இந்த வார ராசி பலன் 12-5-2019 முதல் 18-5-2019 வரை

/idhalgal/balajothidam/week-rasi-palan-12-05-19-18-05-19

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கடகம்

12-5-2019- சிம்மம்.

14-5-2019- கன்னி.

16-5-2019- துலாம்.

18-5-2019- விருச்சிகம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: கிருத்திகை- 1, 2, 3.

செவ்வாய்: மிருகசீரிடம்- 3, 4, திருவாதிரை- 1.

புதன்: கிருத்திகை- 1, 2, 3, 4, ரோகிணி-1.

குரு: மூலம்- 1, கேட்டை- 4.

சுக்கிரன்: அஸ்வினி- 1, 2, 3.

சனி: பூராடம்- 2.

ராகு: புனர்பூசம்- 2.

கேது: பூராடம்- 4.

கிரக மாற்றம்:

வியாழன், சனி வக்ரம்.

செவ்வாய் அஸ்தமனம்.

12-5-2019- ரிஷப புதன்.

15-5-2019- ரிஷப சூரியன்.

18-5-2019- விருச்சிக குரு.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவுமறைவின்றி மனம் திறந்து பேசும் குணம்கொண்ட மேஷ ராசி அன்பர்களே! ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், ராசியாதிபதி செவ்வாய், ராகு சேர்க்கை பெற்று முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால், சகல விதத்திலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடிவரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்றுவிடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த் தால் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளுக்கான முயற்சி களில் அனுகூலம் ஏற்படும்.

பரிகாரம்: தென்முகக் கடவுளாம் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது உத்தமம். குரு 7-ல் சஞ்சரிப்பதால், தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று கவனமாக இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்து களால் சிறுவிரயங்களை சந்திக்கநேரிடும். தொழில், வியாபாரம் செய்ப வர்களுக்கு பயணங்களால் அலைச்சல், டென்ஷன் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை யால் லாபங்களும், அபிவிருத் தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும், ஆதரவும் கிடைக்கும்.

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கையம் மனுக்கு குங்கும அபிஷேகம் செய்து செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்துவழிபட்டால் சிறப்பான பலனை அடையலாம்.

style="display:block"

data-ad-client="ca-pub

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கடகம்

12-5-2019- சிம்மம்.

14-5-2019- கன்னி.

16-5-2019- துலாம்.

18-5-2019- விருச்சிகம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: கிருத்திகை- 1, 2, 3.

செவ்வாய்: மிருகசீரிடம்- 3, 4, திருவாதிரை- 1.

புதன்: கிருத்திகை- 1, 2, 3, 4, ரோகிணி-1.

குரு: மூலம்- 1, கேட்டை- 4.

சுக்கிரன்: அஸ்வினி- 1, 2, 3.

சனி: பூராடம்- 2.

ராகு: புனர்பூசம்- 2.

கேது: பூராடம்- 4.

கிரக மாற்றம்:

வியாழன், சனி வக்ரம்.

செவ்வாய் அஸ்தமனம்.

12-5-2019- ரிஷப புதன்.

15-5-2019- ரிஷப சூரியன்.

18-5-2019- விருச்சிக குரு.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவுமறைவின்றி மனம் திறந்து பேசும் குணம்கொண்ட மேஷ ராசி அன்பர்களே! ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், ராசியாதிபதி செவ்வாய், ராகு சேர்க்கை பெற்று முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால், சகல விதத்திலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடிவரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்றுவிடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த் தால் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளுக்கான முயற்சி களில் அனுகூலம் ஏற்படும்.

பரிகாரம்: தென்முகக் கடவுளாம் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது உத்தமம். குரு 7-ல் சஞ்சரிப்பதால், தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று கவனமாக இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்து களால் சிறுவிரயங்களை சந்திக்கநேரிடும். தொழில், வியாபாரம் செய்ப வர்களுக்கு பயணங்களால் அலைச்சல், டென்ஷன் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை யால் லாபங்களும், அபிவிருத் தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும், ஆதரவும் கிடைக்கும்.

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கையம் மனுக்கு குங்கும அபிஷேகம் செய்து செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்துவழிபட்டால் சிறப்பான பலனை அடையலாம்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்துமுடிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி அன்பர் களே! உங்கள் ராசியாதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். தொழில், வியாபாரரீதியாக பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். சனி, கேது 7-ல் சஞ்சரிப்பதால், கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக்குறைவுகள் ஏற்படலாம். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலரின் அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களும் ஓரளவு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறக்மை கேற்ற பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெறமுடியும். தொழில், வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றிவிட முடியும்.

பரிகாரம்: சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சனேயரையும் வழிபடுவது மிகவும் நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

நல்ல கற்பனைத்திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும், 10-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப் பான அமைப்பாகும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உற்றார்- உறவினர்கள் சாதகமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்தநிலை நிலவி னாலும், அன்றாடப் பணிகளில் சுறுசுறுப் புடன் செயல்பட முடியும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல அனுகூல மான பலன்களைப் பெறுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்யும் காரியங் களில் மட்டும் சற்று நிதானத்தைக் கடைப் பிடிப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒற்றுமை யான செயல்பாடுகளால் புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதி காரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிட்டும்.

பரிகாரம்: வரும் வைகாசி விசாகத் தன்று கந்தக் கடவுளாம் முருகப் பெருமானை வழிபட்டால் வாழ்வில் சகல சௌபாக் கியங்களையும் பெறலாம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதைத் தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால், எல்லா வகையிலும் அனுகூலங்களைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருக்கும் பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர் களுக்குப் பணியில் கௌரவமான நிலை இருக்கும். திறமைக்கேற்ற பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங் களையும் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் போன்றவற்றை சந்திக்க நேர்ந்தாலும், கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி யும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துகளால் சிறுவிரயங்கள் ஏற்படலாம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது நிதானமாக இருப்பது உத்தமம்.

பரிகாரம்: ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி, அனுமன் துதிகளைப் பாடி வழிபட்டால், துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.

th

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும், மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது சஞ்சரிப்பது அலைச்சலைத் தரும் அமைப்பு என்றாலும், செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைவதுடன், குடும்ப உறுப் பினர்களின் ஆதரவும் கிடைக்கப் பெற்று உங்களுக்கிருக்கும் நெருக்கடிகள் சற்று குறையும். 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்ப தால் உடல்நிலையில் சிறுசிறு பிரச் சினைகள் உண்டாகும் என்பதால், உணவு விஷயத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளைத் தவிர்க்கலாம். அசையா சொத்துகளால் வீண்விரயங்களை சந்திக்க நேரிடும். எதிர்பாராத வகையில் கிடைக்கப் பெறும் உதவிகளால் தேவைகள் யாவும் பூர்த்தி யாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றியினைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெறமுடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன்பணிபுரிபவர்களும் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: வரும் வெள்ளியன்று விஷ்ணுவை யும், மகாலக்ஷ்மியையும் வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

வசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி அன்பர்களே! உங்கள் ராசியாதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்று 7-ல் சஞ்சரிப்பதும், முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் வளமான பலன்களைத் தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலங்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி யளிக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்கள் படிப் படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும், சிந்தித்து செயல்படுவது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். புத்திரர் களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டைவிட இருமடங்கு லாபம் கிட்டும். கூட்டாளி களிமும், தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்துச் சென்றால் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். உற்றார்- உறவினர்கள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்து வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.

பரிகாரம்: சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் மேற்கொள்வது மிகவும் நல்லது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 2-ல் சனி, கேது, 8-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி பெரிய மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார்- உறவினர்களிடமும் சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதா னத்தைக் கடைப்பிடிப்பது, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடு களை ஈடுபடுத்துவதன்மூலம் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும்.

பரிகாரம்: முருக வழிபாட்டையும், அம்மன் வழிபாட்டையும் செய்துவந்தால் நன்மைகள் பல உண்டாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! ஜென்ம ராசியில் சனி, கேது சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் இருக்கும் என்றாலும், 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், வரும் 15-ஆம் தேதிமுதல் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும், எதிர்பாராத வகையில் தனவரவுகள் கிடைத்து பிரச்சினைகள் குறையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், விட்டுக்கொடுத்து நடந்தால் ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்களுக் கான முயற்சிகளில் சில தடைகளுக் குப்பின் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியா பாரத்தில் சற்று மந்தமான நிலையே காணப்படும் என்றாலும், லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன்பணிபுரி பவர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சி யளிக்கும். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பரிகாரம்: சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, எள் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ நிலை உயரும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகும் குணம் கொண்ட மகர ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும், சிறப்பான அமைப்பாகும். பொருளாதாரரீதியாக வளமான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால், லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்கவேண்டிய புதிய வாய்ப்புகளும் தடையின்றிக் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வுகளும் கிடைக்கும். உங்களுக்கு இருந்துவரும் மறைமுக எதிர்ப்புகள் மறையும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால், எதிலும் சுறுசுறுப் புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரி யங்களில் முன்னேற்றம் ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று கவனம் தேவை. பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள்.

பரிகாரம்: சிவ வழிபாடு செய்வது, விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

உண்மை பேசுவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் கும்ப ராசி அன்பர்களே! உங்கள் ராசியாதிபதி சனி, கேது சேர்க்கை பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் ஏற்படும். தொழில், பொருளாதாரரீதியாக ஏற்றம்மிகுந்த பலன்களை அடைவீர்கள். வியாபாரத்தில் இருக்கும் போட்டிகள் படிப்படியாக விலகி நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் உண்டாகும். உத்திக்யோகஸ் தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் சிறு தடை, தாமதத்திற்குப் பின் பெறமுடியும். சிலருக்கு திறமைகேற்ற பாராட்டுகளும், எதிர்பார்த்த இடமாற்றங் களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப் பாக இருக்கும். உற்றார்- உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடையமுடியும். பொருளா தார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால், குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி யாகும். பொன், பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். அசையும், அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும்.

பரிகாரம்: குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, முல்லை மலர்களால் அர்ச் சனைசெய்து வழிபட்டால் இறையருள் பரிபூரணமாய்க் கிட்டும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மற்றவர்களின் சுகதுக்கங்களையும் தன்னுடைய சுகதுக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பது அலைச்சலைத் தரும் அமைப்பு என்றாலும், 9-ல் குரு சஞ்சரிப்பதும், வரும் 15-ஆம் தேதிமுதல் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால், எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும், ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதில் கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலப்பலன் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளால் வீண்செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது, கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றின்மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனைத் தரும்.

பரிகாரம்: பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வதாலும், பௌர்ணமியன்று கிரிவலம் வருவதாலும் மேன்மையான பலன்களை அடையலாம்.

bala170519
இதையும் படியுங்கள்
Subscribe