முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை- 600 026. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 2488 1038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: விசாகம்- 3.
செவ்வாய்: சுவாதி- 3.
புதன்: சுவாதி- 4.
குரு: அவிட்டம்- 2.
சுக்கிரன்: பூராடம்- 1.
சனி: திருவோணம்- 2.
ராகு: கிருத்திகை- 4.
கேது: அனுஷம்- 2.
கிரக மாற்றம்:
ஐப்பசி 30 (16-11-2021) விருச்சிக சூரியன் (பகல் 1.03).
கார்த்திகை 4 (20-11-2021)
கும்ப குரு (இரவு 11.31).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கும்பம்
14-11-2021 காலை 10.11 மணிக்கு மீனம்.
16-11-2021 இரவு 8.15 மணிக்கு மேஷம்.
19-11-2021 காலை 8.13 மணிக்கு ரிஷபம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2, 7-க்கு அதிபதி சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவு தேவைக்கேற்ற அளவு இருந்து எதையும் எதிர்கொள்வீர்கள். செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதாலும், சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதாலும் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. முடிந்தவரை உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய வாரமாகும். உங்களது குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கவும். வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்களைக் குறைத் துக்கொண்டு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மனைவி, பிள்ளைகளின் வழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம் என்பதால் சற்று கவனத்துடன் இருக்கவும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும். புதன், வியாழக்கிழமைகளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகளும், எதிர்பாராத உதவிகளும் கிடைத்து நெருக்கடிகள் சற்று குறையும். 20-ஆம் தேதிமுதல் குரு 11-ல் சஞ்சரிக்க உள்ளதால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டாலும், புதன் 7-ல் சஞ்சரிப்பதால் மதிநுட்பத்துடன் எதையும் சிறப் பாகக் கையாண்டு இலக்கை அடைந்துவிடுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் உங்கள் திறமையால் வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து நல்லபெயரை அடைவீர்கள்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் துணிவுடன் செயல்பட்டு அன்றாடப் பணிகளை சிறப்பாகச் செய்துமுடிப்பீர்கள். பணவரவு சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் என்றா லும், ராசியாதிபதி சுக்கிரன் 8-ல் மறைந்து சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொள்ளவும். சனி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். கடந்த கால மருத்துவச்செலவுகள் குறைந்து நிம்மதி ஏற்படும். சர்ப்ப கிரகங்கள் 1, 7-ல் சஞ்சரிப்பதாலும், 16-ஆம் தேதிமுதல் சூரியன் 7-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. சந்திரன் இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் அனுகூல மாக சஞ்சரிப்பதால், இந்த நாட்களில் செய்யும் செயல்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருந்தாலும் புதன், வியாழக்கிழமைகளில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே சிக்கனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச்சென்றால் போட்ட முதலீட்டை எடுத்துவிடலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். வெளியூர்மூலம் எதிர்பார்த்த நல்லசெய்தி கிடைக்கும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 5-ல் சஞ்சரிப்பதாலும், 16-ஆம் தேதிமுதல் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் சகலவிதத்திலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக அமைந்து பொருளாதாரநிலை மேலோங்கி இருக்கும். சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் குறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிலும் சாமர்த்தியமாக செயல் பட்டு இருக்குமிடத்தில் நல்லபெயர் எடுப்பீர் கள். நவீனகரமான பொருட் களை வாங்குவீர்கள். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப் பதால் முயற்சிகளில் எளிதில் வெற்றிபெற்று அதிஷ்டகரமான பலன்கள் கிடைக்கும். வெள்ளி, சனிக்கிழமைகளில் வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் சற்று கவனத் துடன் இருப்பது நல்லது. கேது 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். 20-ஆம் தேதிமுதல் குரு 9-ல் சஞ்சரிப்பதால், தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். 8-ல் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை எடுத்துக்கொள்ளவும். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வுகளை அடையமுடியும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால், அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருந்தாலும் ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளிப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானமாக இருக்கவும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடனிருப் பவர்களால் இடையூறுகள் ஏற்படும் என்பதால் சிந்தித்துப் பேசவும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு களால் குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடும். கேது 5-ல் சஞ்சரிப்பதாலும், சூரியன் 16-ஆம் தேதிமுதல் 5-ல் சஞ்சரிப்பதாலும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்கவும். இவ்வாரத்தில் சந்திரன் 10, 11 ஆகிய ராசிகளில் புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் சஞ்சரிப்பதால், குறிப்பிட்ட நாட்களில் உங்களின் செயல்களுக்குப் பரிபூரண வெற்றி கிடைத்து நல்ல நிலையை அடைவீர்கள். புதன் 4-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வர வேண்டிய வாய்ப்புகளும் வந்துசேரும். உத்தியோகஸ் தர்கள் எதிர்பார்க்கும் உயர்வு கள் சிறு தடைக்குப் பின் கிட்டும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வளமான பலனை அடைவீர்கள். சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், நினைத்தது நடக்கும் யோகம் உண்டாகும். பணவரவுக்குப் பஞ்சமில்லாமல் உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந் திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்துசேரும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சந்திரன் 8-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற குழப்பங்கள், எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தடைப்படும் நிலை உருவாகும். வெள்ளி, சனிக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு சாதகப்பலன் கிடைக்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரரீதியாக பொருளாதாரம் சிறப் பாக இருக்கும். ராகு 10-ல் சஞ்சரிப்பதால் வம்பு வழக்குகளெல்லாம் முழுமையாக மறையும். புதிய யுக்திகளைக் கையாண்டு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புண்டு.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 2-ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு ஓரளவு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 16-ஆம் தேதிமுதல் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால், எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியை அடைவீர் கள். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் செயல்படுவது, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது சிறப்பு. பொருளாதார நிலை ஏற்ற- இறக்கமாக இருந்தாலும், சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் தக்கநேரத்தில் பண உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளமுடியும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ராசிக்கு 7-ல் சந்திரன் பலமாக சஞ்சரிப்பதால் உங்களின் செயல்களுக்குப் பரிபூரண வெற்றி கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். கேது 3-ல், சனி 5-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சல்களைக் குறைத் துக்கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால், உங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முக்கிய விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கவும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் செவ்வாய், 1, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது, முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது தற்போதைய நேரத்திற்கு உகந்தது. ராகு 8-ல், கேது 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சூழ்நிலைக்குத் தக்கவாறு பிரச்சினைகளைக் கையாள்வது நல்லது. நீங்கள் நல்ல எண்ணத்துடன் பேசினாலும் வீண் பழிச்சொல் ஏற்படலாம் என்பதால், பேச்சைக் குறைப்பதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். ஜென்ம ராசியில் புதன், ராசியாதிபதி சுக்கிரன் 3-ல் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனு கூலமான பலன்கள் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும் வாய்ப்புண்டு. உங்கள் ராசிக்கு பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் மேன்மை மிகுந்த பலன்களை அடைவீர்கள். வெள்ளி, சனிக்கிழமைகளில் சந்திரன் 8-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற குழப்பத்தை எதிர்கொள்ள நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் வரும் நாட்களில் உங்களுக்கு உள்ள பணிச்சுமை குறைந்து நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே எதிலும் திறம்பட செயல்படமுடியும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால், 20-ஆம் தேதிமுதல் குரு 5-ல் சஞ்சரிப்பதால், நெருக்கடிகள் குறைந்து வாழ்வில் சிறப் பான நிலை ஏற்படும். பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபடுவதும், சனிக்கிழமை சனி பகவானை வழிபடுவதும், சனிக்கவசம் படிப்பதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதால் உறவினர் களின் ஆதரவு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் சனி 3-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும், ராசியாதிபதி செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு புதிய நட்புமூலம் அனுகூலம் அடையும் யோகமும் உள்ளது. சூரியன் 16-ஆம் தேதி முதல் ஜென்ம ராசியில் கேது சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதால் பெரியவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிலவும் நெருக்கடிகள் குறைந்து லாபகரமான பலன்கள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு இவ்வாரத்தில் உண்டு. கொடுக்கல்- வாங்கலில் சாமர்த்தியமாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசிக்கு 11-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளகூடிய பலம் உண்டாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும். ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். ராசியாதிபதி குரு சாதகமாக சஞ்சரிப்பதால் திருமண சுப காரியங்களில் நல்லது நடக்கும். சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உற்றார்- உறவினர்களில் ஆதரவு மனநிம்மதியை ஏற்படுத்தும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் இந்த நாட்களில் நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் தேவையற்ற அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். ராகு 6-ல் சிறப்பாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் ஓரளவு முன்னேற் றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் அவர்கள்மூலம் வரவேண்டிய வாய்ப்புகள் வந்துசேரும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வேலையில் சிறப் பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். ஆன்மிக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புண்டு. சனிப்ரீதியாக ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலைசாற்றி வழிபடுவதாலும், விநாயகருக்கு அறுகம்புல் மாலைசாற்றி வழிபடுவதாலும் துன்பங்கள் நீங்கும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ஆம் அதிபதி செவ்வாய், 9-ஆம் அதிபதி புதன் சேர்க்கைபெற்று 10-ல் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால், சிறப்பான பணவரவு, நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். 10-ல் சஞ்சரிக்கும் சூரியன் 16-ஆம் தேதிமுதல் 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார்- உறவினர்கள் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகி சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். சந்திரன் இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய கிழமைகளில் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறமுடியும். புதன், வியாழக்கிழமைகளில் எளிதில் முடியவேண்டிய காரியங்கள்கூட தடைப்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வரும். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். விரும்பிய இடமாற்றத்தைப் பெறமுடியும். 20-ஆம் தேதிமுதல் குரு 2-ல் சஞ்சரிக்க இருப்பதால், தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறைந்து வாழவில் சுபிட்சம் ஏற்படும். செவ்வாய்க்கிழமை துர்க்கையம்மனுக் கும், வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கும் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சரளமான பணவரவு ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ராகு 4-ல், ராசியாதிபதி சனி 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சலால் உடல் அசதி ஏற்படலாம். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. எளிதில் முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதப்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமின் கொடுப்பதைத் தவிர்க்கவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருக்கவும். சந்திரன் இவ்வாரத்தில் புதன், வியாழக்கிழமைகளில் அனுகூலமாக சஞ்சரிப்பதால், உங்கள் செயல்களுக்கு வெற்றி கிடைக்கும். வெள்ளி, சனிக்கிழமைகளில் சற்று குழப்பம், நெருங்கியவர்கள் பகை ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் செயல்படவும். புதன் 9-ல், 16-ஆம் தேதிமுதல் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக உழைப்பிற்கேற்ற ஆதாயத்தை அடைவீர் கள். எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு நன்றாக இருக்காது என்பதால், நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். ஆன்மிக- தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளியூர்மூலம் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். சனி பகவானுக்கு கருப்புநிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்தால் பாதிப்புகள் குறையும். கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய சிறப்பான வாரமாக இவ்வாரம் இருக்கும். இதுவரை 8-ல் சஞ்சரித்த சூரியன் 16-ஆம் தேதிமுதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த சிறுசிறு பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் நன்றாக இருக்கும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார்- உறவினர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் சந்திரன் நல்ல ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் இந்த நாட்களில் எளிதில் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்துவந்த போட்டி, பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர் களுக்கு நீண்டநாட்களாக தாமதப்பட்ட உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்ளும்போது சற்று பொறுமையைக் கையாள்வது நல்லது. கார்த்திகை தீபத்தன்று விரதமிருந்து சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானை வழிபடுவதாலும், சிவ மந்திரங்கள் சொல்வதா லும் சிறப்பான பலன்களை அடையலாம். முடிந்தால் பௌர்ணமியன்று திருவண்ணா மலை சென்று கிரிவலம் வரவும்.