முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: கிருத்திகை- 2.
செவ்வாய்: பூரட்டாதி- 3.
புதன் : கிருத்திகை- 4
குரு: உத்திரட்டாதி- 1.
சுக்கிரன் : ரேவதி- 1.
சனி: அவிட்டம்- 3.
ராகு: கிருத்திகை- 1.
கேது: விசாகம்- 3.
கிரக மாற்றம்:
சித்திரை 3 (17-5-2022) மீன செவ்வாய் (காலை 9.32).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
16-5-2022 காலை 7.53 மணிக்கு விருச்சிகம்.
18-5-2022 காலை 8.09 மணிக்கு தனுசு.
20-5-2022 காலை 8.45 மணிக்கு மகரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக இருக்கவும். குறிப்பாக குடும்பத்தில் வீண்வாக்குவாதங்கள் அதிகரிக்கக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. ராசிக்கு 12-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பண விஷயத்திலும் ஏற்றத்தாழ்வான நிலையிருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் 17-ஆம் தேதிமுதல் 12-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள் கூட தடைப்படும். இவ்வாரத்தில் சனி லாப ஸ்தானத் தில் அதிசாரமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து, அதன் மூலம் நெருக்கடி களை எதிர்கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத் தோடு செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் நீண்டநாட்களாக முடிக்காத பணிகளை வரும் நாட்களில் முடித்துவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு காரணமாக அலைச்சல், உடனிருப்பவர்களிடம் சிறிது மனஸ்தாபங்கள் ஏற்படும். அதேசமயம் உழைப்புக்கான ஆதாயங்களை அடையலாம். மேலதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். இவ்வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பொருளாதாரரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். 6-ல் கேது, 11-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். இவ்வாரத்தில் செவ்வாய் 10, 11-ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய மதிப்பும் மரியாதை யும் அதிகரிக்கும். கடந்தகால வம்பு வழக்குகள் தற்போது முடிவுக்கு வரும். குடும்பத்திற்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். இதுநாள்வரை 12-ல் சஞ்சரித்த சூரியன் தற்போது ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த வீண் செலவுகள் எல்லாம் குறைந்து சேமிக்குமளவுக்கு பொருளாதாரநிலை இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு தக்க நேரத்தில் கிடைப்பதால் கடினமான பணியைக்கூட எளிதில் செய்து முடிக்கும் வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். அரசு அதிகாரிகளுடைய உதவி சிறப் பாக இருக்கும். தொழில்ரீதியாக இருந்த பொருட்தேக்கங்கள் விலகி போட்ட முதலீட்டைவிட அதிகப்படியான லாபங்களை அடையமுடியும். வேலைக் குச் செல்பவர்களுக்கு அதிகாரிகளிடமிருந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமுகமான நிலை உண்டாகும். உங்கள் உழைப்புக்கான பலனை தற்போது முழுமையாக அடைவீர்கள். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு முழுமை யான அனுகூலங்கள் கிடைக் கும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் மாதக்கோளான சூரியனுடன் இணைந்து 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. நீங்கள் நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். சூழ்நிலைக்குத் தக்கவாறு உங்களை மாற்றிக்கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. குரு 10-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் தேவையற்ற தேக்கம், நீங்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் பணம் கைக்குக் கிடைக்காத நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு லாபஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் திறமை உங்களிடம் இருக்குமென்றாலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. 17-ஆம் தேதிமுதல் செவ்வாய் 10-ல் சஞ்சரிக்கவிருப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத வாய்ப்புகள் கிடைத்து ஒரு நல்ல நிலையை எட்டமுடியும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் வேலையாட்கள் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். நீங்கள் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் சப்ளை செய்யமுடியும். போட்டிகள் அதிகரிக்கும் நேரமென்பதால் சிறு வாய்ப்பைக்கூட தவறவிடாமல் நிதானத் தோடு செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து மனநிம்மதி ஏற்படும். மற்றவர்கள் பணியையும் நீங்கள் சேர்த்துச் செய்ய வேண்டிய நிலை இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருப்பதால் வெளிநபர்களால் ஏற்படும் இடையூறுகளை எளிதில் சமாளிக்கமுடியும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் மிகவும் அனுகூலமானவையாக இருக்கும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் நேரமாக இருக்கும். ஒரு பெரிய இடத்து நட்புமூலம் பொருளாதார அனுகூலங்களைப் பெறுவீர்கள். ராசிக்கு 9-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுடைய நீண்ட நாள் விருப்பங்கள் வரும் நாட்களில் பூர்த்தியாகும். தற்போது செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பது சில உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்றா லும், 17-ஆம் தேதிமுதல் செவ்வாய் 9-ல் சஞ்சரிப்பதால், இருக்கும் சிறுசிறு பிரச்சினைகளும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் உங்களுடைய திட்டங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் உங்களை நாடிவரும். வேலையாட்களால் சிறுசிறு இடையூறுகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் திறன் ஏற்படும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு உங்கள்மீதிருந்த வீண் பழிச்சொற்கள் விலகி நிம்மதியுடன் பணியாற்றமுடியும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடையும் வாய்ப்புண்டு. ஒருசிலருக்கு வெளிமாநில தொடர்புகள்மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக் கும். வாகனங்களில் செல்லும்பொழுது நிதானத் தைக் கடைப்பிடிப்பது நல்லது. புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் பல்வேறு அனுகூலங்களை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன் 2, 11-க்கு அதிபதியான புதன் சேர்க்கைப் பெற்று தொழில் ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால், எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். குரு, சுக்கிரன் 8-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார எதிர் பார்ப்புகள் நிறைவேற இடையூறுகள் இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொள்வது, கையிருப்பைக்கொண்டு செலவுசெய்வது நல்லது. ராசிக்கு 7-ல் சனி, 7, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்துடன் இருப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சூழ்நிலைக்கேற்றவாறு செயல்படவும். உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத் தில் உங்களின் தனித் திறமையால் ஒருசில அனுகூலங்களை அடைவீர்கள். நியாயப்படி உங்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கூட தடைப்படும் நேரமென்பதால் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக்கூட தவறவிடாமல் பயன் படுத்திக்கொள்வது நல்லது. வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்துச்சென்றால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உத்தியோகஸ் தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும், அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் பலம் ஏற்படும். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட்டால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்கமுடியும். ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அனுகூலங்களை அடையும் வாய்ப்புண்டு.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
குரு பகவான் சுக்கிரனுடன் 7-ல் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருந்த தடங்கல்கள் விலகி மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். ஒருசிலருக்கு வீடு, மனை வாங்குவதற்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலங்கள் ஏற்படும். சனி அதிசாரமாக 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு பல்வேறு வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்களுக்கிருந்த வம்பு வழக்குகள், நீண்டநாள் பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல முடிவு கிடைக்கும். ராசியாதிபதி புதன், சூரியனுடன் 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர்த் தொடர்புகள்மூலம் சிறப்பான ஆதாயங்களை அடைவீர்கள். 17-ஆம் தேதிமுதல் செவ்வாய் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிகளுக்கான ஆதாயங்களைத் தற்போது அடைவீர்கள். அரசு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழிலை விரிவுபடுத்துவதற்கான செயல்களைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலங்களைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் எதிர்பார்த்த பதவி உயர்வையும் அடைவீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பெரிய நிறுவனத்தின் தொடர்பு கிடைக்கும் யோகமிருக்கிறது. செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், குருவுடன் 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். பொருளாதாரரீதியாக கடுமையான நெருக்கடி, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற இடையூறுகள் ஏற்படும். சூரியன், புதனுடன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் மிகவும் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டிய நேரமாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக செயல்பட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் இருக்குமென்றாலும், 17-ஆம் தேதிமுதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியையும் சமாளித்து ஏற்றத்தை அடையலாம். எதிர்பாராத உதவிகளால் அனுகூலங்கள் ஏற்படும். கூட்டாளிகளை மட்டும் அனுசரித்துச் சென்றுவிட்டால் போட்ட முதலீட்டினை எடுத்துவிட முடியும். வெளிநபர்களிடம் தொழிலைப் பற்றி பேசாமலிருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு இருக்கவும். வாக்குறுதி கொடுப்பதைத் தற்போது தள்ளிவைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய உடனிருப்பவர்களே இடையூறு செய்வார்கள். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது, முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மேலதிகாரிகள் சொல்படி நடந்துகொள்வது உத்தமம். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் சில ஏற்பட்டு நெருக்கடிகள் சற்று குறையும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு ஐந்தில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருக்கும். உங்களது அனைத்துத் தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். மங்களகரமான சுப காரியங்கள் குடும்பத்தில் அரங்கேறி மகிழ்ச்சி ஏற்படும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகளெல்லாம் படிப்படியாக விலகி நிம்மதி உண்டாகும். தற்போது 4-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் 17-ஆம் தேதிமுதல் 5-ல் சஞ்சரிக்கவிருப்பதால் உங்களுக் குள்ள அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து அனுகூலமான பலன்களை அடைவீர்கள். சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்குமென்றாலும், வெளிநபர்களின் செயல்களால் தேவையற்ற நிம்மதிக் குறைவு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உங்களின் நீண்டநாள் எண்ணங்களெல்லாம் வரும் நாட்களில் நிறைவேறக்கூடிய யோகமுண்டு. தொழிலுக்காக நவீன கருவிகள் வாங்கும் வாய்ப்பு, அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் யோகம் ஏற்படும். ஒரு பெரிய மனிதருடைய ஆதரவு கிடைப்பதால் உங்களின் நீண்டநாளைய நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல், உங்களின் திறமைகளை வெளிக்காட்ட சாதகமான நிலை ஏற்படும். வெளியூர், வெளிநாடுகள்மூலமாக ஒரு அனுகூலமான செய்தி கிடைக்கும். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எடுக்கும் முயற்சியில் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறும் வாய்ப்புண்டு. உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, உத்தமம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் சனி வலுவாக சஞ்சரிப்பதால் நீண்டநாளைய பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகி நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் உங்களது வலிமை அதிகரிக்கும். பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து உங்கள் நெருக்கடிகள் விலகுவது மட்டுமன்றி கடன்களையும் குறைக்கமுடியும். சுக்கிரன் 4-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, அசையும்- அசையா சொத்துவகையில் அனுகூலங்கள், சிலருக்கு புதிய பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். கேது 11-ல் இருப்பதால் புதிய செயல்களில் ஈடுபட்டால் ஆதாயங்களை அடையமுடியும். உற்றார்- உறவினரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமையான நிலை நிலவும். தொழில், வியாபாரத்தில் ஒரு நல்ல நிலையை அடையும் வாய்ப்புண்டு. தொழில் விருத்திக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். வேலையாட்களின் நீண்டநாளைய கோரிக்கைகளை நிறைவேற்றும் அளவுக்கு உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாட்களாக நிலவிய நெருக்கடிகள் எல்லாம் விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். நீண்டநாட்களாக வேலையில்லாமல் இருந்தவர்களுக்குக்கூட நல்ல வாய்ப்புகள் கிடைத்து கௌரவமான நிலையை எட்டமுடியும். பெண்கள் வழியில் அனுகூலங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 3-ல் குரு சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது, பணவிஷயத்தில் பொறுமையோடு செயல்படுவது நல்லது. தேவையற்ற நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். நீங்கள் நல்லதாகப் பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வார்கள். முடிந்தவரை குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசவேண்டாம். உங்கள் ராசிக்கு சர்ப்ப கிரகங்கள் கேந்திரங்களில் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, குறித்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது. ஒருசிலருக்கு எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போதிருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவும். சில நேரங்களில் நீங்களே நேரடியாக செயல்படுவதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தற்போது 2-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் 17-ஆம் தேதிமுதல் 3-ல் சஞ்சரிக்கவிருப்பதால் ஒருசில அனுகூலங்களைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். மற்றவர்கள் சொல்வதைக்கேட்டு குழப்பிக் கொள்ளாமல் இருப்பது சிறப்பு. எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிதானத் தோடு செயல்பட்டால் நிலைமையை சமாளிக்க முடியும். பிரதான கிரக சஞ்சாரம் சாதக மற்றிருந்தாலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதக மாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து பிரச்சினைகள் குறையும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலமான நிலையை அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம், எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளக்கூடிய பலம், சிறப்பான உடல்நலம் போன்றவற்றைப் பெறுவீர்கள். ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றியடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றும் பலம் ஏற்படும். நல்ல நட்புகள் உங்களை நாடிவரும். கடந்தகால வம்பு வழக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவதும், தூரப் பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. பொதுவாக எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களை நாடிவரும். கடந்த காலங்களில் நிலவிய பொருட் தேக்கங்கள் விலகி, போட்ட முதலீட்டைவிட நல்ல லாபத்தை ஈட்டமுடியும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் அதனை உங்களின் சாதூர்யமான செயல்பாடுகளால் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் புதிய ஆர்டர்களைப் பெறமுடியும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு மதிப்பு மிகுந்த பதவிகள் தேடிவரும். எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களை அடையமுடியும். ஆஞ்சனேயர் வழிபாடு, சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்களின் தனித்திறமையால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். குரு ஜென்ம ராசியில் சஞ்சரித்து 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களைப் பார்வை செய்வதால் நெருங்கியவர்களின் உதவியால் பொருளாதார அனுகூலங்களைப் பெறுவீர்கள். ராகு 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பதும், குடும்பத்திலுள்ளவர் களை அனுசரித்துச்செல்வதும் நல்லது. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் வரும் நாட்களில் நடக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக இருப்பதும், அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை சிறிதுகாலம் தள்ளிவைப்பதும் நல்லது. உடல்ரீதியான பிரச்சினைகள், அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போதிருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு எதிலும் நிதானமாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கூட்டாளி களின் உதவியால் ஒருசில ஆதாயங் களை அடையலாம். முடிந்தவரை உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் எவ்வளவு பெரிய நெருக்கடியையும் சமாளிக்கும் பலம் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் வேலை செய்பவர்களின் வேலையையும் நீங்களே செய்யவேண்டிய இக்கட்டான நிலை இருந்தாலும், நிலைமையை சமாளித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வாகனங்களில் செல்லும்பொழுது நிதானத்தோடு செல்வது நல்லது. புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எல்லா வகையிலும் அனுகூல மான பலன்களை அடையும் யோகமுண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை யம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நல்லது.