ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14.
அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- தனுசு.
9-9-2019- மகரம்.
12-9-2019- கும்பம்.
14-9-2019- மீனம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூரம்- 3, 4, உத்திரம்- 1.
செவ்வாய்: பூரம்- 2, 3.
புதன்: உத்திரம்- 2, 3, 4, அஸ்தம்- 1.
குரு: கேட்டை- 2, 3.
சுக்கிரன்: பூரம்- 4, உத்திரம்- 1, 2, 3.
சனி: மூலம்- 4.
ராகு: திருவாதிரை- 4.v கேது: பூராடம்- 2.
கிரக மாற்றம்:
புதன், சுக்கிரன் அஸ்தமனம்.
10-9-2019- கன்னிச் சுக்கிரன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
உங்களுக்கு சர்ப்ப கிரகமான ராகு 3-ல் சஞ்சரிப்பதால், எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவு சிறப் பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுக்கிரன் 5-ல் இருப்பதால் நவீனமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப் பாகவே இருக்கும். 5-ல் சூரியன், 8-ல் குரு சஞ்சரிப் பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. திருமண வயதை அடைந் தவர்களுக்கு நல்ல வரன் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். அசையும், அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்கநேரிடும். வீடு, வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதா னத்துடன் நடந்து கொள்வது நல்லது. தொழில், வியா பாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த லாபம் அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தி யோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது உத்தமம். நவகிரகங்களில் குரு பகவானுக்கும், சனி பகவானுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்று இவ்வாரத்தில் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும், குரு 7-ல் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று விடுவீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத் தையும் பூர்த்திசெய்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பயணங்களால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படலாம். கணவன்- மனைவி யிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருக்கும். சுபகாரியப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடை யின்றி வசூலாகும். உத்தி யோகஸ்தர்கள் சிலர் தாங்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கப் பெற்று மகிழ்ச் சியடைவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர் களின் தொடர்புண்டாகும். அரசுவழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைத் தடையின்றிப் பெறமுடியும். பிரதோஷ காலங்களில் சிவபெருமானையும் அம்பிகை யையும் வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால், எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றிபெற்று முன்னேறுவீர்கள். உடல்நிலையில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடந்துகொண்டால், ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும், பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்துவரும் மறைமுக எதிர்ப்புகள் விலகி, கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். சனி, கேது 7-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சிறு தாமதத்திற்குப் பின் கிடைக்கும். சனி, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால், பொருளாதாரரீதியாக ஏற்றம்மிகுந்த பலன்களைப் பெற்று, கடந்தகால சோதனைகளெல்லாம் மறையக்கூடியதாக இவ்வாரம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வேலையாட்களை மட்டும் சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவு தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டால் குடும்ப ஒற்றுமை சற்றுக் குறையும். 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால், பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதன்மூலம் மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். சிவனை வழிபடுவது, பௌர்ணமியன்று கிரிவலம் வருவது நல்லது.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சுக்கிரன், புதன் ஜென்ம ராசியிலும், 2-லும் சஞ்சரிப்பதும், ராகு 11-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால், நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பணவரவிலுள்ள தடைகள்விலகி தாராள தனவரவு உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் அடைபடும். கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப் பதால், முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். சிலருக்குக் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரம் நல்லமுறையில் நடைபெற்று லாபத்தை அள்ளித்தரும். போட்டி, பொறா மைகளை சமாளித்து ஏற்றம்பெறக் கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். விநாயகர், முருகனை வழிபடுவது உத்தமம்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால், வரவுக்குமீறிய வீண்செலவுகள், தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால், நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிற்சிறு பாதிப்புகள் உண்டாகும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகள்மூலமும் வீண்செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். திருமண முயற்சிகளில் தாமதத்திற்குப் பின் அனுகூலமான பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளால் வீண்பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்து, கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முருகக் கடவுளை வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
உங்களுக்கு தன ஸ்தானமான 2-ல் குரு சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும், எல்லா வகையிலும் ஏற்றம் மிகுந்த பலன்களைத் தரும் அமைப்பாகும். தாராள தனவரவு ஏற்பட்டு உங்களது அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதாரரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். திருமண சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திரவழியில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவி னர்களும் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு டையவற்றாலும் அனுகூலமான பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாகச் செய்துமுடித்து உயரதி காரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். மாணவர்களும் கல்வியில் நல்ல மதிப்பெண் களைப் பெற்று உயர்வடைவார்கள். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சங்கள் உண்டாகும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய், சூரியன் சேர்க்கை பெற்று 10-ல் சஞ்சரிப்பதும், புதன், சுக்கிரன் இவ்வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால், பிரச்சினைகள் விலகி சாதகமான பலன்களை அடைவீர்கள். உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரரீதியாக முன்னேற் றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணிகளில் திறமையுடன் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். சிலருக்கு பொறுப்பான பதவி உயர்வுகளும் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புத்திரவழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார்- உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களிலுள்ள பிரச்சினைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபம் கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி யிலுள்ள மந்தநிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். சனி பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
உங்கள் ராசிக்கு 9, 10-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால், நல்ல பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி வாக்குவாதங்களைத் தவிர்த்து, விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். பணவரவு ஏற்ற- இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. நெருங்கியவர்களையும், உற்றார்- உறவினர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. அசையும், அசையா சொத்துகளால் வீண்விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கக்கூடும் என்பதால், தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு ஏற்படும் என்றாலும், உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்கவேண்டிய லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. விநாயகர், தட்சிணா மூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
உங்கள் ராசிக்கு தனகாரகன் குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப் பதும், 6-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால், எதையும் எதிர்கொண்டு ஏற்றம்மிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். ஆடம்பரத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். சூரியன், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால், உடல் ஆரோக்கியத்தில் அஜீரணக் கோளாறு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அசையா சொத்துகளால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடை வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச் சியளிக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப் பெண்களைப் பெற்றுவிடுவார்கள். சிவனை வழிபடுவது, பிரதோஷ விரதமிருப்பது, பௌர்ணமியன்று கிரிவலம் வருவது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
உங்கள் ராசியாதிபதி சனி, கேது சேர்க்கை பெற்று லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால், பணவரவு சிறப்பாக அமையப்பெற்று பொருளாதாரநிலை மேன்மையடையும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப் பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நல்லவரன் தேடிவரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர் சாற்றி, நெய் தீபமேற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வ நிலை உயரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும், நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறும். பணவரவு சிறப் பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலப் பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார்- உறவினர் களும் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும், மருத்துவச் செலவுகள் ஏற்படாது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளி களும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஓரளவுக்குப் பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறு வார்கள். விஷ்ணு பகவானையும், மகாலட்சுமியையும் வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.