இந்த வார ராசிபலன் 20-4-2025 முதல் 26-4-2025 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-20-4-2025-26-4-2025

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: அஸ்வினி- 2.

செவ்வாய்: பூசம்- 1.

புதன்: உத்திரட்டாதி- 2.

குரு : மிருகசீரிடம்- 1.

சுக்கிரன்: பூரட்டாதி- 4.

சனி: பூரட்டாதி- 4.

ராகு : பூரட்டாதி- 4.

கேது: உத்திரம்- 2.

கிரக மாற்றம்: இல்லை

சந்திரன் மாறுதல்

ss

ஆரம்பம்: தனுசு

20-4-2025 மாலை 6.04 மணிக்கு மகரம்

22-4-2025 இரவு 12.31 மணிக்கு கும்பம்

25-4-2025 அதிகாலை 3.25 மணிக்கு மீனம்

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சூரியன், சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எளிதில் முடியவேண்டிய விஷயங்கள் தாமதமாகும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்களது முன்கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தடைப்படும். வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தனகாரகன் குருபகவான் 2-ல் பலமாக இருப்பதால் எந்த விதத்திலும் குறை இருக்காது. தொழில், வியாபாரத்தில் வேலைப்பளு அதிகப்படியாக இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. சில நேரங்களில் வேலையாட்கள்மூலமாக தேவை யில்லாத நெருக்கடிகள் ஏற்படலாம். பராமரிப்பு செலவு அதிகரிப்பதால் உங்களது சேமிப்புகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உங்கள் பணியை செய்வது மட்டுமில்லாமல் உடனிருப் பவர்களுடைய பணியையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டா கும். அதிகாரியிடம் வீண் வாக்கு வாதங்கள் செய்யாமல் எதிலும் நிதானத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுது போக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள காரியங்களுக்கு நேரத்தை செலவிடுவது நல்லது. உடன்பிறந்த வர்கள்மூலமாக மன அமைதி குறைவு ஏற்படும். வளமான பலன் களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23, 24.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- சனி, ராகு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். செவ்வாய் 3-ல் இருப்பதால் எந்த ஒரு காரியத்திலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உடனிருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய நேரமாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக் காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவீர் கள். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய நேரமாகும். மற்றவர்களால் முடிக்க முடியாத பணியைக்கூட நீங்கள் சிறப்பாக கையாண்டு குறித்த நேரத்தில் முடித்து நல்லபெயர் எடுக்கக்கூடிய அமைப்பானது வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறப்பாக செயல்பட்டு எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான மதிப்புகளைப் பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற வஸ்திரத்தை சாற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதுமூலம் நல்லது நடக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 26.

சந்திராஷ்டமம்: 18-4-2025 காலை 8.21 மணிமுதல் 20-4-2025 மாலை 6.04 மணிவரை.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாத

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: அஸ்வினி- 2.

செவ்வாய்: பூசம்- 1.

புதன்: உத்திரட்டாதி- 2.

குரு : மிருகசீரிடம்- 1.

சுக்கிரன்: பூரட்டாதி- 4.

சனி: பூரட்டாதி- 4.

ராகு : பூரட்டாதி- 4.

கேது: உத்திரம்- 2.

கிரக மாற்றம்: இல்லை

சந்திரன் மாறுதல்

ss

ஆரம்பம்: தனுசு

20-4-2025 மாலை 6.04 மணிக்கு மகரம்

22-4-2025 இரவு 12.31 மணிக்கு கும்பம்

25-4-2025 அதிகாலை 3.25 மணிக்கு மீனம்

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சூரியன், சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எளிதில் முடியவேண்டிய விஷயங்கள் தாமதமாகும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்களது முன்கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தடைப்படும். வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தனகாரகன் குருபகவான் 2-ல் பலமாக இருப்பதால் எந்த விதத்திலும் குறை இருக்காது. தொழில், வியாபாரத்தில் வேலைப்பளு அதிகப்படியாக இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. சில நேரங்களில் வேலையாட்கள்மூலமாக தேவை யில்லாத நெருக்கடிகள் ஏற்படலாம். பராமரிப்பு செலவு அதிகரிப்பதால் உங்களது சேமிப்புகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உங்கள் பணியை செய்வது மட்டுமில்லாமல் உடனிருப் பவர்களுடைய பணியையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டா கும். அதிகாரியிடம் வீண் வாக்கு வாதங்கள் செய்யாமல் எதிலும் நிதானத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுது போக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள காரியங்களுக்கு நேரத்தை செலவிடுவது நல்லது. உடன்பிறந்த வர்கள்மூலமாக மன அமைதி குறைவு ஏற்படும். வளமான பலன் களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23, 24.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- சனி, ராகு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். செவ்வாய் 3-ல் இருப்பதால் எந்த ஒரு காரியத்திலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உடனிருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய நேரமாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக் காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவீர் கள். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய நேரமாகும். மற்றவர்களால் முடிக்க முடியாத பணியைக்கூட நீங்கள் சிறப்பாக கையாண்டு குறித்த நேரத்தில் முடித்து நல்லபெயர் எடுக்கக்கூடிய அமைப்பானது வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறப்பாக செயல்பட்டு எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான மதிப்புகளைப் பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற வஸ்திரத்தை சாற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதுமூலம் நல்லது நடக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 26.

சந்திராஷ்டமம்: 18-4-2025 காலை 8.21 மணிமுதல் 20-4-2025 மாலை 6.04 மணிவரை.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு அதிபதியான புதன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத் தில் சூரியன் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். கடந்த காலங்களி-ருந்து வந்த நெருக்கடிகள் தற்போது குறையும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். எதிலும் உற்சாகத்தோடு செயல் பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைப்பதால் போட்ட முதலை எடுக்கமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத் தோடு இருப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தற்போதைக்கு தவிர்ப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் உங்கள் திறமை களை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 25, 26.

சந்திராஷ்டமம்: 20-4-2025 மாலை 6.04 மணிமுதல் 22-4-2025 இரவு 12.31 மணிவரை.

ss

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன், சுக்கிரன், 10-ல் சூரியன் சஞ்சரிப்ப தால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தனக்காரகன் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து உங்களது தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக் கூடிய ஒரு பலம் உண்டாகும். பெண்கள்மூலமாக எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்ட முடியும். அரசாங்க வழி ஆதரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலைக் குச் செல்பவர்களுக்கு கடந்த காலங் களில் இருந்து வந்த பிரச்சினைகள் தற்போது குறைவது மட்டுமில் லாமல் நீங்கள் எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கக்கூடிய நேரம் ஆகும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் உயர் படிப்புக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, வெங்கடேசப் பெருமாளை தரிசிப்பதன்மூலம் நன்மை கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22.

சந்திராஷ்டமம்: 22-4-2025 இரவு 12.31 மணிமுதல் 25-4-2025 அதிகாலை 3.25 மணி வரை.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சனி, ராகு, புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படவேண்டும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நெருங்கியவர்களால் நிம்மதிக்குறைவு ஏற்படலாம். உடல் ஆரோக்கிய குறைபாடுகள் காரணமாக தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மிக மிக நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய வேலையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். ஒருசிலர் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23, 24.

சந்திராஷ்டமம்: 25-4-2025 அதிகாலை 3.25 மணிமுதல் 27-4-2025 அதிகாலை 3.39 மணிவரை.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 7-ல் சஞ்சரிப்பதும், 9-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நல்ல லாபத்தை அடையமுடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் உங்களுக்கு இருக்கக்கூடிய வேலைப்பளு சற்று குறையும். வெளியூர் மூலமாக தொழில் வளர்ச்சிக்கான ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப் பாக செயல்படுவது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணியைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப் பாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லமுடியும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, காலபைரவரை வழிபாடு செய்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 26.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக, ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 6-ஆம் வீட்டில் சனி, ராகு சஞ்சரிப்பதாலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைந்து மன நிம்மதி ஏற்படும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குருபகவான் 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். சக ஊழியர்களுடைய ஆதரவு சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் உங்களின் நீண்டநாளைய விருப்பங்கள் எல்லாம் தற்போது நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 20, 25, 26.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் உங்களது எண்ணங்கள் எல்லாம் நிறைவேறக்கூடிய அமைப்பானது வரும் நாட்களில் உண்டு. குருபகவான் ஜென்ம ராசியை பார்ப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் மறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் தற்போது குறைந்து மன நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவது மட்டுமில்லாமல் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத்தரும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த வேலைப்பளு எல்லாம் தற்போது குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். ஒரு சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பான மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 21, 22.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி குருபகவான் 6-ல் சஞ்சரிப்பதாலும், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று நிதானத்தோடு இருக்கவேண்டும். சுக ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நெருங்கியவர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைபடக்கூடிய ஒரு நேரமாகும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது, சில விஷயங்களில் அவர்களை நம்பாமல் நீங்கள் நேரடியாக செயல்படுவதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு மற்றவர்கள் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு பெற்றோர், ஆசிரியரின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 20, 23, 24.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியாதிபதி சனி- ராகு சேர்க்கைப்பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். குரு 5-ல் அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்ப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சுய கௌரவம் பார்க்காமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் மிகச்சிறப்பாக இருந்து நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில்ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது விலகி மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட சரியான சந்தர்ப்பங்கள் அமையும். அதிகாரியிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது விலகி மன நிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு எதிர்பார்த்ததை விட அதிகப்படியான மதிப்புகளைப் பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்று.

வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 25, 26.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் புதன், சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறையும். சனி, ராகு 2-ல் இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒருசில அனுகூலமான பலன்கள் ஏற்பட்டு உங்களின் கடந்தகால பிரச்சினைகள் குறையும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் போட்ட முதலை எடுக்க முடியும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்களை அடையக்கூடிய நேரமாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற பழக்கவழக்கங்களை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல நிலையினை அடைய முடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற வெங்கடேசப் பெருமாளை தரிசிப்பது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்:20, 23, 24.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சனி, ராகு, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்களது முன்கோபத்தால் தேவையற்ற நிம்மதிக் குறைவுகள் ஏற்படும். உடனிருப்பவர்களால் உங்களுக்கு மன கவலைகள் ஏற்படலாம். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் உங்களது சேமிப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் உங்களது மன அமைதி குறையக்கூடிய நேரமாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க் கொள்ளும்படி இருக்காது. முடிந்தவரை சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் கவனத்தோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் கவனத்தோடு இருந்தால் தான் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22, 25, 26.

bala250425
இதையும் படியுங்கள்
Subscribe