முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: உத்திராடம்- 1.
செவ்வாய்: பூசம்- 1 (வ).
புதன்: மூலம்- 4.
குரு: ரோகிணி- 3 (வ).
சுக்கிரன்: சதயம்- 3.
சனி: பூரட்டாதி- 1.
ராகு: உத்திரட்டாதி- 2.
கேது: உத்திரம்- 4.
கிரக மாற்றம்:
14-1-2025 மகர சூரியன் காலை 8.55 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: மிதுனம்
14-1-2025 அதிகாலை 4.19 மணிக்கு கடகம்.
16-1-2025 பகல் 11.16 மணிக்கு சிம்மம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்ற முடியும். மாதகோள் என வர்ணிக் கப்படக்கூடிய சூரியன் இவ்வாரத்தில் 9, 10-ல் சஞ்சரிப்ப தால் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப் படும் அளவிற்கு ஒரு கௌரவ மான நிலையினை எட்டுவீர்கள். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செவ்வாய் 4-ல் இருப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க சிறுசிறு இடையூறுகள், வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச்செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு இருந்தாலும் உழைப்புக்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப் பாக இருப்பதால் மற்றவர்கள் தரக்கூடிய இடைஞ்சல்களை எளிதில் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு மற்றவர்களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் அர்ச்சனை செய்வதன்மூலம் நன்மை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதாலும், 3-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் உடனிருப்பவர்கள் ஆதரவு சிறப் பாக இருப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை பெறுவீர்கள். கடந்த ஒரு மாதக்காலமாக 8-ல் சஞ்சரித்த சூரியன் வரும் செவ்வாய்க்கிழமை முதல் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருந்துவந்த சின்னசின்ன உடல் உபாதைகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப் பாக இருப்பதால் உங்களது வேலைப்பளு சற்று குறையும். ஒருசிலருக்கு வெளிமாநிலங்கள் மூலமாகவோ வெளியூர்மூலமாகவோ ஆதாயங்கள் அடையக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங் கள் ஏற்பட்டு மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதுமூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 7-ல் சஞ்சரிப்பதாலும், பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்களின் அன்றாட தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். குரு பகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் தற்போது உண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், வரும் செவ்வாய்க்கிழமை முதல் 8-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உடன் இருப்பவரிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு சில நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமை காரணமாக எதையும் எளிதில் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப் பாக இருந்தாலும் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் தாமதமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் மட்டுமே தற்போது இருக்கக்கூடிய சின்ன சின்ன நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைக் குறைத் துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 16, 17, 18.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் சூரியன் 7-ல் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குறிப்பாக உங்களது முன்கோபத்தைக் குறைத்தால்தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவில் தேவையற்ற தடை, நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து செயல்படுவது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வதன்மூலம் போட்ட முதலை எடுக்கமுடியும். வீண் பேச்சை குறைப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்சமயத்திற்கு தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர் கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களைச் சொல்லக் கூடிய நேரமென்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர் கள் நீங்கள் கவனமாக இருந்தாலும் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, வெங்கடேசப்பெருமாளை தரிசிப்பதன்மூலம் வளமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், குரு பகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். தற்போது 5-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் செவ்வாய்க்கிழமைமுதல் ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது உங்களுக்கு மிகவும் சாதகமான அமைப்பு ஆகும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்கள் எண்ணங்களை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைவது மட்டுமில்லாமல் விரும்பிய பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களை அடைய முடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறக் கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது அனுகூல பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 17, 18.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் 4-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் சனி, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதி களை எளிதில் காப்பாற்றுவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உத்தரவுகளை பெறக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரம் ஆகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். மேற்படிப்பு சம்பந்தமாக ஒருசிலருக்கு பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய யோகமானது இருக்கிறது. இந்த வாரத்தில் விநாயகருக்கு அர்ச்சனை செய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14, 15.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதும், 6-ல் ராகு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை நீங்கள் பெறுவீர்கள். தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். உடன் பிறந்தவர்கள்மூலமாக ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட வரும் நாட்களில் சிறப்பாக செய்துமுடித்து வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் உடன் வேலை செய்பவர்கள் தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் எதிலும் சற்று முன்னெச் சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 17, 18.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. தற்போது 2-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளைத் தற்போது தீர்த்துக்கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து படிப்படியான முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் முன்னேற்றத் திற்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய வெளி உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சக ஊழியர்களால் இருந்துவந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகுவதால் மனநிம்மதி உண்டாகும். ஒருசிலருக்கு வண்டி, வாகனங்கள்மூலமாக வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, துர்க்கையம்மனை தரிசிப்பது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை திருப்திகரமாக இருக்கும். ராசியாதிபதி குரு 6-ல் இருந்தாலும் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகளும், குடும்பத்தில் சுபகாரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சி ஏற்படக்கூடிய ஒரு அமைப்பும் உண்டு. உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் சூரியன் 2-ல் சஞ்சரிப்பதாலும் பேச்சில் பொறுமையோடு இருப்பது, வண்டி வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானத் தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்றாலும் ஒருசில விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய அலைச்சல், டென்ஷன் சற்று குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டாலும் அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் சில நேரங்களில் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது உத்தமம். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 12, 1-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது, உடனிருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படக் கூடிய நேரமென்பதால் ஒருவருக் கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத் தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத் துக்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களை தற்கா-கமாக தள்ளிவைப்பது மிகவும் நல்லது. ஒருசில நேரங்களில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தற்போது அதிகப்படியான வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். சில நேரங்களில் மற்றவர்களுடைய பணியும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் வீண் பழிச்சொற்கள் ஏற்படலாம் என்பதால் சற்று கவனத்தோடு இருப்பது உத்தமம். இந்த வாரத்தில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14, 15.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் செவ்வாய், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய அமைப்புகள் வரும் நாட்களில் உண்டு. தற்போது உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, செவ்வாய்க்கிழமைமுதல் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முடிந்தவரை உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குறிப்பாக வயது மூத்தவர்களிடம் வீண்வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய ஒரு நேரமென்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத் தில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே போட்ட முதலை எடுக்கமுடியும். தற்போது கிடைக்கக்கூடிய ஒரு சின்ன வாய்ப்பைக்கூட உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் தான் நிலைமையை சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். நீங்கள் பணியில் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் எதிர்பாராத வகையில் ஏற்படக்கூடிய சிறுசிறு உடம்பு பாதிப்புகளால் எதிலும் சரியானமுறையில் கவனம் செலுத்தமுடியாத ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் எதிலும் பொறுப்போடு நடப்பது நல்லது. இந்த வாரத்தில் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 17, 18.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 10-ல் புதன், 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக் கவலைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உறவினர்களுடைய ஆதரவானது மிகமிக சிறப்பாக இருப்பதால் மனமகிழ்ச்சி "ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குறிப்பாக ஒருசில நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடு இருந்தால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ஒருசிலருக்கு வெளியூர், வெளிநாடுகள்மூலமாக மனமகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்புகள் கிடைத்து மனநிம்மதி ஏற்படும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் சூழ்நிலையை புரிந்துகொண்டு நிதானத்தோடு செயல்பட்டால் மட்டுமே படிப்பில் நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். இந்த வாரத்தில் சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் நன்மை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18.