எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: மிருகசீரிடம்- 2.
செவ்வாய்: ரேவதி- 1.
புதன்: கிருத்திகை- 3.
குரு: உத்திரட்டாதி- 3.
சுக்கிரன்: பரணி- 3.
சனி: அவிட்டம்- 3.
ராகு: கிருத்திகை- 1.
கேது: விசாகம்- 3.
கிரக மாற்றம்:
ஆனி 1 (15-6-2022) மிதுன சூரியன் பகல் 12.04.
ஆனி 4 (18-6-2022) ரிஷப சுக்கிரன் காலை 8.16.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
12-6-2022 மாலை 6.33 மணிக்கு விருச்சிகம்.
14-6-2022 மாலை 6.32 மணிக்கு தனுசு.
16-6-2022 மாலை 5.55 மணிக்கு மகரம்.
18-6-2022 மாலை 6.42 மணிக்கு கும்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சூரியன் 15-ஆம் தேதிமுதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் முயற்சிகளில் இருக்கும் தடைகள் விலகி நல்ல ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய ஒற்றுமைக் குறைவுகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ராசியாதிபதி செவ்வாய், குருவுடன் 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்படு வது நல்லது. உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். இயற்கை உணவுகளை உட்கொள்வதன்மூலம் மருத்துவச் செலவுகளைக் குறைக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்களை அடையும் நிலை ஏற்படும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் மட் டும் சற்றுப் பொறுமையோடு செயல்பட்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்கும் பலம் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். பெண்கள்மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. இவ்வாரத்தில் சனிக்கிழமையன்று எடுக்கும் முயற்சியில் அதிகப்படியான ஆதாயங்களைப் பெறுவீர்கள். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றுவது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது மிகவும் நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியில் புதன் சஞ்சரிப்பதால் எந்த செயலிலும் சாமர்த்தியமாக செயல் பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். 11-ஆம் வீட்டில் குரு, செவ்வாய் சஞ்சரிப்பது சகலவிதத்திலும் அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எந்த செயலில் ஈடுபட்டா லும் அதிகப்படியான ஆதாயங்கள் கிடைக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கக்கூடிய யோகம் இவ் வாரத்தில் உண்டு. பணவரவுகள் சிறப் பாக இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப் பதால் இருக்கும் மறைமுகப் பிரச்சினைகள் முழுமையாக மறைந்து மனநிம்மதி ஏற்படும். சிலருக்கு வெளியூர் செல்லும் யோகமும், அதன்மூலம் எதிர் பாராத அதிர்ஷ்டங் களும் கிடைக்கும். தொழில், வியாபாரத் தில் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் அதற்கு வெளிநபர்களின் உதவிகள் குறித்த நேரத்தில் கிடைக்கும். செல்வாக்கு மேலோங்கும். உங்களுக்கிருந்த சட்டச் சிக்கல்கள் எல்லாம் மறைந்து தொழிலில் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரி கள் ஆதரவு சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருப்பதால் கடினமான வேலையைக்கூட சுலபமாக செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். இவ்வாரம் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். காலபைரவரை வழிபடுவது, அஷ்டலட்சுமி தலங்களுக்குச் சென்றுவருவது மேன்மையைத் தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு செவ்வாய் 10-ல் வலுவாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். சுக்கிரனும் ராகுவும் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனச் சேர்க்கை ஏற்பட்டு அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், கேது 5-ல் சஞ்சரிப்பதாலும், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு உணவு உட்கொள்வது நல்லது. குரு 10-ல் சஞ்சரிப்பதால் கையிருப்பைக்கொண்டு செலவுசெய்வது சிறப்பு. ஆடம்பர செலவு களைக் குறைத்துக் கொள்வதும், வயது மூத்தவர்களிடம் பொறுமையோடு பேசுவதும் நன்று. தொழில்ரீதியாக உங்கள் உழைப்புக்கான பலனை அடையமுடியும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பதால் போட்ட முதலீட்டை எடுத்துவிட முடியும். நண்பர்களின் உதவியால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். என்றா லும் உடனிருப்பவர்களே உங்கள்மீது வீண் பழிச் சொற்களைக் கூறுவார்கள். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்து, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலைப்பளு காரணமாக அலைச்சல், உடல் அசதி உண்டாகும். திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நினைத்ததெல்லாம் நடக்கும். சிவத் தலங்களுக்குச் சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு சுக்கிரன் 10-ல், புதன் 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். ஜென்ம ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான குரு, செவ்வாய் இணைந்து 9-ல் சஞ்சரிப்பதால் வலுவான தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும் யோகம் வரும் நாட்களில் உண்டு. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நீண்டநாட்களாக தடைப்பட்டுவந்த காரியங்கள் தற்போது கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துவகையில் இருந்த பிரச்சினைகள் விலகி அனுகூல மான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவது மட்டுமல்லாமல், தொழில் முன்னேற்றத்திற்காக புதிய முதலீடுகளை செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். வேலையாட்கள் உங்களிடம் வைத்த கோரிக்கைகளை வரும் நாட்களில் நிறைவேற்றமுடியும். வெளியூரிலிருந்து புதிய வாய்ப்பு கள் கிடைப்பதால் தொழில்ரீதியாக லாபத்தை ஈட்டமுடியும். வங்கிக் கடன்களை வரும் நாட்களில் பைசல் செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடையமுடியும். உங்கள் தனித்திறமையால் மற்றவர்களால் செய்ய முடியாத பணியைக்கூட எளிதில் செய்து காரியத்தை சாதிப்பீர்கள். இவ்வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகவும் அனுகூலமான நாட்களாக இருக்கும். சனிபகவானுக்கு சனிக்கிழமையன்று எள்தீபம் ஏற்றுவது, துர்க்கையம்மனை தரிசிப்பது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன் இவ்வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதால் சிறப்பான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சுக்கிரன் 9-ல், புதன் 10-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக சாதகமான சூழ்நிலை நிலவும். உங்கள் தேவைக்கேற்ற அளவுக்கு தக்க நேரத்தில் பண உதவிகள் கிடைத்து அனைத்துவிதமான பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு சனி 7-ல், செவ்வாய், குரு 8-ல் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வாகனங்களில் செல்லும்பொழுது சற்று பொறுமை யோடு செல்வது நல்லது. முடிந்தவரை நெருங்கியவர்களை அனுசரித்துச்சென்றால் எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். தொழில், வியாபாரத்தில் கவனமாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். சில இடைத்தரகர்களின் செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் தட்டிப் போகலாம். தொழில் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. நெருங்கிய நண்பர்களின் உதவியால் ஒருசில ஆதாயங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சிறப் பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டு மல்லாமல் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உங்கள் உழைப்புக்கான பலனைத் தற்போது பெறமுடியாவிட்டாலும் உங்கள் பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் எதிர்காலத்தில் ஒரு நல்ல நிலையை எட்டமுடியும். ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அன்றாட செயல்களில் மிக அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். முருக வழிபாடு மேற்கொள்வது தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்வது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் பாக்கிய ஸ்தானமான 9-ல் நட்பு வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் சிறப்பாக செயல்பட்டு ஏற்றங்க ளைப் பெறுவீர்கள். குரு 7-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல், உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து நிம்மதியுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் தடைப்பட்ட திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். சூரியன் இவ்வாரத்தில் 9, 10-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனி அதிசாரமாக 6-ல் சஞ்சரிப்பதால் கடந்த காலங்களில் நிலவிய எதிர்ப்புகள் தற்போது முழுமையாக விலகும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படுமளவுக்கு உங்களின் வளர்ச்சியானது சிறப்பாக இருக்கும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் ஈடுபட்டு நல்ல லாபத்தை அடைவீர்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல வாய்ப்பைப் பெறுவது மட்டுமல்லாமல் உங்கள் திறமை களை வெளிக்காட்டுவதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பதால் கடந்தகால வேலைப்பளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரியமுடியும். திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் அடைவீர்கள். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றுவது, சுமங்கலிப் பெண்களுக்கு முடிந்த உதவிகள் செய்வது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலையிருந்தாலும், 6-ல் செவ்வாய், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் திறனுண்டாகும். உடனிருப்பவர்களின் ஆதரவால் உங்களின் நெருக்கடிகள் குறையும். உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் சூரியன் 15-ஆம் தேதிமுதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருக்கும் சிறுசிறு பிரச்சினைகளும் வாரப் பிற்பாதியில் விலகி நிம்மதி ஏற்படும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது, சிறு வாய்ப்பென்றாலும் அதனைத் தவறவிடாமல் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே லாபம் காணமுடியும். மறைமுக எதிர்ப்புகள் சில இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கும் பலம் ஏற்படும். அரசு அதிகாரியிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பதால் அலைச்சல், உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களைக் கேட்டு குழப்பிக்கொள்ளாமல், தற்போது இருக்கும் நிலையினை தக்கவைத்துக் கொள்வது நல்லது. இவ்வாரத்தில் பிரதான கிரகங்கள் சாதகமற்றிருந்தாலும் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். மகாவிஷ்ணுவையும், ஆஞ்சனேயரையும் வழிபாடு செய்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய், குருவுடன் 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து எல்லாவகையிலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டும் யோகமுண்டு. கொடுத்த வாக்குறுதிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினையையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். உங்களுக்கு இருந்த கடன்கள் எல்லாம் படிப்படியாகக் குறையும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யுமளவுக்கு உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். உங்கள் ராசிக்கு இவ்வாரத்தில் சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை அடையமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் புதிய ஆர்டர்களை தைரியத்துடன் எடுத்து குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான சன்மானத்தைப் பெறுவீர்கள். உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களை அடையும் யோகமுண்டு. மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சிவத் தலங்களுக்குச் சென்றுவருவது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு கேது லாப ஸ்தானத்திலும், சனி 3-ல் சஞ்சரிப்பதா லும் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைந்துவிடுவீர்கள். சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவால்- குறிப்பாகப் பெண்கள்மூலம் பொருளாதாரரீதியாக ஆதாயங்களை அடையமுடியும். ராசிக்கு 4-ஆம் வீட்டில் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சலும்- குறிப்பாக பணவிஷயத்தில் நெருக்கடிகளும் நிலவும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு செயல்படுவது உத்தமம். வார முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் ஒருசில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்கள் உதவியாக இருப்பதால் கடினமான காரியத்தைக்கூட சுலபமாக செய்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். எந்தவொரு செயலிலும் மற்றவர்களை நம்பாமல் நீங்கள் முன்னின்று செயல்பட்டால்தான் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். தொழில் போட்டி காரணமாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்ளும் பலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒருசில அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்றா லும், வேலைப்பளு சற்று கூடுதலாகவே இருக்கும். சில நேரங்களில் உடன் வேலை செய்பவர்களின் பணியையும் நீங்கள் சேர்த்துச் செய்யவேண்டிய நிலை ஏற்படும். இவ்வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழக்கிழமைகளில் எதிலும் துணிந்து செயல்பட்டால் அதிகப்படியான ஆதாயங்களை அடையமுடியும். முருக வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு வளமான பலன்களைத் தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதும், 3-ல் குரு சஞ்சரிப்பதும் பல்வேறு இன்னல் களை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும், இவ்வாரத்தில் ராசிக்கு 3-ல் செவ்வாய், 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து, அனைத்து விதமான நெருக்கடிகளும் விலகி வளமான பலன்களை அடைவீர்கள். ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் சூரியன் 15-ஆம் தேதி முதல் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள், பொருட்தேக்கங்கள் விலகி நல்ல லாபத்தை அடையும் வாய்ப்புண்டு. எதிர்பாராத வாய்ப்புகள் கிடைப்பதால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் பணிபுரியமுடியும். அதிகாரிகள் உதவியாக இருப்பதால் எதிர்பார்க்கும் பதவி உயர்வை எட்டமுடியும். நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல இடத்திலிருந்து அழைப்பு வரும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். கடந்தகால மருத்துவச் செலவு கள் படிப்படியாகக் குறையும். சில கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட் களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். ஆஞ்சனேயரை வழிபடுவது, துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
குரு 2-ல் சஞ்சரிப்பதால் எல்லாவகை யிலும் சிறப்பான பலன்களை வரும் நாட்களில் அடைவீர்கள். ராகு 3-லும், புதன் 4-லும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சமுதாயத்தில் உயர்வான நிலையை அடையும் வாய்ப்பு இவ்வாரத்தில் உண்டு. செவ்வாய் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக் கும் சூரியன் வரும் 15-ஆம் தேதிமுதல் 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால், தற்போது உங்களுக்குள்ள அலைச்சல் சற்று குறைந்து எதிலும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதி களைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். உறவினர்களின் ஆதரவால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைப்பதால் எதிலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்புண்டு. அரசுவழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் கிடைக் கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் நிலவிய பணிச்சுமை குறைந்து நிம்மதி ஏற்படும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். சனிபகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் தீபமேற்றுவது, செவ்வாய்க்கிழமையன்று முருகனுக்கு அர்ச்சனை செய்வது நன்று.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத் தைக் குறைத்துக்கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. உங்களுடன் இருப்பவர்களே தேவை யற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். 15-ஆம் தேதிமுதல் சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், ஓய்வு நேரம் குறையும் சூழ்நிலை உண்டாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவா னால் ஒருசில அனுகூலங்களைப் பெற் றாலும், பணவிஷயத்தில் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. குடும்ப உறுப்பி னர்கள் ஆதரவு சாதகமாக இருப்பதால் நெருக்கடியை சமாளிக்கமுடியும். உடல்நிலையில் அக்கறை செலுத்துவது, குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற் கும் முக்கியத்துவம் தருவது நல்லது. குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்க இடையூறுகள் ஏற்படும். வேலையாட் களால் மன அமைதி குறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன்மூலம் சில ஆதாயங்களை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். அதிகாரிகள் சொல்படி நடந்துகொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். ஞாயிற்றுக்கிழமை தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களின் அனைத்து விதமான செயல்களுக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். விநாயகர் வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு சங்கடங்களைக் குறைக்கும்.