முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சதயம்- 1.
செவ்வாய்: பூராடம்- 4.
புதன் : திருவோணம்- 1.
குரு: சதயம்- 4.
சுக்கிரன் : பூராடம்- 4.
சனி: அவிட்டம்- 1.
ராகு: கிருத்திகை- 2.
கேது: விசாகம்- 4.
கிரக மாற்றம்:
மாசி 14 (26-2-2022)
மகரச் செவ்வாய் (பகல் 3.49).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கன்னி.
21-2-2022 அதிகாலை 4.31 மணிக்கு துலாம்.
23-2-2022 காலை 8.56 மணிக்கு விருச்சிகம்.
25-2-2022 பகல் 12.07 மணிக்கு தனுசு.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், குரு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச் சிறப்பாக இருந்து சகலவிதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். ராசியாதிபதி செவ்வாய், சுக்கிரனுடன் 9-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர் களின் ஆதரவு சிறப்பாக இருந்து எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். ராகு 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது பிரச்சினைகளைக் குறைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஆதாயங்களை அடைவீர்கள். பூர்வீக சொத்துவழியில் இருந்த நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டா கும். பிள்ளைகள்மூலம் மகிழ்ச்சித் தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மிகவும் அனுகூல மான பலன்களை அடைவீர்கள். தொழில் ரீதியாக எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். வங்கிமூலம் பொருளாதார உதவிகள் கிடைத்து தொழிலை விரிவுபடுத்த முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகரீதியாக அதிகாரிகள் உங்களுக்கு உதவியாக இருப்ப தால் கடினமான பணியைக்கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் உழைப்பிற்கான ஊதியத் தைப் பெறமுடியும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெள்ளிக்கிழமை அஷ்டலட்சுமி வழிபாட்டையும், சங்கடஹர சதுர்த்தி யன்று விநாயகருக்கு அறுகம்புல் மாலைசாற்றி வழிபடுவதும் நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் ராகு, ராசியாதிபதி சுக்கிரன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்ப தால் நீங்கள் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே இருக்கக்கூடிய நெருக்கடி களை சமாளிக்கமுடியும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. புதன், சனி சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் பொருளா தாரத் தேவைகள் பூர்த்தியாகும். அசையா சொத்துவகையில் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்கள் கஷ்டங்கள் குறையும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்ப தால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து மனநிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் திறமை யாக செயல்படுவீர்கள். தற்போதைக்கு சிறு வாய்ப்பு களையும் தவற விடாமல் முனைப்புடன் செயல்பட் டால் விரைவில் வளமான பலன்களை அடைவீர்கள். கூட்டாளிகளிடம் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் கௌரவ மான பதவிகள் கிடைக்கும். உங்கள் வேலை யில் மட்டும் கவனம் செலுத்து வது நல்லது. சஷ்டியன்று விரதமிருந்து முருக வழி பாட்டை மேற்கொண்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சிறப்பாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதக் கோளான சூரியன், குரு சேர்க்கைப்பெற்று 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக சிறப்பான நிலை யினை அடைவீர்கள். எந்த செயலில் ஈடுபட்டா லும் அதில் ஆதாயத்தை அடையும் யோகமுண்டு. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும். ராசியாதிபதி புதன், சனி சேர்க்கைப்பெற்று 8-ல் சஞ்சரிப்ப தால் ஆரோக் கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. செவ்வாய் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் மிகவும் சாதகமான பலன்களை அன்றாடச் செயல்களில் அடைய முடியும். வேலையாட்க ளால் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டாலும் எதிலும் தைரியத்துடன் செயல் பட்டு நிலைமையை சமாளிப் பீர்கள். கேது 6-ல் இருப்ப தால் மறைமுகப் போட்டி களை எதிர்கொண்டு நல்ல முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலம் அனு கூலங்கள் கிடைக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் சென்றால் கடினமான பணியைக்கூட எளிதில் செய்துமுடிக்க முடியும். வேலைப்பளு காரணமாக தேவையற்ற பயணங்கள் ஏற்படும். சஷ்டியன்று முருக வழிபாட்டை யும், புதன் கிழமை விஷ்ணு வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் கேந்திர, திரிகோணாதிபதியான சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். புதன் 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கிய வர்களின் உதவியால் பொருளாதார அனுகூலங்களை அடைவீர் கள். மாதக் கோளான சூரியன், குரு சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவு களைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக இருக்கவும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எடுக்கும் முயற்சியில் எளிதில் வெற்றிபெறும் வாய்ப்புண்டு. தொழிலில் கூட்டாளிகளை கலந்தா லோசித்து செயல்பட்டால், நெருக்கடிகளை சமாளித்து லாபத்தை அடையமுடியும். சிறு வாய்ப்பைக்கூட தவற விடாமல் சற்று பொறுப்புடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். தொழில் விஷயங் களை முடிந்தவரை வெளி நபர்களிடம் பேசாமல் இருக்க வும். வேலைக்குச் செல்பவர் களுக்கு வேலையில் சாதக மான நிலை இருந்தாலும் உடன் வேலை செய்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சிவனுக்கு வில்வ இலைகளாலும், சனி பகவானுக்கு நீலநிற சங்கு மலர்களாலும் அர்ச்சனை செய்து வழிபட்டால் மனக் கவலைகள் நீங்கும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன், குரு சேர்க்கைப்பெற்று 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் அரங் கேறும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகமுண்டு. சற்று பொறுமையுடன் செயல்பட்டால் கௌரவமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். தர்மகர்மாதிபதியான செவ்வாய், சுக்கிரன் 5-ல் இணைந்து சஞ்சரிப்ப தால் பொருளாதாரரீதியாக ஆதாயங்கள் அடைந்து, உங்களின் கடன்கள் குறையும் அமைப்பும், நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துவழியில் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் வரும் நாட்களில் முடிவுக்கு வந்து நிம்மதி யடைய முடியும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் நன்மை தரும் நேரமாக இருக்கும். பெரியோர்களின் ஆதரவு இருப்பதால் நீண்ட நாட்களாக நீங்கள் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். சொந்தத் தொழிலில் துணிவுடன் அதிக முதலீடுகள் செய்து லாபங்களைக் காண முடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்ப தால் நீண்ட நாட்களாக முடிக்காமல் இருந்த வேலைகளைக்கூட வருகின்ற நாட்களில் விரைந்து முடித்து தொழிலில் நல்ல முன்னேற் றத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் உயர்வான பதவியை அடையும் வாய்ப் புண்டாகும். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப் பவர்களுக்கு வரும் நாட்களில் உயர்வான இடத்திலிருந்து அழைப்பு வரும். உங்களுக்கு வரவேண்டிய ஊதிய நிலுவைத் தொகைகள் தற்போது கிடைத்து நீண்டநாள் கடன்களை எளிதில் பைசல் செய்ய முடியும். சிவ வழிபாடும், துர்க்கையம்மன் வழிபாடும் சிறப்பான பலன்களை அளிக்கும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
மாதக் கோளான சூரியன் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் வரும் நாட்களில் நடக்கும். ராசியாதிபதி புதன், சனி சேர்க்கைப்பெற்று 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுக்குப் பஞ்சமிருக்காது. கடந்தகால கடன்களை பைசல் செய்யமுடியும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல முன்னேற்றங் களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 2, 9-க்கு அதிபதியான சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டு. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். தேவையற்ற பயணங்களும் அதன்மூலம் வீண் அலைச்சல்களும் ஏற்படும். சிலருக்கு வண்டி வாகனங்கள் பராமரிப்பிற்காக செலவுசெய்ய நேரிடும். ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்களின் செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். கேது 3-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத் தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி கடந்த கால பொருட்தேக்கங்களை பைசல் செய்து லாபங்களைப் பெறுவீர்கள். வேலையாட்கள் ஆதரவாக இருப்பதால் கடினமான காரியத்தைக் கூட எளிதில் செய்துமுடிக்க முடியும். குரு 6-ல் சஞ்சரிப்பதால் அதிக முதலீடு கொண்ட செயல்களில் ஈடுபடும்போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வேலைக்குச் செல்பவர் களுக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு வெளியூர்மூலமாக சுபச்செய்தி கிடைக்கும். வேலை நிமித்தமாக தூரப்பயணம் மேற்கொள்வீர்கள். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலைசாற்றி நெய் தீபமேற்றி வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், செவ்வாயுடன் 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சூரியன், குரு சேர்க்கைப்பெற்று வரும் நாட்களில் 5-ல் சஞ்சரிப்பதால் அலைச் சல்கள் குறைந்து எதிலும் மனநிம்மதியுடன் செயல்படமுடியும். பணவரவுகள் அனுகூலமாக இருப்பதால் மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு சனி 4-லும், ராகு 8-லும் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத் துவம் தருவதும் நல்லது. பயணங்கள் மேற் கொள்கின்றபோது நிதானத்துடன் செல்வது உத்தமம். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் அதிகப்படி.யான அனுகூலங்களை அடைவீர் கள். பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த உங்களுக்கு வரும் நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து தொழிலில் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்கள் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தத்தான் செய்வார்கள். நீங்கள் எதிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் ஆதாயத்தை அடையமுடியும். அரசு அதிகாரிகளால் இருந்த தொந்தரவுகள் தற்போது விலகி தொழிலில் நிம்மதியுடன் செயல்படமுடியும். உத்தியோகத் தில் சிறப்பாக செயல்பட்டு கடினமான வேலையை எளிதில் முடிப்பீர்கள். மற்றவர்கள் பார்த்து வியக்குமளவிற்கு உங்கள் செயல்பாடுகள் இருக்கும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருந்து அனைத் துத் தேவைகளும் பூர்த்தியாகும். செவ்வாய் 2-ல், ராகு 7-ல் இருப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது, உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சின்னச்சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் அவையனைத் தும் விலகி ஒற்றுமையான நிலை ஏற்படும். ஆன்மிகத் தலங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்பு வரும் நாட்களில் உண்டாகும். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்- அதனால் உடல்சோர்வு ஏற்படும் என்றாலும், குரு பார்வை 8-ஆம் வீட்டிற்கு இருப்பதால் நீங்கள் எதையும் எதிர்கொண்டு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு வெற்றி கிடைக்கும். செய்யும் தொழிலில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி லாபம் காண்பீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த பெரிய ஆர்டர்கள் கிடைத்து ஆதாயம் அடையும் யோகமுண்டு. எதிலும் துணிந்து செயல்பட்டு சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். திறமை வாய்ந்த வேலையாட்கள் தொழிலுக்குக் கிடைப்பார்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றி நல்ல பெயரெடுக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் வேலையைச் செய்யமுடியும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமலிருப்பது நல்லது. செவ்வாய்க்கிழமை துர்க்கையம்மன் வழிபாடு செய்வதாலும், முருக வழிபாடு செய்வதாலும் சிறப்பான பலன்களை அடையலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ஏழரைச்சனி நடப்பதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வகையில் இன்னல்களை சந்தித்துவரும் உங்களுக்கு வரும் வாரம் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களும் தாராள தனவரவும் ஏற்படும். ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன் சஞ்சரிப்பதால் கடந்தகால நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் விலகி ஒற்றுமை மேலோங்கும். உறவினர்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெற்று பல்வேறு ஏற்றங்களை வரும் நாட்களில் அடையமுடியும். செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு பொறுமையுடன் செயல்பட்டால், பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கமுடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால் மேற்கூறிய நாட்களில் நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் அதில் வெற்றி காணமுடியும். தொழில், வியாபாரத்திலிருந்த கடந்த கால தேக்கங்கள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து ஓரளவுக்கு ஆதாயங்கள் கிடைக்கும். இருக்கும் வாய்ப்புகளைத் தற்போது சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் போட்ட முதலீட்டை எடுத்துவிட முடியும். வேலையாட்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் எதிர்பார்க்கும் பொருளாதார உதவிகள் கிடைத்து கடந்தகால நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து மனநிம்மதியுடன் பணிபுரிய முடியும். சஷ்டி நாளன்று விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குரு பகவான் 2-ல் சஞ்சரிப்பதால் தேவைக்கேற்றவாறு பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும், செவ்வாய், சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கடந்தகால மறைமுக எதிர்ப்புகள் விலகி மனநிம்மதி ஏற்படும். உடல்நிலை எப்படியிருந்தாலும் எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். பிள்ளைகள்வழியில் தேவையற்ற மனக் கவலை ஏற்படும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சிறப்பாக சஞ்சரிப்பதால் மேற்கூறிப்பிட்ட நாட்களில் உங்கள் செயல்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து போட்ட முதலீட்டை எடுக்கமுடியும் என்றாலும், நெருங்கியவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சிலருக்கு கூட்டாளிகள்மூலம் உதவிகள் கிடைத்து ஓரளவுக்கு அனுகூலங்களை அடையமுடியும். உத்தியோகரீதியாக வேலைப்பளு கடுமையாக இருக்கும் நிலையும், மற்றவர்கள் பணியை நீங்கள் செய்யும் சூழ்நிலையும் உண்டாகும் என்றாலும், அதற்கான பொருளாதார அனுகூலங்களை அடைவீர்கள். பணப் புழக்கம் சற்று சிறப்பாக இருப்பதால் உங்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் நீண்டநாள் கடன்கள் குறையும். அஷ்டமியன்று பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால் நற்பலன்களை அடையலாம்..
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமை யாக செயல்படுவது நல்லது. அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குரு பார்வை 5, 7, 9-ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் பொருளாதாரரீதியாக சிறிது ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் உடனிருப்பவர்களின் உதவியால் எதையும் சமாளிக்கமுடியும். உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சுக்கிரன், செவ்வாய் இணைந்து 11-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் எல்லாம் குறைந்து நல்ல வளர்ச்சியினை அடையமுடியும். எதிர்பாராத வகையில் சில அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு உங்களின் மனக்கவலைகள் வரும் நாட்களில் குறையும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வதும் அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்ப்பதும் நல்லது. ஞாயிற்றுக்கிழமை மனக் குழப்பங்கள் அதிகப்படியாக இருக்கும். புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் நீங்கள் வளமான பலன்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் போட்ட முதலீட்டை எடுக்க இடையூறுகள் ஏற்படும். அரசுவழி அதிகாரிகள்மூலமாக ஏற்படும் நெருக்கடிகளால் மன அமைதி குறையும். இருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் தற்போது பயன்படுத்திக் கொள்வதன்மூலம் விரைவில் உங்கள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய நபர்களை எளிதில் நம்பாமல் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகளின் நெருக்கடி சற்று அதிகப்படியாக இருக்கும். தற்போது சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சனேயரையும் வழிபட்டு வந்தால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்..
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். சனி, புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து சகலவிதத்திலும் ஏற்றம்மிகுந்த பலன்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை, பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் ஆதாயம் அடையும் யோகமுண்டு. உங்களின் எண்ணங்கள் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்பும், அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களையும் அடையமுடியும். ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி வந்தடையும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் நிதானத் துடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்களை அடையும் யோகம் வரும் நாட்களில் உண்டு. வேலையாட்கள் ஆதரவாக இருப்பதால் உங்களுக்கிருந்த கடந்தகால சோதனைகள் எல்லாம் மறைந்து மனநிம்மதி ஏற்படும். அரசுவழியில் எதிர்பார்த்த மானிய உதவிகள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கிடைக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகளை வரும் நாட்களில் அடையமுடியும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் விஷ்ணு வழிபாடு செய்வதாலும், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுவதாலும் நன்மைகள் பல உண்டாகும்.