முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி: 044 24881038, 2483 9532.

Advertisment

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்வினி- 1.

Advertisment

செவ்வாய்: சதயம்- 1.

புதன் : பரணி- 2.

குரு: பூரட்டாதி- 4.

சுக்கிரன் : சதயம்- 4.

சனி: அவிட்டம்- 2.

ராகு: கிருத்திகை- 1.

கேது: விசாகம்- 3.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- துலாம்.

18-4-2022 இரவு 10.07 மணிக்கு விருச்சிகம்.

20-4-2022 இரவு 11.40 மணிக்கு தனுசு.

23-4-2022 அதிகாலை 1.52 மணிக்கு மகரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய், சுக்கிரனுடன் இணைந்து லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப் பாக இருக்கும். உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குரு உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஜென்ம ராசி யில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது சிறப்பு. கணவன்- மனைவியிடையே முடிந்தவரை விட்டுக்கொடுத்துச் சென்றால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். நீங்கள் நல்லதாக நினைத்துப் பேசினா லும் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமை வேண்டும். நெருங்கியவர் களை அனுசரித்துச்செல்வது நல்லது. ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் நீங்கள் மிகவும் அனுகூல மான பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் உங்களின் தனித்திறமையால் போட்ட முதலீட்டை எடுத்துவிட முடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பொறுமையோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடைய லாம். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பெரிய முதலீடு களைக்கொண்டு புதிய தொழில் தொடங்குவதையோ, இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவதையோ தற்சமயத்திற்கு தவிர்ப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத் தோடு செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். சிவ வழிபாடு மேற்கொள்வது, வேங்கடாசலப தியை தரிசிப்பது நற்பலனை ஏற்படுத்தும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன், செவ்வாயுடன் 10-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வலிமை கூடும். உங்களுக்கு நிலவிய பிரச்சினைகள் எல்லாம் விலகி சமுதாயத்தில் கௌரவமான நிலையை எட்டமுடியும். தனகாரகன் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருந்து சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கேது 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டா கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். தேக ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு உங்களது வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். இதுவரை வேலையாட்கள் கொடுத்த தொந்தரவுகள் மாறி, அவர்கள் உங்கள் சொல்படி நடக்கும் நிலை உண்டாகும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக இருந்த நெருக்கடிகள் எல்லாம் வரும் நாட்களில் மறைந்து மனநிம்மதி ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். வேலைக்குச் செல்பவர் களுக்கு கௌரவமான பதவிகள் தேடிவரும். நீண்டநாட்களாக வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து, உங்கள் கடன் பிரச்சினைகள் குறையும். வேலை தேடுபவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் வளமான பலன்களைப் பெற மகாவிஷ்ணு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன், சூரியனுடன், ராகு சேர்க்கைபெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றியடைவீர்கள். எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். செவ்வாய், சுக்கிரன் பாக்கிய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட் களை வாங்கும் யோகம் உண்டாகும். வெளியூர்த் தொடர்புகள்மூலமாக ஆதாயங் கள் கிடைக்கும். சனி 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது சிறப்பு. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி களுக்குப் பரிபூரண வெற்றி கிடைக்கும். சனிக் கிழமை மட்டும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் செயல் களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். போட்ட முதலீட்டை எளிதில் எடுத்துவிடுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத் தோடு செயல்பட்டால் லாபங்களை எட்ட முடியும். தொழில்ரீதியாக புதிய நபரிடம் பேசும் பொழுது பொறுமையோடு செயல்பட்டால் அனுகூலங்களை அடையலாம். வயது மூத்தவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரி களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைக்கூட எளிதில் செய்துமுடிக்க முடியும். அலைச்சல் காரணமாக உடல் அசதி, ஓய்வு நேரம் குறையும் சூழல் உண்டாகும். வெளியூர்ப் பயணங்களை முடிந்தவரை தள்ளிவைப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு ஆட்சிபெற்று சஞ்சரிப்ப தால் சகல விதத்திலும் அனு கூலமான பலன்களை அடையும் யோகமுண்டு. உங்களின் நீண்டநாளைய பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் படிப்படி யாகக் குறைந்து குடும்பத் தில் மகிழ்ச்சி ஏற்படும். சூரியன், புதன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பெரிய மனிதர் களின் ஆதரவு கிடைப்ப தால் பல்வேறு மேன்மை களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனங்களில் வேகத்தைக் குறைத்து பொறுமையாகச் செல்வது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்து வதுடன் மனைவி, பிள்ளைகளின் ஆரோக் கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது சிறப்பு. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எளிதில் வெற்றியடையும். தொழில்ரீதியாக உங்களுக்கு நிலவிய கடந்தகால நெருக்கடிகள் முழுமையாக விலகி நல்ல வளர்ச்சியடைவீர்கள். வேலை யாட்களை அனுசரித்துச்செல்வதும், முக்கிய விஷயங்களில் நீங்களே முன்நின்று செயல்படு வதும் நன்று. அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். கூட்டாளிகள்மூலம் வீண் பிரச்சினைகள் மேலோங்கும் என்பதால், நீங்கள் எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாக இருந்தாலும், அதற்கான ஆதாயங்களை அடையமுடியும். வளமான பலன்களைப் பெற மகாலட்சுமி வழிபாடு, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

nn

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதியான சூரியன் 2, 11-க்கு அதிபதி யான புதனுடன் 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். கடந்தகால நெருக்கடிகளை சிறப் பாகக் கையாண்டு நல்ல முன்னேற்றங்களை அடைய முடியும்.உங்கள் ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப் பதால் பொருளாதார ரீதியாக ஏற்றம் மிகுந்த பலன்களை எளிதில் அடை வீர்கள். சுக்கிரன் 7-ல் இருப்பதால் உடனிருப்ப வர்கள் ஆதரவு நன்றாக இருக்கும். ஆடம்பர செலவு களைக் குறைத்துக் கொண்டு சிக்கனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப் பாக இருக்கும். குழந்தைகள் வகையில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். வெளியூர்த் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் மேலும் சிறந்த பலன்களை எளிதில் அடையமுடியும். தொழில், வியாபாரத் தில் சாமர்த்தியமாகச் செயல்பட்டால் அதிகப் படியான லாபங்களை அடையமுடியும். வேலையாட்கள் உங்களுக்கு உதவியாக- உறுதுணையாக இருப்பதால், பெரிய ஆர்டரைக்கூட குறித்த நேரத்தில் செய்து முடித்து மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர் கள். வெளி நபர்களால் இருந்த தொழில் பிரச்சினைகள் வரும் நாட்களில் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் எதிர் பார்த்த பதவி உயர்வையும் அடையமுடியும். மற்றவர்களை நம்பி வாக்குறுதி கொடுப்பது, பண விஷயத்தில் முன்ஜாமின் தருவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு, சூரிய நமஸ்காரம் செய்வதன்மூலம் அனுகூலங்களை அடையமுடியும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு பகவான் 7-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங் கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள்வழியில் மிகவும் அனுகூலமான பலன்கள் நடக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து நிம்மதியுடன் எதிலும் செயல்படமுடியும். சூரியன், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். வயது மூத்தவர்களிடம் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. இவ்வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றங்களை அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி கள் எளிதில் வெற்றிபெற்று நற்பலன்களைத் தருவதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இவ்வாரம் சிறப்பான வாரம். நீங்கள் நீண்டநாட்களாக அனுபவித்த கஷ்டங்களுக்கெல்லாம் வரும் நாட்களில் விடிவுகாலம் பிறக்கும். உழைப்புக் கான பலனைப் பெறுவது மட்டுமல்லாமல், நீங்கள் எதிர்கொண்ட வீண் பழிச்சொற்களும் கூட முழுமையாக விலகி நிம்மதியடைவீர்கள். துர்க்கையம்மனை தரிசிப்பது, சிவ வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எச்சரிக்கையாக செயல் படவேண்டிய நேரமாகும். குரு ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் தேக்கங்கள் ஏற்படும். நீங்கள் மற்றவருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்று வதில் இடையூறுகள் ஏற்படும். ராசிக்கு 4-ல் சனி சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறு கள் உண்டாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனத் தோடு செயல்பட்டால்தான் பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியும். ராசியாதி பதி சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்ப தால் நெருங்கியவர்களின் உதவியால் ஒருசில ஆதாயங் களை அடைவீர்கள். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந் தாலும் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதக மாக சஞ்சரிப்பதால் எதிர் பாராத அனுகூலங்கள் சில ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தற்போதி ருக்கும் வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்வது, அதிக முதலீடுகள்கொண்ட செயல் களை முடிந்தவரை தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழில் தொடர்பாக அரசு அதிகாரியிடம் பேசும்பொழுது மிகவும் பொறுமையாக செயல்படுவது சிறப்பு. வேலையாட்கள்மூலம் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். மற்றவர்கள் பணியையும் நீங்கள் இணைத்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு, நரசிம்மர் தரிசனம்மூலம் கஷ்டங்கள் குறையும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் அனுகூல மான பலன்களை அடைவீர்கள். 5-ல் குரு ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்க்கைத் தரம் மிகச்சிறப்பாக இருக்கும். பணவரவுகள் நன்றாக இருந்து எல்லா வகை யிலும் உயர்வான நிலையை எட்டுவீர்கள். சனி 3-ல் சஞ்சரிப்பதால் தற்போது மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைப்பது மட்டுமல்லாமல், அதன்மூலம் லாபங்களையும் ஈட்டமுடியும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் சூழல், நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். நீண்டநாளைய கனவுகள் பூர்த்தியாகும். சிலர் வீடு, மனை போன்றவற்றை வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியடையும் சூழல் வரும் நாட்களில் உண்டாகும். இவ் வாரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் எதில் ஈடுபட்டாலும் மிகவும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் கடந்தகால பொருட் தேக்கங்கள் எல்லாம் விலகி லாபகரமான நிலையினை அடைவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். வேலையாட்கள் உங்களிடம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை மற்றவர்கள் மதிக்கும் சூழ்நிலை உருவாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக விலகி நிம்மதி ஏற்படும். விநாயகர், முருகன் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் பிரச்சினைகள் குறையும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட் டாவது இலக்கை அடைவீர்கள். 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதாலும் பொருளாதாரநிலை சிறப் பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப்பெற்று கடந்தகால நெருக்கடிகள் குறையும். தற்போது குரு 4-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த தடைகளெல்லாம் விலகி நல்ல வளர்ச்சியை வரும் நாட்களில் அடையமுடி யும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் சென்றால் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைய லாம். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று முனைப்புடன் செயல்பட்டால் நல்ல வளர்ச்சியை எட்டமுடியும். வேலையாட்களை நம்பாமல் நீங்களே நேரடியாக களத்திலிருந்து செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கிடைக்கும் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் செயல்படுவது மிகவும் நல்லது. உங்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் வரும் நாட்களில் படிப்படியாகக் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக் கேற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மூலமாக அனுகூலமான செய்தி வரும். பணி யிலிருக்கும் நெருக்கடிகள் குறைவதால் நிம்மதி ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர் கள். சிவ தரிசனம், ஆஞ்சனேயர் வழிபாடுமூலம் வளமான பலன்களை அடையமுடியும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத்தோடு செயல் படவேண்டிய நேரமாகும். நீங்கள் நல்லதாகப் பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். குடும்ப விஷயங் களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஏழரைச்சனி நடப்பதாலும், குரு 3-ல் இருப்பதாலும் பொருளாதாரரீதியாக கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது, அதிக முதலீடு களை தற்போது ஈடுபடுத்தாமல் இருப்பது மிக நல்லது. சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்து கொள்ளவில்லை என்றால் எதிர்பாராத வகையில் கடன்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். சிறு பாதிப்பென்றாலும் உடனே அதற்கான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வது சிறப்பு. பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும் சந்திரன் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் நல்ல இடத்தில் சஞ்சரிப்பதால் ஒருசில ஆதாயங்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் மிக கவனத்தோடு செயல்படுவது, வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. அரசுவழி அதிகாரிகள் தரும் கெடுபிடி களால் தொழிலில் நிம்மதியுடன் பணியாற்ற முடியாது. அலைச்சல் காரணமாக உடல் அசதி, ஓய்வுநேரம் குறையும் நிலை ஏற்படும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் எதிலும் பொறுமை யோடு இருப்பது, இருக்கும் வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்வது நல்லது. ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங்கள், அதன்மூலம் வீண் செலவுகள் ஏற்படும். சிவ வழிபாடு, முருக வழிபாடு நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடைவீர்கள். சூரியன், ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு ஏற்றம் மிகுந்த பலன்களைப் பெறமுடியும். உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். நீண்டநாளைய பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்பத் தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கிருந்த சங்கட மான நிலை விலகி, மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடன்கள் குறைந்து நிம்மதி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர் கள். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் மேலும் பல நற்பலன்களை எட்டமுடியும். தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் பிரச்சினைகள் விலகி படிப்படியான வளர்ச்சியை அடைவீர்கள். மறைமுகப் போட்டிகள் விலகி நிம்மதி ஏற்படும். வேலையாட்களால் இருந்து தொந்தரவுகள் விலகுவதால் இனி தொழிலில் நிம்மதியுடன் செயல்புரிய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பிரச்சினைகள் விலகி நல்ல வாய்ப்பினைப் பெறுவீர்கள். மேலதிகாரியிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமுகமான நிலை ஏற்படும். உங்கள் திறமை களை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் நிலவிய நிம்மதியற்ற நிலை விலகி மகிழ்ச்சி ஏற்படும். ஆஞ்சனேயர், மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன் மூலம் வளமான பலன்களைப் பெறுவீர்கள்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத் தோடு இருப்பதும், நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வதும் நல்லது. குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வீண்செலவுகள் குறையுமென்றாலும், பொருளாதாரரீதியாக சிக்கனத்தோடு செயல்பட்டால்தான் எதையும் எதிர்கொள்ளமுடியும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு ஏற்படும். ராசிக்கு 2-ல் புதன், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால், எதிர்பாராத அதிர்ஷ்டங்கள்மூலம் பொருளாதார அனுகூலங்களை அடையும் வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு உணவுட்கொள்வது, தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அனுகூலமான பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும் அடையவேண்டிய லாபத்தை அடைவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மறைமுகப் போட்டிகள் நிலவினாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் சிறப்பாகக் கையாளுவீர்கள். தொழில் விஷயங்களை வெளிநபர் களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். என்றாலும், அதிகாரியிடம் வாக்குவாதம் ஏற்படக்கூடிய நேரமாகும். எனவே உங்கள் பணியில் கவனம் செலுத்திவிட்டு மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது சிறந்தது. உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவ வழிபாடு, முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.