முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: ரோகிணி- 2.
சந்திரன்: ஆயில்யம்- 2.
செவ்வாய்: ஆயில்யம்- 4.
புதன் : ரோகிணி- 3.
குரு: மிருகசீரிடம்- 4.
சுக்கிரன்: அஸ்வினி- 1.
சனி: உத்திரட்டாதி- 1.
ராகு: பூரட்டாதி- 3.
கேது: உத்திரம்- 1.
கிரக மாற்றம்:
6-6-2025 மிதுன புதன் காலை 9.26 மணிக்கு
7-6-2025 சிம்ம செவ்வாய் அதிகாலை 2.12 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கடகம்
1-6-2025 இரவு 9.36 மணிக்கு சிம்மம்
4-6-2025 காலை 7.35 மணிக்கு கன்னி
6-6-2025 இரவு 8.06 மணிக்கு துலாம்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமை யோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள் தோன்றும். உடன்பிறந்த வரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத் தோடு இருப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைத் துக்கொள்வது உத்தமம். பெண்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத் திலும் சிந்தித்து செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிப்பதால் மன நிம்மதியானது குறையும். வேலையாட்களை சற்று அனுசரித் துச் செல்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச் சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கும் என்றா லும் நீங்கள் விரும்பியதை அடைய இடையூறுகள் ஏற்படும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6, 7.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் செவ்வாய், 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். குடும்ப ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபகரமான பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து மனநிம்மதி ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஒரு நிலையினை அடைந்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: ரோகிணி- 2.
சந்திரன்: ஆயில்யம்- 2.
செவ்வாய்: ஆயில்யம்- 4.
புதன் : ரோகிணி- 3.
குரு: மிருகசீரிடம்- 4.
சுக்கிரன்: அஸ்வினி- 1.
சனி: உத்திரட்டாதி- 1.
ராகு: பூரட்டாதி- 3.
கேது: உத்திரம்- 1.
கிரக மாற்றம்:
6-6-2025 மிதுன புதன் காலை 9.26 மணிக்கு
7-6-2025 சிம்ம செவ்வாய் அதிகாலை 2.12 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கடகம்
1-6-2025 இரவு 9.36 மணிக்கு சிம்மம்
4-6-2025 காலை 7.35 மணிக்கு கன்னி
6-6-2025 இரவு 8.06 மணிக்கு துலாம்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமை யோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள் தோன்றும். உடன்பிறந்த வரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத் தோடு இருப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைத் துக்கொள்வது உத்தமம். பெண்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத் திலும் சிந்தித்து செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிப்பதால் மன நிம்மதியானது குறையும். வேலையாட்களை சற்று அனுசரித் துச் செல்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச் சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கும் என்றா லும் நீங்கள் விரும்பியதை அடைய இடையூறுகள் ஏற்படும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6, 7.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் செவ்வாய், 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். குடும்ப ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபகரமான பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து மனநிம்மதி ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஒரு நிலையினை அடைந்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 1, 7.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும். நண்பர்கள்மூலமாக தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் எந்த ஒரு செய-லும் அவசரப்படாமல் பொறுமையோடு செயல்பட்டால் ஒரு வளமான பலன்களை அடையலாம். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருசில அனுகூலத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது வேலைப்பளு அதிகரிக்க கூடிய நேரமாகும். பணிநிமித்தமாக தேவையற்ற பயணங்கள் ஏற்படும். அதிகாரியிடம் பேசுகின்றபொழுது வீண் பேச்சை குறைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுது போக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள செயல்களுக்கு நேரத்தை செலவிடுவது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருகவழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்குச் சென்று வருவது நற்பலன்களைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 28, 29.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி சஞ்சரிப்பதும், 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி யாகக்கூடிய நேரமாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு தீர்வு கிடைத்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது, குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நேரமாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங் கள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 1, 4, 5, 6.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன்- புதன் சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதும், 9-ல் சுக்கிரன், 11-ல் குரு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. இருக்குமிடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த பொருள் தேக்கங்கள் தற்போது விலகி வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக் கூடிய பலம் உண்டாகும். உங்களுக்கு இருந்துவந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து மனநிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட வரும் நாட்களில் சுலபமாக செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கையம்மனை வழிபாடு மேற்கொள்வது, உடல் மாற்றுத் திறனாளி களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 7.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் ராகு, 9-ல் சூரியன், புதன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல் பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒருசில விஷயங்களில் முடிவெடுக்கின்றபொழுது சிந்தித்துச் செயல்பட்டால் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக அவர்களுடைய ஆதரவைப் பெறமுடியும். ஒரு சிலருக்கு தேவையற்ற பயணங்களும் அதன்மூலம் வீண்செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் மற்றவர் களுடைய பணியும் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். முடிந்தவரை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. பெண்கள்மூலமாக எதிர்பாராத வகையில் வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் ஞாபகமறதி ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதன்மூலம் வளமான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 4, 5, 6.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி, 7-ல் சுக்கிரன், 9-ல் குரு சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலமாக வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் தற்போது கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரரீதியாக நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகு வதால் மன நிம்மதி உண்டாகும். பணிநிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்பு கள் வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் கடந்தகாலங்களில் இருந்த நிலைமாறி தற்போது எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அமைப்பும், எதையும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய திறனை அடையக்கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு. மேலும் அனுகூலமான பலன்களை அடைய சிவன் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3, 7.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் குரு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தேவையற்ற வகையில் அலைச்சல்கள் ஏற்பட்டு இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில்ரீதியாக பார்க்கின்றபொழுது நீங்கள் சற்று சிந்தித்துச் செயல் பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 5-ல் சனியும், 7-ல் புதனும் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதனை உங்களது தனித்திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய ஒரு பலம் உண்டாகும். அசையும், அசையா சொத்துகள்வகையில் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டுமில்லாமல் மனநிம்மதிக் குறைவும் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பு சார்ந்த பயனுள்ள விஷயங்களில் நேரத்தை செலவிடுவது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4, 5, 6.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். தற்போது உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகி மனநிம்மதி ஏற்படும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் தற்போது முழுமையாக விலகி வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் சுமூகமாக முடிந்து மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்துவந்த கடந்தகால தேக்கங்கள் எல்லாம் முழுமையாக மறைந்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தற்போது கிடைக்கும். உத்தியோகத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6, 7.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சனி 3-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், 4-ல் சுக்கிரன், 5-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. உங்களின் நீண்டநாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, ஒரு சில நேரங்களில் முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். உடன்பிறந்தவரிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறந்து விளங்கி பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கையம்மனை வழிபாடு செய்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன்மூலமாக அனுகூலங்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 7.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 5-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. உங்களுக்கு இருந்துவந்த பொருளாதார பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள்வழியி-ருந்து வந்த மனக்கவலைகள் எல்லாம் வரும் நாட்களில் முழுமையாக மறைந்து மனநிம்மதி ஏற்படும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் படிப்படியாக குறையும். சர்பக் கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் உங்களது முன்கோபத்தை சற்றுக் குறைத்துக்கொள்வது, குடும்ப உறுப்பினர்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய நேரமாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்பானது வரும் நாட்களில் உண்டு. மேலும் அனுகூலமான பலன்களை அடைவதற்கு சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3,
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் கேது சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்றாலும் குருபகவான் சாதகமற்று இருப்பதால் பணவிஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு இருக்கவேண்டும். சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால்தான் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத தடங்கல்கள் ஏற்படும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். உடன்பிறந்தவர்கள்மூலமாக தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படலாம். நெருங்கியவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் உடனிருக்கக்கூடிய சக நண்பர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்து செல்லலாம் என்பதால் எதிலும் கவனத்தோடு இருக்க வேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4, 5, 6.