முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026.
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூரட்டாதி- 3.
செவ்வாய்: திருவோணம்- 1.
புதன் : சதயம்- 2.
குரு: பூரட்டாதி- 1.
சுக்கிரன் : திருவோணம்- 1.
சனி: அவிட்டம்- 1.
ராகு: கிருத்திகை- 2.
கேது: விசாகம்- 4.
கிரக மாற்றம்:
மாசி 30 (14-3-2022) மீன சூரியன் (இரவு 12.16).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மிதுனம்.
13-3-2022 பகல் 1.30 மணிக்கு கடகம்.
15-3-2022 இரவு 11.33 மணிக்கு சிம்மம்.
18-3-2022 காலை 6.32 மணிக்கு கன்னி.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
குரு, புதன் இணைந்து லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக சிறப்பான நிலை இருந்து சகலவிதத்திலும் அனுகூலங்களை அடைவீர் கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் நேரமாகும். உற்றார்- உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து ரீதியாக நீங்கள் எதிர்பார்த்த ஆதாயங்களை வரும் நாட்களில் எளிதில் அடையமுடியும். ராசியாதிபதி செவ்வாய், சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் கௌரவப் பதவிகள் உங்களைத் தேடிவரும். ராசிக்கு 2-ல் ராகு, 15-ஆம் தேதிமுதல் சூரியன் 12-ல் சஞ்சரிப்ப தால், பேச்சில் பொறுமை யுடன் இருப்பது, குடும்ப உறுப்பினர்களை அனு சரித்துச் செல்வது நல்லது. ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன் களை அடைவீர்கள். ஆரோக் கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள் தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல வளர்ச்சியை அடையமுடியும். அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரைகளைக் கேட்டு முக்கிய முடிவுகளை எடுத்தால் தொழிலைச் சிறப்பாகக் கையாள முடியும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும் நாட்களில் கிடைக் கும். என்றாலும், சம்பளம் சற்று குறைவாக இருக் கும். சனி பகவானுக்கு எள்தீபமேற்றி வழிபடுவதா லும், விநாயகருக்கு அறுகம்புல் மாலைசாற்றி வழிபடுவதாலும் நன்மைகள் பல அடையலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், சனி சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். சூரியன் இவ்வாரத்தில் ராசிக்கு 10, 11-ல் சஞ்சரிப்ப தால் எதிர்பாராத வகையில் தனவரவுகள் ஏற்பட்டு தேவைகள் பூர்த்தியாகும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத் துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் பேச்சில் நிதானத்துடன் இருந்தால் குடும்பத் தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்பு களால் சில நேரங்களில் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்கள் முயற்சி களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பெரிய மனிதர் களுடைய ஆலோசனைகளும் பொருளாதார உதவிகளும் கிடைப்பதால் நீண்டநாட்களாக உள்ள நெருக்கடிகள் படிப்படியாகக் குறைந்து நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்பிற்கான பலனை அடைய முனைப்புடன் செயல்பட வேண்டியிருக் கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும் என்றாலும், தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஏற்படவிருக்கும் கிரக மாற்றங்கள் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி யினை உண்டாக்கும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு செவ்வரளி மாலைசாற்றி தீபமேற்றி வழிபடுவதாலும், வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சாற்றி நெய்தீபமேற்றி வழிபடுவதாலும் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன், குரு சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவு கள் மிகவும் சாதகமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற் றும் யோகம் வரும் நாட்களில் உண்டு. மங்கள கரமான சுபகாரியங்கள் எளிதில் கை கூடும். 15-ஆம் தேதிமுதல் சூரியன் 10-ல் சஞ்சரிப்ப தால் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சனி, செவ்வாய் 8-ல் சஞ்சரிப்ப தால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வாகனங்களில் சற்று பொறுமையுடன் செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருக்குமென்றாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம். புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு சிறப் பான அனுகூலங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பொருட்தேக்கங்களின்றி சரள மான நிலை ஏற்பட்டு லாபங்களை அடைவீர் கள். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பதால் அனுகூலங்களைப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளா தார உதவிகள் கிடைக்கும். புதிய முடிவுகளை சற்று சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. உத்தியோகரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங் கள் பெற்று குடும்பத்துடன் இணைந்து வாழ முடியும். உங்கள்மீதிருந்த பழிச்சொற்கள் விலகி நல்ல பெயர் எடுப்பீர்கள். சனிக்கிழமை சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி எள்தீபமேற்றி வழிபடுவது, கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது மிக நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 7-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமை யுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத் திற்குக்கூட வாக்குவாதங்கள் ஏற்படும் நேரமென்பதால் பேச்சில் பொறுமையுடன் இருக்கவும். குறிப்பாக உறவினர்களை அனு சரித்துச் செல்வது, உடல் நலத்தில் அக்கறை எடுத் துக்கொள்வது உத்தமம். ராசிக்கு 8-ல் புதன், குரு சஞ்சரிப்பதால் பொரு ளாதாரரீதியாக நெருக் கடி, வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தற்போது 8-ல் சஞ்சரிக் கும் சூரியன் 15-ஆம் தேதி முதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் ஒருசில ஆதாயங்களை அடைய முடியும். பிரதான கிரக சஞ்சாரம் சாகமற்று இருந்தாலும் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் அன்றாட செயல்களில் ஒருசில பொருளாதார அனுகூலங்களைப் பெற்று கஷ்டங்கள் சற்று குறையும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும், ராகு 11-ல் இருப்பதால் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். உத்தியோகஸ் தர்களுக்கு மற்றவர்கள் உங்கள்மீது குறை களைக் கூறினாலும் அதைப்பற்றி வருத்தப் படாமல் பொறுமையுடன் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்திவந்தால், அடுத்த மாதம் ஏற்படும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு அனைத்து பிரச்சினைகளும் குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். தினமும் விநாய கருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து வழி பட்டால் தடைப்பட்ட காரியங்கள் கைகூடும். பிரதோஷத்தன்று சிவ வழிபாடு செய்வது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு உபஜய ஸ்தானமான 6-ல் செவ்வாய், சனி வலுப்பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு சிறப்பான ஆதாயங்களை அடைவீர்கள். நீண்டநாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகள்கூட வரும் நாட்களில் உங்களுக்கு சாதகமாக முடியும். குரு, புதன் 7-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் நன்றாக இருந்து வாழ்க்கைத் தரம் உயரும். எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக லாபகரமான பலனை அடையமுடியும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகள் வெற்றிதரும். ஞாயிறு, புதன், வியாழக் கிழமைகளில் மிகவும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உங்கள் ராசியாதிபதி சூரியன் தற்போது 7-ல் சஞ்சரிப்பதாலும், 15-ஆம் தேதிமுதல் 8-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப் படியான அனுகூலங்களை அடைவீர்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார் கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர் பார்க்கும் அரசுவழி உத்தரவுகள் வரும் நாட்களில் கிடைத்து மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் நிம்மதியுடன் பணிபுரிய முடியுமென்றாலும், சில நேரங்களில் அதிகாரி களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்ப தால் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பிரதோஷத்தன்று விரதமிருந்து சிவனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுவதாலும், பௌர்ணமியன்று கிரிவலம் சென்று வருவதாலும் நற்பலன்கள் கிடைக்கும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன், குரு சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மிகவும் சிக்கனமாக செயல்பட வேண்டிய நேரமாகும். நியாயப்படி வர வேண்டிய பணவரவுகள்கூட தாமதப்படும். உடனிருப்பவர்களே உங்களுக்கு நல்லது நடக்க இடையூறாக இருப்பார்கள். சனி, செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. 15-ஆம் தேதிமுதல் சூரியன் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் சென்றால்தான் கருத்து வேறுபாடு களைத் தவிர்க்கமுடியும். ஆடம்பரச் செலவு களைக் குறைத்துக்கொண்டு கையிலிருப்பதை வைத்து செலவுசெய்வது நல்லது. சற்று அஜாக்கிரதையாக இருந்தால் கடன்வாங்க நேரிடும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தற்போதிருக்கும் வாய்ப்புகளைப் பயன் படுத்திக்கொள்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தற்போதைக்கு தவிர்க்கவும். வெளிநபர்களிடம் தொழில் தொடர்பான விஷயங்களைப் பேசாமலிருப்பது உத்தமம். வேலைக்குச் செல்பவர் களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல் மற்றவர்கள் பணியையும் சேர்த்துச் செய்ய நேரிடும். வேலை தேடுபவர் கள் கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போது பயன்படுத்திக்கொண்டால் அடுத்த மாதத்தில் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பங்குனி உத்திர நாளில் விரதமிருந்து முருகனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்வது, முடிந்தவரை அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவது, கந்தசஷ்டிக் கவசம், கந்தகுரு கவசம் படிப்பது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். குரு, புதன் இணைந்து 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து கடந்தகால பொருளாதார நெருக்கடிகள் குறையும். தற்போது 5-ல் சஞ்சரிக்கும் சூரியன் 15-ஆம் தேதிமுதல் 6-ல் சஞ்சரிக்கவிருப்பதால் எதிர் பாராத அனுகூலங்களை அடையமுடியும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள் தற்போது உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக உங்கள் வாக்குறுதி களைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். சனி, செவ்வாய் 4-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் அதிக அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். உடல்ரீதியாக அலர்ஜி பாதிப்புகள் ஏற்பட்டு வீண் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களை அன்றாடச் செயல்களில் அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை வரும் நாட்களில் எட்டுவீர்கள். உத்தியோகத் தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் உழைப்பிற்கான ஊதியத்தை அடையமுடியும். சிலருக்கு வெளியூர்மூலமாக மகிழ்ச்சி தரக் கூடிய செய்திகள் கிடைக்கும். செவ்வாய்க் கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி செவ்வரளி மாலை யிட்டு, எலுமிச்சைப் பழத்தில் விளக்கிட்டு துர்க்காஷ்டகத்தைப் படித்தால் துர்க்கையின் பரிபூரண அருள் கிடைக்கும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய் 3-ல் உச்சம்பெற்று சனி சேர்க்கைப் பெற்றிருப்பது சிறப்பான அமைப்மென்பதால் நீங்கள் எல்லாவகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள். உங்கள் எண்ணங்களை செயல்படுத்தி சமுதாயத்தில் கௌரவ நிலையினைப் பெறமுடியும். புதன் 4-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டு. சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தற்போது 4-ல் சஞ்சரிக்கும் சூரியன் 15-ஆம் தேதிமுதல் 5-ல் சஞ்சரிக்க விருப்பதால் உங்களுக்கிருந்த தேவையற்ற அலைச்சல்கள், குழப்பங்கள் வரும் நாட்களில் குறையும். இவ்வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் மிகவும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் வெளியூர்ப் பயணங்கள்மூலமாக ஆதாயங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி இலக்கை அடைவீர்கள். வேலையாட்கள் ஆதரவாக இருப்பதால் தொழில் போட்டிகளைச் சமாளித்து லாபத்தை ஈட்டமுடியும். கூட்டாளிகளைக் கலந்துபேசி முக்கிய முடிவுகளை எடுத்தால் உயர்வான நிலையை எளிதில் அடையமுடியும். உத்தியோகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். நீண்டநாட்களாக வரவேண்டிய சம்பளபாக்கி தற்போது கிடைத்து உங்களின் கடந்தகாலக் கடன்களை பைசல் செய்யமுடியும். பிரதோஷ நாளில் சிவனையும், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குரு 3-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக தர்மசங்கடங்களை சந்திக்க நேரிடும். செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பது மட்டுமல்லாமல் ஏழரைச்சனி நடப்பதால் வரவுக்கு மீறியச் செலவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறையும். பேச்சால் வீண் பிரச்சினைகள் அதிகரிக்கும் நேரமென்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் எதிலும் பொறுமையுடன் இருக்கவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு, நெருங்கியவர்களிடம் கருத்து வேறுப்பாடுகள் ஏற்படும். இதுவரை 3-ல் சஞ்சரித்த சூரியன் 15-ஆம் தேதிமுதல் 4-ல் சஞ்சரிக்கவிருப்பதால் தேவையற்ற அலைச்சல், உடல் அசதி ஏற்படும். வெள்ளி, சனிக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகளால் ஒருசில ஆதாயங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. எல்லா செயலுக்கும் வேலையாட்களை எதிர்பார்க்காமல் நீங்களே முன்னின்று உழைத்தால்தான் நிலைமையை சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் எடுத்த பணியில் மட்டும் கவனத்துடன் செயல்பட்டால் நல்லபெயர் எடுக்க முடியும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தற்போது சிறுசிறு வாய்ப்புகள் கிடைக்குமென்பதால் சரியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் நல்லநிலையை அடையமுடியும். பங்குனி உத்திரத்தன்று முருகனை வழிபடுவது நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சனி, செவ்வாயுடன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன் கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத் துடன் செயல்படுவது நல்லது. தேக ஆரோக்கியம் பாதிக்குமென்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்வது நல்லது. பிள்ளைகள்வழியில் தேவையற்ற மனக்கவலை ஏற்படும். தனகாரகன் குரு 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதாலும், சூரியன் 15-ஆம் தேதிமுதல் 3-ல் சஞ்சரிக்கவிருப்பதாலும் பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் நிலவிய சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் அனுகூலங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்களை அடையமுடியும். வேலையாட்கள் நெருக்கடிகளைத் தந்தாலும், நீங்கள் அதனை சிறப்பாகக் கையாண்டு வெற்றிமேல் வெற்றிபெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சி தரக்கூடியச் செய்தி வரும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகளுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் விரும்பிய இடமாற்றங்கள் பெறமுடியும். வேலைப்பளு காரணமாக ஓய்வு நேரம் குறையும். மகாலட்சுமி வழிபாடு செய்தால் சுபிட்சம் உண்டாகும். பிரதோஷ விரதமிருப்பது, பௌர்ணமியன்று கிரிவலம் வருவது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சனி, செவ்வாயுடன் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. சூரியன் இவ்வாரத்தில் ஜென்ம ராசி மற்றும் 2-ல் சஞ்சரிப்பதால் நிதானத் துடன் செயல்பட்டால் எதையும் எதிர்கொள்ள முடியும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரித்தாலும் 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களைப் பார்வை செய்வதால், பொருளாதாரரீதியாக நெருக்கடி இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதால் ஆதாயங்களை அடையமுடியும். பெரிய தொகையை எதிலும் ஈடுபடுத்தாமல் கையிருப்பைக்கொண்டு செலவுசெய்வது நல்லது. ராகு 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல், வாகனங்கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போடவேண்டிய காலமாகும். வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமல்லா மல் உழைப்பிற்கான பலன் கிடைக்காது. உடனிருப்பவர்களே நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். வெளிநபர்களிடம் பேச்சைக் குறைத்துக்கொள்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பெண்கள்மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத் துடன் செயல்படுவது சிறப்பு. அடுத்த மாதம் ஏற்படும் குரு மாற்றத்திற்குப்பிறகு வேலையில் நிம்மதி, எதிர்பார்த்த பதவியினை அடையும் யோகம் உண்டாகும். பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து முருகனுக்கும், பிரதோஷத்தன்று சிவனுக்கும் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வழிபட்டால் மேன்மைகளை அடையலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி, செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் தைரியத்துடன் செயல்பட்டு சமுதாயத்தில் உயர்வான நிலையினைப் பெறமுடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றி நல்லபெயர் எடுப்பீர்கள். பொருளாதார நெருக்கடிகள் விலகி சுபிட்சமாக இருக்கமுடியும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனைவி, பிள்ளைகள் வழியிலிருந்த மருத்துவச் செலவுகள் வரும் நாட்களில் குறைந்து மனநிம்மதி ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அதிகபடியான ஆதாயங்களை உங்களின் அன்றாட செயல்களில் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்களைப் பெறும் வாய்ப்புண்டு. வேலையாட்கள் நீண்டநாட்களாகக் கேட்ட கோரிக்கைகளைப் பூர்த்திசெய்ய முடியும். மறைமுக எதிர்ப்புகள் மறைந்து மனநிம்மதி ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல், சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து வேலைக்கான உத்தரவு வரும். பிரதோஷநாளில் சிவனுக்கு வில்வ இலையாலும், புதன்கிழமை விஷ்ணுவுக்கு துளசி இலையாலும் அர்ச்சனை செய்து வழிபட்டுவந்தால் கஷ்டங்கள் குறையும்; செல்வ நிலை உயரும்.