முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மிருகசீரிடம்- 4.
செவ்வாய்: ரேவதி- 3.
புதன்: ரோகிணி- 1.
குரு: உத்திரட்டாதி- 3.
சுக்கிரன்: கிருத்திகை- 2.
சனி: அவிட்டம்- 3.
ராகு: பரணி- 4.
கேது: விசாகம்- 2.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கும்பம்.
20-6-2022 இரவு 10.35 மணிக்கு மீனம்.
23-6-2022 காலை 6.15 மணிக்கு மேஷம்.
25-6-2022 மாலை 5.02 மணிக்கு ரிஷபம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு பல்வேறு வெற்றிகளைப் பெறும் யோகமுண்டு. ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்பட்டால் ஏற்றங்களை அடையமுடியும். வெளியூர்த் தொடர்புகள் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். குரு, செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். காலநேரம் பார்க்காமல் தொழிலில் கவனத்தோடு செயல்பட்டால் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு நல்லபெயர் எடுப்பீர்கள். உங்கள் உழைப்புக்கான சன்மானம் தற்போது கிடைக்காவிட்டாலும் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதற்கான ஆதாயத்தை அடைவீர்கள். செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடுவது, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றுவதால் சங்கடங்கள் குறையும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு, செவ்வாய் இணைந்து சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பென்பதால், அசையா சொத்துவகையில் அணுகூலங்கள், ஒரு சிலருக்கு பூமி, மனை வாங்கும் யோகம் ஏற்படும். பணவரவுகள் மிகமிக நன்றாக இருப்பதால் கடந்த காலங்களில் வாங்கிய கடன்களை பைசல் செய்யமுடியும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் கைகூடும். மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றும் பலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய உத்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை அடைவீர்கள். மற்றவர்கள் பார்த்து வியக்குமளவுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நீண்டநாட்களாக நிலுவையிலிருந்த தொழில்ரீதியான வழக்குகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்து நிம்மதி யடைவீர்கள். திறமைவாய்ந்த வேலை யாட்கள் உங்கள் தொழிலில் இணை வார் கள். உத்தியோ கத்தில் இருப்ப வர்களுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். இடமாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு உங்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு சாதகமான இடத்தில் வாய்ப்புகள் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்கள் செய்த இடையூறுகள் தற்போது விலகி நிம்மதியுடன் பணியாற்றுவீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் புதிய வாய்ப்புகள், எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கும். சூரிய நமஸ்காரம், உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரி
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மிருகசீரிடம்- 4.
செவ்வாய்: ரேவதி- 3.
புதன்: ரோகிணி- 1.
குரு: உத்திரட்டாதி- 3.
சுக்கிரன்: கிருத்திகை- 2.
சனி: அவிட்டம்- 3.
ராகு: பரணி- 4.
கேது: விசாகம்- 2.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கும்பம்.
20-6-2022 இரவு 10.35 மணிக்கு மீனம்.
23-6-2022 காலை 6.15 மணிக்கு மேஷம்.
25-6-2022 மாலை 5.02 மணிக்கு ரிஷபம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு பல்வேறு வெற்றிகளைப் பெறும் யோகமுண்டு. ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்பட்டால் ஏற்றங்களை அடையமுடியும். வெளியூர்த் தொடர்புகள் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். குரு, செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். காலநேரம் பார்க்காமல் தொழிலில் கவனத்தோடு செயல்பட்டால் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு நல்லபெயர் எடுப்பீர்கள். உங்கள் உழைப்புக்கான சன்மானம் தற்போது கிடைக்காவிட்டாலும் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதற்கான ஆதாயத்தை அடைவீர்கள். செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடுவது, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றுவதால் சங்கடங்கள் குறையும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு, செவ்வாய் இணைந்து சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பென்பதால், அசையா சொத்துவகையில் அணுகூலங்கள், ஒரு சிலருக்கு பூமி, மனை வாங்கும் யோகம் ஏற்படும். பணவரவுகள் மிகமிக நன்றாக இருப்பதால் கடந்த காலங்களில் வாங்கிய கடன்களை பைசல் செய்யமுடியும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் கைகூடும். மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றும் பலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய உத்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை அடைவீர்கள். மற்றவர்கள் பார்த்து வியக்குமளவுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நீண்டநாட்களாக நிலுவையிலிருந்த தொழில்ரீதியான வழக்குகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்து நிம்மதி யடைவீர்கள். திறமைவாய்ந்த வேலை யாட்கள் உங்கள் தொழிலில் இணை வார் கள். உத்தியோ கத்தில் இருப்ப வர்களுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். இடமாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு உங்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு சாதகமான இடத்தில் வாய்ப்புகள் கிடைக்கும். உடன் வேலை செய்பவர்கள் செய்த இடையூறுகள் தற்போது விலகி நிம்மதியுடன் பணியாற்றுவீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் புதிய வாய்ப்புகள், எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கும். சூரிய நமஸ்காரம், உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல் படுவது நல்லது. குரு பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், ராசியாதி பதி புதன், சுக்கிரனுடன் 12-ல் சஞ்சரிப்பதாலும் வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும். உங்கள் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. நம்பிக்கைக்குரிய நபர்களே தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சூழ்நிலைக்கேற்றவாறு சிக்கனமாக இருப்பது நல்லது. சிலருக்கு திடீரென்று ஏற்படும் மருத்துவச் செலவுகளால் நிம்மதி குறையும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் நிலவினா லும் ராகு லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலமுண்டாகும். வேலையாட்கள்மூலம் நெருக்கடிகள் ஏற்படும். தொழில் போட்டி காரணமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கைநழுவிப்போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமல்லாமல் அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். மேலதிகாரி களின் சொற்களைக் கேட்டு நடந்து கொண்டால் எந்தவித நெருக்கடிகளையும் சமாளித்துவிடலாம். இவ்வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். மகாலட்சுமியை வழிபடுவது, குருவுக்கு வியாழக்கிழமையன்று மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
லாப ஸ்தானமான 11-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு சிறப்பான ஆதரவுகள் கிடைக்கும். ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான குரு, செவ்வாய் 9-ல் சஞ்சரிப்பதால் சிறப் பான தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டு, உங்களது பெயர், புகழ், மரியாதை மேலோங்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்களுக்கிருந்த சிறுசிறு உடல் பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்தகால வீண் செலவுகள் குறைந்து சேமிக்குமளவுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். மணவயதை அடைந்த மங்கையர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையும் யோகமுண்டு. உங்களிடம் வேலைசெய்யும் ஆட்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களாக செயல்படுவதால் வெளியாட்களால் ஏற்படும் இடஞ்சல்களை எளிதில் எதிர்கொள்ளமுடியும். ஏற்றுமதி- இறக்குமதிமூலம் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எடுத்த பணியைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பது மட்டுமல்லாமல் தகுந்த சன்மானத்தையும் பெறும் வாய்ப்புண்டு. மேலதிகாரியிடம் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் வெற்றிபெறும் வாய்ப்புண்டு. இவ்வாரத்தில் வேங்கடாசலபதி வழிபாடு, சிவத் தலங்களுக்குச் சென்று வருவது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசிநாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு அனுகூலங்களை அடையும் யோகமுண்டு. ராசிக்கு 10-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்களின் கடந்தகால சோதனைகள் எல்லாம் பகலவனைக் கண்ட பனிபோல மறையும். ராசிக்கு 8-ல் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் வாகனங் களில் செல்லும்பொழுது நிதானத்தைக் கடைபிடிக்கவும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலையிருந்தாலும் அதனை எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். தொழில்ரீதியாக உங்களுக்குள்ள தேக்கநிலை விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். கூட்டாளி களைக் கலந்தாலோசித்து செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். அனுபவமுள்ள பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் உங்கள் தொழிலிலுள்ள தீர்க்கமுடியாத பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்குமென்றா லும், நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைக்காது. அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருப்பதால் கடந்தகால நெருக்கடிகள் சற்று குறையும். என்றாலும் உங்கள் பணியில் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகியவை உங்கள் வளர்ச்சிக்கான நாட்களாக இருக்கும். சனிபகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன், சுக்கிரனுடன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் அற்புதமான தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. எனவே பொருளாதாரரீதியாக மிகவும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். 7-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் ஏற்படும். நீண்டநாட்களாக உங்களுக்குள்ள வம்பு, வழக்குகள் தற்போது முடிவுக்கு வந்து நிம்மதியடைவீர்கள். சூரியன் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். ஆரோக்கியரீதியாக இருந்த அஜீரணக் கோளாறுகள் விலகி எதிலும் தெம்புடன் செயல்படும் முடியும். தொழில்ரீதியாக படிப்படியான வளர்ச்சியைப்பெற்று கௌரவ நிலையை எட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். நண்பர்களின் உதவியால் ஒரு சிறப்பான ஆதாயத்தை அடைவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு நன்றாக இருப்பதால், கடினமான பணியைக்கூட சிறப்பாக செய்துமுடிக்க முடியும். உங்கள்மீதிருந்த வீண் பழிச்சொற்கள் விலகி நல்ல பெயர் எடுக்கும் யோகமுண்டு. நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கும்கூட தற்போது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற் றம் ஏற்படும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும். அஷ்டலட்சுமி வழிபாடு, புற்றுக்குப் பால் வார்ப்பது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், புதனுடன் 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். குரு பகவானும் 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் கடுமையான நெருக்கடி, சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் வீட்டில் உள்ளவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்க சிரமப்பட நேரிடு0ம். சில இடைத்தரகர்களின் செயல்களால் நியாயப்படி கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கிடைக்காமல் தட்டிப் போகும். வேலையாட்கள் ஆறுதலாக செயல்படுவதால் தற்போதுள்ள நிலையினைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இருக்கும் சிறு வாய்ப்பையும் தவற விடாமல் தக்கவைத்துக்கொள்வதும், பிறர் சொல்வதைக்கேட்டு வீண் சிக்கலில் சிக்கிக்கொள்ளாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பதும் நல்லது. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றவாறு இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். மகாவிஷ்ணுவை வழிபடுவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம்பழத்தில் விளக் கேற்றுவது நன்று.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஏற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டாகும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் கடந்தகால வம்பு, வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் முழுமையாக மறையும். நீண்டநாள் கனவுகளெல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் முயற்சிகள் தற்போது கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் முடிந்தவரை வயதில் மூத்தவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பது மட்டுமல்லாமல் உங்களின் சிறப்பான செயல்பாட்டால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். பகைமை பாராட்டியவர்கள்கூட தற்போது உங்களின் பண்பைப் புரிந்துகொண்டு நட்போடு பழகுவார்கள். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் தைரியத்துடன் செயல்பட்டு அனுகூலங்களைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாட்களாக வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து நிம்மதி ஏற்படும். வெளியூர், வெளிநாடுமூலம் நல்ல செய்தி கிடைக்கும். இவ்வாரத்தில் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குரு, செவ்வாயுடன் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும். நீங்கள் எந்த செயலைச் செய்தாலும் அதில் மற்றவர்கள் குறை கண்டுபிடிப்பார்கள். சூரியன் தற்போது 7-ல் சஞ்சரிப்பதால் ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட வீட்டில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியாது. குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பேசாமலிருப்பது நல்லது. உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். நீண்டநாள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்கள் சற்று ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்க உடனிருப்பவர் களே இடையூறாக இருப்பார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தக்கவாறு தற்போதைக்கு அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தவிர்ப்பது நல்லது. அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். முடிந்தவரை வேலையாட்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்காமல் உங்கள் பணியில் மட்டும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. காலநேரம் பார்க்காமல் தற்போதைக்கு கவனத்துடன் நடந்துகொண்டால் விரைவில் ஒரு உயர்வான நிலையை எட்டமுடியும். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராதவகையில் பொருளாதார அனுகூலங்கள் ஏற்பட்டு உங்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். முருக வழிபாடு, லட்சுமி நரசிம்மர் தரிசனம் நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் பல இன்னல்களை எதிர்கொண்டு வரும் உங்களுக்கு இவ்வாரத்தில் 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் விலகி பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமைந்து பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். ஆரோக்கியரீதியான பிரச்சினைகள் விலகி சிறப்பான ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள். ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான புதன், சுக்கிரன் இணைந்து 5-ல் சஞ்சரிப்பதால் வலுவான தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. இதனால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்களை அடையமுடியும். மறைமுக எதிர்ப்புகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி சகஜநிலை ஏற்படும். வேலையாட்கள்வழியில் ஒருசில ஆதாயங்களைப் பெறுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு இருந்த நெருக்கடிகள் விலகி வேலைப்பளு குறையும். நீங்கள் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் விரும்பிய இடமாற்றத்தைப் பெறமுடியும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். பேச்சில் பொறுமையோடு இருந்து மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் ஏற்றங்களை அடையமுடியும். செவ்வாய், புதன்கிழமைகளில் உங்களுடைய செயல்களுக்குப் பரிபூரண வெற்றி கிடைக்கும். தட்சிணாமூர்த்தி, உக்ர தெய்வங் களை வழிபடுவதன்மூலம் கஷ்டங்கள் விலகும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் புதன், சுக்கிரன் இணைந்து சஞ்சரிப்பதால் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுக்கு எந்தவிதத்திலும் பஞ்சமிருக்காது. நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைப்பதால் நீண்டநாளைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன்- மனைவியிடையே மகிழ்ச்சி ஏற்படக்கூடிய இனிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். ராகு 3-ல் இருப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நினைத்ததை சாதிக்கமுடியும். வங்கிமூலம் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தக்கநேரத்தில் கிடைப்பதால் தொழிலை விரிவாக்கம் செய்யமுடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் இணைவதால், சிறுசிறு மறைமுக எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் பலமுண்டாகும். புதிய திட்டங்களைப் போட்டு அதில் வெற்றிகாண்பீர்கள். நவீன இயந்திரங்களை வாங்கித் தொழிலை விரிவுபடுத்த முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைவது மட்டுமல்லாமல் உங்கள் பேச்சுக்கு பணிசெய்யுமிடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடந்த காலங்களில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறைந்து சேமிக்குமளவுக்கு வாழ்க்கைத் தரம் உயரும். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் சகல விதத்திலும் முன்னேற்றத்தைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் ராகு சஞ்சரிப்பதால், முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. நீங்கள் நல்ல தாகப் பேசினாலும் அதனை மற்றவர் கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். குரு ஜென்மத்தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத் தோடு செயல்படவும். கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம். சூரியன் 4-ல் சஞ்சரிப்ப தால் எளிதில் முடியவேண்டிய காரியங் கள் சற்று தாமதமாகி மன அமைதியைக் குறைக்கும். அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படலாம். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்போது தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் எதிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலை யாட்களை சற்று அனுசரித்து செல்வதன் மூலம் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். தொழில் நிறுவனத்திலுள்ள கருவிகளைப் பழுது பார்ப்பதற்காக செலவு செய்ய நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்கள் பணியும் இணைத்துச் செய்யவேண்டிய நிலை ஏற்படும். குடும்ப விஷயங்களை வெளிநபர் களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, காலபைரவரை வழிபடுவது நல்லது.