இந்த வார ராசிபலன் 11-5-2025 முதல் 17-5-2025 வரை

/idhalgal/balajothidam/weeks-horoscope-11-5-2025-17-5-2025

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன் : பரணி- 4.

செவ்வாய்: பூசம்- 4.

புதன் : அஸ்வினி- 2.

குரு : மிருகசீரிடம்- 2.

ss

சுக்கிரன் : உத்திரட்டாதி- 3.

சனி : உத்திரட்டாதி- 1.

ராகு : பூரட்டாதி- 4.

கேது : உத்திரம்- 2.

கிரக மாற்றம்:

14-5-2025 மிதுன குரு இரவு 10.36 மணிக்கு

15-5-2025 ரிஷப சூரியன் அதிகாலை 00.12 மணிக்கு

சந்திரன் மாறுதல்

ஆரம்பம் : துலாம்

13-5-2025 அதிகாலை 2.27 மணிக்கு விருச்சிகம்.

15-5-2025 பகல் 2.07 மணிக்கு தனுசு.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதாலும், 1, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டும். சுக்கிரன், ராகு 12-ல் சஞ்சரிப்பதால் தேவை யற்ற அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும். இவ்வாரம் ஏற்படக் கூடிய குருப்பெயர்ச்சியால் குரு 3-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் உங்கள் பணியில் நீங்கள் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். உடன்பிறந்தவரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பெற்றோர்- ஆசிரியர்களின் பாராட்டுதலை பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- சனி சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். இந்த வாரத்தில் ஏற்பட உள்ள குருப்பெயர்ச்சியின்மூலமாக குருபகவான் உங்கள் ராசிக்கு 2-க்கு செல்ல இருப்பது மிகவும் நல்ல அமைப்பாகும். பணவரவுகள் மிகவும் சாதகமாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்றுவீர் கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட் கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்ப தால் வாடிக்கையாளர்களுடைய தேவையை குறித்த நேரத்தில் பூர்த்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறைவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு விடிவு காலம் பிறந்து நல்லமுன்னேற்றம் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று விரும்பிய உயர்கல்வியை அடையக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலங்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13, 14.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள்,

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன் : பரணி- 4.

செவ்வாய்: பூசம்- 4.

புதன் : அஸ்வினி- 2.

குரு : மிருகசீரிடம்- 2.

ss

சுக்கிரன் : உத்திரட்டாதி- 3.

சனி : உத்திரட்டாதி- 1.

ராகு : பூரட்டாதி- 4.

கேது : உத்திரம்- 2.

கிரக மாற்றம்:

14-5-2025 மிதுன குரு இரவு 10.36 மணிக்கு

15-5-2025 ரிஷப சூரியன் அதிகாலை 00.12 மணிக்கு

சந்திரன் மாறுதல்

ஆரம்பம் : துலாம்

13-5-2025 அதிகாலை 2.27 மணிக்கு விருச்சிகம்.

15-5-2025 பகல் 2.07 மணிக்கு தனுசு.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதாலும், 1, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டும். சுக்கிரன், ராகு 12-ல் சஞ்சரிப்பதால் தேவை யற்ற அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும். இவ்வாரம் ஏற்படக் கூடிய குருப்பெயர்ச்சியால் குரு 3-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் உங்கள் பணியில் நீங்கள் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். உடன்பிறந்தவரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பெற்றோர்- ஆசிரியர்களின் பாராட்டுதலை பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- சனி சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். இந்த வாரத்தில் ஏற்பட உள்ள குருப்பெயர்ச்சியின்மூலமாக குருபகவான் உங்கள் ராசிக்கு 2-க்கு செல்ல இருப்பது மிகவும் நல்ல அமைப்பாகும். பணவரவுகள் மிகவும் சாதகமாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்றுவீர் கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட் கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்ப தால் வாடிக்கையாளர்களுடைய தேவையை குறித்த நேரத்தில் பூர்த்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறைவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு விடிவு காலம் பிறந்து நல்லமுன்னேற்றம் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று விரும்பிய உயர்கல்வியை அடையக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலங்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13, 14.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தேவையற்றவகையில் சில நேரங்களில் வீண்செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது, எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வீண் பேச்சை குறைத்துவிட்டு உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கக் கூடிய நேரமென்பதால் எதிலும் கவனத்தோடு இருக்கவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. முடிந்தவரை தேவையில்லாத பயணங்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள காரியங்களுக்கு நேரத்தை செலவிடுவது நல்லது. பெண்கள்வகையில் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15, 16, 17.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி, 10-ல் புதன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எந்த விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் உங்கள் ராசிக்கு 10, 11-ல் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறையக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வெளியூர் தொடர்புகள் மூலமாக நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருந்தால்தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். சில நேரங்களில் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையோடு இருப்பது, உடனிருப்ப வர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறக்கூடிய காலமாகும். வண்டி, வாகனங்கள் மூலமாக எதிர்பாராதவகையில் வீண்செலவுகள் உண்டாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப்பெற துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, வெங்கடேசப் பெருமாளைத் தரிசிப்பதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 16, 17.

ss

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் புதன், 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். தற்போது 10-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் இவ்வாரத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் உங்கள் வாழ்வில் கடந்தகால சோதனைகள் எல்லாம் மறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு இருந்துவந்த தேக்க நிலை விலகி நல்லமுன்னேற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு 8-ல் சனி, ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக் கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதி யான நிலையும், நல்ல வளர்ச்சியும் ஏற்படும். மேலதிகாரி யுடைய ஆதரவானது சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் வரும் நாட்களில் கைகூடக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் நீங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெற பைரவர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் சென்றால் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறமுடியும். கடந்த ஒருமாத காலமாக 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வருகின்ற வியாழக்கிழமைமுதல் 9-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய உடல்ரீதியான பிரச்சினைகள் எல்லாம் விரைவில் குணமாகி வளமான பலன்கள் ஏற்படும். சனி, ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகமிக நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில் லாத தடங்கல்கள் உண்டாகும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. உடன்பிறந்தவர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சின்னசின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிக்ககூடியப் பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பதன்மூலமாக அனுகூலங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 13, 14.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி, ராகு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். இந்த வாரத்தில் ஏற்படக்கூடிய குரு மாற்றத்தின் மூலமாக தற்போது 8-ல் சஞ்சரிக்கக் கூடிய குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிற்கு மாறுதலாவ தால் உங்களுக்கு இருக்கக் கூடிய பொருளாதார பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி வளமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் வரும் நாட்களில் மங்களகரமான சுபகாரியங் கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத் தில் நல்லமுன்னேற்றங்கள் ஏற்படுவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த மறைமுக பிரச்சினைகள் விலகக்கூடிய நேரமாகும். திறமைவாய்ந்த வேலையாட்கள் பணியில் இணைவதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றத்தை பெறக் கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் தங்கள் திறன் களை வெளிப்படுத்தி பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைத் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 16, 17.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், வார முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்ப தால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்களது முன்கோபத்தை சற்றுக் குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. இவ்வாரத்தில் ஏற்படக் கூடிய குரு மாற்றத்தின் மூலமாக குருபகவான் 8-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத் தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய நேரம் என்றாலும் வேலைப் பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். சக ஊழியர்களை சற்று அனுசரித்துச் செல்வதன் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் சூழ்நிலையை புரிந்துகொண்டு நடந்து கொண்டால் நல்லபெயர் எடுக்கமுடியும். குறிப்பாக உறவினரிடம் பேசுகின்றபொழுது நிதானத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் வளமான பலன்களைத் பெற துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 13, 14.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதும் இவ்வாரத்தில் ஏற்படக்கூடிய குருப்பெயர்ச்சியின் மூலமாக உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டுக்கு குரு மாறுதலாக இருப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய அலைச்சல், டென்ஷன், பிரச்சினைகள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நேரம் ஆகும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துவகையில் ஒரு சில அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய அதிர்ஷ்டமானது வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் நீங்கள் எதிலும் சிறப்பாக செயல்பட்டு எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு இருந்த தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் தற்போது விலகி பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களை, விரும்பிய உயர் படிப்பை அடையக்கூடிய நேரம் ஆகும். வரும் நாட்களில் முருக வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 16, 17.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சனி- ராகு சேர்க்கை பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல் படுவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் புதன் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக் கூடிய பலம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்பைவிட தற்போது எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு போட்ட முதலை எடுக்கமுடியும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். கூட்டாளிகளால் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகளும், விரும்பிய இடமாற்றங் களை பெறக்கூடிய வாய்ப்பும் தற்போது இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் பெரியோர்களிடம் பேசுகின்றபோது நிதானத்தோடு இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கமுடியும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலங்கள் ஏற்படும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற சிவன் வழிபாடு மேற்கொள்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13, 14.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் பொருளாதாரரீதியாக ஏற்றங்களை பெறுவீர்கள். இவ்வாரத்தில் ஏற்படக்கூடிய குரு பெயர்ச்சியின்மூலமாக குருபகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்துவந்த பல்வேறு நெருக்கடிகள் தற்போது விலகி மனநிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, ராகு சஞ்சரிப்பதால் பிறரிடம் பேசுகின்றபொழுது சிந்தித்துப் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், போட்ட முதலை எடுக்கக் கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு. தொழில்ரீதியாக இருந்த மறைமுக பிரச்சினைகள் வரும் நாட்களில் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமை களை வெளிக்காட்ட வரும் நாட்களில் நல்லவாய்ப்புகள் கிடைக்கும். நீண்டநாட்களாக புதியவாய்ப்பு எதிர்பார்த்த வர்களுக்கு வரும் நாட்களில் பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்களுக்கு உங்கள்மீது இருந்த அவப்பெயர்கள் தற்போது விலகி பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் வளமான பலன்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15, 16, 17.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சனி, ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டும். தற்போது ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் சற்றுக் குறையும். உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வருகின்ற வியாழக்கிழமைமுதல் 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய குடும்ப பிரச்சினைகள் சற்று விலகி ஒருசில அனுகூலங்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் வரலாம் என்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப் பாக இருந்தாலும் உடனிருப்பவர்கள் உங்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய காலமாகும். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன் மூலம் நல்லது நடக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 16, 17.

bala160525
இதையும் படியுங்கள்
Subscribe