எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன் : ரேவதி- 4.
செவ்வாய் : பூசம்- 1.
புதன்: உத்திரட்டாதி- 1.
குரு : மிருகசீரிடம்- 1.
சுக்கிரன்: பூரட்டாதி- 4 (வ).
சனி: பூரட்டாதி- 4.
ராகு: பூரட்டாதி- 4.
கேது: உத்திரம்- 2.
கிரக மாற்றம்:
13-4-2025 சுக்கிரன் வக்ர முடிவு காலை 6.32 மணிக்கு.
14-4-2025 மேஷ சூரியன் காலை 3.21 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கன்னி
13-4-2025 காலை 7.38 மணிக்கு துலாம்.
15-4-2025 இரவு 8.27 மணிக்கு விருச்சிகம்.
18-4-2025 காலை 8.21 மணிக்கு தனுசு.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் கேது சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தி யாகும் என்றாலும் ராசியாதிபதி செவ்வாய் 4-ல் இருப்பதாலும், திங்கட்கிழமை முதல் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத் தோடு இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமை யைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருந்தாலும் வேலையாட்களு டைய ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சூழலுக்கு ஏற்றவாறு கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திகொள்வது நல்லது. வேலைக்கு செல்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் சற்று கவனத்தோடு செயல்பட்டால் எடுத்த பணியை முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஒருசிலருக்கு பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். உடன்பிறந்தவர்களை சற்று அனுசரித்துச் செல்வது உத்தமம். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்கையம்மனுக்கு தீபமேற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் சனி, ராகு, சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கமுடியும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் குறையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த கடந்தகால தேக்கங்கள் எல்லாம் தற்போது குறைந்து லாபகரமான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர் பார்த்த உதவிகளை தற்போது பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்பு கள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரியுடைய ஆதரவு மிகச்சிறப் பாக இருக்கும். பதவி உயர்வை எதிர்பார்த்தவர்களுக்கு வரும் நாட்களில் நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் சற்று விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி படிப்பில் சிறப்பாக செயல்பட்டு எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான மதிப்பெண்களைப் பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15, 16, 17.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன் : ரேவதி- 4.
செவ்வாய் : பூசம்- 1.
புதன்: உத்திரட்டாதி- 1.
குரு : மிருகசீரிடம்- 1.
சுக்கிரன்: பூரட்டாதி- 4 (வ).
சனி: பூரட்டாதி- 4.
ராகு: பூரட்டாதி- 4.
கேது: உத்திரம்- 2.
கிரக மாற்றம்:
13-4-2025 சுக்கிரன் வக்ர முடிவு காலை 6.32 மணிக்கு.
14-4-2025 மேஷ சூரியன் காலை 3.21 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கன்னி
13-4-2025 காலை 7.38 மணிக்கு துலாம்.
15-4-2025 இரவு 8.27 மணிக்கு விருச்சிகம்.
18-4-2025 காலை 8.21 மணிக்கு தனுசு.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் கேது சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தி யாகும் என்றாலும் ராசியாதிபதி செவ்வாய் 4-ல் இருப்பதாலும், திங்கட்கிழமை முதல் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத் தோடு இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமை யைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருந்தாலும் வேலையாட்களு டைய ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சூழலுக்கு ஏற்றவாறு கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திகொள்வது நல்லது. வேலைக்கு செல்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் சற்று கவனத்தோடு செயல்பட்டால் எடுத்த பணியை முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஒருசிலருக்கு பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். உடன்பிறந்தவர்களை சற்று அனுசரித்துச் செல்வது உத்தமம். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்கையம்மனுக்கு தீபமேற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் சனி, ராகு, சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கமுடியும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் குறையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த கடந்தகால தேக்கங்கள் எல்லாம் தற்போது குறைந்து லாபகரமான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர் பார்த்த உதவிகளை தற்போது பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்பு கள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரியுடைய ஆதரவு மிகச்சிறப் பாக இருக்கும். பதவி உயர்வை எதிர்பார்த்தவர்களுக்கு வரும் நாட்களில் நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் சற்று விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி படிப்பில் சிறப்பாக செயல்பட்டு எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான மதிப்பெண்களைப் பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15, 16, 17.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதாலும், திங்கட்கிழமைமுதல் லாப ஸ்தானத்தில் மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் உங்கள் வாழ்வில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்படும். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 2-ல் இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்துமுடிக்க முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல நிலையினை அடைய முடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், புதன், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பது மிகவும் அனுகூலமான அமைப்பு என்பதால் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களை பெறுவீர் கள். கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் எல்லாம் விலகி தற்போது எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். உங்களின் பொருளாதாரநிலை திருப்தி கரமாக இருந்து உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். உங்கள் ராசிக்கு திங்கட்கிழமைமுதல் சூரியன் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவது மட்டு மில்லாமல் புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தொழில்ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். ஒருசிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் நல்லது நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது சுறுசுறுப்பாக செயல்பட்டு பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறுவீர்கள். முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதுமூலம் ஏற்றங்களை பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 8-ல் ராகு, சனி, சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதாலும், 10-ல் குரு சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானத்தோடு இருக்கவேண்டும். தேவையில்லாத நெருக்கடிகள் உண்டாகும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். போட்ட முதலை எடுக்க தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும். வேலையாட்கள் மூலமாக எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் திங்கட்கிழமைமுதல் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இக்கட்டான நேரத்தில் ஒருசில உதவிகள் கிடைத்து இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்க முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் மிகவும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் கவனத்தோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்களுக்கு தேவையில்லாத வகையில் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதன்மூலமாக அடையவேண்டிய இலக்கை அடைய முடியும். துர்க்கையம்மனை வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 7-ல் சஞ்சரிப்பதால் எதிலும் உற்சாகத் தோடு செயல்படுவீர்கள். குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமைந்து ஜென்ம ராசியை பார்ப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் நன்றாக இருக்கும். செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சற்று முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். பிள்ளைகள் வழியில் இருந்துவந்த மனக்கவலைகள் எல்லாம் தற்போது குறைந்து நிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து அழைப்பு வரும். மாணவ- மாணவியர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொண்டால் நல்ல மதிப்பெண்களை எடுப்பது மட்டுமில்லாமல் விரும்பிய மேற்படிப்பை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி, ராகு சஞ்சரிப்பதாலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். எதிர்பாராத தனசேர்க்கை ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும். நீண்டநாட்களாக இருந்துவந்த பொருளாதார நெருக்கடிகள் தற்போது சற்றுக்குறையும். மாதக் கோளான சூரியன் திங்கட்கிழமைமுதல் 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் நெருங்கியவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை பெறக்கூடிய யோகமானது இருக்கிறது. வேலையாட்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவைகளைக் குறித்த நேரத்தில் பூர்த்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கான பலனை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, வெங்கடேசப் பெருமாளைத் தரிசிப்பது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15, 17, 18.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், புதன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தற்போது 5-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் திங்கட்கிழமைமுதல் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். அரசாங்க வகையில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை பெறக்கூடிய நேரமாகும். உங்களுக்கு இருந்த மறைமுக போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகமும், எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது குறைவதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் உயர் படிப்புக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற ராகுகால நேரத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 4-ல் சனி, ராகு, 6-ல் குரு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியவேண்டிய விஷயங்கள் தாமதமாகும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணவரவில் ஏற்ற- இறக்க மான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். நம்பியவர்களே உங்களுக்கு துரோகம் செய்யக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட் களை நம்பாமல் சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். பெண்கள்வழியில் தேவையற்ற வீண்செலவுகள் உண்டாகும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது, உடன்பிறந்தவர்களிடம் பேசுகின்றபோது நிதானத் தோடு இருப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு படிப்பில் நீங்கள் கவனம் செலுத்தினாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச்செல்லலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். முருக வழிபாடு மேற்கொள்வதும், அம்மன் வழிபாடு மேற்கொள்வதுமூலம் அனுகூலங்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15, 18, 19.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, ராகு, 5-ல் குரு சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் மிகவும் சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், திங்கட்கிழமைமுதல் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வேலைப்பளு சற்று கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை பெறுவீர்கள். ஒருசிலருக்கு இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம். திருமண சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த வம்பு, வழக்குகள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் வேலையை இணைத்து செய்யவேண்டிய நெருக்கடிகள் இருந்தாலும் பதவி உயர்வுகளை அடையக்கூடிய யோகங்களும், பொருளாதார முன்னேற்றங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்களும் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் தற்போது சற்று கவனத்தோடு இருந்தால் நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது வளமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15, 16, 17.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், திங்கட்கிழமைமுதல் 3-ல் மாதக்கோளான சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து மனநிம்மதி ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகால நெருக்கடிகள் தற்போது குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்களது மன கவலைகள் தற்போது குறையும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, ராகு இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் சனி, ராகு, திங்கட்கிழமை முதல் 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன் கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய நேரமாகும். சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்பட்டு உங்கள் சேமிப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். பொதுவாக தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய நேரமாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களைச் சொல்லக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு ஞாபகமறதி ஏற்படலாம் என்பதால் மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19.