இந்த வார ராசிபலன் 15-12-2024 முதல் 21-12-2024 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-15-12-2024-21-12-2024

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: கேட்டை- 4.

சந்திரன்: மிருகசீரிடம்- 1.

செவ்வாய்: பூசம்- 3 (வ).

புதன்: அனுஷம்- 3 (வ).

குரு: ரோகிணி- 4 (வ).

சுக்கிரன்: திருவோணம்- 2.

சனி: சதயம்- 4.

ராகு: உத்திரட்டாதி- 2.

கேது: உத்திரம்- 4.

கிரக மாற்றம்:

15-12-2024 தனுசு சூரியன் இரவு 10.11 மணிக்கு

16-12-2024 புதன் (வ) நிவர்த்தி அதிகாலை 2.27 மணிக்கு

சந்திரன் மாறுதல்

ss

ஆரம்பம்: ரிஷபம்

15-12-2024 பகல் 3.04 மணிக்கு மிதுனம்.

17-12-2024 மாலை 6.47 மணிக்கு கடகம்.

20-12-2024 அதிகாலை 1.59 மணிக்கு சிம்மம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய அமைப்புகள் உண்டு. கடந்த ஒரு மாதகாலமாக 8-ல் சஞ்சரித்த சூரியன் திங்கட்கிழமை முதல் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய உடல் உபாதைகள் எல்லாம் தற்போது விலகி இனி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர் கள். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதி களை எளிதில் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத் தில் இருந்த நெருக்கடிகள் குறைந்து அரசுவழியாக எதிர்பார்த்த உதவிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலில் நல்ல லாபத்தை ஈட்டுவீர் கள். கூட்டாளிகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். அதிகாரியுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்துமுடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்கி பெரியோர் களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 16, 17.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 9-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்வீகச் சொத்துவகையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். வரும் திங்கட்கிழமைமுதல் மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியத் தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அமைப்பும் அதன்மூலம் அனுகூலங்களும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக இருப்பீர்கள் என்றாலும் பெரியோர்களிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 15, 18, 19.

மிதுனம்

(மிருகச

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: கேட்டை- 4.

சந்திரன்: மிருகசீரிடம்- 1.

செவ்வாய்: பூசம்- 3 (வ).

புதன்: அனுஷம்- 3 (வ).

குரு: ரோகிணி- 4 (வ).

சுக்கிரன்: திருவோணம்- 2.

சனி: சதயம்- 4.

ராகு: உத்திரட்டாதி- 2.

கேது: உத்திரம்- 4.

கிரக மாற்றம்:

15-12-2024 தனுசு சூரியன் இரவு 10.11 மணிக்கு

16-12-2024 புதன் (வ) நிவர்த்தி அதிகாலை 2.27 மணிக்கு

சந்திரன் மாறுதல்

ss

ஆரம்பம்: ரிஷபம்

15-12-2024 பகல் 3.04 மணிக்கு மிதுனம்.

17-12-2024 மாலை 6.47 மணிக்கு கடகம்.

20-12-2024 அதிகாலை 1.59 மணிக்கு சிம்மம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய அமைப்புகள் உண்டு. கடந்த ஒரு மாதகாலமாக 8-ல் சஞ்சரித்த சூரியன் திங்கட்கிழமை முதல் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய உடல் உபாதைகள் எல்லாம் தற்போது விலகி இனி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர் கள். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதி களை எளிதில் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத் தில் இருந்த நெருக்கடிகள் குறைந்து அரசுவழியாக எதிர்பார்த்த உதவிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலில் நல்ல லாபத்தை ஈட்டுவீர் கள். கூட்டாளிகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். அதிகாரியுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்துமுடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்கி பெரியோர் களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 16, 17.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 9-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்வீகச் சொத்துவகையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். வரும் திங்கட்கிழமைமுதல் மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியத் தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அமைப்பும் அதன்மூலம் அனுகூலங்களும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக இருப்பீர்கள் என்றாலும் பெரியோர்களிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 15, 18, 19.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாதக்கோள் என வர்ணிக்கப்படக் கூடிய சூரியன் திங்கட்கிழமைமுதல் 7-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தள்ளி வைப்பது தற்போதைக்கு உத்தமம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியானமுறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒருசில அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பதால் அலைச்சல், டென்ஷன், ஓய்வுநேரம் குறையக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் ஞாபக மறதி காரணமாக தேர்வுகளில் சரியான மதிப்பெண் எடுக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். படிப்பில் கவனமாக இருப்பது நல்லது. இந்த வாரத்தில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 20, 21.

ss

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது, 5-ல் புதன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும், திங்கட்கிழமை முதல் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் உங்களுக்கு பல்வேறு வகையில் அனுகூலத்தை தரக்கூடிய அமைப்பாகும். உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். குறிப்பாக சில நேரங்களில் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய வேலையையும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் உங்களின் தனித்திறமை காரணமாக எதையும் சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் காலபைரவரை வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 15, 18, 19.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தேவையில்லாத நெருக்கடி கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்ப தால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லவேண்டிய நேரமாகும். பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். தேவையற்ற செலவுகள் காரணமாக உங்களது கையிருப்பு குறையும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தடங்கல்கள் உண்டாகும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியானமுறையில் பராமரித்துக்கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு கூட்டாளிகளுடைய செயல்கள் மனஅமைதி குறைவை ஏற்படுத்தும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் வீண்பழிச்சொற்களை எதிர்கொள்ளக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு இருப்பது, மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, பாம்பு புற்றுக்குப்பால் விடுவதன்மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள் & 15, 16, 17, 20, 21.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 6-ல் சனி சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. நீங்கள் எதிர்பார்த்த பணவரவுகள் தக்கநேரத்தில் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய யோகமானது வரும் நாட்களில் இருக்கிறது. செவ்வாய் 11-ல் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எடுப்பது மட்டுமில்லாமல்; உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையக்கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் அனுகூல பலனைத் தரும். திறமைவாய்ந்த வேலையாட் கள் உங்கள் தொழி-ல் இணைவ தால் பணியில் நீங்கள் நிம்மதி யுடன் செயல்படமுடியும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். ஒருசிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லமுடியும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது அனுகூலமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதாலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். 8-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வரும் திங்கட்கிழமைமுதல் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர் கள் உறுதுணையாக இருப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அதிகாரி யிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருக்கக்கூடிய சண்டை, சச்சரவுகள் எல்லாம் முழுமையாக விலகி நல்லவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய யோகமானது உங்களுக்கு இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல்; போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரன், 7-ல் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். திங்கட்கிழமைமுதல் 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலை யிடாமல் இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தடங்கல்கள் ஏற்படும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக நீங்கள் தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக்கொள்வீர் கள். முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்கள்மூலமாக வீண்செலவுகள் ஏற்படும். பிள்ளைகள்வழியில் தேவையற்ற கவலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவருடைய வேலையையும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். ஒருசிலருக்கு சகஊழியரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நபர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் நிதானத் தோடு இருப்பது, படிப்பில் கவனம் செலுத்துவது தற்போதைக்கு நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 20, 21.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 2-ல் சுக்கிரன், 3-ல் சனி சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். கடந்த ஒரு மாதகாலமாக விரைய ஸ்தானத்தில் சஞ்சரித்த மாதக் கோளான சூரியன் திங்கட்கிழமைமுதல் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் தற்போது உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் ஓரளவுக்கு குறையக்கூடிய அமைப்பும், வீண்செலவுகள் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய யோகமும் உண்டாகும். மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் ஓரளவுக்கு குறைந்து வளமான பலன்கள் ஏற்படும். ஒருசிலருக்கு புதியவாய்ப்புகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் ஏற்றங்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 15, 16.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், திங்கட்கிழமை முதல் 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு ஏற்படக்கூடிய நேரமென்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். கூட்டாளிகளால் மன நிம்மதி குறைவு ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக உங்களது ஓய்வுநேரம் குறைவது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீதும் பழிச்சொற்களை சொல்வார்கள் என்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் வெகுளித்தனமாக மற்றவரிடம் பேசினாலும் உடனிருப்பவர்கள் உங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 10-ல் புதன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு வரும் திங்கட்கிழமைமுதல் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நல்ல வளர்ச்சியினை நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணவரவுகள் மிகமிக சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஏற்றமிகுந்த பலன்களைப் பெறக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு வெளியூர், வெளிநாடுகள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல், விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். நீண்டநாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வரும் நாட்களில் நல்லவாய்ப்புகள் கிடைத்து நல்ல நிலையை அடையமுடியும். மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். குடும்பத்தில் நெருங்கியவர்களை சற்று அனுசரித்துச் செல்வது, பேச்சில் பொறுமையோடு இருப்பது உத்தமம். இந்த வாரத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் ஓரளவுக்கு குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் மாதக்கோளான சூரியன் திங்கட்கிழமை முதல் 10-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தற்போது கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லாவிட்டாலும் உங்கள் தனித்திறனால் எந்த ஒரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள்மூலமாக தேவையில்லாத மனக் கசப்புகள் ஏற்படலாம் என்பதால் பொதுவாக பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் பணியில் நிம்மதி யுடன் செயல்படமுடியும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கைக்கூடும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் மேற்படிப்புக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டாகும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, கால பைரவரை தரிசிப்பதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 15, 20, 21.

bala201224
இதையும் படியுங்கள்
Subscribe