முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: கேட்டை- 3.

செவ்வாய்: அனுஷம்- 1.

Advertisment

புதன்: மூலம்- 1.

குரு: அவிட்டம்- 3.

சுக்கிரன்: உத்திராடம்- 2.

சனி: திருவோணம்- 2.

ராகு: கிருத்திகை- 3.

கேது: அனுஷம்- 1.

கிரக மாற்றம்:

கார்த்திகை 29 (16-12-2021) தனுசு சூரியன் (அதிகாலை 3.44)

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மீனம்.

14-12-2021 அதிகாலை 2.05 மணிக்கு மேஷம்.

16-12-2021 பகல் 2.20 மணிக்கு ரிஷபம்.

tt

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

சுக்கிரன் தனது நட்பு கிரகமான சனியின் வீட்டில், ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். குரு 11-ல் சஞ்சரிப்ப தால் பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் விலகி நிம்மதி ஏற்படும். குரு பார்வை 5, 7-ஆம் வீடுகளுக்கு இருப்ப தால் பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்புண்டு. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் விலகும். விரோதிகளும் நண்பர்களா வார்கள். செவ்வாய், சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல்ரீதியாக சிறிது பாதிப் பிருந்தாலும், 16-ஆம் தேதி முதல் சூரியன் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் குறைகள் விலகி சுறுசுறுப்பாக செயல்பட முடியும். ராகு 2-ல் உள்ளதால் பேச்சில் பொறுமையுடன் இருங்கள். குடும்ப விஷயங்களை மற்றவர்களி டம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், இந்த நாட்களில் எதிர்பாராதவகையில் வரவேண்டிய தொகை வந்துசேரும். கொடுக்கல்- வாங்க-ல் கடந்த காலங்களில் நிலவிய பிரச்சினைகள் விலகும். புதன் 9-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத் தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். புதிய ஆர்டர்களை கிட்டும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். உங்கள் மீது இருந்த பழிச்சொல் விலகி திறமைகள் பாராட்டப்படும். வெளியூரி-ருந்து எதிர் பாராத நல்ல செய்தி கிடைக்கும். கிருத்திகையன்று முருக வழிபாடு, பிரதோஷத்தன்று சிவ வழிபாடு செய்வது சிறப்பு.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சனி சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் எவ்வித நெருக்கடிகளையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பணவரவு மந்தமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பது அனுகூல மற்ற அமைப்பென்பதால் எதிலும் நிதானத்து டன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பதும் நற்பலனைத் தரும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனம்தேவை. வேலைப்பளு காரணமாக அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டை எடுக்க வேலையாட்களையும் கூட்டாளிகளையும் அனு சரித்து நடந்துகொள்ளவும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைப்படும். உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் வாக்கு வாதங்களைத் தவிர்த்து பொறுமையை கடைப்பிடித்தால் ஒருசில அனு கூலங்களை அடையமுடியும். ஏகாதசியன்று ஏழுமலையானை வழிபட்டால் ஏற்றங்களை அடையலாம்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் 7-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சமுதாயத்தில் உயர்வான நிலையை அடைவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் அன்றாடப் பணிகளில் சிறப் பாக செயல்படலாம். நல்ல பணவரவை அடையமுடியும். கடந்தகாலத் தடைகள் விலகி நன்மைகள் உண்டாகும். செவ்வாய் 6-ல் ஆட்சிபெற்று கேதுவுடன் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். அசையும்- அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். சுக்கிரன், சனி 8-ல் சஞ்சரிப்பதாலும், 16-ஆம் தேதிமுதல் சூரியன் 7-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால், சின்னச்சின்ன விஷயங்களுக்கும் வாக்குவாதம் செய்யாமல், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றிபெற்று எதிர்பாராத லாபங்களை அடைவீர்கள். சுபச் செய்திகள் தேடிவரும். தொழில், வியாபாரரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங் கள் உண்டாகும். தேவை யற்ற பயணங்களைத் தவிர்ப்ப தால் அலைச்சலைக் குறைத் துக்கொள்ள முடியும். உத்தி யோகஸ்தர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தனித்திறமையால் கடின மான பணியைத் தக்கநேரத்தில் செய்துமுடிப் பீர்கள். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, எள் தீபமேற்றி வழிபட்டால் கஷ்டங் கள் குறையும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 5-ல் செவ்வாய், கேது, 8-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் இருக்கவேண்டிய வாரமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது, நேரத்திற்கு உணவுண்பது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும், சுக்கிரன் 7-ல், ராகு 11-ல் சஞ்சரிப்பதாலும், 16-ஆம் தேதிமுதல் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதிர்பாராத உதவிகள்மூலம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும் காலமென்பதால் பேச்சில் பொறுமையுடன் இருக்கவும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட லாம். கணவன்- மனைவி அனுசரித்துச் செல்லவும். பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தா லும், இவ்வாரத்தில் சந்திரன் 10, 11 ஆகிய ராசிகளில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் சஞ்சரிப்பதால், இந்த நாட்களில் நீங்கள் தொட்ட காரியங்கள் துலங்கும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் சாதகமாக முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால், கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாம-ருப்பது உத்தமம். எந்த ஒரு பணியிலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும். கொடுக்கல்- வாங்க-ல் தற்போது அதிக தொகையைக் கையாள்வது நல்லதல்ல. உத்தியோகஸ்தர்களுக்கு அதிக பணிச்சுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்படும். பயணங்களை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தி, முருக வழிபாடு உத்தமம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு தன லாபாதிபதி புதன் 5-ல், குரு 7-ல் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் சுபிட்சமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்து கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சி கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சனி 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடிவரும் நிலை, இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும் யோகம் உண்டு. உற்றார்- உறவினர் கள் ஓரளவுக்கு ஆதர வாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், கேது சஞ்சரிப்பதால், தேவையற்ற அலைச்சலால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தூரப் பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச் சலைக் குறைத்துக் கொள்ள முடியும். கொடுக் கல்- வாங்க-ல் கவனம் தேவை. மற்றவர்களுக்காக சிபாரிசு செய்வது, ஜாமின் கையெழுத்துப் போடுவ தைத் தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், இந்த நாட்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி யடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர் பார்க்கும் லாபங்களைத் தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் தற்போது கிடைக்கும். மற்றவர்களால் செய்துமுடிக்க முடியாத கடினமான வேலையை நீங்கள் எளிதில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். கொடுக்கல்- வாங்க-ல் அதிக முதலீடுகள் செய்து லாபம் காணமுடியும். முருக வழிபாடு, சிவ வழிபாடு செய்தால் சிறப் பான பலன்களை அடையலாம்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

செவ்வாய்- கேது சேர்க்கை பெற்று முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், தைரியத்துடன் செயல்பட்டு அன்றாடப் பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள். ராசியாதிபதி புதன் 4-ல், தன பாக்கியாதிபதி சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துகளால் கிடைக்கவேண்டிய அனுகூலம் கிட்டும். குரு 6-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. சூரியன் வார முற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஞாயிறு, திங்கட்கிழமைகளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனு கூலங்களை அடையமுடியும். நிலுவையில் இருந்த பணவரவுகள் கைக்கு வந்துசேரும். இவ்வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் (மதியம் 2.05 மணி வரை) ஆகிய நாட்களில் எதிலும் நிதானத்துடனும், கவனத்துடனும் இருப்பது நல்லது. தொழில்ரீதியாக போட்டிகள் இருந்தாலும் எதையும் எதிர் கொண்டு அடையவேண்டிய லாபத்தை அடை வீர்கள். வெளியூர்த் தொடர்புகள்மூலம் அனு கூலச் செய்தி கிடைக்கும். வம்பு, வழக்குகளில் சாதகப்பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமை யுடன் செயல்படுவார்கள். வாக்குறுதிகளைக் காப்பாற்றிவிட முடியும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். விஷ்ணு பகவானை வழிபடுவது, விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஜெபிப்பது நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் தனது நட்பு கிரகமான சனி வீட்டில் ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதும், குரு 5-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதும் சுபிட்சத்தை ஏற்படுத் தும் அமைப்பாகும். தடைப்பட்ட சுபகாரியங் கள் தற்போது கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து, மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். கடன் சிக்கல்கள் குறைந்து நிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகும் சிறுசிறு வாக்குவாதங்களால் ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். 2-ல் சஞ்சரிக்கும் சூரியன் 16-ஆம் தேதிமுதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள சில குடும்பப் பிரச்சினைகள் வாரப் பிற்பாதியில் குறையும். செவ்வாய், கேது 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் 6, 7-ல் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் மேன்மை உண்டாகும். பூர்வீக சொத்துரீதியாக உள்ள வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் வேலையாட்களால் சில நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தாலும், அடைய வேண்டிய லாபத்தை அடைந்துவிடுவீர்கள். அரசுவழியில் இருந்த கெடுபிடிகள் குறையும். உத்தியோகத்தில் வேலைப்பளு இருந்தாலும் பணியை தக்கநேரத்தில் முடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். முருக வழிபாடு, துர்க்கை வழிபாடு தொடர்ந்து செய்துவருவது நல்லது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ஜென்ம ராசியில் ராசியாதிபதி செவ்வாய்- கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதாலும், சூரியன் இவ்வாரத்தில் 1, 2-ல் சஞ்சரிப்பதாலும் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு, மந்தநிலை தோன்றும். என்றாலும் 3-ல் சனி ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதன் 2-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிபெறக் கூடிய ஆற்றல் உண்டாகும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் நல்லசெய்தி கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுக்கிரன் 3-ல் சஞ்சரிப்ப தால் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பும் அதன்மூலம் பொருளாதார மேன்மையும் ஏற்படும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் சந்திரன் உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய ராசிகளில் சாதகமாக சஞ்சரிப்பதால், நீண்டநாட்களாக செய்ய நினைத்த காரியத்தைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி மேன்மை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் முன்பைவிட தற்போது நல்ல லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். அதிகாரிகளிடம் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பிரதோஷத்தன்று விரதமிருந்து நந்தியையும் சிவபெருமானையும் வில்வ இலைகளால் அர்ச்சனைசெய்து வழிபட்டால் சகல நன்மைகளைப் பெறலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக் கேற்றபடி இருந்தாலும், செவ்வாய், கேது 12-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் வீண் விரயங்கள் ஏற்படும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கணவன்- மனைவி யிடையே இருந்த வாக்குவாதங்கள் விலகி ஒற்றுமை மேம்படும். சூரியன் 12, 1-ல், சனி 2-ல் சஞ்சரிப்பதால், உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலை இருக்கும். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது, உங்களது தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருந்தால்தான் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் நல்ல ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், மிக முக்கியமான பயணங்களை இந்த நாட்களில் மேற்கொண்டால் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் ஏற்பட்டு கஷ்டங்கள் குறையும். ஞாயிறு, திங்கட்கிழமைகளில் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் தாமதப்படும். அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தற்போது தவிர்ப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. மகாலட்சுமியை வழிபட்டுவந்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1 ,2-ஆம் பாதங்கள்)

குரு பகவான் 2-ல் அனுகூலமாக சஞ்சரிப்பதாலும், செவ்வாய் 11-ல் ஆட்சிபெற்று, உடன் கேது சஞ்சரிப்பதாலும் வளமான பலனைப் பெறுவீர்கள். சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடிவரும். பொருளாதாரநிலை சிறப்பாக அமைந்து குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் சனி, சூரியன் 11, 12-ல் சஞ்சரிப்பதால், உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தி னால் தேவையற்ற மருத்துவ செலவுகளைத் தவிர்க்கலாம். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்கவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் சந்திரன் 3-ல் சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளைத் தொடங்குவது, அசையும்- அசையா சொத்துகள் வாங்குவதில் அனுகூலம் உண்டாகும். செவ்வாய், புதன் கிழமைகளில் எளிதில் முடியவேண்டிய காரியங்கள்கூட தாமதப்படும். கொடுக்கல்- வாங்க-ல் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும், நீங்கள் எதிலும் முன்நின்று செயல்பட்டால்தான் லாபத்தை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். சிலருக்கு வாகனங்கள் வாங்கும் வாய்ப்புண்டாகும். சனிப்ரீதியாக ஆஞ்சனேயர் வழிபாடு மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது நன்மையளிக்கும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு உச்ச கேந்திரமான 10-ல் செவ்வாய் ஆட்சிபெற்று, திக்பலத்தில் கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். ராகு 4-ல், சுக்கிரன், சனி 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் குடும்பத்தில் நிம்மதியிருக்கும். குரு பார்வை 5, 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலனை அடையமுடியும். சூரியன் 10, 11-ல், புதன் 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செவ்வாய், புதன் கிழமைகளில் சந்திரன் சிறப்பாக சஞ்சரிப்பதால் பாதியில் தடைப்பட்ட காரியங்கள் மீண்டும் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பாராத இனிய மாற்றங்கள் நிகழும். வெள்ளி, சனிக்கிழமைகளில் எதிலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத் தாமல் இருக்கவும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை இருந்தாலும் அடையவேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலைக் குறைத் துக்கொள்ள முடியும். சக்தி வழிபாடு சகல நன்மைகளையும் உண்டாக்கும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

சுக்கிரன் தனது நட்பு கிரகமான சனி சேர்க்கை பெற்று 11-ல் சஞ்சரிப்பதால், பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து வாழ்க்கைத்தரம் உயரும். அன்றாட செயல்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால், முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிபெறுவீர்கள். புதிய நட்புகள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். சூரியன் இவ்வாரத்தில் 9, 10-ல் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைத்து கடந்தகால நெருக்கடிகள் குறையும். குரு 12-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக செயல்படவும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் நிதானித்துச் செயல்பட்டால் விரயங்களைத் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இதற்குமுன்பு ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் வரும் நாட்களில் குறையும். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் சந்திரன் நல்ல ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொன், பொருள் வாங்குவதற்கான வாய்ப்பு களும் அமையும். தொழில், வியாபாரரீதியான கொடுக்கல்- வாங்க-ல் நெருக்கடிகள் இருந்தாலும், பொருட்தேக்கமின்றி போட்ட முதலீட்டைவிட அதிக வருவாயைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். சிலருக்கு விருப்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். தினமும் விநாயகர் வழிபாடு செய்துவந்தால் மேன்மைகள் உண்டாகும்.