எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி: 044 24881038, 2483 9532.

Advertisment

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: அவிட்டம்- 3.

Advertisment

செவ்வாய்: பூராடம்- 3.

புதன் : உத்திராடம்- 3.

tt

குரு: சதயம்- 3.

சுக்கிரன் : பூராடம்- 3.

சனி: திருவோணம்- 4.

ராகு: கிருத்திகை- 2.

கேது: விசாகம்- 4.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

14-2-2022 அதிகாலை 5.19 மணிக்கு கடகம்.

16-2-2022 மாலை 3.14 மணிக்கு சிம்மம்.

18-2-2022 இரவு 10.46 மணிக்கு கன்னி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பஞ்சமாதிபதி சூரியன், நட்பு கிரகமான குரு சேர்க்கைப் பெற்று 11-ல் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடைபெறும். நீண்டநாள் கனவுகள் நிறைவேறும். பணவரவுகள் மிகச்சிறப் பாக இருந்து கடந்தகால சோதனைகள் எல்லாம் மறைந்து சிறப்பான நிலையை அடைவீர்கள். கடன்கள் குறைந்து சேமிக்கமுடியும். ராசியாதிபதி செவ்வாய், சுக்கிரனுடன் 9-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ராகு 2-ல் இருப்பதால் கோபத்தைக் குறைத்துக்கொள்வது, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் வளமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. புதன் 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சாமார்த்தியமாக செயல்பட்டு தொழி-ல் அதிகபடியான லாபங்களை அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் பொருளா தார உதவிகள் கிடைத்து தொழிலை விரிவுபடுத்த முடியும். வெளி நாட்டுத் தொடர்புகள்மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைத்து மகிழ்ச்சியடை வீர்கள். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். பயணங்களில் நிதானத்துடன் செல்வது நல்லது. மகாலட்சுமி வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் வளமான பலன்களைப் பெறும் வாய்ப்புண்டு. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெயர், புகழ் அதிகரிக்கும். தன பஞ்சமாதிபதி புதன் 9-ல் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால், பொருளாதாரரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகி பணவரவு சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றமுடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக செயல்பட்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை வாழலாம். ஜென்ம ராசியில் ராகு, 8-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உடன்பிறந்தவர் களிடம் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படலாம் என்பதால், பேச்சில் பொறுமையைக் கடைப் பிடிக்கவும். திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் ஆதாயத்தை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்றாலும், அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தவிர்ப்பதும், இருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் கையாள்வதும் நல்லது. மறைமுக எதிர்ப்புகள் இருக்குமென்பதால் எதிலும் நிதானமாக செயல்படவும். உத்தியோகத்தில் கடந்தகால நெருக்கடிகள் குறைந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். விரைவில் ஏற்படவிருக்கும் கிரகப் பெயர்ச்சிக்குப்பிறகு வாழ்வில் நல்ல மாற்றங் கள் ஏற்படும். முருக வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் விலகி கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மேலோங் கும். இதுவரை 8-ல் சஞ்சரித்த சூரியன் இவ்வாரத்தில் 9-ல் குரு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் உங்களுக் கிருந்த சிறுசிறு உடல் பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைத் தக்கநேரத்தில் காப்பாற்ற முடியும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் சிறப்பாகக் கையாண்டு வெற்றி மேல் வெற்றிபெறுவீர்கள். ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களைத் தரும். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு லாபங்களை அடைவீர்கள். வேலையாட்களால் சிறிது நெருக்கடி ஏற்பட்டாலும், உங்களின் தனித்திறமையால் சிறப்பாகக் கையாண்டு தொழிலில் நல்ல நிலையை அடையமுடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர்த் தொடர்புகள்மூலம் அனுகூலங்களைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர் களுக்கு தற்போது பெரிய நிறுவனத்திடமிருந்து அழைப்பு வரும். விஷ்ணு வழிபாடு மேன்மைகளை உண்டாக்கும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதிக ளான சுக்கிரன், செவ்வாய் இணைந்து 6-ல் சஞ்சரிப்ப தால் எதையும் எதிர்கொண்டு இலக்கை அடைவீர்கள். பொருளாதாரரீதியாக தக்க நேரத்தில் வரவுகள் ஏற்பட்டு அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். சூரியன், குரு சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வயதில் மூத்தவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப் பது நல்லது. ஆடம்பர செலவு களைக் குறைத்துக்கொண்டு சிக்கனத்துடன் செயல்பட்டால் கடன் ஏற்படாமல் இருக்கும். திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். ராகு 11-ல் இருப்பதால் தொழில், வியாபாரத் தில் எதிர்நீச்சல் போட்டாவது முதலீட்டை எடுத்துவிடுவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு உதவியாக இருந்தாலும் மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். அதிக மூதலீடு கொண்ட செயல்களை ஓரிரு மாதங்களுக்குத் தள்ளிவைப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் ஆதாயம் அடையமுடியும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலைப் பளு சற்று கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல், வீண் பழிச்சொற்களை எதிர்கொள்ளக்கூடிய நேரம் என்பதால் உங்கள் பணியில் மட்டும் சற்று கவனத் துடன் செயல்படுவது நல்லது. விநாயகரை வழிபட்டுவந்தால் எடுத்த காரியம் வெற்றியில் முடியும்.

tt

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையும் யோகமுண்டு. சனி 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதாரரீதியாக தாராள தனவரவுகள் ஏற்பட்டு சேமிக்க முடியும். உடல் ஆரோக்கியம் மிகச்சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கேது 4-ல் இருப்பதால் அலைச்சல்கள் அதிகமாக இருந்தாலும் அதில் அனுகூலங்களும் உண்டு. ராசிக்கு 9, 10-க்கு அதிபதி செவ்வாய், சுக்கிரன் இணைந்து 5-ல் இருப்பதால் வலுவான தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டுள்ளது. எனவே குடும்பத்தில் மகிழ்ச்சி, பொன், பொருள் சேரும் யோகம் உண்டாகும். ராசியாதிபதி சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு தொழில், வியாபாரத்தில் லாபங்களை அடைவீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்யும் யோகம் வரும் நாட்களில் உண்டு. திறமை வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பதால் கடினமான பணியைக்கூட எளிதில் செய்துமுடிக்கலாம். வம்பு வழக்குகள் முடிவுக்கு வந்து மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர்த் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை முருக வழிபாடும், ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபடு வதும் நல்லது.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

சூரியன் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வலிமை கூடும். கடந்தகால மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக மறைந்து நிம்மதி அடையமுடியும். ராசியாதிபதி புதன் தனது நட்பு வீட்டில் 5-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் திருப்திகரமாக இருந்து கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். குரு பார்வை 2-ஆம் வீட்டிற்கு இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியிலிருந்த பிரச்சினைகள் விலகும். சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு அனுகூலங்களைப் பெறுவீர்கள். அசையா சொத்து வகையில் தீராத பிரச்சினைகள் வரும் நாட்களில் முடிவுக்கு வரும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் எண்ணங்கள் நிறைவேறி மகிழ்ச்சி ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது, ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கேது 3-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் உங்கள் முயற்சிகளுக்கேற்ற ஆதாயங்களை அடைவீர்கள். தொழில் போட்டி காரணமாக அதிக லாபங்கள் கிடைக்காவிட்டாலும், போட்ட முதலீட்டை எடுத்துவிட முடியும். வெளியூர்த் தொடர்புகள்மூலம் எதிர் பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளி களை கலந்தாலோசித்து செயல்பட்டால் தொழிலிலுள்ள நெருக்கடிகளை எளிதில் சமாளிக்கமுடியும். வேலைக்குச் செல்பவர் களுக்கு உடனிருப்பவர்கள் உதவியாக இருப்ப தால் எதிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். தூரப்பயணங்கள் சில ஏற்பட்டு அதன்மூலம் நல்ல வாய்ப்பைப் பெறுவீர்கள். சனிக்கிழமை சனி பகவானுக்கு எள்தீபமேற்றி வழிபட்டால் நற்பலன்களை அடையலாம்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன், செவ்வாயுடன் 3-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வளமான பலன்களைப் பெறுவீர்கள். குரு 5-ல் சஞ்சரிப்ப தால் எல்லாவகையிலும் அனுகூலங்கள், சிறப் பான பணவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துவகையில் பொருளா தார அனுகூலங்களை அடைவீர்கள். ராசிக்கு சனி 4-ல், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் கணவன்- மனைவி யிடையே ஒற்றுமைக்குறைவு ஏற்படும் காலமென்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது, முடிந்தவரை நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத் தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். நேரத் திற்கு உணவு உட்கொள்வது உத்தமம். வாகனங்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்குப் பரிபூரண வெற்றி கிடைக்கும். புதன் 4-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு அதிகபடியான லாபங்களை அடை வீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு சரிவர இல்லாத காரணத்தினால் வேலைப் பளு அதிகரிக்கும். வங்கிமூலம் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய நிறுவனத்திலிருந்து அதிக சம்பளத்துடன் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பிரதோஷத்தன்று சிவ வழிபாடு, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது உத்தமம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசியாதிபதி செவ்வாய் 2-ல், ராகு 7-ல் சஞ்சரிப்பதால், நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் அதனைத் தவறாக எடுத்துக்கொள்வார்கள். எனவே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சூரியன் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக உடல் அசதி உண்டாகும். என்றாலும் குரு பார்வை 8-ஆம் வீட்டிற்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதால் பண வரவுக்கு எந்தவிதத்திலும் குறையில்லாமல் தாராள தனவரவு ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் மிகவும் அனுகூலமானவையாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் தொழில்ரீதியாக எளிதில் லாபங்களை அடைய முடியும். வேலைக்குச் செல்பவர்கள் உழைப்பிற் கான ஊதியத்தை அடைவீர்கள். வேலை நிமித்த மாக எதிர்பாராத பயணங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் பொருளாதார அனுகூலங்கள் கிடைக்கும். பிரதோஷ தினத்தன்று சிவ பெருமானையும், நந்தி வழிபாட்டையும் மேற் கொண்டால் சகல பிரச்சினைகளும் விலகும். பௌர்ணமியன்று கிரிவலம் செல்வது நல்லது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குரு 3-ல் சஞ்சரிப்ப தால் எதிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே ஆதாயம் அடையமுடியும். பொருளா தாரரீதியாக நெருக்கடிகள் நிலவினாலும், சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு பொருளாதாரத் தேவை களைப் பூர்த்திசெய்ய முடியும். ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்கள்மூலம் பொருளாதார உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள் வது நல்லது. ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடி கள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் வளர்ச்சியடைவீர்கள். ராகு 6-ல் சஞ்சரிப்ப தால் எந்த எதிர்ப்பையும் சமாளித்து லாபங் களைப் பெறுவீர்கள். வேலையாட்கள் சரிவர கிடைக்காததால் சற்று கவனத்துடன் செயல்படு வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைத்து, தொழிலிலுள்ள பிரச்சினைகள் குறைந்து நிம்மதியடைய முடியும். அரசு அதிகாரிகள்மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதனை சிறப் பாகக் கையாண்டு நல்லபெயர் எடுப்பீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, முருக வழிபாடு செய்வது நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சனி, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்கவும். குரு 2-ல் சஞ்சரிப்பதால் சிறப் பான பணவரவுகள் கிடைத்து அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். மறைமுக எதிர்ப்புகள் விலகி நிம்மதி ஏற்படும். எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எடுத்த பணியைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். சுக்கிரன், செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனாவசிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் சற்று சிக்கனத்துடன் இருப்பது, வெளியூர்ப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் எந்த செயலில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும். வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் தேவையற்ற அலைச்சல், மனநிம்மதிக் குறைவு உண்டாகும். தொழிலில சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தக்கநேரத்தில் கிடைத்து நீண்ட நாள் பிரச்சினைகளை வரும் நாட்களில் தீர்க்கமுடியும். வேலையாட்களால் சற்று நெருக்கடிகள் ஏற்படும் என்பதால், சில நேரங்களில் நீங்களே சில வேலைகளைச் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். தூரப் பயணங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. புதன்கிழமை மகாவிஷ்ணு, மகாலட்சுமியை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் குரு, சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் அனுகூலங்களை அடைய முடியும். ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்ப தால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள், வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும் என்றா லும், ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சுக்கிரன், செவ்வாய் இணைந்து 11-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பலமான தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அதனால் எதிர்பாராத திடீர் தனவரவுகள் ஏற்பட்டு தேவைகள் பூர்த்தி யாகும். அசையும்- அசையா சொத்துவகையில் இருந்த பிரச்சினைகள் விலகி நிம்மதி அடைய முடியும். ராகு 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல், அதனால் உடல் அசதி ஏற்படும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் வலுவாக சஞ்சரிப்பதால், பல்வேறு அனுகூலங்களை மேற்கூறிய நாட்களில் அடைவீர்கள். சனிக்கிழமையன்று மன அமைதி குறையும் நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் நியாயப்படி கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் மறைமுகப் போட்டிகளால் கைநழுவிப் போகலாம். தற்போது இருக்கும் சிறு வாய்ப்பு களைக்கூட தவறவிடாமல் முனைப்புடன் செயல்பட்டால், விரைவில் நல்ல வளர்ச்சியை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக சிந்தித்து செயல்பட்டால்தான் எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும். அரசுவழி அதிகாரிகளால் ஏற்படும் இடர்ப்பாடுகளால் தொழில்ரீதியாக மன உளைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் அமையும். வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும். விநாயகர் வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு நற்பலன் தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சனி, புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதார நிலை மிகவும் அனுகூலமாக இருந்து, கடந்தகால சோதனைகளெல்லாம் முழுமையாக மறையும். குரு, சூரியன் 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு, எதிலும் சற்று சிக்கனத் துடன் இருப்பது நல்லது. அசையா சொத்துவகையில் நிலவிய வம்பு வழக்குகள் முடிவுக்குவந்து மனநிம்மதி ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகள்வழியில் இருந்த கவலைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சிறப்பான பலன்களை அடைவீர்கள். ராகு 3-ல் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டமுடியும். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் பெரிய ஆர்டரைக்கூட குறிப்பிட்ட நேரத்தில் முடித்து ஆதாயத்தை அடையமுடியும். சிலருக்கு கௌரவமான பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் இருந்த நெருக்கடிகள் விலகி நிம்மதியுடன் பணியாற்ற முடியும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிவபெருமானையும் விநாயகரையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.