முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: கிருத்திகை- 2.
செவ்வாய்: ஆயில்யம்- 1.
புதன்: பரணி- 2.
குரு : மிருகசீரிடம்- 3.
சுக்கிரன்: ரேவதி- 1.
சனி: உத்திரட்டாதி- 1.
ராகு: பூரட்டாதி- 4.
கேது: உத்திரம்- 2.
கிரக மாற்றம்:
18-5-2025 ராகு கும்பம் இரவு 7.38 மணிக்கு
18-5-2025 கேது சிம்மம் இரவு 7.38 மணிக்கு
23-5-2025 ரிஷப புதன் பகல் 1.02 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: மகரம்
20-5-2025 காலை 7.35 மணிக்கு கும்பம்
22-5-2025 பகல் 12.08 மணிக்கு மீனம்
24-5-2025 பகல் 1.48 மணிக்கு மேஷம்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 3-ல் குரு, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு இருக்கவேண்டும். குறிப்பாக உடன்பிறந்தவர்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தேவையற்ற போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒருசில முடிவுகள் உங்களுக்கு பாதகமாக அமையலாம் என்பதால் எந்த ஒரு செயல் மேற்கொள்கின்றபொழுதும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் வேலைச் செய்பவர்கள் உங்களுக்குத் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்றுக் கவனத் தோடு இருப்பது, உங்கள் பணியில் மட்டும் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். பிறரிடம் பேசுகின்றபொழுது நிதானத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் துர்க்கை யம்மனுக்கு தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங் களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சனி சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும். இருக்குமிடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதை யும் அதிகரிக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். பணவரவுகள் சாதகமாக இருந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினை கள் எல்லாம் படிப்படியாக குறையக்கூடிய நேரமாகும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் தடைப் பட்ட சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது உங்கள் உழைப்புக்கான ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளைப் பெறமுடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமை களை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப் பங்கள் அமையும். புதிய வேலை வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப் படியான மதிப்பெண்களைப் பெற்று நல்ல நிலையை அடையமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22, 23.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் குரு, 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு செயலிலும் பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உங்களது முன் கோபத்தை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வெகுளித்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளலாம் என்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் இருக்கக் கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்கக்கூடிய பலம் உண்டா கும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பையும் உதாசினப் படுத்தாமல் கவனமாக செயல் பட்டால் போட்ட முதலை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்களை அனுசரித் துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது வருகின்ற நாட்களில் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று எதிர்பார்த்த உயர்கல்வியை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி, சுக்கிரன், 10-ல் புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்லவாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பொருளாதார ரீதியாக நற்பலன்கள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும் என்பதால் கடந்தகால பிரச்சினைகள் தற்போது விலகி உங்களுக்கு இருக்கக்கூடிய கடன்கள் குறையும். குடும்ப ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். நண்பர்கள்மூலமாக ஒருசில வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் போட்ட முதலை எடுக்கமுடியும். 18-ஆம் தேதிமுதல் கேது 2-லும், ராகு 8-லும் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் செய்துமுடித்து நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும் என்றாலும் பெரியவர்களிடம் பேசுகின்றபொழுது பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமியை தரிசிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 24.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன் 10-ல் பலமாக இருப்பதும், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் மிகவும் சாதகமாக இருந்து பொருளாதாரரீதியாக வளமான நிலையினை அடைவீர்கள். நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யமுடியும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்கமுடியும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக் கவலைகள் எல்லாம் படிப்படியாக குறையும். நீண்டநாட்களாக தடைப்பட்டுவந்த சுபகாரியங்களுக்காக தற்போது முயற்சிகள் மேற்கொண்டால் நல்ல செய்தி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எடுக்கக்கூடிய அதிர்ஷ்டமானது வரும் நாட்களில் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு பிறரிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு சக நண்பர்கள் ஆதரவாக இருப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவதும், காலபைரவரை தரிசிப்பதும் அனு கூலத்தைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 18-ஆம் தேதிமுதல் 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூல மான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைப்பதால் போட்ட முதலை எடுக்க முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வதன் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணிநிமித்தமாக பயணங்கள் மேற்கொண்டா லும் அதன்மூலம் ஆதாயங்கள் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உங்களுக்கு இருந்து வந்த மறைமுக பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் குறையும். மாணவ- மாணவியர்கள் போட்டி தேர்வுகளில் பங்குப்பெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22, 23.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், சனி சேர்க்கைப்பெற்று 6-ல் சஞ்சரிப்பதும், 9-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். உங்களுக்கு பொருளாதாரரீதியாக மிகவும் சாதகமான பலன்கள் நடக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வயது அடைந்தவர்களுக்கு வரும் நாட்களில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்து நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் வாடிக்கையாளர்களுடைய எண்ணங்களை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் முடிப்பது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர் கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமில் லாமல் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறக்கூடிய யோகமானது வருகிற நாட்களில் இருக்கிறது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், சனி சஞ்சரிப்ப தால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பெண்கள்மூலமாக அனுகூலங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சூரியன் 7-லும், குரு 8-லும் சஞ்சரிப்ப தால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில்ரீதியாக தற்போது கிடைக்கக் கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். பூர்வீக சொத்துவகையில் இருந்துவந்த பிரச்சினை களுக்குத் தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிகாரியிடம் பேசுகின்றபொழுது பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, வீண்வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு சின்ன சின்ன இடையூறுகள் இருந்தாலும் விரும்பிய படிப்பை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் வளமான பலன்களை அடைய சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 24.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். ராசியாதிபதி குருபகவான் 7-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியை பார்ப்பதால் கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் தற்போது விலகி வளமான பலன்களைப் பெறுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகுவதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை குறைத்துக்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்துவந்த தேக்கநிலைகள் மாறி படிப்படியான முன்னேற்றத்தை அடைவீர்கள். நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு வாய்ப்பு தற்போது கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நிலையினை அடையக்கூடிய யோகமும் விரும்பிய பதவியை அடையக்கூடிய அதிர்ஷ்டமும் வரும் நாட்களில் உண்டு. மாணவ- மாணவியர்கள் தங்களது தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சனி முயற்சி ஸ்தானமான 3-ல் வலுவாக சஞ்சரிப்பதும், 4-ல் புதன், 5-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் உறவினர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஒருசில விஷயங் களில் சாமர்த்தியமாக செயல்பட்டு நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து போட்ட முதலை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்கமுடியாத ஒரு காரியத்தைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடித்து அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சைக் குறைத்துவிட்டு பயனுள்ள விஷயத்திற்கு நேரத்தை செலவிடுவது மிகமிக நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதுமூலம் பிரச்சினைகள் விலகி ஏற்றங் கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 23, 24.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்களுக்கு இருந்துவந்த பொருளாதார பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி வளமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் உண்டு. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவது மட்டுமில்லாமல் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களது பேச்சுத்திறமை காரணமாக வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும் தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கக்கூடிய யோகங்களும் வரும் நாட்களில் இருக்கிறது. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். 18-ஆம் தேதி ஏற்படக்கூடிய ராகு- கேது பெயர்ச்சியின்மூலமாக 1, 7-ல் ராகு- கேது சஞ்சாரம் செய்ய இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த தேக்கநிலை மாறி ஒரு கௌரவமான நிலையை எட்டுவீர்கள். உடன் இருப்பவர்களால் இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்களுடைய படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு பெருமாள் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 24.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் சுக்கிரன், முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தி லும் துணிச்சலுடன் செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நெருங்கியவர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. 18-ஆம் தேதிமுதல் கேது 6-ஆம் வீட்டிலும், ராகு 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் தற்போது குடும்பத்தில் நிலவக்கூடிய ஒற்றுமை குறைவுகள் விலகி கணவன்- மனைவியிடையே இனி ஒற்றுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மறைமுகப் போட்டிகள் குறையும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் சற்று குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு இருந்துவந்த மருத்துவச் செலவுகள் தற்போது குறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு உடன் இருப்பவர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் எளிதில் சமாளிக்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு கால பைரவரை வழிபாடு செய்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது ஏற்றத்தைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 23. 24.