Advertisment

இந்த வார ராசிபலன் - 5-8-2018 முதல் 11-8-2018 வரை

/idhalgal/balajothidam/week-rasipalan-8

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

5-8-2018- ரிஷபம்.

7-8-2018- மிதுனம்.

9-8-2018- கடகம்.

11-8-2018- சிம்மம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: ஆயில்யம்- 1, 2, 3.

செவ்வாய்: திருவோணம்- 3, 2.

புதன்: பூசம்- 1, 2.

குரு: விசாகம்- 1.

சுக்கிரன்: உத்திரம்- 2, 3, 4, ஹஸ்தம்- 1.

சனி: மூலம்- 1.

ராகு: பூசம்- 3, 2.

கேது: திருவோணம்- 1, உத்திராடம்- 4.

கிரக மாற்றம்:

செவ்வாய் வக்ரம்.

சனி வக்ரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

தைரியமும், அஞ்சா நெஞ்சமும் உடன்பிறந்தது என்பதால், எந்தவித பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து விடும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு தனகாரகன் குரு பகவான் 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும் என்றாலும், 4-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்கத் தடை, நிம்மதிக் குறைவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வதன் மூலம் அனுகூலப் பலன்களைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற சற்று தாமதநிலை உண்டாகும் என்றாலும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபத்தினைப் பெறமுடியும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு உடல்நிலையில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் கல்வியில் சற்று மந்தநிலை உண்டாகும். சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

பார்ப்பதற்கு சாதாரணமானவராக இருந்தாலும், யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் சுபிட்சமும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு, மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளைத் தற்போது மேற்கொள்ளலாம். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்களுக்குக்கீழ்ப்படிந்து நடந்து கொண்டால் அனைவரின் ஆதரவுகளையும் பெறலாம். சனி பகவான் வழிபாடு செய்வது, சனிக்கவசம் படிப்பது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

Advertisment

தங்களுடைய ரசிக்கும்படி

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

5-8-2018- ரிஷபம்.

7-8-2018- மிதுனம்.

9-8-2018- கடகம்.

11-8-2018- சிம்மம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: ஆயில்யம்- 1, 2, 3.

செவ்வாய்: திருவோணம்- 3, 2.

புதன்: பூசம்- 1, 2.

குரு: விசாகம்- 1.

சுக்கிரன்: உத்திரம்- 2, 3, 4, ஹஸ்தம்- 1.

சனி: மூலம்- 1.

ராகு: பூசம்- 3, 2.

கேது: திருவோணம்- 1, உத்திராடம்- 4.

கிரக மாற்றம்:

செவ்வாய் வக்ரம்.

சனி வக்ரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

தைரியமும், அஞ்சா நெஞ்சமும் உடன்பிறந்தது என்பதால், எந்தவித பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து விடும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு தனகாரகன் குரு பகவான் 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும் என்றாலும், 4-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்கத் தடை, நிம்மதிக் குறைவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வதன் மூலம் அனுகூலப் பலன்களைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற சற்று தாமதநிலை உண்டாகும் என்றாலும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபத்தினைப் பெறமுடியும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு உடல்நிலையில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் கல்வியில் சற்று மந்தநிலை உண்டாகும். சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

பார்ப்பதற்கு சாதாரணமானவராக இருந்தாலும், யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் சுபிட்சமும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு, மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளைத் தற்போது மேற்கொள்ளலாம். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்களுக்குக்கீழ்ப்படிந்து நடந்து கொண்டால் அனைவரின் ஆதரவுகளையும் பெறலாம். சனி பகவான் வழிபாடு செய்வது, சனிக்கவசம் படிப்பது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

Advertisment

தங்களுடைய ரசிக்கும்படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு எளிதில் பாத்திரமாகக் கூடிய மிதுன ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சுபிட்சமான பலன்கள் ஏற்படும். குரு பகவான் 5-ல் இருப்பதால் தாராள தனவரவால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்படும். கடன்கள் படிப்படியாகக் குறையும். புத்திரவழியில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைப் பிறருக்குக் கடனாகக் கொடுக்கலாம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடையமுடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி, கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பார்கள். சிவ பெருமானையும் முருகக்கடவுளையும் வழிபடுவது உத்தமம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கள்ளம் கபடமின்றி வெளிப்படையாகப் பேசும் குணமும், பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் நடந்துகொள்ளும் பண்பும் கொண்ட கடக ராசி நேயர்களே! உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், ராகு, 7-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. முடிந்தவரை உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது சிறப்பு. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வதன் மூலம் வீண்விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துகளால் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமான பலன்களைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலைகள் உண்டாவதால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்கும். விநாயகர் மற்றும் முருக வழிபாடு நல்லது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

நீதி நேர்மைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், தன்னைப்போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் குணமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய்!கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனைத்தையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்பதால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வதுதன்மூலம் மருத்துவச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. என்றாலும் நிறைய போட்டிகளை சமாளித்தே லாபத்தைப் பெற வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியும். குரு பகவான் சாதகமற்று இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. துர்கையம்மனை வழிபடுவது சிறப்பு.

thisweekrasi

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்திவிடும் இயல்புடையவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சூரியன், ராகு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால், நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் ஓரளவுக்கு தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடிவரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். உடல்நிலையில் சற்றே மந்தநிலை உண்டானாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொன், பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனை அடையமுடியும். உற்றார்- உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளால் லாபம் கிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். வெளியூர்ப் பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறுதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். சனி பகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல், எதற்கும் சளைக்காமல் பாடுபடும் ஆற்றல்கொண்ட துலா ராசி நேயர்களே! ஜென்ம ராசியில் குரு, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருக்கும் என்றாலும், 3-ல் சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி கிடைக்கப் பெற்று எதையும் சமாளித்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் மட்டுமே தேவையற்ற கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும். தொழில், வியாபாரம் சற்று மந்தநிலையில் நடைபெற்றாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் விரயங்களைத் தவிர்க்கமுடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சற்றே கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்ப்பது உத்தமம். ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபட்டால் மேன்மையான பலன் உண்டாகும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றிபெற்று முன்னேறும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி செவ்வாய், கேது சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் இருப்பதும், 9-ல் புதன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நற்பலன்களையடைவீர்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகளும் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தினை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதோடு எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கும். தொழிலாளர்களும், கூட்டாளிகளும் அனுகூலமாக செயல்படுவார்கள். பயணங்களால் சாதகப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் மங்களம் உண்டாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

யாருக்கும் கீழ்ப்படிந்து அடிமையாக நடப்பதென்பதை இயலாத காரியமாகக் கருதும் குணம்கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி குரு லாப ஸ்தானத்திலும், 10-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். என்றாலும் 2-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்றுத் தள்ளி வைக்கவும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். அசையும், அசையா சொத்துகளால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று பிரச்சினைகளை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியைப் பெருக்கமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைப்பளு சற்று குறைவாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை உண்டாகக்கூடும் என்பதால் முழுமூச்சுடன் முயன்று படிப்பது உத்தமம். முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் சிறப்பான பலன்களைத் தரும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

எப்பொழுதும் நகைச்சுவை உணர்வுடனும், கள்ளங் கபடமன்றி வெளிப்படையாகவும் பழகும்குணம் கொண்ட மகர ராசி நேயர்களே! உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், கேது, 7-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றியடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தைப்பெற எதிர்நீச்சல் போடவேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திப் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரியத் தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். சிவ வழிபாடு நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

தனக்குப் பிடித்தவர்களிடம் அன்புடன் நெருங்கிப் பழகும் பண்பும், பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத பிடிவாத குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், ராகு, 9-ல் குரு சஞ்சரிப்பதால் கடந்தகாலப் பிரச்சினைகள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுபகாரியங்கள் கைகூடும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்றுக் குறையும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாடப் பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கப்பெறும். தினமும் விநாயகரை வழிபட்டு வந்தால் மேன்மைகள் உண்டாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சின்னச்சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடித்து, பேசும்போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என உணர்த்தும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 7-ல் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. குரு பகவானை வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

balajyothidam100818
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe