ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14.
அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கன்னி.
3-12-2018- துலாம்.
5-12-2018- விருச்சிகம்.
8-12-2018- தனுசு.
கிரக பாதசாரம்:
சூரியன்: அனுஷம்- 4, கேட்டை- 1, 2.
செவ்வாய்: பூரட்டாதி- 1, 2.
புதன்: விசாகம்- 2, 3, 4.
குரு: அனுஷம்- 3, 4.
சுக்கிரன்: சுவாதி- 1, 2.
சனி: மூலம்- 3.
ராகு: பூசம்- 1.
கேது: உத்திராடம்- 3.
கிரக மாற்றம்:
குரு அஸ்தமனம்.
8-12-2018- விருச்சிக புதன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 11-ல் இருக்கிறார். செவ்வாய்க்கு 3, 6, 11-ஆம் இடங்கள் நற்பலன் செய்யும் இடங்களாகும். 11-ல் இருந்து 2-ஆம் இடம், 5-ஆம் இடம், 6-ஆம் இடங்களைப் பார்க்கிறார். பொருளாதார நெருக்கடிக்கு இடமில்லை. தாராளமான வரவு- செலவு, பணப்புழக்கமும் இருக்கும். அதேபோல குடும்பத்திலும் அமைதியான சூழ்நிலை நிலவும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அனுசரித்து நடந்துகொள்வார்கள். 5-க்குடைய சூரியனும், 9-க்குடைய குருவும் 2-ஆம் இடத்தைப் பார்ப்பது சிறப்பு. அதாவது இரண்டு திரிகோணாதிபதிகள் இணைந்து பார்ப்பது விசேஷம்; 8-ல் மறைந்தாலும் குற்றமில்லை. 4-ல் உள்ள குரு சிலருக்கு ஆரோக்கியக்குறைவை ஏற்படுத்தலாம். என்றாலும் குரு அவரைப் பார்ப்பதால் மலைபோல வரும் பிரச்சினைகள் பனிபோல விலகிவிடும். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர் மாதிபதி யோகமாகும். அதுவும் உங்களுக்கு பிளஸ் பாயின்டு ஆகும். கையுறை (ரப்பர் கிளவுஸ்) மாட்டிக் கொண்டு மின்சாரத்தைத் தொட்டு வேலை செய்வதற்குச் சமம்; "ஷாக்' அடிக்காது. 7-ல் புதன் இருப்பது ஒரு வகையில் திருமணத்தடையை ஏற்படுத்தலாம். அல்லது திருமண வாழ்க்கையில் குழப்பங்களை ஏற்படுத்தலாம். என்றாலும் 7-க்குடைய சுக்கிரன் ஆட்சி என்பதால் அதுவே பரிகாரமாகிவிடும். பாதிப்புகள் நீங்கிவிடும். தொழில்துறையில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். புதுமுயற்சிகள் வெற்றிபெறும். சிலருடைய அனுபவத்தில் பழைய கூட்டாளி விலகி புதுக்கூட்டாளி வந்து சேரலாம். அல்லது நடத்திவரும் தொழிலில் வேறு இடத்தில் கிளை (பிராஞ்சு) ஆரம்பிக்கலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்தாலும், ஆட்சி பெறுவதால் எந்த பாதிப்புக்கும் இடமில்லை. 6-ஆம் இடம் என்பது தொழில் ஸ்தானத்துக்கு 9-ஆம் இடம் பாக்கிய ஸ்தானம். அதேபோல 2-ஆம் இடமான தன ஸ்தானத்துக்கு 5-ஆம் இடம் திரிகோண ஸ்தானம். எனவே தொழில் வளர்ச்சியும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். குடும்பச் சூழ்நிலையிலும் அமைதியும் ஆனந்தமும் திருப்தியும் உண்டாகும். தாராளமான வரவு- செலவும், பணப்புழக்கமும் இருக்கும். வரவேண்டியது வசூலாகும். கொடுக்க வேண்டியதைக் குறிப்பிட்டபடி கொடுத்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். 3-ல் உள்ள ராகு சிலருக்கு உடன்பிறந்தோர் வகையில் பிரச்சினை களை உருவாக்கினாலும், அவரை குரு பார்ப்பதால் மலைபோல வரும் பிரச்சினைகள் பனிபோல விலகிவிடும். 9-ல் உள்ள கேது சுயசாரம் பெறுவதால் சிலருக்கு பூர்வீகச் சொத்து வகையில் பிரச்சினைகளை உருவாக் கலாம். இதற்கு 9-க்குடைய சனி தன் ஸ்தானத்துக்கு 12-லும், ராசிக்கு 8-லும் மறைவதும் ஒரு காரணம். அல்லது குலதெய்வ வழிபாட்டுவகையில் பங்காளிப் பிரச்சினைகளை உருவாக்கலாம். காரியம் பெரிதா? வீரியம் பெரிதா என்பதை கவனிக்காமல், காரியம் சாதிக்க கழுதை யானாலும் காலைப் பிடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் ஆன்மிகப் பயணம் போகலாம். ஹரித்வார்-, ரிஷிகேஷ்-, காசி-, கயா, கேதார்நாத், பத்ரிநாத், சீரடி என்று ஸ்தல யாத்திரை போய் வரலாம். இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை போகலாம். கிறிஸ்துவர்கள் போப்பாண்டவரைப் போய் தரிசிக்க லாம். இவையெல்லாம் ஒரு கொடுப்பினை வாய்ப்பு தான். "அவன் அருளால் அவன்தாள் வணங்கி' என்று மணிவாசகர் பாடியதுபோல குருவருளும் திருவருளும் இருந்தால்தான் நிறைவேறும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். அவர் 4-க்குடையவரும் ஆவார். ஒரு கேந்திராதிபதி இன்னொரு கேந்திரம் ஏறினால்தான
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14.
அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- கன்னி.
3-12-2018- துலாம்.
5-12-2018- விருச்சிகம்.
8-12-2018- தனுசு.
கிரக பாதசாரம்:
சூரியன்: அனுஷம்- 4, கேட்டை- 1, 2.
செவ்வாய்: பூரட்டாதி- 1, 2.
புதன்: விசாகம்- 2, 3, 4.
குரு: அனுஷம்- 3, 4.
சுக்கிரன்: சுவாதி- 1, 2.
சனி: மூலம்- 3.
ராகு: பூசம்- 1.
கேது: உத்திராடம்- 3.
கிரக மாற்றம்:
குரு அஸ்தமனம்.
8-12-2018- விருச்சிக புதன்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 11-ல் இருக்கிறார். செவ்வாய்க்கு 3, 6, 11-ஆம் இடங்கள் நற்பலன் செய்யும் இடங்களாகும். 11-ல் இருந்து 2-ஆம் இடம், 5-ஆம் இடம், 6-ஆம் இடங்களைப் பார்க்கிறார். பொருளாதார நெருக்கடிக்கு இடமில்லை. தாராளமான வரவு- செலவு, பணப்புழக்கமும் இருக்கும். அதேபோல குடும்பத்திலும் அமைதியான சூழ்நிலை நிலவும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அனுசரித்து நடந்துகொள்வார்கள். 5-க்குடைய சூரியனும், 9-க்குடைய குருவும் 2-ஆம் இடத்தைப் பார்ப்பது சிறப்பு. அதாவது இரண்டு திரிகோணாதிபதிகள் இணைந்து பார்ப்பது விசேஷம்; 8-ல் மறைந்தாலும் குற்றமில்லை. 4-ல் உள்ள குரு சிலருக்கு ஆரோக்கியக்குறைவை ஏற்படுத்தலாம். என்றாலும் குரு அவரைப் பார்ப்பதால் மலைபோல வரும் பிரச்சினைகள் பனிபோல விலகிவிடும். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர் மாதிபதி யோகமாகும். அதுவும் உங்களுக்கு பிளஸ் பாயின்டு ஆகும். கையுறை (ரப்பர் கிளவுஸ்) மாட்டிக் கொண்டு மின்சாரத்தைத் தொட்டு வேலை செய்வதற்குச் சமம்; "ஷாக்' அடிக்காது. 7-ல் புதன் இருப்பது ஒரு வகையில் திருமணத்தடையை ஏற்படுத்தலாம். அல்லது திருமண வாழ்க்கையில் குழப்பங்களை ஏற்படுத்தலாம். என்றாலும் 7-க்குடைய சுக்கிரன் ஆட்சி என்பதால் அதுவே பரிகாரமாகிவிடும். பாதிப்புகள் நீங்கிவிடும். தொழில்துறையில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். புதுமுயற்சிகள் வெற்றிபெறும். சிலருடைய அனுபவத்தில் பழைய கூட்டாளி விலகி புதுக்கூட்டாளி வந்து சேரலாம். அல்லது நடத்திவரும் தொழிலில் வேறு இடத்தில் கிளை (பிராஞ்சு) ஆரம்பிக்கலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்தாலும், ஆட்சி பெறுவதால் எந்த பாதிப்புக்கும் இடமில்லை. 6-ஆம் இடம் என்பது தொழில் ஸ்தானத்துக்கு 9-ஆம் இடம் பாக்கிய ஸ்தானம். அதேபோல 2-ஆம் இடமான தன ஸ்தானத்துக்கு 5-ஆம் இடம் திரிகோண ஸ்தானம். எனவே தொழில் வளர்ச்சியும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். குடும்பச் சூழ்நிலையிலும் அமைதியும் ஆனந்தமும் திருப்தியும் உண்டாகும். தாராளமான வரவு- செலவும், பணப்புழக்கமும் இருக்கும். வரவேண்டியது வசூலாகும். கொடுக்க வேண்டியதைக் குறிப்பிட்டபடி கொடுத்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். 3-ல் உள்ள ராகு சிலருக்கு உடன்பிறந்தோர் வகையில் பிரச்சினை களை உருவாக்கினாலும், அவரை குரு பார்ப்பதால் மலைபோல வரும் பிரச்சினைகள் பனிபோல விலகிவிடும். 9-ல் உள்ள கேது சுயசாரம் பெறுவதால் சிலருக்கு பூர்வீகச் சொத்து வகையில் பிரச்சினைகளை உருவாக் கலாம். இதற்கு 9-க்குடைய சனி தன் ஸ்தானத்துக்கு 12-லும், ராசிக்கு 8-லும் மறைவதும் ஒரு காரணம். அல்லது குலதெய்வ வழிபாட்டுவகையில் பங்காளிப் பிரச்சினைகளை உருவாக்கலாம். காரியம் பெரிதா? வீரியம் பெரிதா என்பதை கவனிக்காமல், காரியம் சாதிக்க கழுதை யானாலும் காலைப் பிடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் ஆன்மிகப் பயணம் போகலாம். ஹரித்வார்-, ரிஷிகேஷ்-, காசி-, கயா, கேதார்நாத், பத்ரிநாத், சீரடி என்று ஸ்தல யாத்திரை போய் வரலாம். இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை போகலாம். கிறிஸ்துவர்கள் போப்பாண்டவரைப் போய் தரிசிக்க லாம். இவையெல்லாம் ஒரு கொடுப்பினை வாய்ப்பு தான். "அவன் அருளால் அவன்தாள் வணங்கி' என்று மணிவாசகர் பாடியதுபோல குருவருளும் திருவருளும் இருந்தால்தான் நிறைவேறும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். அவர் 4-க்குடையவரும் ஆவார். ஒரு கேந்திராதிபதி இன்னொரு கேந்திரம் ஏறினால்தான் கேந்திர தோஷம். ஆனால் திரிகோணம் பெற்றால் ராஜயோகம் ஆகும். எந்த ஒரு கிரகத்துக்கு கேந்திராதிபத் தியமும், திரிகோணாதிபத்தியமும் சேர்ந்து கிடைக்கிறதோ அந்த கிரகம், அந்த ராசிக்கு ராஜயோகாதிபதியாவார். உதாரணமாக ரிஷப ராசிக்கு அல்லது ரிஷப லக்னத்துக்கு சனி 9-க்கும், 10-க்கும் உடையவர். 9- திரிகோணம், 10- கேந்திரம். எனவே சனி ராஜயோகாதிபதியாவார். அதேபோல துலா ராசி அல்லது துலா லக்னத்துக்கு சனி 4 என்னும் கேந்திரத்துக்கும், 5 என்னும் திரிகோணத்துக்கும் அதிபதியாவதால் சனி ராஜயோகாதிபதியாவார். எனவே ராசிநாதன் புதன் உங்களுக்கு ராஜயோகாதிபதியாக மாறுவதால் குரு 6-ல் மறைந்த தோஷம் விலகும். மேலும் புதனோடு சுக்கிரனும் சம்பந்தம் என்பதால் ராஜயோகம் முழு அளவில் வேலை செய்யும். 7, 10-க்குடைய குரு 6-ல் மறைவதால் தொழில்வகையிலோ, மனைவி வகையிலோ சிலர் கடன் வாங்கி சில காரியங்களைச் செய்யலாம். அந்தக் கடன் விருத்திக்கடன் எனப்படும். தனக்கோ, குடும்பத்தில் பிள்ளைகளுக்கோ திருமணத்துக்காகவும் கடன் வாங்கலாம். புதன் 4-க்குடையவர் என்பதால், சிலர் கல்விக்காக கடன் வாங்கலாம். சிலர் பிளாட் வாங்கவும், வீடு கட்டவும் கடன் வாங்கலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் ஆரோக்கியக் குறைவினால் வைத்தியச்செலவைச் சரிக்கட்ட கடன் வாங்கலாம். சிலர் கடன் வாங்கவும் நேரும்; சிலர் கடன் கொடுக்கவும் நேரும். அப்படிக் கொடுத்த கடன் சிலசமயம் வாராக்கட னாகவும் போகும். அந்த மாதிரி இருந்தால், கார்த்தவீர்யார்ஜுன மந்திரத்தை ஜெபம் செய்தால் வரவேண்டிய பணம் வந்து சேரும். கும்பகோணம் குடவாசல் அருகில் சேங்காலிபுரம் என்ற கிராமத்தில் தத்தாத்ரேயர் கோவில் இருக்கிறது. (தத்தகுடீரம்). தத்தாத்ரேயரின் சீடர்தான் கார்த்தவீர்யார்ஜுனர். அந்த எல்லையில் அவர் யந்திரம் உள்ளது. 22-12-2018-ஆம் தேதி அங்கு தத்தஜெயந்தி நடக்கிறது. 21-12-2018-ஆம் தேதி கார்த்தவீர் யார்ஜுன ஹோமம் நடக்கும். அதில் கலந்துகொள்ளலாம். தொடர்புக்கு: மேனேஜிங் டிரஸ்டி நாகசுப்ரமணியன், செல்: 94872 92481.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் ஜென்ம ராகு இருப்பது ஒருவகையில் குற்றம்தான். என்றாலும், கடக ராசிக்கு 9-க்குடைய குரு 5-ல் நின்று ராசியையும், ராசியில் நிற்கும் ராகுவையும் பார்ப்பது சிறப்பு. ஒரு திரிகோணாதிபதி மற்றொரு திரி கோணத்தில் நிற்பதும் சிறப்புதான். எனவே உங்களுடைய காரியங்களிலும், செயல் களிலும் தடைகளும் குறுக்கீடுகளும் காணப்பட்டாலும், தடைகளைக் கடந்து முன்னேறுவீர்கள். மனதில் ஊக்கம் இருப்பதால் செயலில் ஆக்கம் ஏற்படும். தேக்கம் இருக்காது. மகாகவி பாரதியார் பாடியதுபோல "எங்கெங்கு காணினும் சக்தியடா' என்பதுபோல் சக்தி பெருகும். யுக்தி தோன்றும். எல்லாவற்றிலும் சமயோசித புத்தியும், சாதுர்யமும் உங்களை வழிநடத்தும். 2-க்குடைய சூரியன் 5-ல் குருவோடு சம்பந்தம் என்பதால், பொருளா தாரத்திலோ குடும்பத்திலோ நன்மைகள் நடக்கும். சொல்வதையே செய்வீர்கள். செய்வ தைத்தான் சொல்வீர்கள். 6-ல் உள்ள சனி சத்ருஜெயம், கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி போன்ற பலன்களைத் தரும். 6-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துக்கு பாக்கிய ஸ்தானமாகும். தொழில் சம்பந்தமான புது முயற்சிகள் கைகூடும். வேலை இல்லாதோருக்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெளியூர், வெளிநாடு, வெளி மாநிலம் போன்ற இடங்களில் வேலை சம்பந் தமான பயணம் தோன்றும். 10-க்குடையவர் 8-ல் மறைந்தாலும், வீடு கொடுத்த சனியின் பார்வையைப் பெறுவதால் தொழில், வேலை சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றமும் திருப்தியும் உண்டாகும். 4-ல் உள்ள சுக்கிரனும் புதனும் ஆரோக்கியத்தைத் தருவார்கள். வீடு, மனை, பிளாட் போன்ற முயற்சிகளில் நற்பலனையும் தருவார்கள். அது சம்பந்தமாக தனியார் கடனும் வங்கிக்கடனும் உருவாகும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் ராசிக்கு 4-ல் கேந்திரம் பெறுகிறார். அவருடன் 5-க்குடைய குரு சம்பந்தம். குருவும் கேந்திரம் பெறுகிறார். கேந்திராதிபதி திரிகோணம் பெற்று ராசியாதிபதி சம்பந்தம் பெறுவதால், உங்களுடைய செல்வாக்கு, அந்தஸ்து, கௌரவம், பெருமை எல்லாம் சிறப்பாக விளங்கும். 5-ல் உள்ள சனி 6, 7-க்குடையவர் என்பதால், மனைவி அல்லது பிள்ளைகள் வகையில் சிலருக்கு சிலசமயம் தொல்லைகளும், அல்லல் களும், பிரச்சினைகளும் உருவானாலும், சூரியன்- குரு சம்பந்தம் பெறுவதால் பெரும் பாதிப்புக்கு இடம் ஏற்படாது. மழை நேரத்தில் குடைபிடித்துப் போகும் போது தலை நனையாமல், பெரும்சாரல் சட்டையை நனைப்பதுபோல! ஒருசிலரின் அனுபவத்தில் ஏட்டிக்குப் போட்டியான மனைவியின் வாக்குவாதங்களாலோ அல்லது எதிர்வாதம் செய்யும் பிள்ளைகளின் செயல் களினாலோ மனதில் வருத்தம் ஏற்படலாம். இருந்தாலும் "நீரடித்து நீர் விலகாது', "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்பது போல அனுசரித்து நடந்துகொண்டால் பிரச்சினைகள் ஓயலாம். வாரியார் சுவாமிகள் ஒரு திரைப்படத்தில் எதிர்வாதம் செய்யும் மனைவியின் செயலால் மனம் வருந்திய கணவனிடம், ""மனைவிவழியே நீ நடந்துசெல்- நாளடைவில் மனைவியும் உன்பின் வருவாள்'' என்று அறிவுரை கூறுவார். குடும்பம் என்பது ஒரு வட்டம் போல! வட்டத்தில் ஆரம்பம் எது- முடிவு எது? அதுபோல கணவரும் மனைவியும் ஆரம்பமும் முடிவும். இரண்டும் ஒன்று தான்- கண்டுபிடிக்க முடியாது. அதனால் "ஈகோ' உணர்வை விட்டுக்கொடுத்தால் போதும். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை. 10-ஆம் இடத்தை சூரியனும் குருவும் பார்ப்பதாலும், 10-க்குடைய சுக்கிரன் ஆட்சிபெற்று 2, 11-க்குடைய புதனோடு சம்பந்தம் என்பதாலும் தொழில், வருமானம், சம்பாத்தியம், வரவு- செலவு, கொடுக்கல்- வாங்கல் எல்லாவற்றிலும் மனம் நிறைவான பலன்களைச் சந்திக்கலாம்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 2-ல், குருவின் சாரம் (விசாகம்) பெறுகிறார். அவருடன் வீடு கொடுத்த சுக்கிரனும் ஆட்சி- சம்பந்தம்! எனவே தொழில், வாழ்க்கை, உத்தியோகம், பதவி எல்லாவற்றிலும் எந்தப் பிரச்சினையும் அணுகாது. பிரச்சினைகள் வந்தாலும் பாதிக்காது. கழுவின மீனில் நழுவின மீனாகத் தப்பிக்கலாம். 12-ல் ராகு சனியின் சாரம் பெற்று, சனியும் ராகுவும் சஷ்டாஷ்டகமாக (ஆறு, எட்டு) இருப்பதால் சிலருக்கு தேவையற்ற செலவுகளும் விரயங்களும் ஏற்படலாம். சிலருக்கு ஆரோக்கியக்குறைவினால் வைத்தியச்செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு தாய் அல்லது இடம், பூமி, வீடு சம்பந்தமாக சில பிரச்சினைகளும் குழப்பங்களும் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாதரை வழிபடலாம். அது வாஸ்துக் கோவில்! ஒவ்வொரு வாஸ்து நாளிலும் அங்கு விசேஷமான ஹோமம், பூஜை சிறப்பாக நடக்கும். கலந்துகொள்ளலாம். அதேபோல திருச்சி மார்க்கெட் அருகில் பூமிநாதர் கோவில் இருக்கிறது. உளுந்தூர்பேட்டை வழி ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரில் பூவராகசுவாமி கோவில் இருக்கிறது. இவையும் பூமி, வீடு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும். மாசி 1-ல் ராகு- கேது பெயர்ச்சி. அதன்பிறகு 4-ம் இடம், 10-ம் இடங்களினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு விமோசனம் உண்டாகும். 4-ம் 10-ம் கேந்திர ஸ்தானங்கள். அவற்றில் அசுப கிரகங்கள் கேதுவும் ராகுவும் இருப்பதால் நன்மையே உண்டாகும். 7-ஆம் இடத்தை 7-க்குடைய குரு பார்ப்பதால் திருமணத்துக்காகக் காத் திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவில் திருமணம் நிறைவேறும். ஜாதக ரீதியாக களஸ்திர தோஷமுள்ள ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும், மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்துகொள்ளலாம். மேற்படி ஹோமங்களை காரைக்குடி சுந்தரம் குருக்கள்- எனது குருநாதரின் வழிவந்த வர்டம் செய்யலாம். தொடர்புக்கு: செல்: 99942 74067.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். துலா ராசிக்கு சுக்கிரன் 1, 8-க்குடையவர். அவர் 8-ல் ரிஷபத்தில் இருந்தால் ஒரு பலன். ஜென்மத்தில் இருப்பதால் வேறுபலன்! எட்டிலும் ஆட்சி, ஜென்மத்திலும் ஆட்சி! எட்டில் இருந்தால் மற்றவர்களால், சொந்தம், சுற்றம், நட்பு, உறவினர்களினால் உங்களுக்குப் பிரச்சினைகள். ஜென்மத்தில் 8-க்குடையவர் இருப்பதால் உங்களுக்கு நீங்களே பிரச்சினை! ஒரு காரியத்தை- செயலை எழுதி எழுதி சரியில்லை என்று அழித்துவிட்டு மறுபடியும் மறுபடியும் எழுதுவதுபோல, ஒவ்வொரு முடிவையும் அடிக்கடி மாற்றிக்கொண்டு நீங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பத்துக்கு ஆளாக்குவீர்கள்! அதனால் தான் வள்ளுவர் பெருமான் "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பதிழுக்கு' என்று சொல்லிலியிருக்கிறார். அதேபோல தொழில்துறையில் உள்ள வர்களும், உயர்பதவியிலுள்ள அதிகாரி களும் யாரால் எது முடியும் என்று ஆராய்ந்து, அவர்கள்வசம் அந்தப் பொறுப்பை ஒப்ப டைக்கவேண்டும். அதற்கும் வள்ளவர் சொன்னது- "இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' என்பதாகும். 10-ல் உள்ள ராகு தொழில், உத்தியோகத்தில் பிரச்சினைகளை உருவாக்கினாலும், அவரை குரு பார்ப்பதால் பிரச்சினைகளை சமாளித்துவிடலாம். 10-ல் உள்ள ராகுவை சமாளிக்க எளிய பரிகாரம்: மதுரையைச் சார்ந்தவர்கள் இம்மையில் நன்மை தருவார் கோவிலுக்குத் தென்புற வீதியில் உள்ள குபேர பத்ரகாளியம்மளை 18 வெள்ளிக்கிழமை நெய்விளக்கேற்றி வழிபடவேண்டும். வசதிபடைத்தவர்கள் சூலிலினிதுர்க்கா ஹோமம் உள்பட 19 அல்லது 21 ஹோமம் செய்யலாம். அல்லது ராகுவுக்கும் கேதுவுக்கும் உரிய கோவில்களுக்குச் சென்று வழிபடலாம். (காளஹஸ்தி, உத்தம பாளையம், திருநாகேஸ்வரம் போன்ற இடங்கள்.) அத்துடன் கோவை நல்லாம் பாளையம் ரோடு, ராமசாமிநகர், ஒஒ-ல் அன்னை ஆதிசக்தி திருவடி சேவா இல்லம் சென்று வழிபடலாம். தொடர்புக்கு, தொலைபேசி : 0422- 2536565.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 4-ல் குருவின் சாரம் பெற்று, ராசிக்கு 7-ஆம் இடம், 10-ஆம் இடம், 11-ஆம் இடங்களைப் பார்க் கிறார். 7- மனைவி ஸ்தானம், கணவன் ஸ்தானம். அதை குருவும் பார்ப்பதால் திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நிச்சயமாகும். களஸ்திரதோஷம் உள்ள ஆண்கள் கந்தர்வ ராஜ ஹோமமும், மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். இந்த ஹோமம் காரைக்குடி கழனி வாசல் அருகில் போக்குவரத்து நகரில் சுந்தரம் குருக்கள் பிரசன்ன விநாயகர் கோவிலிலில் செய்வார். தொடர்புக்கு: செல்: 99942 74067. அல்லது உங்களுக்கு அருகிலுள்ள இடங் களிலும் செய்யலாம். ஜாதகத்தில் செவ்வாய், சனி சம்பந்தம் இருந்தால் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமண விருப்பம் உண்டாகும். அதை மாற்றுவதற்கு காமோகர்ஷண ஹோமம் செய்யவேண்டும் "அவரவர் வினை வழி அவரவர் வந்தனர்' என்பது சொக்கநாத வெண்பா! அந்த வினைப்பயனை விலக்குவதற்கு அக்னி காரியம்தான் செய்யவேண்டும். நீரும் நெருப்பும்தான் (பஞ்சபூதத்தில் இந்த இரண்டும் தான்) எல்லாப் பாவங்களையும் போக்க வல்லது. தைப்பொங்கலுக்கு முதல்நாள் போகிப் பண்டிகையன்று ஆகாத போகாத பொருள்களை தீயிலிட்டு பொசுக்குவோம். அதேபோல கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகையன்று சொக்கப்பனை கொளுத்துவோம். வடநாட்டில் இராவணன் சிலையை வைத்து எரித்து இராவண சம்ஹாரம் செய்வார்கள். எந்த ஒரு தீட்டுக்காரியமாக இருந்தாலும் "புண்ணியாக வாசனம்' (நீர் தெளித்து) செய்து தீட்டைப் போக்குவோம். அக்னி காரியத்துக்கு ஹோமம் வளர்ப்போம். இந்த அக்னியைத்தான் வடலூர் வள்ளல் பெருமான் "அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை' என்று போற்றினார். திருவண்ணாமலையில் ஈஸ்வரனே அக்னிரூபமாக இருப் பதால்தான் மலையில் தீபம் ஏற்று கிறார்கள். ஒவ்வொரு இல்லத்திலும் தீபம் ஏற்றுவதே லட்சுமி கடாட்சம் பெருகுவதற்குதான். அதேபோல வாஸ்து பாத்திரத்தில் நீர் நிரப்பிவைப்பதும் திருஷ்டி போக்கும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 12-ல் இருக்கிறார். அவருடன் பாக்கியாதிபதி சூரியன் சம்பந்தம். 12 என்பது விரயஸ் தானம், செலவு ஸ்தானம். பாக்கியாதிபதி சூரியன் சம்பந்தப்பட்டதால் விரயச்செலவுகள் அனைத்தும் சுபமங்களச் செலவுகளாக அமையம். விரயத்தில் இரண்டு ரகம். சுபவிரயம், அசுப விரயம். பூஜை செலவு, காதணிவிழா, திருமணம், சடங்கு, கிரகப் பிரவேசம், ஆன்மிக ஆலய தரிசனங்கள், ஆடை அணிகலன்கள் வாங்குவது, வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருள், அத்தியா வசியப் பொருள் வாங்குவது இவை யெல்லாம் சுபச்செலவு. போலீஸ், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, தண்டம் தீர்வை, களவு போகுதல், காணாமல் போகுதல் இவையெல்லாம் அசுபச் செலவுகள். ராசிநாதன் குரு 12-ல் அஸ்தமனமாக இருப்பதால் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்ற விதிப்படி உங்கள் வகையில் அசுபச் செலவுகள் விலகும். அதேசமயம் ராசிநாதன் குரு அஸ்தமனம் என்பதால் உங்கள் முயற்சிகளை ஒரு முறைக்குப் பலமுறை செயல்படுத்த வேண்டும். இரண்டு நிமிட வித்தியாசத்தில் பஸ்ஸைத் தவறவிட்டவர்கள் காத்திருந்து அடுத்த பஸ்ஸில் பயணம் போதுவதுபோல! 4-க்குடையவர் 4-ஆமிடத்தையே பார்ப்பதால் உங்கள் பயணம் தடைப்படாது. திட்டமும் தடைப்படாது. கருதிய காரியங்களும் தோல்வியடையாது. எல்லாம் கொஞ்சம் தாமதமாக நிறைவேறும். 8-ஆமிடத்தை குரு பார்ப்பதால் தாமதத்தின் விளைவாக ஏற்படும் தவிர்க்கமுடியாத செலவுகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் இருக்கிறார். (மறைகிறார்). ஜென்மத்தில் கேது இருக் கிறார். 7-ல் ராகு இருக்கிறார். இவையெல்லாம் திருமணத்தடை, தாமதங்களை உருவாக்கும் என்றாலும், பரிகார பூஜைகளும் ஹோமங்களும் செய்துகொண்டால், 7-ஆம் இடத்தை குரு பார்க்கும்விதமாக நல்ல கணவன், நல்ல மனைவி அமைவார். ஜாதகரீதியாக செவ்வாய்- சனி சம்பந்தம் இருந்தாலும், அதை குரு பார்க் காமல் இருந்தாலும் கலப்புத் திருமணம், காதல் திருமணம் அல்லது மறுமணம் அல்லது விதவைத் திருமணமும் நடக்கும் வாய்ப்புகள் உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் காமோ கர்ஷண ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும்,ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும் செய்துகொள்ள வேண்டும். வசதி இல்லாதவர்கள் திருவை யாறுக்கு அருகில் பெரும்புலிலியூர் சென்று வழிபடலாம். விவாகரத்தைத் தடுக்கவல்லது. நாமக்கல் அருகில் மோகனூர் சென்று பெருமாள் கோவிலிலில் சம்மோஹன கிருஷ்ணரை வழிபடவும். அது குடும்பப் பிரிவைத் தடுத்து கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையை உருவாக்கும். இப்படி ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வும் உண்டு; பரிகாரமும் உண்டு. அதை முறையாகத் தெரிந்து கொண்டு, நம்பிக்கையோடு வழிபட்டால் நூற்றுக்குநூறு பலம் தரும். எலும்பு முறிவு டாக்டரிடம்போய் கண் சம்பந்தப்பட்ட நோய்க்குத் தீர்வு கிடைக்காது.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார்; ராசியைப் பார்க் கிறார். 5-ஆமிடத்தையும், 8-ஆமிடத்தையும் பார்க்கிறார். 5-ஆமிடத்தை சனி பார்ப்பதை புத்திரசோகம் என்பார்கள்; புத்திர தோஷம் என்பார்கள். ஆனால், அவர் ராசிநாதன் என்பதால் தோஷமில்லை. 12-க்குடைய சனி 8-ஆமிடத்தைப் பார்ப்பதால், "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பது போல கெடுதல் விலகும். பாதிப்பில்லை என்றாலும் கவலை, சஞ்சலம், மனக்கிலேசம் இருக்கும். பிள்ளைகள் வகையிலும் தொல்லைகளைச் சந்திக்கலாம். அல்லது பொருள் இழப்பு, பண இழப்புகளினால் வேதனை அடையலாம். குடும்பத்தில் உள்ளவர்களால் சோதனைகள் விளையலாம். சிலருடைய அனுபவத்தில் நல்லதுசெய்து கெட்டதைச் சந்திக்கும் சூழ்நிலை வரலாம். 7-க்குடையவர் 10-ல் 2, 11-க்குடைய குருவோடு சேர்வதால், கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் நன்மைகள் பெருகும். உறவுகள் மேம்படும். தொழில்வளம் உண்டாகும். வேலை இல்லாதோருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். சகோதர- சகோதரிகள் வகையில்- குறிப்பாக மூத்தவர்களால் உங்களுக்கு நன்மைகளும் ஆதாயங்களும் எதிர்பார்க்கலாம். சொத்துப் பிரச்சினைகளில், பங்குபாகங்களில் தங்குதடையின்றி உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நியாயங்கள் கிடைக்கும். நீதி நிலைக்கும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் ராசியைப் பார்ப்பது சிறப்பு. அத்துடன் 10-க்குடையவர் 9-ல் நின்று பார்ப்பது அதனினும் சிறப்பு. பழம் நழுவிப் பாலிலில் விழ, அதுவும் நழுவி வாயில் விழுந்த மாதிரி எல்லாம் உங்களுக்கு இயற்கையாக- சாதகமாக நிறைவேறும். 12 ராசிக்காரர்களிலும் இந்தக் கோட்சார அமைப்பு மீன ராசிக்காரர்களுக்குத்தான் அதிராஜயோகமாக அமைகிறது. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக எல்லாமே உங்களுக்கு அனுகூலமாக நிறை வேறும். அதற்கு குருவருளும் திருவருளும் துணையாக இருப்பதால், நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும் என்பது விதி. அதேசமயம் இந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு மட்டும் ஏதோ ஒருவகையில் சோதனைகள் காணப்படலாம். ஏனென்றால் விருச்சிகமும் மீனமும் பெண் ராசிதான். குரு- குருவோடு சூரியன் சம்பந்தப் பட்டதால், பெண்களுக்கு மட்டும் பிரச்சி னைகள் காணப்படலாம். தனிப்பட்ட பிரச் சினைகள் இல்லை என்றாலும், பிள்ளைகள், பேரன், பேத்திகள், சுற்றத்தார், உற்றார்- உறவினர்கள் வகையில் கவலையும், கலக்கமும், ஏக்கமும் ஏற்படும். என்றாலும் உங்கள் தெய்வ பலத்தால் அதை சமாளித்துவிடு வீர்கள்.