இந்த வார ராசிபலன் 18-2-2018 முதல் 24-2-2018 வரை

/idhalgal/balajothidam/week-rasipalan-18-02-2018-24-02-2018

இந்த வார ராசிபலன்

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

18-2-2018 முதல் 24-2-2018 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மீனம்.

20-2-2018- மேஷம்.

22-2-2018- ரிஷபம்.

24-2-2018- மிதுனம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: அவிட்டம்- 4, சதயம்- 1, 2.

செவ்வாய்: கேட்டை- 1, 2.

புதன்: சதயம்- 3, 4, பூரட்டாதி- 1, 2.

குரு: விசாகம்- 4.

சுக்கிரன்: சதயம்- 2, 3, 4, பூரட்டாதி- 1.

சனி: மூலம்- 2.

ராகு: ஆயில்யம்- 1.

கேது: திருவோணம்- 3.

கிரக மாற்றம்:

இல்லை

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிக்கு அட்டமத்துச்சனி விலகிவிட்டது. ஆனால் சனிக்கு வீடு கொடுத்த குரு ராசிக்கு 8-ல் வந்துவிட்டார். இது காதுவலி போய் திருகுவலி வந்த கதை. என்றாலும் 8-க்குடைய செவ்வாய் அவரோடு இருப்பதனால் சின்னக் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதுபோல எல்லா சோதனைகளும் வேதனைகளும் விலகிவிடும். தசாபுக்திகள் ஏறுமாறாக- தாறுமாறாக இருந்தால் என்னதான் தடுப்பூசி போட்டாலும் மழையில் நனைந்தால் சளி பிடிப்பதுபோல சிறுசிறு சங்கடங்களும் வரும். வந்தாலும் விலகிவிடும், பாதிக்காது. வேலை தேடி அலையும் ஒருவருக்கு ஒரே நேரத்தில் மூன்று கம்பெனியிலிருந்து இன்டர்வியூ கார்டு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி சில நேரங்களில் டென்ஷன் இருக்கும். சில குடும்பத்தில் பிறந்த வீட்டைப் பேணுவதா புகுந்த வீட்டைப் போற்றுவதா என்பது போன்ற பிரச்சினைகளும் தர்மசங்கடங்களும் உருவாகும். பணமா- பாசமா? பந்தமா- சொந்தமா என்பதில் முடிவெடுப்பதுதான் தர்மசங்கடம்.

ஆனாலும் பொருளாதாரத்திலும் வாழ்க்கை வசதிகளிலும் காரியங்களை செயல்படுத்துவதிலும் எந்தவிதமான தடங்கலோ வருத்தங்களோ வராது. வந்தாலும் எளிதாக சமாளித்துவிடலாம். இது ராசிநாதன் ஆட்சி பெற்ற பலம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2020 வரை அட்டமத்துச்சனி நடக்கிறது. இது முதல் சுற்றாக இருந்தால் விபத்து, கண்டம், கௌரவப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரண்டாவது சுற்றாக நடந்தால் இழந்த பொருள் வரவு, இழந்த செல்வாக்கு, இழந்த பதவி எல்லாம் மீண்டும் கிடைக்கும். மூன்றாவது சுற்றாக இருந்தால் வீண் செலவு, விரயம், அரசாங்கத் தொல்லை, வழக்கு வில்லங்கம், விவகாரம் இவற்றைச் சந்திக்க வேண்டும். நான்காவது சுற்றாக இருந்தால் அதுவே அந்திமக்காலம். எந்தச் சுற்றாக இருந்தாலும் அந்தக் காலகட்டத்தில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் விபரீத விளைவுகள், உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ உண்டாகும். அப்படிப்பட்ட ஜாதகர்கள், ருத்ரயாகம் செய்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்யலாம். திங்கட்கிழமைதோறும் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யலாம். இது உடனடித் தீர்வுக்கான பரிகாரம். சந்திரனின் மாமனார் தட்சன் சந்திரனை "தேய்ந்து போகக் கடவாய்!' என்று சாபமிட்டதும், சந்திரன் ஈசுவரனை சரணடைய "தேய்ந்து தேய்ந்து வளரக் கடவது!' என்று ஈசுவரன் பிறைச்சந்திரனை தலையில் சூட்டிக்கொண்டார். அதனால்தான் அவருக்கு சந்திரசேகரன் என்றும் ஒரு பெயர் உண்டு. பிறைசூடிய பெருமான் என்று நால்வரில் ஒருவர் பாடினார். சிவனை வழிபட்டால் சந்திர தோஷம் விலகும்.

rasipalan

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 9-ல் இர

இந்த வார ராசிபலன்

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

18-2-2018 முதல் 24-2-2018 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மீனம்.

20-2-2018- மேஷம்.

22-2-2018- ரிஷபம்.

24-2-2018- மிதுனம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: அவிட்டம்- 4, சதயம்- 1, 2.

செவ்வாய்: கேட்டை- 1, 2.

புதன்: சதயம்- 3, 4, பூரட்டாதி- 1, 2.

குரு: விசாகம்- 4.

சுக்கிரன்: சதயம்- 2, 3, 4, பூரட்டாதி- 1.

சனி: மூலம்- 2.

ராகு: ஆயில்யம்- 1.

கேது: திருவோணம்- 3.

கிரக மாற்றம்:

இல்லை

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிக்கு அட்டமத்துச்சனி விலகிவிட்டது. ஆனால் சனிக்கு வீடு கொடுத்த குரு ராசிக்கு 8-ல் வந்துவிட்டார். இது காதுவலி போய் திருகுவலி வந்த கதை. என்றாலும் 8-க்குடைய செவ்வாய் அவரோடு இருப்பதனால் சின்னக் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதுபோல எல்லா சோதனைகளும் வேதனைகளும் விலகிவிடும். தசாபுக்திகள் ஏறுமாறாக- தாறுமாறாக இருந்தால் என்னதான் தடுப்பூசி போட்டாலும் மழையில் நனைந்தால் சளி பிடிப்பதுபோல சிறுசிறு சங்கடங்களும் வரும். வந்தாலும் விலகிவிடும், பாதிக்காது. வேலை தேடி அலையும் ஒருவருக்கு ஒரே நேரத்தில் மூன்று கம்பெனியிலிருந்து இன்டர்வியூ கார்டு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி சில நேரங்களில் டென்ஷன் இருக்கும். சில குடும்பத்தில் பிறந்த வீட்டைப் பேணுவதா புகுந்த வீட்டைப் போற்றுவதா என்பது போன்ற பிரச்சினைகளும் தர்மசங்கடங்களும் உருவாகும். பணமா- பாசமா? பந்தமா- சொந்தமா என்பதில் முடிவெடுப்பதுதான் தர்மசங்கடம்.

ஆனாலும் பொருளாதாரத்திலும் வாழ்க்கை வசதிகளிலும் காரியங்களை செயல்படுத்துவதிலும் எந்தவிதமான தடங்கலோ வருத்தங்களோ வராது. வந்தாலும் எளிதாக சமாளித்துவிடலாம். இது ராசிநாதன் ஆட்சி பெற்ற பலம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2020 வரை அட்டமத்துச்சனி நடக்கிறது. இது முதல் சுற்றாக இருந்தால் விபத்து, கண்டம், கௌரவப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரண்டாவது சுற்றாக நடந்தால் இழந்த பொருள் வரவு, இழந்த செல்வாக்கு, இழந்த பதவி எல்லாம் மீண்டும் கிடைக்கும். மூன்றாவது சுற்றாக இருந்தால் வீண் செலவு, விரயம், அரசாங்கத் தொல்லை, வழக்கு வில்லங்கம், விவகாரம் இவற்றைச் சந்திக்க வேண்டும். நான்காவது சுற்றாக இருந்தால் அதுவே அந்திமக்காலம். எந்தச் சுற்றாக இருந்தாலும் அந்தக் காலகட்டத்தில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் விபரீத விளைவுகள், உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ உண்டாகும். அப்படிப்பட்ட ஜாதகர்கள், ருத்ரயாகம் செய்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்யலாம். திங்கட்கிழமைதோறும் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யலாம். இது உடனடித் தீர்வுக்கான பரிகாரம். சந்திரனின் மாமனார் தட்சன் சந்திரனை "தேய்ந்து போகக் கடவாய்!' என்று சாபமிட்டதும், சந்திரன் ஈசுவரனை சரணடைய "தேய்ந்து தேய்ந்து வளரக் கடவது!' என்று ஈசுவரன் பிறைச்சந்திரனை தலையில் சூட்டிக்கொண்டார். அதனால்தான் அவருக்கு சந்திரசேகரன் என்றும் ஒரு பெயர் உண்டு. பிறைசூடிய பெருமான் என்று நால்வரில் ஒருவர் பாடினார். சிவனை வழிபட்டால் சந்திர தோஷம் விலகும்.

rasipalan

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 9-ல் இருக்கிறார். சூரியன் சுக்கிரனோடு சம்பந்தம். அவர்களை சனியும் பார்க்கிறார், செவ்வாயும் பார்க்கிறார். 9-ஆமிடம் திரிகோண ஸ்தானம். தகப்பனார், பூர்வபுண்ணிய ஸ்தானம். சுக்கிரன் 4-க்குடைய கேந்திராதிபதி. கேந்திராதிபதி திரிகோணம் ஏறுவதால் உங்கள் செல்வாக்கு, திறமை இவற்றுக்குப் பஞ்சமில்லை. செயல்பாடும் சிறப்பாக இருக்கும். செவ்வாய் 6-க்கும் 11-க்கும் உடையவர். சுக்கிரன் 12-க்குடையவர். அதனால் தகப்பனார் வகையில் தவிர்க்கமுடியாத செலவுகளும் சில குழப்பங்களும் உருவாகி மறையும். 7-ல் சனி, 7-க்குடைய குரு 6-ல் மறைவு. திருமணத்தடை ஏற்படும். திருமணமானவர்களுக்குள் வருத்தங்களோ வைத்தியச்செலவுகளோ உருவாகும். அல்லது சம்பந்தக்காரர்களுக்குள் கௌரவப் பிரச்சினை உருவாகும். 2-ஆமிடத்தில் ராகு இருப்பதால் நீங்கள் நல்லது சொன்னாலும் பொல்லாப்பாக முடியும். பாரதியார் பாடின மாதிரி வாக்கினில் இனிமை வேண்டும். ஒருவரைப் பசுபோல சாந்தம் என்று சொல்வதைவிட மாடு என்று சொன்னால் எப்படி இருக்குமோ அது மாதிரி ஆகிவிடும். 2-ஆம் இடத்தை குருவும் பார்ப்பதால் குடும்பக் குழப்பங்களையும் வாக்கில் ஏற்படும் முரண்பாடுகளையும் சமாளித்துவிடலாம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 8-ல் சூரியன், புதன், சுக்கிரன் மூவரும் மறைகிறார்கள். அவர்களுக்கு வீடு கொடுத்த சனி 6-ல் மறைகிறார். என்றாலும் அவர்களை சனி பார்க்கிறார். உடன் செவ்வாயும் பார்க்கிறார். அதனால் அட்டமத்தில் மறைந்த சூரியன், புதன், சுக்கிரன் உங்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார்கள். ஹைவேஸ் ரோட்டில் பஸ் பிரேக் டவுன் ஆகி நின்றுபோவது ஒருவிதம். முன்னால் போகும் லாரிகளின் போக்குவரத்துத் தடையினால் மெதுவாக பஸ் போவது இன்னொரு விதம். முதலில் சொன்னது காரியத் தோல்வி. இரண்டாவது சொன்னது காரிய தாமதம். கடக ராசிக்கு 9-க்குடைய குருவும், 10-க்குடைய செவ்வாயும் 5-ல் கூடிநின்று 9-ஆம் இடத்தைப் பார்ப்பதோடு உங்கள் ராசியையும் பார்க்கிறார். எண்ணுகிற எண்ணங்களும் போடுகிற திட்டங்களும் முறையானது, சரியானது என்றாலும் அதை செயல்படுத்துவதில் வேகம் தடைப்படும்; தாமதமாக நிறைவேறும். கம்ப்யூட்டரில் பணிபுரியும் ஒருவருக்கு, அக்கவுன்டன்ட் ஒரு ஸ்டேட்மென்ட் அவசரம் என்று கொடுக்கும்போது மேனேஜர் இன்னொரு வேலையை மிக அவசரம் என்று கொடுக்கலாம். அதேசமயம் முதலாளி அவர் ஒரு வேலையைச் சொல்லி உடனே தயார் செய்துகொடு என்று சொல்லலாம். இதில் நீங்கள் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? அந்த நிலையில்தான் இன்றைய பொழுது ஓடும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். 2, 11-க்குடைய புதனும், 3, 10-க்குடைய சுக்கிரனும் அவருடன் சம்பந்தம். 7-ஆம் இடம் கணவன்- மனைவி ஸ்தானம், கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் நல்லுறவும் நீடிக்கும். ஒருவரையொருவர் புரிந்து செயல்படுவீர்கள். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடிவரும். அவர்களை சனியும் செவ்வாயும் பார்ப்பதால் ஒருசில குடும்பத்தில் பொருளாதாரப் போராட்டம் நிலவும். ஒருசில குடும்பத்தில் நோய் நொடி, ஆரோக்கியக் குறைவு, வைத்தியச்செலவு உண்டாகும். ஒருசில குடும்பத்தில் கருத்து முரண்பாடு, ஏட்டிக்குப் போட்டியான நிலை போன்ற சூழ்நிலைகளை சந்திக்க நேரும். என்றாலும் ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் பாதகம் ஏற்படாமல் சோதனைகளையும் வேதனைகளையும் விலக்கி சாதனை படைக்கலாம். பிரிவு, பிளவு ஏற்படாமல் தடுக்கலாம். அதைத்தான் சிலர் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பார்கள். பிரிந்திருக்கும் தம்பதிகள் தஞ்சை அருகில் பெரும்புலியூர் சென்று உமா சமேத மூர்த்தியை பிரார்த்தனை செய்யலாம். (திருவையாறிலிருந்து மூன்று கிலோமீட்டர்) அல்லது நாமக்கல் அருகில் மோகனூர் சென்று சம்மோகன கிருஷ்ணரை வழிபடலாம். இது விவாகரத்தைக்கூட நிறுத்திவிடும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைவு. அவர் 10-க்கும் உடையவர். அவருடன் 2, 9-க்குடைய சுக்கிரனும் மறைவு. 12-க்குடைய சூரியனும் மறைவு. இதில் சூரியன் மறைவு சாதக பலனைத் தரும். செலவுகள் ஏற்பட்டாலும் அத்தியாவசியமான செலவுகள், தேவைக்கான செலவுகள். அதை சுபவிரயம் எனலாம். 2-க்குடையவரும் 10-க்குடையவரும் மறைவதால் சிலருக்குத் தொழில்துறையில் பிரச்சினைகள், சிலருக்கு வேலையில் வேண்டாத சிரமங்கள், குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் போன்ற பலன்களை சந்திக்க நேரும். மறைந்த கிரகங்களை சனியும் செவ்வாயும் பார்க்கிறார்கள். சனி 6-க்குடையவர், செவ்வாய் 8-க்குடையவர் என்பதால் சில விபரீத விளைவுகளும் பக்கவிளைவுகளும் ஏற்படும். உதாரணமாக ஒரு சிறந்த டாக்டர் ஒருவருக்கு மூலநோய் ஆபரேஷன் செய்யும்போது தவறுதலாக முக்கியமான நரம்பை "கட்' பண்ணிவிட்டார். அதன் விளைவு அந்த நோயாளி மலஜலம் கழிக்கும்போது இயற்கையாகப் போகாமல் ஒரு பை வழியாக (செயற்கைப்பை) போவதுபோல செய்து அதை எடுத்துவிட்டு கட்டிக்கொள்வது போலாகிவிட்டது. இது டாக்டரின் குற்றமல்ல- நோயாளியின் ஜாதகக் கோளாறு. இதுதான் பக்கவிளைவு என்பது(சைடு எபக்ட்). இந்த மாதிரி கொடுமைகள் எல்லாம் நேராமல் இருக்க யாரையும் புண்படுத் தாமல் நடந்துகொள்ள வேண்டும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 5-ல் இருக்கிறார். அவருடன் 9, 12-க்குரிய புதனும், ராசிநாதன் சுக்கிரனும் இணைகிறார்கள். அவர்களுக்கு வீடு கொடுத்த சனியும் பார்க்கிறார். சனிக்கு வீடு கொடுதத குருவோடு சேர்ந்த செவ்வாயும் பார்க்கிறார். துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனதில் தெளிவும் தன்னம்பிகையும் பிறக்கும். செய்தொழிலில் வளர்ச்சி காணலாம். அரசாங்க ஆதரவு கிடைக்கும். வியாபாரம் பெருகும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காணலாம். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் அனுகூலம், ஆதாயம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வகையில் உதவியும் ஒத்தாசையும் ஏற்படும். வேலையில்லாமல் திண்டாடியவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அந்த முயற்சி பலனளிக்கும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். மனதில் உற்சாகம் பெருகும். பொருளாதாரத்தில் இருந்த தடைகள் விலகி தாராள வரவு- செலவுகள் உணடாகும். உங்களது உழைப்பும் முயற்சியும் வீண்போகாது. உழைப்புக்கேற்ற பலன் அமையும். தந்தைவழியில் ஆதரவு உண்டாகும். திடீர் பயணத்தால் ஆதாயமும் ஏற்படும். சிலர் வாகனப்பரிமாற்றம் செய்யலாம் அல்லது புதிய வாகனம் வாங்கலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். 8, 11-க்குடைய புதன் சாரம் பெறுகிறார். செவ்வாயோடு 2, 5-க்குடைய குரு சம்பந்தம். உங்கள் திட்டங்களும் எண்ணங்களும் முழு அளவில் வெற்றிபெறும். அந்த வெற்றிக்காக சிலசமயம் தவிர்க்கமுடியாத செலவுகளைச் செய்ய நேரலாம். அரசியலில் கட்சிப் பலத்துக்காகவும் ஆதரவு பலத்துக்காகவும் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதுபோல! 3-ல் உள்ள கேதுவும், 9-ல் உள்ள ராகுவும் காரணமாக பாரபட்சமான தகப்பனாரின் நடவடிக்கைகளையும், பங்காளிப் பிரச்சினைகளையும் எதிர்த்துப் போராடநேரிடும். குரு 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால் முடிவில் உங்கள் பக்கம் வெற்றி உண்டாகும். 2-ல் உள்ள சனியின் பலனாகத் தெளிந்த நீரோடையில் கல்லை விட்டெறிந்தால் தண்ணீர் களங்கப்படுவதுபோல சில உறவினர்களினால் அமைதியாக இயங்கும் உங்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் உருவாகி குடும்பக்குழப்பம் உண்டாகலாம். இராமாயணத்தில் ஒரு கூனியும், மகாபாரத்தில் ஒரு சகுனியும் போல சிலர் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்கலாம். அந்த கருப்பு ஆடு யார் என்று கண்டுபிடித்து வெளியேற்றவேண்டும். அல்லது நீங்கள் அவர்களைவிட்டு விலகி ஒதுங்கவேண்டும். இந்தப் பிரச்சினை பெரும் தலைவலியாக இருந்தால் சுதர்சன சக்கரத்தாழ்வாரை வழிபடலாம். அல்லது பிரத்தியங்கராதேவி- சரபேஸ்வரரை வழிபடலாம். வசதியிருந்தால் மேற்கண்ட ஹோமங்களை செயல்படுத்தலாம். ஒரு காலத்தில் பிரத்தியங்காரவையும் சரபேஸ்வரரையும் வழிபட்டுத்தான் ஊழல் வழக்கில் இருந்து மறைந்த "ஜெ' விடுபட்டார். இது ஏழரைச்சனியின் (பாதச்சனியின்) பலனாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைகிறார். என்றாலும் விசாகம் 4-ல் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம். நவாம்சத்தில் கடகத்தில் உச்சம். எனவே ஜென்மச் சனி நடைபெற்றாலும் உங்களை பாதிக்காது. வெளிநாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். எதிரிகள் விலகிப் போவார்கள். ஏழரைச் சனியில் சந்திர தசை, சந்திர புக்தி நடப்பவர்களுக்கு பொருட்சேதம் போன்ற பலன்கள் நடக்கலாம். அப்படிப்பட்டவர்கள் திங்கள்கிழமைதோறும் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யவேண்டும். பொருளாதார வசதி இருப்பவர்கள் ருத்ரஹோமம் செய்து சுவாமி- அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்யவும். தலைக்கு வந்தது தலைப்பாகை யோடு போனது மாதிரி தப்பிக்கலாம். செய்துவரும் தொழிலில் சில திட்டங்களை மாற்றியமைக்கும் சூழ்நிலை உருவாகும். புதிய முதலீடு போன்றவற்றை ஒத்திவைத்து, இருப்பதைக் கொண்டு செயலாற்றுவது அவசியம். மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். சட்டம், காவல் இராணுவம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் உண்டாகும். அரசாங்கத்தால் உதவியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு பலன் தாமதமாகும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகரத்தில் கேதுவும் 7-ல் ராகுவும் இருக்கிறார்கள். ராகு 6, 9-க்குடைய புதன் சாரம். கேது 7-க்குடைய சந்திரன் சாரம். சந்திரன் தாயார் கிரகம். மனது காரகன். தசாபுக்தி பாதகமாக இருந்தால் (நடப்பு ஏழரைச்சனி விரயச் சனி என்பதாலும்) சிலருக்குத் திருமணத்தடை ஏற்படும். அல்லது தாயாரை பாதிக்கும் அல்லது மனநிலை பாதிக்கப்படும். அலைச்சல், பயணத்தால் சங்கடம், செய்தொழிலில் பிரச்சினை, வேண்டாத விரயங்கள், அரசாங்கத்தால் தொல்லை, வேலைக்காரர்களின் ஒத்துழைப்பும் குறைவு போன்ற ஏடாகூடமான பலன்களை சந்திக்கும் நிலை. 11-ல் செவ்வாயும் குருவும் பலம் பெறுவதால் பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது. கொடுக்கல்- வாங்கல் ஓடியடையும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். என்றாலும் ராசிநாதர் சனி 12-ல் மறைவதால், உங்களையறியாமலே செய்யும் சில தவறுகள் உங்களை சிக்கலில் மாட்டிவிடும். உதாரணமாக ஒரு ஹோட்டலில் கேசியராக வேலை பார்த்தவருக்கு அவருக்கு சேர வேண்டிய பணத்தை ஒரு நண்பர் கொண்டு வந்து கொடுக்க, அவர் அதை வாங்கி பையில் வைக்க, அந்த சமயம் விற்பனைவரி அதிகாரிகள் ரெய்டுவர பெரும் பிரச்சினையாகிவிட்டது. என்றாலும் குருபலத்தால் அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் கவனித்து சிக்கலில் இருந்து விடுப்பட்டார்கள்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 10-க்குடைய செவ்வாயும் ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். 10-ல் உள்ள குரு 10-ல் சுயசாரம் பெற்று அம்சத்தில் (விசாகம்- 4-ல்) உச்சம் பெறுகிறார். எனவே தொழில், பொருளாதாரம், கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு இவற்றில் தடையில்லாமல் நல்லமுறையில் இயங்கும். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றைப் பெறலாம். 7-க்குடைய சூரியன் ஜென்மத்தில் நின்று 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். பயணத்தால் நன்மை ஏற்படும். தொழிலில் இருந்த போட்டி, பொறாமைகள் விலகி சிக்கலின்றி தொழில் நடைபெறும். உடன்பிறந்தவர்களுக்கு சுபகாரியங்கள் நிகழும். நீண்டகாலமாக தடைப்பட்டு வந்த நற்செயல்களும் பூர்த்தியாகும். வாகனங்களில் செல்லும்போது சற்று கவனமுடன் செல்வது அவசியம். சிலருக்கு வாகனத்தில் பழுது போன்ற செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அத்துறை காட்டுவது முக்கியமான ஒன்றாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் திரிகோணம். சுபகிரகம் திரிகோணத்திலும் பாவ கிரகம் அசுப கிரக கேந்திரத்திலும் பலம் பெறுவார்கள். குரு சுபகிரகம். 1, 10-க்குடையவர். அவர் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதியோகம். செவ்வாய் 10-க்குடையவருடன் சேர்வதும் தர்மகர்மாதிபதி யோகம்தான். குரு பார்க்க கோடி நன்மை என்பதும் இப்போது உங்களுக்கு 100-க்கு 100 நன்மையாகும். 8-ல் குரு இருந்தபோது ஏற்பட்ட எல்லாப் பிரச்சினைகளும் சங்கடங்களும் விலகி முன்னேற்றமும் வெற்றியும் இப்போது முழுஅளவில் உண்டாகும். அதனால்தான் 100-க்கு 100 நன்மை என்றேன். செவ்வாய் சகோதரகாரன். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்குப் பரிபூரணமாக அமையும். குறிப்பாக சகோதரர்களோடு சேர்ந்து செய்யும் தொழில்துறையில் உங்களுக்கு முழு ஆதரவாகவும் உங்கள் எண்ணத்தைப்புரிந்து செயல்புரிந்து உங்களைத் திருப்திப்படுத்துவார்கள். "தான்போகும் வேலைக்குத் தம்பியை அனுப்பினால்? ஆகுமா?' என்ற பழமொழியையும், "உடையவர் இல்லையென்றால் ஒரு முழம் கட்டை' என்ற பழமொழியையும் பொய்யாக்கி- "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்றும் "இந்தப் படைபோதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா' என்றும் சவால்விட்டு போட்டி, பொறாமைகளை ஜெயிக்கலாம். 10-ல் சனி தொழில்துறையில் சில புதுமாற்றங்களை ஏற்படுத்தி லாபம் பெருக்கச் செய்வார். சிலருக்கு நல்ல உதவியாளர்களை அமைத்துத் தருவார். 6-க்குடைய சூரியனும், 8-க்குடைய சுக்கிரனும் 12-ல் மறைவதால் போட்டி, பொறாமைகள், எதிர்ப்புகள் எல்லாம் மறைந்துவிடும். வெற்றிமேல் வெற்றி வந்து உங்களைச் சேரும். அதற்கு குருவருளும் திருவருளும் குலதெய்வத்தின் பேரருளும் பெருந்துணையாக அமையும்.

இதையும் படியுங்கள்
Subscribe