முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: கிருத்திகை- 1.
செவ்வாய்: உத்திரட்டாதி- 4.
புதன்: அஸ்வினி- 1.
குரு: கிருத்திகை- 2.
சுக்கிரன்: பரணி- 3.
சனி: பூரட்டாதி- 2.
ராகு: ரேவதி- 1.
கேது: அஸ்தம்- 3.
கிரக மாற்றம்:
வைகாசி 1 (14-5-2024)
ரிஷப சூரியன் (மாலை 5.53).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- மிதுனம்.
13-5-2024 அதிகாலை 5.05 மணிக்கு கடகம்.
15-5-2024 பகல் 3.25 மணிக்கு சிம்மம்.
18-5-2024 அதிகாலை 4.04 மணிக்கு கன்னி.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களின் நீண்டநாளைய கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடித்து நல்லபெயர் எடுக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. நெருங்கிய நண்பர்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. குடும்ப ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் நன்றாக இருந்து கடந்தகால கருத்து வேறுபாடுகள் எல்லாம் மறையும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால எதிர்ப்புகள் எல்லாம் மறைந்து நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற் றத்திற்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் பிறர் பார்த்து வியக்கும் அளவிற்கு சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைவதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வரும் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவது, புதிய சொத்துகள் வாங்குவது போன்ற செயல்களில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது உங்களுக்கு நற்பலனைத் தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். மாதக்கோள் என வர்ணிக்கப் படக்கூடிய சூரியன் 12 மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு இருந்தால் ஒரு வளமான பலன்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் ஏற்ற மிகுந்த பலன்களைப் பெரும் வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகமிக சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறைந்தாலும் உங்களுக்கு கிடைக்கவேண்டிய சன்மானங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அதிகாரியிடம் பேசுகின்றபொழுது வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பது மிகவும் நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எந்த ஒரு காரியத்தில் நீங்கள் ஈடுபட்டாலும் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். செவ்வாய், ராகு 10-ல் சஞ்சரிப்பதால் கௌரவ பதவிகள் உங்களைத் தேடிவரும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் புதிய பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மனைவி, பிள்ளைகள்வழியில் இருந்துவந்த தேவையற்ற மருத்துவ செலவுகள் எல்லாம் குறைந்து குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியத்துடன் இருக்கக்கூடிய நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் லாபகரமான பலன்களைப் பெறுவீர்கள். சனி 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலமாக வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் நீங்கள் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்து நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஒருசிலருக்கு அரசாங்கவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளைப் பெறக்கூடிய யோகங்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் ஏற்படும். உடன்வேலை செய்பவர்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்து முடிக்க முடியும். மாணவ- மாணவியர்களுக்கு உல்லாச பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். இந்த வாரத்தில் ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் உங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் கிட்டும். தட்சிணா மூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மையைத் தரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் ஒரு கௌரவமான நிலை உண்டாகும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் இந்த வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்பு கள் உங்களைத் தேடிவரும். குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்தகால பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து தாராள தன வரவுகள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய யோகம் உண்டாகும். வெளியூர்மூலமாக அனுகூலங்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்த வம்பு, வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். வேலை யாட்கள் ஆதரவு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது என்ப தால் ஒவ்வொரு செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த கடன் உதவிகள் தற்போது கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் ஒரு நிம்மதியான நிலை ஏற்படும். மாணவ- மாணவியர்கள் எந்த ஒரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயல்களும் எளிதில் அனுகூலமான பலன்களை தரும். இந்த வாரத்தில் நல்ல பலன்களை அடைய பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, கால பைரவரை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையக் கூடிய பலம் உண்டாகும். வரும் செவ்வாய்க்கிழமைமுதல் சூரியன் 10-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். ஜென்ம ராசிக்கு 7-ல் சனி, 8-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்ப தால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, வண்டி வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையோடு செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உடன் இருப்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முடிந்தவரை பேச்சை குறைப்பது நல்லது. ஒருசிலருக்கு கூட்டாளிகள்மூலமாக தேவை யில்லாத நெருக்கடிகள் குறிப்பாக அவர்களுடைய பங்கை கேட்டு தொந்தரவு செய்யக்கூடிய நிலை வரும் நாட்களில் உண்டு. உடன்பிறந் தவர்களிடம் பேச்சை குறைப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுத லாக இருப்பதால் ஓய்வுநேரம் குறையும். அதிகாரியிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருந் தால் நிலைமையை சமாளிக்க முடியும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, நேரத்திற்கு சாப்பாடு சாப்பிடுவது நன்மையை தரும். குறிப்பாக வெளிநபர் களிடம் குடும்ப விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் அவர்களது பணியில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய பாராட்டுதல்களைப் பெறமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில் லாமல் எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்று வது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 9-ல் குரு சஞ்சரிப்பதால் கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். குறிப்பாக பொருளா தாரரீதியாக இருந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது முழுமையாக விலகி ஒரு வளமான நிலையினை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் செவ்வாய்க்கிழமை முதல் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உடல் ஆரோக்கியரீதியாக இருக்கக்கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள் எல்லாம்கூட படிப்படியாக குறையும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பாக நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய பலம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். தற்போது இருக்கக்கூடிய சட்ட சிக்கல்கள் எல்லாம்கூட வரும் நாட்களில் படிப்படியாக குறைந்து மனநிம்மதி உண்டாகும். தொழில் அபிவிருத்திக் காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் தற்போது கிடைத்து நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் நற்பலனை அடைய உள்ளீர்கள். பிறரால் முடிக்க முடியாத பணிகளைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்துமுடித்து அதிகாரிகளிடம் நல்லபெயர் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மாணவ- மாணவியர்கள் எதிர்பார்க்கக்கூடிய உயர்படிப்பு வாய்ப்புகள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இந்த வாரத்தில் ஞாயிறு திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சுபச்செய்திகள் உங்களை தேடிவரும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
.துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத் தோடு செயல்பட்டு வளமான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சுக்கிரன், புதன் 7-ல் சஞ்சரிப்ப தால் நெருங்கியவர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. வரும் செவ்வாய்க்கிழமைமுதல் சூரியன் 8-ல் குரு சேர்க்கைப் பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு செயல்பட்டால் அடையவேண்டியதை அடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கூட்டாளிகள் ஆதரவு மிகச்சிறப்பாக இருப்பதால் வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து மனநிம்மதி ஏற்படும். பூர்வீகச் சொத்துவகையில் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பங்காளியிடம் பேசுகின்றபோது சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில்மட்டும் கவனம் செலுத்தினால் நல்ல பெயர் எடுக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் நட்பு வட்டாரத்தில் சற்று கவனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது, விநாயகருக்கு சூரை தேங்காய் உடைப்பது நன்மை யைத் தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 5-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எந்த ஒரு செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். முடிந்தவரை தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது தவிர்ப்பது மிகமிக நல்லது. ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் 7-ல் சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் பணவரவுக்கு எந்தவிதத்திலும் பஞ்சமில்லாமல் உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சூரியன் தற்போது 6-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் பக்குவமாக நடந்துகொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுத்து விடமுடியும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான சன்மானம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. பணி தொடர்பான விஷயங்களை வெளி நபர்களிடம் பேசாமல் இருப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் பெரியோர்களிடம் பேசுகின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு அன்று தேவையற்ற மனகுழப்பங்கள் உண்டாகும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுடைய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். இந்த வாரத்தில் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனைசெய்வது மிகவும் நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை திருப்திகரமாக இருக்கும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தற்போது 5-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருந்த மறைமுக பிரச்சினைகள் எல்லாம் முழுமையாக குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். தொழில்ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து மனநிம்மதி உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்துமுடித்து வாடிக்கையாளர்களிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்கள் பணியில் நீங்கள் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவ- மாணவியர்களுக்கு விரும்பிய மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வரும் ஞாயிறு மற்றும் சனிக்கிழமையன்று குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சி ஏற்படும். வரும் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றியினை அடைவீர்கள். சுக்கிரன், புதன் 4-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சாரம் செய்வதால் உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து வாழ்க்கைத் தரம் உயரும். நீண்டநாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகமான நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தினை அடையக்கூடிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். கடந்தகாலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்திற்கு தற்போது விடிவு காலம் பிறந்து நீங்கள் ஒரு நல்ல நிலையினை அடைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபங்கள் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன் அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நல்ல ஒரு மாற்றங்கள், விரும்பிய பதவியை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். உங்களுக்கு அனுசரனையாக இருக்கக்கூடிய நபர் அதிகாரியாக வரக்கூடிய சூழ்நிலை உண்டாகி வேலையில் சுமூகமான நிலை ஏற்படும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறுவார்கள். உங்கள் ராசிக்கு இந்த வாரத்தில் புதன் பிற்பகலுக்குப் பிறகு வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நற்பலனை தரும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, 2-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும். தற்போது 3-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படும். வேலையாட்கள் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். எந்திரங்கள் பழுதாவதால் எதிர்பாராத வீண் செலவுகளை எதிர்கொள்ளக்கூடிய அனுகூலமற்ற நிலை உண்டாகும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும். சக ஊழியர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களைச் சொல்லக்கூடிய நேரமென்பதால் உங்களுடைய பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்து விட்டு தங்களுடைய நேரத்தை பயனுள்ள விஷயத்திற்கு செலவு செய்வது நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். சனிக்கிழமையன்று தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது உத்தமம். முருக வழிபாடு மேற்கொள்வது, பாம்பு புற்றுக்குப் பால்விடுவது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நிலையில்கூட எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பெண்கள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது 2-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். ஒரு பெரிய மனிதர்கள் நட்பு கிடைத்ததால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தற்போது தீர்க்கக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்றுக் குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்தோடு இருந்தால்தான் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக ஒருசில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய வேலையையும் நீங்கள் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் தனித்திறனுடன் கையாண்டு அடையவேண்டிய அனுகூலங்களை அடைவீர்கள். மாணவ- மாணவியர்கள் நண்பர்களிடம் பேசுகின்றபொழுது சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.