முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: பூரட்டாதி- 4.
செவ்வாய்: புனர்பூசம்- 2.
புதன்: உத்திரட்டாதி- 4 (வ).
குரு : ரோகிணி- 3.
சுக்கிரன்: உத்திரட்டாதி- 3 (வ).
சனி: பூரட்டாதி- 3-ல்
ராகு : உத்திரட்டாதி- 1.
கேது: உத்திரம்- 3.
கிரக மாற்றம்:
இல்லை
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கன்னி
17-3-2025 அதிகாலை 1.15 மணிக்கு துலாம்.
19-3-2025 பகல் 2.06 மணிக்கு விருச்சிகம்.
22-3-2025 அதிகாலை 1.45 மணிக்கு தனுசு.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதாலும், 2-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பதாலும் சகல சௌபாக்கியங்களையும் அடையக் கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. பணவரவு கள் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கும். சூரியன், சுக்கிரன் 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன் படுத்தி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வெளியூர் பயணங்கள் மூலமாக அனுகூல மான பலன்கள் ஏற்படக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் உள்ளது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக விளங்குவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பள்ளி, கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிக்கு அதிபதி சுக்கிரன்- சூரியன், ராகு, புதன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருந்து ஏற்ற மிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் சற்று குறையும். உங்களின் கடன் தொல்லைகள் சற்று குறையக்கூடிய நேரமாகும். கணவன்- மனைவியிடையே இருந்த தேவையற்ற மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது குறையும். செவ்வாய் 2-ல் இருப்ப தால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத் தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்களால் இருந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகும். மாணவ- மாணவியர்கள் கடந்த காலங்களில் இருந்து வந்த தேக்கநிலை தற்போது மறைந்து கல்வியில் சிறப்பாக செயல்படக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 19, 20, 21.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், சுக்கிரன், ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதை யும் அதிகரிக்கக்கூடிய நேரமாகும். ஜென்ம ராசியில் செவ்வாயும், 12-ல் குருவும் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு இருக்கவேண்டும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் சின்னசின்ன நெருக்கடி இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்க கூடியப் பலம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் சில ஏற்படலாம் என்பதால் ஒவ்வொரு காரியத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். உத்தியோக ரீதியாக பார்க்கின்றபொழுது நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் வேலைப்பளு சற்று அதிகப்படியாக இருக்கக்கூடிய நேரமென்பதால் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள காரியங்களுக்கு நேரத்தை செலவிடுவது, படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சுக்கிரன், சூரியன், புதன் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். கடந்த சில நாட்களாக இருந்துவந்த ஆரோக்கிய குறைபாடுகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குறிப்பாக வயது மூத்தவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைந்து சுமூகமான நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிக மிக நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்கமுடியாத ஒரு காரியத்தைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்துமுடித்து அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் உங்களுக்கு இருந்துவந்த இடர்பாடுகள் தற்போது விலகி கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி களைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்ளுவதன்மூலமாக வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.
வெற்றி தரும் நாட்கள்: 16, 22.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன், சுக்கிரன், புதன், ராகு சேர்க்கைப்பெற்று அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களது தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்பட்டு உங்களது மன அமைதியானது குறையும். பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கக்கூடிய நேரமென்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். வயது மூத்தவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமை யோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது என்பதால் சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங்களும் அதன்மூலம் வீண்செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு காரியத்திலும் சற்று கவனத் தோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தமுடியாத ஒரு நிலை, ஞாபகமறதி ஏற்படக்கூடிய சூழல் இருப்பதால் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி, 9-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 7-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருப்ப தால் கடந்த காலங் களில் நீங்கள் வாங்கிய கடன் களை பைசல் செய்யமுடியும். பிள்ளைகள்வழியில் இருந்து வந்த மனக்கவலைகள் எல்லாம் தற்போது மறைந்து நிம்மதி உண்டாகும். ஒருசிலருக்கு பூர்வீக சொத்துவகையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு முடிவு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றத்தை அடையக்கூடிய நேரமாகும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகள் தற்போது கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் உயர்கல்விக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதுமூலம் அனுகூலங்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 20, 21.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன், ராகு சஞ்சாரம் செய்வதால் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படக்கூடியப் பலம் உண்டாகும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். நெருங்கியவர்களின் உதவியால் ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 8-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவில் தேவையற்ற நெருக்கடிகள் இருக்கக்கூடிய நேரமென்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் முன்பைவிட தற்போது நல்ல ஒரு வளர்ச்சியினை அடையக்கூடிய நேரமாகும். வேலையாட்கள் உதவியானது சிறப்பாக இருந்து மனதளவில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் எதிர்கொண்ட வீண் பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து அனுகூலமான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்துவந்த ஆரோக்கிய குறைபாடுகளும் தற்போது குறையும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 22.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும், 7-ல் குரு அமையப் பெற்று ஜென்ம ராசியை பார்ப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். கடந்த சில நாட்களாக இருந்துவந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் தற்போது குறைந்து எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய நெருக்கடிகள் தற்போது குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலை ஆட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் மிகச் சுறுசுறுப்பாக செயல்பட்டு எடுத்த காரியத்தைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, ராகு கால நேரத்தில் துர்க்கையம்மனை தரிசிப்பதன் மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 20, 21
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல் காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய சூழ்நிலை, வண்டி வாகனங்கள்மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டக் கூடிய நேரமாகும். கூட்டாளிகளை சற்று அனுசரித் துச் செல்வது மிகவும் நல்லது. வேலைக்குச் செல்பவர் களுக்கு மற்றவர்களால் முடிக்கமுடியாத பணியைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவரிடம் பேசுகின்றபொழுது தற்போதைக்கு சற்று பொறுமையோடு பேசுவது நல்லது. உங்களது ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதால் கடந்தகால வீண் மருத்துவச்செலவுகள் குறையும். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பதன்மூலம் ஏற்றம்மிகுந்த பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 22.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகு, 5-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் நிலவிய தேவையற்ற கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைந்து மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் அரங்கேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். பூர்வீக சொத்துவகையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு வரும் நாட்களில் ஒரு நல்ல தீர்வு கிடைத்து மனநிம்மதி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளை வருகின்ற நாட்களில் பெறமுடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் அனைத்து பணியையும் எளிதில் செய்து முடிக்க முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் மேன்மையும் அதிகாரியுடைய ஆதரவு சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பும் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த தேக்கங்கள் தற்போது விலகி படிப்பில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் அனுகூலங்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 19, 20, 21.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியில் சனி, 2-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். நெருங்கியவர்களால் நிம்மதிக்குறைவு உண்டாகலாம். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். தேவையற்ற மன குழப்பங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதிக்குறைவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு போட்ட முதலை எடுக்கமுடியாத அளவுக்கு நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் அதன் காரணமாக ஓய்வுநேரம் குறையும். அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்களுக்கு படிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருப்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்தோடு செயல்படுவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கையம்மன் வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் சூரியன், ராகு, 3-ல் குரு, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன் கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டும். வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். தேவையற்ற வகையில் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் காரணமாக உங்களது கையிருப்பு குறையும். உற்றார்- உறவினரிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப் பாக இருக்காது என்பதால் ஒரு சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நீங்கள் கவனமாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச் சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் கவனமாக இருந்தாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுபாதைக்கு அழைத்து செல்லலாம் என்பதால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பதன்மூலம் அனு கூலங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 22.