முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: உத்திராடம்- 3.

செவ்வாய்: புனர்பூசம்- 4 (வ).

Advertisment

புதன்: பூராடம்- 3.

குரு: ரோகிணி- 3 (வ).

சுக்கிரன்: பூரட்டாதி- 1.

Advertisment

சனி: பூரட்டாதி- 1.

ராகு: உத்திரட்டாதி- 1.

ss

கேது: உத்திரம்- 3.

கிரக மாற்றம்:

21-1-2025 செவ்வாய் மிதுனம் (வ) காலை 10.04 மணிக்கு.

24-1-2025 மகர புதன் மாலை 5.40 மணிக்கு.

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: கன்னி

21-1-2025 பகல் 10.03 மணிக்கு துலாம்.

23-1-2025 இரவு 10.32 மணிக்கு விருச்சிகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன், சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. இதுநாள்வரை 4-ல் சஞ்சரித்த செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய அலைச்சல், டென்ஷன், பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட லாபகரமான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்க வழியில் எதிர்பார்க்கக்கூடிய உதவிகளை வரும் நாட்களில் பெறமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் வரும் நாட்களில் முழுமையாக விலகி மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகால வேலைப்பளு குறைந்து எடுத்த பணியை சுலபமாக செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஒருசிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் சிறப்பான மதிப்பெண்களைப் பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 21, 22, 23.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 10-ல் வலுவாக அமையப்பெற்று, லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பணஉதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பெண்கள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது சூரியன் 9-ல் சஞ்சரிப்பதால் கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படு வீர்கள். குருபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருக்கும். வரும் செவ்வாய்க்கிழமைமுதல் செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சை குறைப்பது, உடனிருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் தேவையில்லாத நபர்களால் சிறுசிறு இடையூறுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்தினால் எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல் பட்டாலும் உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் வரக்கூடிய நேரமென்பதால் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23, 24, 25.

ss

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன் சஞ்சரிப்ப தாலும், 2-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் ஜென்ம ராசியில் வக்ரகதியில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். உங்களது முன்கோபத்தால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நேரமாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு இருப்பது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, இரவு நேரப் பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று இருக்கக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் படிப்பில் கவனம் செலுத்தினாலும் ஞாபகமறதி ஏற்படலாம் என்பதால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் சூரியன், 8-ல் சுக்கிரன், சனி சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்துசெயல்பட வேண்டிய நேரமாகும். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை உடனிருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சிக்கனத் தோடு செயல்படவேண்டும். தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத் தோடு இருப்பது, பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திகொள்ள வேண்டிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பதால் ஓய்வுநேரம் குறையும். அதிகாரியிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய காலமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 19, 20.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதியான சூரியன் ருண, ரோக, ஸ்தானமான 6-ல் பலமாக சஞ்சரிப்பதும், சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். புதன் 5-ல் சஞ்சரிப்பதாலும் தற்போது விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமை முதல் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த் தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடையக் கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் மிகவும் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் அமையும். உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையக் கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கி றது. வேலை தேடிக்கொண்டிருப்ப வர்களுக்கு தகுதிக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான மதிப்புகளைப் பெறக்கூடிய நேரமாகும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் கேந்திர ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதாலும், சனி 6-ல் சஞ்சரிப்பதாலும் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 10, 11-ல் சஞ்சரிப்பதால் இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்துமுடித்து வாடிக்கையாளரிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். தொழில் வளர்ச்சிக்காக வெளியிடங்களில் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தற்போது கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாகச் செயல்படுவது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய நேரமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்களுடைய வேலைப்பளு சற்றுக் குறையும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை அடைய விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 24, 25.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சனி சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதாலும், 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது 8-ல் இருக்கக்கூடிய குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய ஒரு பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க் கொள்ளும்படி இருக்காது. மற்றவர்களுடைய வேலையையும் நீங்கள் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக விளங்குவது மட்டுமில்லாமல் விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலமான பலன்களை பெறமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவுகள் தக்க நேரத்தில் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களுடைய உதவி உங்களுக்கு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தற்போது உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிக்கக்கூடிய ராசியாதிபதி செவ்வாய், செவ்வாய்கிழமை முதல் 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் எவ்வித நெருக்கடியும் சமாளித்து போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. சில நேரங்களில் நீங்களே நேரடியாக ஒருசில காரியங்களில் ஈடுபடுவதுமூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்த்து அனுகூலங்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய காலமாகும். மாணவ- மாணவியர்கள் சக நண்பர்களிடம் பேசுகின்றபோது கவனத்தோடு இருக்கவேண்டும். இந்த வாரத்தில் சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, முருகன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 24, 25.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன், 3-ல் சனி சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். ராசியாதிபதி குருபகவான் தற்போது 6-ல் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் இருப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக முடிவெடுத்து அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய சின்னசின்ன உடல் உபாதைகள்கூட முழுமையாக விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு லாபகரமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்களது வேலைப்பளு சற்று குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுபாதைக்கு அழைத்துச்செல்லக்கூடிய நேரமென்பதால் மற்றவரிடம் பழகுகின்றபோது சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் & 19, 20, 21, 22, 23.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும், தற்போது 7-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்து தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வதன்மூலம் நல்ல நிலைமையை அடையமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க் கொள்ளும்படி இருக்காது என்பதால் சில விஷயங்களில் நீங்களே நேரடியாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கக்கூடிய நேரமென்பதால் காலநேரம் பார்க்காமல் உழைத்தால் மட்டுமே நல்ல பலன்களை அடையமுடியும். மாணவ- மாணவியர்கள் பெரியோர்களிடம் பேசுகின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24, 25.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர் கள் அதனை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரமென்பதால் முடிந்தவரை பேச்சில் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, சிறு பாதிப்பு என்றாலும் அதற்கான சிகிச்சைகளை உடனே மேற்கொள்வதுமூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் நேரடியாக இருந்து செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஒருசில தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். பிள்ளைகள்வழியில் தேவையில்லாத மனக்கவலைகள் ஏற்படக்கூடிய நேரமாகும். ஒரு சில நேரங்களில் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன்மூலம் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி இருக்கும் வாய்ப்புகளை இழந்து விடவேண்டாம். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதுமூலம் அனுகூலமான பலன்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 10-ல் புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் மிகமிக திருப்திகரமாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதாலும் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல் படுவது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள்மூலமாகக்கூட எதிர்பாராதவகையில் வீண் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சின்னசின்ன பிரச்சினை இருந்தாலும் உங்களின் தனித்திறமை காரணமாக எதையும் சிறப்பாக கையாண்டு போட்ட முதலை எடுத்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதனை எளிதில் சமாளித்து எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மனநிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, காலபைரவருக்கு தீபமேற்றுவதன்மூலம் அனுகூலங்களை அடைய முடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 19, 20.