.
கேது: விசாகம்- 3.
கிரக மாற்றம்:
வைகாசி 9 (23-5-2022) மேஷ சுக்கிரன் (இரவு 8.27).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மகரம்.
22-5-2022 பகல் 11.12 மணிக்கு கும்பம்.
24-5-2022 மாலை 4.26 மணிக்கு மீனம்.
27-5-2022 அதிகாலை 12.38 மணிக்கு மேஷம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி அதிசாரமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக எதிர்பாராத உதவிகள் கிடைத்து பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ராசியில் ராகு, 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு, தேவையில்லாத பிரச்சினைகள் தேடிவரக்கூடிய நிலை ஏற்படலாம். வீண் வம்பு, நெருங்கியவர்களே நிம்மதியைக் குறைக்கும் நிலை நிலவும். எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்பட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. குரு 12-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் தைரியத்தோடு செயல்பட்டு எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பால் போட்ட முதலீட்டை எடுக்கும் வாய்ப்புண்டு. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் மட்டும் சற்று பொறுமை காப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகப்படியாக இருந்தாலும் உடன் வேலை செய்பவர்களுடைய உதவி சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். வேலை நிமித்தமாக தூரப் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை, அதிக அலைச்சல், உடல் அசதி ஏற்படும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் யோகமுண்டு. சூரிய நமஸ்காரம் செய்வது, மகாவிஷ்ணுவை தரிசிப்பது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். லாப ஸ்தானமான 11-ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதாரரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப் பாக இருப்பதால் கடந்தகால கருத்து வேறுபாடுகள் விலகி மனநிம்மதி நிலவும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். உங்களுக்கிருந்த நீண்ட நாள் பிரச்சினைகள், வம்பு வழக்குகள் யாவும் வரும் நாட்களில் முடிவுக்கு வரும். உற்றார்- உறவினரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் எண்ணங்களைப் பூர்த்தி செய்துகொள்ளமுடியும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுப்பது மட்டுமல்லாமல் தொழில் விருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகளும் கிடைக்கும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பதால் எதிலும் புது உத்வேகத்துடன் செயல் படுவீர்கள். உத்தியோகஸ் தர்களுக்கு நல்ல பதவி உயர்வு கிடைப்பது மட்டுமல்லாமல் உங்கள் உழைப்புக்கான பலனை வரும் நாட்களில் அடையமுடியும். புதிதாக வேலைதேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். இவ்வாரத் தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு விளக்கேற
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: கிருத்திகை- 4.
செவ்வாய்: உத்திரட்டாதி- 1.
புதன்: கிருத்திகை- 3.
குரு: உத்திரட்டாதி- 2.
சுக்கிரன் : ரேவதி- 4.
சனி: அவிட்டம்- 3.
ராகு: கிருத்திகை- 1.
கேது: விசாகம்- 3.
கிரக மாற்றம்:
வைகாசி 9 (23-5-2022) மேஷ சுக்கிரன் (இரவு 8.27).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மகரம்.
22-5-2022 பகல் 11.12 மணிக்கு கும்பம்.
24-5-2022 மாலை 4.26 மணிக்கு மீனம்.
27-5-2022 அதிகாலை 12.38 மணிக்கு மேஷம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி அதிசாரமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக எதிர்பாராத உதவிகள் கிடைத்து பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ராசியில் ராகு, 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு, தேவையில்லாத பிரச்சினைகள் தேடிவரக்கூடிய நிலை ஏற்படலாம். வீண் வம்பு, நெருங்கியவர்களே நிம்மதியைக் குறைக்கும் நிலை நிலவும். எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்பட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. குரு 12-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் தைரியத்தோடு செயல்பட்டு எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பால் போட்ட முதலீட்டை எடுக்கும் வாய்ப்புண்டு. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் மட்டும் சற்று பொறுமை காப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகப்படியாக இருந்தாலும் உடன் வேலை செய்பவர்களுடைய உதவி சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். வேலை நிமித்தமாக தூரப் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை, அதிக அலைச்சல், உடல் அசதி ஏற்படும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் யோகமுண்டு. சூரிய நமஸ்காரம் செய்வது, மகாவிஷ்ணுவை தரிசிப்பது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். லாப ஸ்தானமான 11-ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதாரரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப் பாக இருப்பதால் கடந்தகால கருத்து வேறுபாடுகள் விலகி மனநிம்மதி நிலவும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். உங்களுக்கிருந்த நீண்ட நாள் பிரச்சினைகள், வம்பு வழக்குகள் யாவும் வரும் நாட்களில் முடிவுக்கு வரும். உற்றார்- உறவினரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் எண்ணங்களைப் பூர்த்தி செய்துகொள்ளமுடியும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுப்பது மட்டுமல்லாமல் தொழில் விருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகளும் கிடைக்கும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பதால் எதிலும் புது உத்வேகத்துடன் செயல் படுவீர்கள். உத்தியோகஸ் தர்களுக்கு நல்ல பதவி உயர்வு கிடைப்பது மட்டுமல்லாமல் உங்கள் உழைப்புக்கான பலனை வரும் நாட்களில் அடையமுடியும். புதிதாக வேலைதேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். இவ்வாரத் தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். சுக்கிரன் 23-ஆம் தேதிமுதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து, எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். குறிப்பாக பெண்கள்வழியில் அனுகூலங்கள் ஏற்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். ராசியாதிபதி புதன், சூரியன் சேர்க்கைபெற்று 12-ல் சஞ்சரிப்பதால் சில நேரங்களில் நீங்கள் நினைப்பதொன்று; நடப்பதொன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது, பிறர் சொல்வதைக் கேட்டுக் குழப்பிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய முடியும். உடனிருப்பவர்களின் உதவியால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். மறைமுக எதிர்ப்பால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். அரசு அதிகாரிகளிடம் பேச்சில் பொறுமையோடு இருந்தால் அவர்கள்மூலம் சில அனுகூலங்களை அடையமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உழைப்பு அதிகமாக இருந்தாலும் அதற்கான சன்மானம் கிடைக்கும். பிறர் சொல்லும் ஆசை வார்த்தையை நம்பி இருக்கும் வாய்ப்புகளை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்வது உத்தமம். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எடுக்கும் முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றுவது, சிவன் தலங்களுக்குச் சென்று வருவது சிறப்பு.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், புதனுடன் சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு மேலோங்கும் நேரமாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்ப தால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துவழியில் அனுகூலமான பலன்களை அடையமுடியும். சுக்கிரன் 23-ஆம் தேதி முதல் 10-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன் யோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் போட்ட திட்டங்கள் வெற்றிபெற்று நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் உங்களின் நீண்டநாளைய பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு அதிக லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பிறரால் முடிக்கமுடியாத பணியைக்கூட நீங்கள் தலையிட்டு எளிதில் செய்து முடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். சனி 8-ல் சஞ்சரிப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது சற்று பொறுமையைக் கடைப் பிடிப்பது சிறப்பு. அலைச்சல் காரண மாக ஓய்வுநேரம் குறையும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் எளிதில் முடியவேண்டிய காரியங்கள்கூட தடைபடக்கூடும். வெள்ளி, சனிக்கிழமை களில் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்வது சிறப்பு.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசிநாதன் சூரியன், புதனுடன் 10-ல் சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியை யும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பொருளாதாரரீதியாக ஆதாயங்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 8-ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது, உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது நன்று. நேரத்திற்கு சாப்பிடுவது, வேலைப்பளுவை முடிந்த வரை குறைத்துக்கொள்வது உத்தமம். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால்தான் ஆதாயங்களை அடையமுடியும். வேலையாட் கள்மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல் பட்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை அதிகப்படியாக இருக்கும். வீண் பழிகளைச் சுமக்கும் சூழல் ஏற்படும். அதிகாரிகள் ஆதரவு சற்று சாதகமாக இருப்பதால் நிலைமையை சமாளித்து அனுகூலங்களை அடைவீர்கள். பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை பேச்சைக் குறைத் துக்கொள்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் யோகமுண்டு. செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு மேற்கொள்வது, ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றுவது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி அதிசாரமாக சஞ்சரிப்பதால், சகலவிதத்திலும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். 7-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி, பிள்ளைகள்வழியில் பூரிப்பு ஏற்படும். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் பகலவனைக் கண்ட பனிபோல முழுமையாகக் மறைந்து எதிலும் மன நிம்மதியுடன் செயல்படமுடியும். உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் வரும் நாட்களில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகமுண்டு. பூர்வீகச் சொத்து வழியி-ருந்த பிரச்சினைகள் விலகி அனுகூலமான பலன்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோர் ஆதரவாக இருப்பதால் நிம்மதியடைவீர்கள். ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் உயர்வான நிலையை எட்டும் காலமாக தற்போதைய நாட்கள் இருக்கும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் தொழிலில் இணைவதால் புதிய ஆர்டர்களைத் துணிந்து பெற்று, குறித்த நேரத்தில் செய்துமுடித்து லாபத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் காரியங்க ளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு, இருக்குமிடத்தில் நல்லபெயர் எடுக்கும் வாய்ப்பேற்படும். கடந்தகாலங்களில் நீங்கள் செய்த பணிக்கான சன்மானத்தைத் தற்போது பெற்று, உங்களுடைய கடன்களை எளிதில் பைசல் செய்யமுடியும். மகாலட்சுமி வழிபாடு, பாம்புப் புற்றுக்குப் பால் விடுவது நன்று.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
சர்ப்ப கிரகங்கள் 1, 7-ல் சஞ்சரிப்பதாலும், சூரியன் 8-ல் சஞ்சரிப்பதாலும் உங்களது உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. குரு பகவான் 6-ல் இருப்பதால் பொருளாதாரரீதியாக கடுமையான நெருக்கடிகள் இருக்குமென்றாலும், உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், திங்கட்கிழமைமுதல் சுக்கிரன் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து நெருக்கடிகள் விலகும். சூழ்நிலைக்குத் தக்கவாறு எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட்டால் நிலைமையை சமாளித்து ஏற்றங்களைப் பெறமுடியும். குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் அனைத்து விஷயத்தையும் கவனமாகக் கையாண்டால் இருக்கும் நிலைமையை சமாளிக்கமுடியும். மறைமுகப் போட்டிகள் அதிகப்படியாக இருந்தாலும் வேலையாட்களின் உதவியால் ஆதாயங்களை அடைவீர்கள். அரசு அதிகாரிகள் தரும் நெருக்கடிகளால் தொழில்ரீதியாக மன அமைதி குறையும். வேலைக்குச் செல்பவர் களுக்கு தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். வேலைப்பளு காரணமாக அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், உடல் அசதி ஏற்படும். புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில், மற்ற கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர் பாராத ஆதாயங்களைப் பெறுவீர்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றுவது, பிரதோஷ நாளில் சிவ வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் துணிவோடு செயல்பட்டு பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். 5-ல் ராசியாதிபதி செவ்வாய், குரு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். கடந்த காலங்களில் உங்களுக்கிருந்த பொருளாதார நெருக்கடிகள் விலகி சேமிக்குமளவுக்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு பூமி, மனை வாங்கும் வாய்ப்புண்டாகும். ராசிக்கு சனி 4-ல், சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள், குடும்பத்தில் ஒன்றுமில்லாத விஷயத்துக்கெல்லாம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிலும் சற்று பொறுமை யோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். தொழில் அபிவிருத்திக்காக எதிர்பார்த்த பண உதவிகள் கிடைப்பது மட்டுமல்லாமல் அரசாங்கவழியில் இருந்து வந்த இடையூறுகள் தற்போது விலகி தொழிலை விருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வாய்ப்புகள் தற்போது கிடைக்கும். இட மாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு இனிய செய்தி வந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இவ்வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் முழு வெற்றியினைப் பெறமுடியும். நரசிம்மர் வழிபாடு, படிக்கும் மாணவர்களுக்கு முடிந்த உதவிகள் செய்வது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
சூரியன் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சனி அதிசாரமாக 3-ல் சஞ்சரிப்பதால் நீண்டநாட்களாக இருக்கும் சோதனைகள் விலகி நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். பொருளாதாரரீதியாக ஏற்றம் மிகுந்த பலன்கள் ஏற்பட்டு கடன்கள் குறையும். சமுதாயத்தில் மற்றவர்கள் உங்களை மதிக்குமளவுக்கு உயர்வான நிலையை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றும் பலமேற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து மனநிம்மதி நிலவும். சுக்கிரன் இவ்வாரத்தில் 4, 5-ல் சஞ்சரிப்ப தால் உங்களின் நீண்டநாள் ஆசைகளெல்லாம் எளிதில் நிறைவேறும் வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக திறமையாக செயல்பட்டு அதிக லாபத்தை ஈட்டும் வாய்ப்புண்டு. வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவதால் கடந்த காலங்களில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டுமென்ற எண்ணங்கள் தற்போது செயல்வடிவம் பெறும். உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 5-ல் ராகு சஞ்சரிப்பதால் அஜீரணக் கோளாறு, உடல் உபாதைகள் ஏற்படும் நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்குப் பரிபூரண வெற்றி கிடைக்கும். உக்ர தெய்வங்களை வழிபடுவது, ஏழைகளுக்கு முடிந்த உதவி செய்வது சிறப்பு.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறு வதாலும், குரு பகவான் 3-ல் சஞ்சரிப்பதாலும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள், அலைச்சல், டென்ஷன் ஏற்படும். எதிலும் சற்று சிக்கனத்தோடு சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இவ்வாரத்தில் செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பது, திங்கட்கிழமைமுதல் சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பது சற்று அனுகூலமான அமைப் பென்பதால் எதிர்பாராத உதவிகளை உடனிருப்பவர்கள்மூலம் பெற்று நிலைமையை சமாளிப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைப்பதால் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை நம்பாமல் எந்த செயலிலும் நீங்கள் நேரடியாக ஈடுபட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வெளிநபர்கள் தரும் இடையூறுகளால் தொழிலில் மன அமைதி குறையும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்போதைக்கு தள்ளிவைப்பது நல்லது. நல்லதாகப் பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வார்கள் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பது மட்டுமல்லாமல் உடன் வேலை செய்பவர்களுடைய வேலையையும் நீங்கள் சேர்த்துச் செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படும். இவ்வாரத்தில் பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும் புதன், வியாழக்கிழமைகளில் மிகவும் அனுகூலமான பலன்கள் நடக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது சிறப்பு.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
குரு உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப் பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கக் கூடிய நிலையும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைக் குவிக்கும் யோகமும் உண்டு. எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சர்ப்பகிரகமான ராகு 3-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை அடைவது மட்டுமல்லாமல் உங்களுக்கிருந்த நீண்டநாளைய சோதனைகள் விலகி கௌரவமான நிலையை எட்டமுடியும். வேலையாட்கள் சில நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சிறப்பாகக் கையாண்டு ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பேற்படும். குடும்ப உறுப்பினர்களின் உதவியால் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சி அரங்கேறும். வேலைக்குச் செல்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் அதிகாரிகள் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களின் அன்றாட செயல்களில் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சனிக்கிழமையன்று சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது, சிவத் தலங்களுக்குச் சென்றுவருவது உத்தமம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து நிலைமையை எதிர்கொள்ளமுடியும். நெருங்கிய உறவினர்கள் உதவியால் ஒருசில அனுகூலங்கள் நடக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக செயல்படுவது, மற்றவர்களை நம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்படும் நேரமென்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஒரு சில நெருக்கடி இருந்தாலும் மங்களகரமான சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் சிறுசிறு நெருக்கடிகளை சமாளித்து போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக உடல் அசதி, ஓய்வு நேரம் குறையும் நிலை, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்கள் உழைப்புக்கான சன்மானம் கிடைத்தாலும் தற்போது சற்று பொறுமையோடு செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை எட்டமுடியும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. புதன், வியாழக்கிழமைகளில் எதிர்பாராத சில அனுகூலங்களைப் பெறுவீர்கள். முருக வழிபாடு, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நல்லது.