சூரியன்: சதயம்- 4.

செவ்வாய்: புனர்பூசம்- 1.

புதன்: உத்திரட்டாதி- 1.

குரு: ரோகிணி- 3.

சுக்கிரன்: உத்திரட்டாதி- 4 (வ)

. சனி: பூரட்டாதி- 2.

ராகு: உத்திரட்டாதி- 1.

கேது: உத்திரம்- 3.

ஆரம்பம்: மீனம்.

3-3-2025 காலை 6.39 மணிக்கு மேஷம்.

5-3-2025 காலை 8.12 மணிக்கு ரிஷபம்.

7-3-2025 பகல் 11.45 மணிக்கு மிதுனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் சூரியன், சனி சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். கொடுக்கல்- வாங்க-ல் லாபகரமான பலன்கள் உண்டாகும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நெருங்கிய உறவினரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து ஒற்றுமையான நிலை ஏற்படும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் மேற்படிப்புக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு ஆதரவான ஒரு நற்செய்தி கிடைக்கும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 7, 8.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன், புதன், ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப் பாக இருக்கும். பூர்வீக சொத்து வகையில் இருந்த பிரச்சினைக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல முடிவு கிடைத்து உங்களுக்கு சாதகமான செய்தி கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலங்கள் ஏற்படும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் உங்களுக்கு இருந்த பொருளாதார ரீதியான நெருக்கடிகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெண்கள்மூலமாக ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் மனநிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை சற்று அனுசரித்துசெல்வதன்மூலமாக வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை பெறக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் பேசுகின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெறுவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணா மூர்த்திக்கு வியாழக்கிழமை நெய் தீபம் ஏற்றுவது அனுகூலத்தைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 2, 5, 6.

aad

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் குரு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல்ரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் பண விஷயத்தில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியானமுறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது உத்தமம். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது வேலைப்பளு இருக்கக்கூடிய நேரமென்பதால் நீங்கள் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது பழிச் சொற்களை சொல்லலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வதன் மூலமாக வளமான பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4, 7, 8.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், புதன், லாப ஸ்தானமான 11-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் இருந்துவந்த மனகவலைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நெருங்கியவர் களின் ஆதரவு மிகச்சிறப் பாக இருக்கும். தொழில், வியாபாரத் தில் சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப் பாடோடு இருப்பது நல்லது. உத்தியோக ரீதியாக பார்க்கின்றபொழுது உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு பணிநிமித்தமாக விரும்பிய மாற்றங்களை அடையக் கூடிய அமைப்பானது இருக்கிறது. மாணவ- மாணவியர் கள் எதிலும் சற்று முன்னெச்சரிக்கையோடு இருப்பது, படிப்பில் கவனத்தோடு இருப்பதன்மூலமாக நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். வரும் நாட்களில் காலபைரவர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதுமூலமாக வளமான பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 5, 6.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன்- மனைவி யிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரன், 10-ல் குரு சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத் துக்கொண்டு எதிலும் சிக்கனத் தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத் தில் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு ஏற்படலாம் என்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப் படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களால் வீண்செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப் பாடோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் பேச்சைக் கேட்காமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7, 8.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன், சனி சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக தடை பட்டுவந்த சுபகாரியங்கள் தற்போது கைகூடி மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்ப ஒற்றுமை மிகச் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் உறவினர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். கடந்தகால ஆரோக்கிய குறைபாடுகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டு மில்லாமல் அதிகாரியுடைய ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். இருக்கும் இடத்தில் கௌரவ பதவிகள் உங்களைத் தேடிவரும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு எதிர் பார்த்ததைவிட அதிகப்படியான மதிப் பெண்களைப் பெறுவது மட்டுமில்லாமல் போட்டி தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக வளமான பலன்களைப் பெறமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 2, 7, 8.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் புதன், சுக்கிரன், 8-ல் குரு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத் திலும் சிந்தித்துச் செயல்படவேண்டும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உடனிருப்பவர்களால் மன அமைதி குறைவு ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் வீண்வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் எடுத்துக்கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதும், சில விஷயங்களில் கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செயல்படுவதன்மூலம் வீண் நெருக்கடிகளைத் தவிர்க்கமுடியும். உடன் பிறந்த வர்கள்மூலமாக தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும். அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் படிப்பில் கவனத் தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன், 7-ல் குரு சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மனைவி, பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி தரக்கூடிய யோகம் ஏற்படும். பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய நேரமாகும். தொழில் வியாபாரத்தில் கடந்த காலமறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைவதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய அளவிற்கு அனுகூலமான சூழ்நிலை நிலவும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும் என்பதால் ஒருசில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் தான் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விரும்பிய இட மாற்றத்தை பெறுவது மட்டுமில்லாமல் உழைப்புக்கான ஊதியத்தை அடையக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் சிறப்பாக செயல்படக்கூடிய நேர மென்றாலும் ஒருசிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய சூழல் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 5, 6.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, சூரியன், சுக ஸ்தானமான 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய பலமும் வ-மையும் அதிகரிப்பது மட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாக அனுகூலப் பலன்களை அடைவீர்கள். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த சட்டரீதியான சிக்கலுக்கு எல்லாம் தற்போது ஒருமுடிவு கிடைத்து நற்பலன்களைப் பெறுவீர்கள். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து மனநிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் போட்டி தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் நன்மை கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7, 8.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, 5-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நல்லவாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் ஏற்படும். கடந்தகால வம்பு, வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றிக்கொள்வது மட்டுமில்லாமல் கடன்களை குறைத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு வளர்ச்சியினை பெறுவீர்கள். நவீன கருவிகளை வாங்கக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கடந்தகாலங்களில் நீங்கள் எதிர்கொண்ட வீண் பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகி சுமூகநிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் எதிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களைப் பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 2, 7, 8.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சனி, சூரியன், 4-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரமாகும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். பணவரவில் தேவையற்ற முடக்கங்கள் இருப்பதால் உங்களது கையிருப்பு குறையும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியாது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் வெகுளித்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்தோடு இருப்பது, முடிந்தவரை முக்கிய விஷயங் களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்கள் பணியில் நீங்கள் ஈடுபாட்டோடு செயல்பட தேவையற்ற தடங்கல்கள் ஏற்படும். மாணவ- மாணவியர் கள் உடனிருப்பவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்ககூடிய நேரமென்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, வேங்கடேசப் பெருமாளைத் தரிசிப்பதன்மூலமாக அனுகூலங்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 3, 4.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 12-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இருக்காது. சட்டரீதியாக சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் சிறப்பாக செயல் பட்டாலும் ஒருசிலர் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத் திலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. முடிந்தவரை தூரப் பயணங் களைத் தற்போதைக்கு தவிர்ப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் மிகவும் கவனத்தோடும் நிதானத் தோடும் செயல்பட வேண்டிய நேரமாகும். ஒருசிலருக்கு பெற்றோர்களிடம் வீண் வாக்குவாதம் உண்டாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெற அஷ்ட லட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சரபேஸ்வரருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 2, 5, 6.