முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: அவிட்டம்- 4.
செவ்வாய்: புனர்பூசம்- 1 (வ),
புதன்: சதயம்- 1.
குரு: ரோகிணி- 3.
சுக்கிரன்: உத்திரட்டாதி- 3.
சனி: பூரட்டாதி- 2.
ராகு: உத்திரட்டாதி- 1.
கேது: உத்திரம்- 3.
கிரக மாற்றம்:
இல்லை
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கன்னி.
17-2-2025 மாலை 6.02 மணிக்கு துலாம்.
20-2-2025 காலை 6.49 மணிக்கு விருச்சிகம்.
22-2-2025 மாலை 5.40 மணிக்கு தனுசு.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, லாப ஸ்தானத்தில் சூரியன், சனி, புதன் போன்ற கிரகங்கள் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து அனைத்து தேவையும் பூர்த்தியாகக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் விலகி வளமான பலன்களைப் பெறுவீர்கள். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைத்து நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் தொழிலை நிம்மதியுடன் செய்ய முடியும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த வெளி உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். நீண்டநாட்களாக புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத் தில் இருந்து அழைப்புகள் வரும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர்- ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை யம்மனுக்கு தீப மேற்றுவது அனுகூலப்பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 10-ஆம் வீட்டில் சூரியன், புதன், லாப ஸ்தானத்தில் சுக்கிரன், ராகு சஞ்சரிப்ப தால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்கள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக் கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு இருக்கிறது. வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் இருப்பதால் பிறரிடம் பேசுகின்றபொழுது நிதானத் தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக் கூடிய நேரமாகும். வேலையாட் களை அனுசரித்துச் செல்வதன் மூலமாக ஏற்றமிகுந்த பலன் களை பெறமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை பெறக் கூடிய நேரம் ஆகும். ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்க ளைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரும் நாட்களில் வளமான பலன் களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் செவ்வாய், விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டும். பண வரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. ராசியாதிபதி புதன்பகவான் சூரியன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் இருப்பதாலும், சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருநல்ல முன்னேற்றத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல் பட்டாலும் தேவையற்ற பழிச் சொற்களை எதிர்கொள்ளக் கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர் கள் படிப்பில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஞாபக மறதி ஏற்படலாம் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வதும், சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களை அடைய முடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன், 11-ல் குரு சஞ்சரிப்ப தால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நீங்கள் மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை வரும் நாட்களில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். கேது 3-ல் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் சூரியன், சனி, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப் பாடோடு இருப்பது மிகவும் நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிறருடைய உதவியை எதிர்பார்க்காமல் சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்படுவதன்மூலமாக வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு பேச்சில் சற்று பொறுமையோடு இருந்துவிட்டு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவ- மாணவியர்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் சில நேரங்களில் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் காரணமாக படிப்பில் கவனம் செலுத்த முடியாது. லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 22.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன்- சனி சேர்க்கைபெற்று 7-ல் சஞ்சரிப்பதாலும், 8-ல் சுக்கிரன், 10-ல் குரு சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணவரவில் நெருக்கடியான நிலை ஏற்படும் என்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைப்பதை பயன்படுத்திகொள்வது, கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது அனுகூல பலனை தரும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிக மாக தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்லக்கூடிய நேரம் என்பதால் ஒவ்வொரு காரியத்திலும் சற்று கவனத்தோடு செயல் படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் உடன் பழகுவரிடம் சற்று எச்சரிக்கையோடு இருப்பது, வீண்பேச்சை குறைப்பது தற்போதைக்கு நல்லது. வரும் நாட்களில் முன்னேற்றத்தை அடைவதற்கு மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, குருபகவானுக்கு நெய் தீபம் ஏற்றுவது அனுகூலமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், சனி, 9-ல் குரு சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு கௌரவமான வாய்ப்பு உங்களைத் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகளும், வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கக்கூடிய ஒரு நிலையும் வரும் நாட்களில் உண்டு. தொழில் அபிவிருத்திக் காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு அரசாங்கவழியில் உதவிகள் கிடைக்கும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையக்கூடிய ஒரு சூழல் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைபெற துர்க்கை யம்மனுக்கு தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 20, 21.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன், சனி, 8-ல் குரு சஞ்சரிப்பதால் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சிக்கனத்தோடு செயல்படவேண்டும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. ஒரு சிலருக்கு தேவையற்ற பயணங்களும், அதன்மூலம் வீண்செலவுகளும் உண்டாகும். பெண்கள்மூலமாக தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் மிகவும் நிதானத்தோடு இருப்பது நல்லது. நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைபடக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, சிறு பிரச்சினை என்றாலும் அதற்கான சிகிச்சைகளை உடனடியாக எடுத்துக்கொள்வது தற்போதைக்கு நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு உங்கள் பணியில் மட்டும் கவனத் தோடு இருக்கவேண்டும். ஒரு சிலருக்கு அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற செயல்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். தற்போது தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, வெங்கடேசப் பெருமாளைத் தரிசிப்பதன் மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 22.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 5-ல் சுக்கிரன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களை யும் அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து ஒரு கௌரவமான நிலையினை அடைவீர் கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பூர்வீக சொத்துவகை யில் ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக வசதி வாய்ப்புகள் இருந்தாலும் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். வண்டி, வாகனங் களில் செல்கின்ற பொழுது தற்போதைக்கு சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். சில விஷயங்களில் வேலையாட்களுடைய உதவியை எதிர்பார்க்காமல் நீங்கள் நேரடியாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் வேலையை இணைத்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் எடுத்த பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உங்களிடம் இருக்கும். மாணவ- மாணவியர்கள் எதையும் எளிதில் புரிந்துகொண்டு நல்ல மதிப்பெண் களைப் பெறக்கூடிய காலமாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 20, 21.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிர்பாராதவகையில் பணவரவுகள் ஏற்பட்டு உங்களின் பொருளாதாரநிலை உயரும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிய சின்னசின்ன பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோனியம் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்திய மாக செயல்பட்டு அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. செவ்வாய் உங்கள் ராசிக்கு 7-ல் இருப்பதால் உடன் பிறந்தவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு விரும்பிய இட மாற்றங்கள் கிடைத்து மனம் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு அதிகப்படியான மதிப்பெண்களைப் பெறுவார்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணா மூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 5-ல் குரு சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகள் வழியில் கடந்த காலத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது மறைந்து மன நிம்மதி ஏற்படும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்ப தால் தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு நிலவிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய ஒரு நேரமென்பதால் பிறரிடம் பேசுகின்ற பொழுது சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறரால் முடிக்கமுடியாத பணிகளைகூட நீங்கள் எளிதில் முடித்து நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்களுக்கு உயர் படிப்பு சம்பந்தமாக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தந்து மனமகிழ்ச்சி ஏற்படும். பயணங்கள் மூலமாக அனுகூலங்கள் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு தீபமேற்றுவது நன்று.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், சனி, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித் துச் செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரமென்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு இருக்க வேண்டும். குறிப்பாக வயது மூத்தவர் களிடம் வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப் பிடிக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒருசிலர் செய்யக் கூடிய செயல்கள் காரணமாக நியாயப்படி உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக் கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு தேவையில்லாத சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்குகளை சரியான முறையில் பராமரித்துக்கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பது மட்டுமில்லாமல் உடனிருப்பவரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் பணியில் கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் சக நண்பர்களிடம் சற்று கவனத்தோடு இருப்பது உத்தமம். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்று.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் செவ்வாய், 12-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், உறவினர்கள் பகை ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது, எதிலும் பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய நேரமென்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்க வேண்டும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இருக்காது. மறைமுக எதிர்ப்புகள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையக் கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். மேலதிகாரியிடம் தேவையற்ற வகையில் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் படிப்பில் கவனம் செலுத்தினாலும் உடன் இருப்பவர்கள் உங்களை வேற்றுபாதைக்கு அழைத்து செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது வளமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 22.