எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பரணி- 1.
செவ்வாய்: சதயம்- 4.
புதன் : கிருத்திகை- 4.
குரு: உத்திரட்டாதி- 1.
சுக்கிரன் : உத்திரட்டாதி- 1.
சனி: அவிட்டம்- 3.
ராகு: கிருத்திகை- 1.
கேது: விசாகம்- 3.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
2-5-2022 அதிகாலை 4.43 மணிக்கு ரிஷபம்.
4-5-2022 மாலை 4.45 மணிக்கு மிதுனம்.
7-5-2022 அதிகாலை 5.34 மணிக்கு கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய், சனி சேர்க்கைபெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராதவகையில் சிறப் பான ஆதாயங்களை அடையமுடியும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருந்து அனைத் துத் தேவைகளும் பூர்த்தியாகும். சூரியன், ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத்தோடு செயல்பட்டால் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் குறைந்து நிம்மதியுடன் இருக்கமுடியும். சுக்கிரன், குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீண்டநாட்களாக நிலவும் பிரச்சினைகளுக்கு வரும் நாட்களில் தீர்வு ஏற்படும்; நிம்மதியுடன் தொழிலை நடத்தமுடியும். வேலையாட்களால் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழிலை விருத்தி செய்யவேண்டுமென்ற உங்களது எண்ணம் நிறைவேறக்கூடிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். நீண்டநாட்களாக உள்ள கடன்கள் படிப்படியாகக் குறையும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல், வேலையிலிருந்த பளு குறைந்து நிம்மதி யுடன் பணியாற்றமுடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர் களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் அனுகூலங்கள் கிடைக்கும். சூரிய நமஸ்காரம், அஷ்டலட்சுமி வழிபாடு நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், குரு சேர்க்கை பெற்று லாப ஸ்தானமான 11-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி கடந்தகால கடன்களைக் குறைக்கமுடியும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். குடும்பத் தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகி நிம்மதி ஏற்படும். ராசிக்கு 10-ல் செவ்வாய் இருப்பதால் தொழிலில் நல்ல வளர்ச்சியடைவது மட்டுமல்லாமல், சிலருக்கு ஒரு பெரிய இடத்து நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக உள்ள சிக்கல்கள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைத்து தொழிலை விரிவுபடுத்த முடியும். புதன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் சாமர்த்தியமாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளைப் புரிவீர்கள். 6-ல் கேது இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் கடினமான செயலைக்கூட எளிதில் முடித்து அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகள்வழியில் அனுகூலங்கள் உண்டாகும். திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். இவ்வாரத்தில் ஆஞ்சனேயரை வழிபடுவது, பிரத்தியங்கரா தேவியை தரிசிப்பதன்மூலம் சங்கடங்கள் குறையும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பஞ்சமாதிபதி சுக்கிரன் 10-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் குடும்பத் தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் கைகூடும். சூரியன், ராகுவுடன் 11-ல் சஞ்சரிப்ப தால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். சமுதாயத்தில் மற்றவர்கள் வியக்குமளவுக்கு உயர்வான நிலையை எட்டும் வாய்ப்பு கிட்டும். ராசிக்கு 8-ல் சஞ்சரித்த சனி தற்போது அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்ப தால், உங்களுக்கிருக்கும் உடல்நலப் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகும். உணவு விஷயத் தில் மட்டும் சற்று கட்டுப் பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்டநாள் மனக்குறைகள் விலகி எதிலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிறு நெருக்கடிகள் இருந்தாலும், உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப் பது மட்டுமல்லாமல், வேலையாட்களும் ஆதரவாக இருப்பார்கள். தொழில் தொடர் பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமலிருக்கவும். வேலைக்குச் செல்பவர் களுக்கு வேலைப்பளு இருந்தாலும், அதற்கான பொருளாதார அனுகூலங்களைப் பெறுவீர் கள். அதிகாரியிடம் நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக மறைந்து நிம்மதியுடன் செயல்படுவீர்கள். ஞாயிறு, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் எதிர்பார்ப்புகள் எளிதில் வெற்றியடையும். சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, மகாவிஷ்ணுவை தரிசிப்பதன்மூலம் நற்பலன்கள் உண்டாகும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 4, 9-க்கு அதிபதியான சுக்கிரன், குரு இணைந்து பாக்கிய ஸ்தானமான 9-ல் வலுவாக சஞ்சரிப்ப தால் பொருளாதாரரீதியாக மிகச்சிறப் பான பலனை அடைவீர்கள். எடுக்கும் முயற்சி களில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். கடந்தகால இடையூறுகள் விலகி உயர்வான நிலையை எட்டமுடியும். சூரியன் 10-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும். இவ்வாரத்தில் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும். நவீன யுக்திகளைப் பயன் படுத்தி தொழிலை விரிவு படுத்த முடியும். பொருளா தார நெருக்கடிகள் விலகி லாபங்களை எட்ட முடியும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டாகும். பூர்வீக சொத்துரீதியாக நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகள் தற்போது முடிவுக்கு வரும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைப்பது மட்டு மல்லாமல், வெளியூர்த் தொடர்புகள்மூலம் அனு கூலங்கள் ஏற்படும். சனி, செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, வாகனங்களில் நிதானத்தோடு செல்வது நல்லது. குறிப்பாக உடன்பிறந்த வர்கள் வழியில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்கவும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடைபெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சஷ்டியன்று முருக வழிபாடு மேற்கொள்வதும், உடல் ஊனமுற்றவர் களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும் நல்லது.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 7-ல் சனி, செவ்வாய் இணைந்து சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். கணவன்- மனைவி யிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குக் கூட கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய நேரமாகும். உடனிருப்பவர் களிடம் பேச்சில் பொறுமை யோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குரு பகவான் சுக்கிரனுடன் 8-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். வாகனங்கள் மூலமாகக்கூட வீண் விரயங்கள் ஏற்படலாம். ராசிக்கு 3-ல் கேது, 9-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் வெளியூர்மூலமாக ஒருசில அனுகூலங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடுகளைத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கவும். கூட்டாளிகளை கலந்தாலோ சித்து செயல்பட்டால் நெருக்கடி களை சமாளிக்க முடியும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல் மற்றவர்கள் பணியையும் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான சூழல் இருக்கும். மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் எந்தவித நெருக்கடியையும் சமாளிக்கமுடியும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்கள் செயல்கள் அனைத்தும் பரிபூரண வெற்றியினைத் தரும். தட்சிணா மூர்த்தி வழிபாடு, படிக்கும் எழை மாணவ- மாணவியருக்கு முடிந்த உதவி செய்வது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7-ல் குரு, சுக்கிரன் இணைந்து சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிகமிக நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சனி அதிசாரமாக 6-ல் செவ்வாயுடன் சஞ்சரிப்பதால், நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்கள் எளிதில் கைகூடும். புதன் 9-ல் சஞ்சரிப்ப தால் தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களைத் தீட்டி அதன்மூலம் லாபங் களை அடைவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வரவேண்டிய பணவரவுகள் வருவதால், நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி கடன்களைக் குறைப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். நீண்டநாட்களாக வேலையில்லாமல் இருந்த வர்களுக்கு கௌரவமான வேலை அமையும். சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சிறப் பாக செய்துமுடிக்க முடியும். இவ்வாரத்தில் சூரியன், ராகு 8-ல் சேர்ந்திருப்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வாகனங்களில் நிதானத்தோடு செல்வது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அனைத்துவகையிலும் அனுகூலமான பலன்களை அடையும் யோகமுண்டு. சிவ வழிபாடு மேற்கொள்வது, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றுவது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் கேது, 7-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படலாம். குரு 6-ல் சுக்கிரனுடன் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணவரவுகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். உடனிருப்பவர்களே வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்பட்டால் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும். சனி அதிசாரமாக 5-ல் சஞ்சரிப்பதால் கடந்தகால அலைச்சல்கள் குறையும். என்றாலும் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச்சென்றால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். மறைமுகப் போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். அரசு அதிகாரியிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை- அதன்காரணமாக செலவுகள் உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் ஒருசில ஆதாயங்களை அடையமுடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதும், சூரிய நமஸ்காரம் செய்வதும் உத்தமம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி, பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. சுக்கிரனும் குருவும் 5-ல் சஞ்சரிப்ப தால் பொருளாதாரரீதியாக சிறப்பான பலன் கள் ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். உங்களுக்கிருந்த வம்பு வழக்குகளில் நல்ல முடிவு கிடைக்கும். பூர்வீக சொத்துவழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். நீண்டநாட்களாக குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி லாபகரமான பலன்களை அடையமுடியும். தொழில் வளர்ச்சிக்காக அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகள் தற்போது கிடைக்கும். புதன் 7-ல் சஞ்சரிப்பதால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிக்காட்ட சிறப்பான வாய்ப்புகள் அமையும். பணியில் பதவி உயர்வு களைப் பெற்று மகிழ்ச்சியடைய முடியும். நீண்டநாள் கனவுகள் நிறைவேறும். சனி, செவ்வாய் 4-ல் இருப்பதால், அலைச்சல் காரண மாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்பட்டாலும்கூட, எதையும் சமாளிக்க முடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். கிருத்திகையன்று முருகனுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கு எள்தீபமேற்றி வழிபடுவது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரித்த சனி தற்போது அதிசாரமாக 3-ல் செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிப்பதால் உங்களுக்கு நிலவிய கடந்தகால கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக விலகி வளமான பலன்களைப் பெறுவீர்கள். ஏழரைச்சனியால் பல இன்னல்களை சந்தித்த உங்களுக்கு அதன் தாக்கம் முழுமையாகக் குறைந்து நல்ல வளர்ச்சியடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும். வாழ்க்கைத்தரம் படிப்படியாக அதிகரிக்கும். குரு, சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. சூரியனும், ராகுவும் 5-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் நீண்டநாட்களாக இருந்த நெருக்கடிகள் படிப்படியாகக் குறைந்து நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். நல்ல வாய்ப்பு கள் கிடைத்து நிம்மதியடைய முடியும். தொழிலை மேன்மைப்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனைத் தரும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் படிப்படியாகக் குறையும். கடன்கள் குறைந்து சேமிக்குமளவுக்குப் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்குத் தகுதிக்கேற்ற சிறப்பான வாய்ப்புகள் வரும் நாட்களில் அமையும். வெளியூர்த் தொடர்புகள்மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் மிகவும் அனுகூலமான பலன்களை அடையமுடியும். சனிக்கிழமை மட்டும் கவனமாக இருப்பது நல்லது. மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, சிவ ஸ்தலங்களுக்கு சென்று வருவது மிகவும் நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 3-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை காணப்படும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. சுக ஸ்தானமான 4-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், வீண் செலவுகள் ஏற்படும். ராசிக்கு சனி, செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நீங்கள் நல்ல எண்ணத்துடன் பேசினாலும் அதனை உடனிருப்பவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்பதால், முடிந்தவரை பேச்சைக் குறைத்துக்கொள்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கான பலன் கிடைக்காது. நியாயப்படி உங்களுக் குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள்கூட போட்டிகள் காரணமாக தட்டிப்போகும். இருக் கும் வாய்ப்புகளை முடிந்தவரை தற்காத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பதால் ஓய்வுநேரம் குறையும். இவ்வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூலங்களை அடையும் வாய்ப்புண்டு. துர்க்கையம்மன், முருகப்பெருமானை தரிசிப்பதன்மூலம் நல்லது நடக்கும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் பகலவனைக் கண்ட பனிபோல படிப்படியாக விலகி நல்ல நிலையை அடையமுடியும். 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எந்த செய-ல் ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றியை அடைவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. உங்கள் ராசிக்கு 4-ல் உள்ள புதன் 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால் தொழில், வியாபாரத் தில் புதிய திட்டங்களைத் தீட்டி அதில் வெற்றி காண்பீர்கள். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி நிம்மதியடைவீர்கள். ஒரு பெரிய மனிதருடைய நட்பு கிடைக்கும். பயணங்கள்மூலம் அனுகூல மான பலன்களை அடைவீர்கள். ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால், ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும், குரு பார்வை 6, 8-ஆம் வீடுகளுக்கு இருப்ப தால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலைக் குச் செல்பவர்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறைந்து கௌரவமான பதவியை அடைய முடியும். நீண்டநாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத் தி-ருந்து நல்ல வாய்ப்புகள் வரும். ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் எதில் ஈடுபட்டாலும் சிறப்பான அனுகூலங்களை அடைவீர்கள். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு அர்ச்சனை செய்வது, ஏழை முதியவர்களுக்கு முடிந்த உதவிகள் செய்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசிக்கு 2-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால், பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் சூழ்நிலைக் குத் தக்கவாறு நடந்துகொள்வது நல்லது. இதுநாள்வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த சனி, தற்போது 12-ல் செவ்வாய் சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதால், பணவிஷயத்தில் சிக்கனமாக இருக்கவும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் மிகவும் எச்சரிக்கைவேண்டும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். ஜென்ம ராசியில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து, நெருக்கடிகளை சமாளிக்கும் பலம் உண்டாகும். பிள்ளைகள்வழியில் ஒருசில அனு கூலங்கள், குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை நம்பாமல் நீங்கள் முன்னின்று செயல்பட் டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். மறைமுகப் போட்டிகள் நிலவினா லும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்பட்டால் அவர்களின் உதவி நெருக்கடிகளைக் குறைக்க உதவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் அதற்கான பொருளாதார ஆதாயங்கள் கிடைக்கும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றுவது, வேங்கடாசலபதி வழிபாடு நன்மை தரும்.