முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: மூலம்- 2.
செவ்வாய்: பூசம்- 3 (வ).
புதன்: அனுஷம்- 4.
குரு: ரோகிணி- 4 (வ).
சுக்கிரன்: திருவோணம்- 4.
சனி: சதயம்- 4.
ராகு: உத்திரட்டாதி- 2.
கேது: உத்திரம்- 4.
கிரக மாற்றம்:
28-12-2024 கும்ப சுக்கிரன் இரவு 11.40 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: சிம்மம்.
22-12-2024 பகல் 12.55 மணிக்கு கன்னி.
25-12-2024 அதிகாலை 1.50 மணிக்கு துலாம்.
27-12-2024 பகல் 1.56 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத் தில் சூரியன், 10-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் போட்ட முதலை எடுக்கமுடியும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். புதிய யுத்திகளை பயன்படுத்தி தொழிலில் நல்ல லாபத்தை ஈட்டமுடியும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிப் பது மட்டுமில்லாமல் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். புதியவாய்ப்பை எதிர் பார்ப்பவர்களுக்கு நல்ல நிறுவனத் தில் இருந்து அழைப்பு வரக் கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் நல்ல ஞாபக சக்தியுடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். இந்த வாரத்தில் முருக வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 26.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதாலும், முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்ப தால் தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படுமளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங் கள் கைகூடக்கூடிய நேரமாகும். பிள்ளைகள்வழியில் அனுகூல மான பலன்களைப் பெறுவீர்கள். சூரியன் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் வேலையையும் சேர்த்து சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். அதிகாரியிடம் தேவை யற்ற கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நீங்கள் பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அசையும், அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் ஆகும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறுவீர்கள். இந்த வாரத்தில் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: மூலம்- 2.
செவ்வாய்: பூசம்- 3 (வ).
புதன்: அனுஷம்- 4.
குரு: ரோகிணி- 4 (வ).
சுக்கிரன்: திருவோணம்- 4.
சனி: சதயம்- 4.
ராகு: உத்திரட்டாதி- 2.
கேது: உத்திரம்- 4.
கிரக மாற்றம்:
28-12-2024 கும்ப சுக்கிரன் இரவு 11.40 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: சிம்மம்.
22-12-2024 பகல் 12.55 மணிக்கு கன்னி.
25-12-2024 அதிகாலை 1.50 மணிக்கு துலாம்.
27-12-2024 பகல் 1.56 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத் தில் சூரியன், 10-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் போட்ட முதலை எடுக்கமுடியும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். புதிய யுத்திகளை பயன்படுத்தி தொழிலில் நல்ல லாபத்தை ஈட்டமுடியும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிப் பது மட்டுமில்லாமல் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். புதியவாய்ப்பை எதிர் பார்ப்பவர்களுக்கு நல்ல நிறுவனத் தில் இருந்து அழைப்பு வரக் கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் நல்ல ஞாபக சக்தியுடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். இந்த வாரத்தில் முருக வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 26.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதாலும், முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்ப தால் தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படுமளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங் கள் கைகூடக்கூடிய நேரமாகும். பிள்ளைகள்வழியில் அனுகூல மான பலன்களைப் பெறுவீர்கள். சூரியன் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் வேலையையும் சேர்த்து சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். அதிகாரியிடம் தேவை யற்ற கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நீங்கள் பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அசையும், அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் ஆகும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறுவீர்கள். இந்த வாரத்தில் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27, 28.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 6-ல் சஞ்சரிப்பதாலும், 2-ல் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும். நீங்கள் வெகுளித்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி யிடையே விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்லநிலையை அடையக் கூடிய யோகம் உங்களுக்கு உண்டு. சில நேரங்களில் ஒருசில காரியங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் தான் வீண் பிரச்சினைகளை தவிர்த்து போட்ட முதலை எடுக்கமுடியும். உத்தி யோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் ஓய்வுநேரம் குறையும். தேவையில்லாத பயணங்களால் மனஅமைதி குறைவு ஏற்படும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 27, 28.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத் தும் பூர்த்தியாகும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மனைவி, பிள்ளைகளிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பு, கடந்தகால சட்ட சிக்கல்கள் எல்லாம் குறைந்து மன அமைதி ஏற்படக்கூடிய ஒரு அமைப்பும் வரும் நாட்களில் உண்டு. உங்கள் ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத் தோடு செயல்படுவதன்மூலம் சில காரியங்களில் அனுகூல பலன்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்துமுடித்து இருக்கும் இடத் தில் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். அதிகாரியினுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சுலபமாக செய்து முடிக்கக்கூடிய அமைப்பு உங்களுக்கு உண்டு. சனி 8-ல் இருப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பு நிமித்தமாக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். முருக வழிபாடு செய்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக்குறைவு உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தன லாபாதிபதி புதன் 4-ல் அமையப்பெற்று, குரு வக்ரகதியில் இருப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளால் சில நெருக்கடிகள் இருந்தாலும் நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு போட்ட முதலை எடுக்கமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரி யுடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர் கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் காலபைரவரை வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 25, 26.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 6-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் வளமான பலன்களையும் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை பூர்த்தி செய்வீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 7-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாகும். உங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய நபர் தற்போது அதிகாரியாக வருவதால் உங்களது நெருக்கடிகள் குறையும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 28.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதும், 3-ல் சூரியன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்து வந்த போட்டி, பொறாமைகள் எல்லாம் விலகுவதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பொருளாதாரரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி சிறப்பான பண வரவுகள் கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய நேரமாகும். சிலருக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பும் அதன்மூலம் அனுகூலங்களும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைக் குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் சனி சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். நெருங்கியவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஒருசிலருக்கு பிள்ளைகள் வழியில் தேவையில்லாத மனக்கவலைகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிலும் சிந்தித்துச் செயல் படுவது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளிவைப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்வார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். குறிப்பாக வேலை தொடர்பான முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய காலமாகும். இந்த வாரத்தில் சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24, 28.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 3-ல் சனி, 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகளை குறைத்துக் கொள்ளமுடியும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருமணம் தொடர்பான சுப காரியங்களைத் தற்போது மேற்கொண்டால் நல்ல ஆதரவு கிடைக்கக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வதன் மூலம் அவர்கள்மூலமாக ஒருசில பிரச்சினைகள் குறைந்து பொருளாதார அனுகூலங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் பணியில் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். புதியவாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு உங்கள் தகுதிக்கு ஏற்ற நல்லவாய்ப்புகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் கல்வியியல் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்று, வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 26.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். நீங்கள் வெகுளித் தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய அனுகூலங்கள் கிடைப்பதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது, புதிய முதலீடுகளைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டாலும் சக ஊழியர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரமாகும். குறிப்பாக பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப் பாக செயல்பட்டாலும் எதிர்பாராமல் ஏற்படும் உடல் உபாதைகளால் ஞாபக சக்தி குறையலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27, 28.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், 10-ல் புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு, பண வரவுகள் சிறப் பாக இருக்கக்கூடிய நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லாவிட்டாலும் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு எந்தவித நெருக்கடியும் சமாளிப்பீர்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய போட்டி, பொறாமைகள் விலகி வளமான பலன்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறையும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். ஒருசில நேரங்களில் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, நெருங்கியவரிடம் கோபப்படாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை தட்டி செல்வர். இந்த வாரத்தில் காலபைரவரை வழிபாடு செய்வது, மகாலட்சுமி வழிபாடு செய்வது ஏற்றங்களைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 27, 28.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் புதன், 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக் கூடிய நேரமாகும். பிள்ளைகள்வழியில் இருந்து வந்த மனக்கவலைகள் எல்லாம் தற்போது விலகி வளமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சில சிக்கல்கள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளித்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நல்ல ஒரு வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய யோகமானது இருக்கிறது. பணி நிமித்தமாக நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைத்து நீண்டநாட்களாக உங்களுக்கு இருந்துவந்த மனக் கவலைகள் குறையும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் ஓரளவுக்கு விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் வெங்கடேசப் பெருமாளைத் தரிசிப்பது, படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கிதருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24.