ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

11-2-2018 முதல் 17-2-2018 வரை

Advertisment

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- தனுசு.

Advertisment

13-2-2018- மகரம்.

15-2-2018- கும்பம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: அவிட்டம்- 2, 3, 4.

செவ்வாய்: அனுஷம்- 3, 4, கேட்டை- 1.

புதன்: அவிட்டம் 4, சதயம்- 1, 2, 3.

குரு: விசாகம்- 3, 4.

சுக்கிரன்: அவிட்டம்- 4, சதயம்- 1, 2.

சனி: மூலம்- 2.

ராகு: ஆயில்யம்- 1.

கேது: திருவோணம்- 3.

கிரக மாற்றம்:

புதன் அஸ்தமனம்.

சுக்கிரன் அஸ்தமனம்.

13-2-2018- கும்ப சூரியன்.

13-2-2018- சுக்கிரன் உதயம்.

14-2-2018- விருச்சிக குரு (அதிசாரம்).

14-2-2018- புதன் உதயம்.

thisweekrasi

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 8-ல் இருக்கிறார். ராசிக்கு 2-ஆம் இடத்தையும் 11-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.2-க்குடைய சுக்கிரன் 11-ல் புதனோடு கூடியிருக்கிறார். 13-ஆம் தேதி சுக்கிரன் உதயமாகிறார். எனவேஅத்தியாவசியத் தேவைகள் பூர்த்தியடையும். காரியத்தடைகள் விலகி ஜெயமாகும். பொருளாதாரத்தில் சரளமான பணப்புழக்கம் காணப்படா விட்டாலும்கூட உங்கள் செயல்பாடுகளில் தேக்கம் இருக்காது. விரும்பியது நிறைவேறும். ராசிநாதன் 8-ல் மறைந்தாலும், அவர் நிற்கும்விருச்சிக ராசிக்கும்அவர் ராசிநாதன் என்பதால் மறைவு தோஷம் பாதிக்காது. 7-ல் குருநின்று ராசியைப் பார்ப்பது ஒரு பலம். ஏற்கெனவே கூறியபடி செயல்பாடுகளில் தடை இருக்காது. உங்களுடைய திறமை பளிச்சிடும். பணிபுரிபவர்களுக்கு மேலிடத்தாரிடம் இருந்துவந்த மனக்கிலேசம் மாறி அவருடைய மதிப்புக்கும் பாராட்டுக்கும் ஆளாகலாம். 4-ல் உள்ள ராகுஉடல்நலத்தில் அடிக்கடிவைத்தியச் செலவுகளையும் தொந்தரவுகளையும் தரலாம். என்றாலும் பெரியளவில் பாதிப்பு இருக்காது. உடன்பிறந்த சகோதர- சகோதரிகள் வகையில் சிறுசிறு மனக்கசப்புகள் வந்துவிலகும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 10-ல்அஸ்தமனமாக இருக்கிறார். வரும் 13-ஆம் தேதி உதயமாகிறார். அவருடன் 2-க்குடைய புதனும் கூடியிருக்கிறார். அவரும் 14-ஆம் தேதி அஸ்தமனம் நீங்கி உதயமாகிறார். ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடப்பதால் உங்களுடைய காரியங்களில் மந்தப்போக்கு காணப்படும். தொழில்வகையில் சில புதிய யுக்திகளைக் கையாளலாம். இருந்தாலும் போட்டி, பொறாமைகளைச் சமாளிக்கப் போராட வேண்டியதிருக்கும். 6-ல் குரு. 8-க்குடையவர் 6-ல் மறைவது ஒருபுறம் நல்லதுஎன்றாலும், 11-க்குடையவர் 6-ல் மறைவது நல்லதல்ல. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியானது தள்ளிப்போகும். இழுபறி நிலையே காணப்படும். 9-ல் கேது. தாயார்வழி தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற முற்படுவது நன்மை தரும். குலதெய்வ வழிபாடுகளையும் தவறாமல் கடைப்பிடிப்பதும்அவசியம். பொருளாதாரத்தில் பற்றாக்குறைக்கு இடமில்லை. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். கையில் காசு புரண்டாலும் மனதில் ஒரு கவலையும் நிம்மதிக்குறைவும் காணப்படலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். திடீர்ப்பயணங்கள் உண்டாகலாம். அதன்மூலம் செலவும் அதிகமாகலாம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 14-ஆம் தேதிவரை அஸ்தமனமாக இருக்கிறார். 1, 4-க்குடையவர் அஸ்தமனம் என்பதால் உங்களுடைய செயல்பாடு, வாழ்க்கை நிலை, ஆரோக்கிய நிலை எல்லாவற்றிலும் நீறுபூத்த நெருப்புபோல தணல் (சூடு) காணப்படும். பிரச்சினைகள் காணப்படும். அஸ்தமனமான புதன் 14-ஆம் தேதி உதயமாகிறார். அதன்பின் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதால் குடும்பத்திலும், உற்றார்-உறவினர், நண்பர்கள் வகையிலும் நிதானமாகப் பேசவேண்டும். சிந்தித்துப் பேசவேண்டும். ஒருசிலருக்கு ஆதரவாகப் பேசும் வார்த்தைகள் வேறுசிலருக்கு விபரீதமாகப்படும். வேண்டா வெறுப்பை உண்டாக்கும். தீயினால் சுட்ட புண் ஆறும்; நாவினால் சுட்டபுண் ஆறாது என்ற திருக்குறள் கருத்தை நினைவுபடுத்தி பதமாகப் பேசவேண்டும். பக்குவமாகப் பேச வேண்டும். 7, 10-க்குடைய குரு 14-ஆம் தேதி அதிசாரமாக 6-ஆம் இடம் விருச்சிக ராசிக்கு மாறுகிறார். என்றாலும் 10-ஆம் இடம், 12-ஆம் இடம், 2-ஆம் இடங்களைப் பார்க்கப் போவதால், தொழில்ரீதியாகவும் வாழ்க்கைத் தேவைக்காகவும் தவிர்க்கமுடியாத செலவுகளை சரிக்கட்ட கடன் வாங்க நேரும். என்றாலும் 10-க்குடைய குரு 6-ல் மறைந்து 10-ஆம் இடத்தையே பார்க்கப்போவதால் தொழில், வாழ்க்கை பாதிப்பில்லாமல் இயக்கப்படும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் ஜென்மத்தில் ராகு நிற்கிறார். 3, 12-க்குடைய விரயாதிபதியான ஆயில்யத்தில் (புதன் சாரம்) இருக்கிறார். புதன் ராசிக்கு 8-ல் மறைகிறார்.உண்மையாகவும் விசுவாசமாகவும் உழைப்பதற்கு 14-ஆம் தேதி முதல் பலன் கிடைக்கும். மேலிடத்தாரின் ஆதரவும் பாராட்டும் பெருகும். 9-க்குடைய குரு 9-க்கு 8-ல் மறைந்ததால் கடந்த காலம் நிறைவில்லாத நிலையைச் சந்தித்தீர்கள். 14-ஆம் தேதி விருச்சிகத்திற்கு குரு அதிசாரமாக மாறியதும் 9-ஆம் இடத்தையும் ஜென்ம ராசியையும் பார்க்கப் போவதால், தெய்வ அனுகூலத்தால் உங்கள் முயற்சிக்கேற்ற பலனையும் முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கலாம். கல்யாண விருந்து- கடைப்பந்திக்கு போனபோது எல்லா அயிட்டமும் முடிந்துவிட்டது என்ற நிலை துலாத்தில் குரு இருந்தபோது நடந்த பலன். விருச்சிகத்துக்கு குரு மாறியபிறகு (அதிசாரமாக) சமையல்காரர்கள், பந்தி பரிமாறுகிறவர்கள் தமக்காக எடுத்து வைத்திருந்த உணவையும் பதார்த்தங்களையும் உங்களைத் தனியாக அழைத்துப்போய் உபசரிப்பது போன்ற நிலை. (ஸ்பெஷல் கவனிப்பு). தொழில்துறையிலும் குடும்ப உறவிலும் உத்தியோக வகையிலும் இந்த திருப்தியும் மனநிறைவும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ஏற்படும். தேக ஆரோக்கியத்தில் தெளிவான நிலை எதிர்பார்க்காம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 6-ல் மறைகிறார். கேது- ராகுவுடன் சம்பந்தப்படுகிறார். புதனும் சுக்கிரனும் ராசியைப் பார்க்கிறார்கள். இவர்கள் இருவரும் வாரத்தின் முதல்பகுதி வரை அஸ்தமனமாக இருக்கிறார்கள். மனதில் நிம்மதிகுறையும். உடல்நலத்தில் கவனம் தேவைப்படும். குறுக்குவழிகளில் ஈடுபடலாகாது.கெட்டவர்களின் தொடர்பைவிட்டுவிலகுவது அவசியம். பொருளாதாரநிலை சாதாரணமாகவே காணப்படும். செலவுகள் அதிகமாகும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அவசியமானதாகும். வாரப்பின்பகுதியில் கலைஞர்களுக்கு முன்னேற்றமான பாதை தென்படும். புதிய பொருட்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்புகள் அமையும். வாகனத்தில் சிறுவிபத்துக்களை சந்திக்க நேரும். நிதானமும் பொறுமையும் தேவைப்படும். 7-க்குடைய சனி 5-ல் ராசிக்குத்திரிகோணமாக அமைவதாலும், ராசிக்குயோகாதிபதியான செவ்வாய் 7-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் மனைவி, குழந்தைகள் வகையில் ஆதரவும் அனுகூலமும்கிடைக்கும். அதன்மூலமாக உங்கள் பிரச்சினைகளை சமாளிக்கலாம். பண விஷயத்திலும் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் உதவியும் கிடைக்கும்.அதனால் தேவைகள் பூர்த்தியடையும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைகிறார்.வாரத் தொடக்கத்தில் அஸ்தமனமாக இருக்கிறார். அவருடன் இணைந்திருக்கும் சுக்கிரனும் அஸ்தமனமாக இருக்கிறார். பிப்ரவரி 13-ல் சுக்கிரன் உதயமாவார். 14-ல் புதன் உதயமாவார். அதன்பிறகு சத்ரு ஜெயம், கடன் நிவாரணம், நோய் நிவர்த்தி ஏற்படும். தொழில் குழப்பம், உத்தியோகத்தின் இடையூறுகள் எல்லாம் மாறிவிடும்; மறைந்துவிடும். ஜாதகத்தில் திரிகோணாதிபதிகள் (5, 9) சம்பந்தப்பட்ட தசாபுக்திகள் நடைபெற்றால் புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள்,அத்தியாவசியமான தேவைகள் (உதாரணமாக ஏ.சி., டி.வி. வாஷிங்மெஷின் போன்றவை) கிடைக்கும். எம்.ஜி.ஆர். இறந்த நேரம்,அந்த நிகழ்ச்சியைப் பார்க்க அடுத்த தெருவில் இருந்த நண்பரின் வீட்டுக்குப் போய் டி.வி.யைப் பார்த்தோம். சிவாஜி இறந்தவுடன் எங்கள் வீட்டிலேயே சொந்த வீட்டில் நண்பர்களுடன் டி.வி.யில் நிகழ்ச்சிகளைப் பார்த்தோம். ஆக டி.வி., வாஷிங்மெஷின் எல்லாம் அத்தியாவசியமாகிவிட்டது. ஏ.சி.கூட முக்கியத்துவம் பெறவில்லை.அதைவிட எல்லார் கையிலும் செல்போன்இருக்கிறது. அது மிகமிக அத்தியாவசியமாகிவிட்டது. இப்போது தமிழகஅரசு பெண்களுக்கு டூவீலர் வாங்க எளிய தவணைக்கடன் கொடுக்க முன்வந்துள்ளது. சிலர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யலாம். பலனளிக்கும். தொழில் விஷயமாகப் பயணம் செய்வீர்கள். ஒருசிலர் வாகனப்பரிமாற்றம் அல்லது புதிய வாகனம்வாங்க வழிமுறைகளைக் கையாளலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 5-ல் இருக்கிறார். வார முற்பகுதி வரை குருவின் பார்வையைப் பெறுகிறார். சுக்கிரனுக்கு வீடு கொடுத்த சனியும் சுக்கிரனைப் பார்க்கிறார்.துலா ராசிக்கு ராஜயோகாதிபதி சனி. எந்தஒரு கிரகத்துக்கு கேந்திராதிபத்தியம், திரிகோணாதிபத்தியம் கிடைக்கிறதோஅந்த கிரகம் அந்த ராசிக்கு ராஜயோகாதிபதி ஆவார். அதேபோல 9-ஆமிடம் திரிகோணம், 10-ஆம் இடம் கேந்திரம். இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்டால் தர்மகர்மாதிபதி யோகம் எனப்படும். ரிஷப ராசிக்கு சனி 9, 10-க்குடையவர். தர்மகர்மாதிபதியும் அவர்தான். ராஜயோகாதிபதியும் அவர்தான். அதனால் பெரும்பாலும் ரிஷப ராசிக்காரர்களுக்கு மற்றராசிக்காரர்களைப்போல எந்த சங்கடமும்ஏற்படுத்தாது. அதன்படி ரிஷப ராசிக்காரரான கலைஞருக்கு அட்டமத்துச்சனி ஆரம்பித்தபோது சில காலம் முதலமைச்சராகப் பதவியேற்றார். இதேமாதிரி துலா ராசிக்காரர்களுக்கும் ஏழரைச்சனியோ அட்டமத்துச்சனியோ பெரும்பாலும் பாதிக்காது; ஆனால் சந்திரன் அல்லது ராகு- கேது தசாபுக்திகள் நடந்தால் சில பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். அதற்குரிய பரிகாரம்செய்துகொண்டால் புயல்போல வரும் கெடுதல்கள் பனிபோல விலகிவிடும். 14-ஆம் தேதி முதல் சுக்கிரன், புதன் உதயத்திற்குப் பிறகு உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மைகளும் யோகங்களும் நடக்கும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். 4-ஆமிடம், 7-ஆமிடம், 8-ஆமிடங்களைப் பார்க்கிறார்.பூமி, வீடு, வாகன சம்பந்தமான நற்பலனைகளை எதிர்பார்க்கலாம். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகமும், திருமணமாகி ஏழரைச்சனியில் (ஜென்மச்சனியில்) பிரிந்திருந்தவர்களுக்கு மீண்டும் இணையும் யோகமும் ஏற்படும். 8-ஆமிடத்தை செவ்வாய், சனி பார்ப்பதால் ஆயுள் குற்றமில்லை. 14-ஆம் தேதி வரை குருவும் 8-ஆமிடத்தைப் பார்ப்பதால் நோய் நொடி, வைத்தியச்செலவுக்கு இடமில்லை. குரு மாறியபிறகு (14-ஆம் தேதி முதல்) சிறுசிறு விபத்துக்கள் ஏற்பட இடமுண்டு. சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் பாம்பன் சுவாமிகள் இயற்றிய கிரத பந்தம் (லேமினேஷன் படம்) வாங்கி பையிலோ வாகனத்திலோ வைத்துக்கொள்ளலாம். நெடுந்தூரம் வெளியூர்ப் பயணம் போகிறவர்கள், புறப்படும்போது வாகனச்சக்கரத்தின்கீழ் (டயரில்) எலுமிச்சைப் பழம்வைத்து ஏற்றிவிட்டுச் செல்லலாம். இவையெல்லாம் அனுபவரீதியான எளிய பரிகாரமாகும். ஏழரைச்சனியயின் கடைசிக்கூறு பாதச்சனி நடக்கிறது. சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் அவரவர் வயதுடன் ஒன்று கூட்டி அல்லது 19 மிளகை சிவப்புத்துணியில் திரிபொட்டலம் கட்டி நெய்யில் தீபம் ஏற்றவும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் 11-ல் இருப்பதால் ஜென்மச்சனியின் பாதிப்பும் வேகமும் குறையும். குரு 5-ஆம் இடம், 7-ஆமிடங்களையும் பார்க்கிறார். மனைவி மக்கள் யோகமும், உத்தியோக நன்மையும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். 14-ஆம் தேதி 11-ஆமிடத்து குரு அதிசாரமாக 12-ஆம் இடத்துக்கு மாறுகிறார். அதன்பிறகு உங்களுக்கு முழுமையான ஆரோக்கியம் உண்டாகும். ஜென்மத்தில் சனி வந்த நாள்முதல் ஏதோ ஒருவகையில் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்தது. குறிப்பாக பூராட நட்சத்திரக்காரர்களுக்கு சர்க்கரை நோய்த் தொல்லை, குதிங்கால் வலி, நடக்க முடியாத தொல்லைகள் போன்ற சங்கடங்கள் ஏற்பட்டது. 4-ஆமிடம்- சுகஸ்தானம்.அதற்குடைய குரு 4-ஆமிடத்துக்கு 8-ல் சுக்கிரன் வீட்டில் இருந்ததாலும், பூராடம் சுக்கிரன் நட்சத்திரம் என்பதாலும், பூராட நட்சத்திரக்காரர்களுக்கு தொல்லைகள் இருந்தன. இந்த வாரம் குரு 12-ல் அதிசாரமாக மாறியபிறகு முழங்காலுக்குக் கீழே உள்ள வேதனைகள், வலிகள் எல்லாம்விலகி விடும். சிலருக்கு வைத்தியச் சிகிச்சையும், சிலருக்குப் பிரார்த்தனை பலமும் பலன்தரும். 2-ல் சூரியனும் கேதுவும் இருப்பதால் உங்களையறியாமலேயே கோபப்படுவீர்கள். அதைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். சனி ஜென்ம கேதுவின் சாரம் பெறுகிறார். ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. 2-ல் புதனும் சுக்கிரனும். இருவரும் செவ்வாய், ராகு சாரங்களில் சஞ்சாரம். 14-ஆம் தேதிவரை இருவரும் அஸ்தமனம். நல்ல நேரம் இருக்கும்போது பித்தளையைக் கண்டெடுத்தாலும் தங்கமாக மாறும். இப்போது உங்களுக்கு போதாத காலம். பொன்னும் செம்பாக மாறும். 14-ஆம் தேதிவரை எண்ணி எண்ணிச் செலவு செய்யவேண்டிய காலம். ஒரு செலவுக்கு இரு செலவு ஏற்படவேண்டிய காலம். எதிலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல் நிதானமாக, அவசரப்படாமல் யோசித்துச் செயல்பட வேண்டியது அவசியம். வாகனப்பயணத்தின்போது சுற்றுவழியில் தூரம் அதிகம் என்று குறுக்குவழியில் பயணித்தால் ஏதாவது சிக்கல் ஏற்பட்டுவிடும். டயர் பஞ்சர் அல்லது டிராபிக் நெருக்கடி உண்டாகிவிடும். அல்லது வண்டி பழுதாகலாம். பெரும் சேதத்திற்கு இடமில்லை என்றாலும், அட்டமாதிபதி சூரியன் கேதுவோடு சேர்ந்து ராகு பார்ப்பதால் விபத்து, மனச்சங்கடத்தை ஏற்படுத்தும். 14-ஆம் தேதி குரு 11-ஆமிடத்துக்கு அதிசாரமாக வரும்போது விரயச்சனியின் வேகம் தணியும். தடையில்லாத முன்னேற்றத்தைச் சந்திக்கலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார். 11-ல் இருந்து ராசியைப்பார்க்கிறார். அத்துடன் 2, 11-க்குடைய குருவும் 9-ல் நின்று 14-ஆம் தேதி வரை ராசியைப் பார்க்கிறார். இவையெல்லாம் உங்களுக்கு வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் சாதனை நிலைகளாகும். தொழில்நுட்பத் திறமை வெளிப்படும். பதவி உயர்வு கிடைக்கும். பாராட்டும் கௌரவமும் உண்டாகும். பொருளாதார வளர்ச்சியை சந்திக்கலாம். குடும்பத்தில் அமைதி,ஆனந்தத்தையும் சந்திக்கலாம். தந்தைவழி, பாட்டனார்வழி ஆஸ்தி பூஸ்தி சேர்க்கைகள், அனுகூல நிலை உண்டாகும். வண்டி வாகன வகை அமையும். 14-ஆம் தேதிவரை புதனும் சுக்கிரனும் அஸ்தமனமாக இருந்தாலும் குரு பார்வை தோஷ நிவர்த்தியை உண்டாக்கும். அதேபோல ஜென்மத்திற்கு வரும் சூரியனும்உங்களுக்கு அனுகூலமாகவும் ஆதரவாகவும் பலன்தருவார். 14-ஆம் தேதி 10-ஆம் இடத்துக்கு குரு அதிசாரமாக வரும்போது வேலை, உத்தியோகம், தொழில் இவற்றில் பாதிப்புக்கு இடமில்லாமல் சாதிக்கலாம். என்றாலும் சுமை அதிகமாக இருக்கும். டென்ஷனும் அதிகமாகும். சிலர் விடுமுறை நாளிலும் ஊதியமில்லாமல் வேலை பார்க்கும் சூழ்நிலை உருவாகும். தேடிப்போகும் முக்கியமான நபர்களை சந்திக்க முடியாமல் ஏமாற்றமாகும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு தன் ராசிக்கு 8-ல் மறைகிறார். அவர் ராசிநாதன் மட்டுமல்ல; 10-ஆமிடமான தொழில், ஜீவன ஸ்தானாதிபதியும் ஆவார். ராசிக்கு 8-ல் மறைந்தாலும் 10-க்கு 11-ல் இருக்கிறார். எனவே மதிப்பு, மரியாதை, கௌரவம்,அந்தஸ்து இவற்றுக்கு குறைவு ஏற்படாது. செயல் திறமைக்கும் பாதிப்பு ஏற்படாது. ஆனாலும் ராசிநாதன் 8-ல் இருப்பதோடு, அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 12-ல் மறைய- 12-க்குடைய சனி 10-ல் இருப்பதால், சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு எதிர்பார்த்த மாதிரி அமையாது. அதாவதுதான் பார்க்கவேண்டிய வேலையை தம்பியைப் பார்க்கச் சொன்னால் பலன் தருமா? உடையவர் இல்லையென்றால் ஒரு முழம் கட்டை என்பார்கள். அந்த மாதிரி சில சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். 14-ஆம் தேதி குரு அதிசாரமாக 9-ஆம் இடத்துக்குமாறி ராசியைப் பார்க்கும்போது எல்லாப் பிரச்சினைகளும் விலகிவிடும். நீங்கள் எதிர்பார்த்த மாதிரி அல்லது எதிர்பார்க்கும்படி சுற்றுச்சூழல் கச்சிதமாக அமைந்துவிடும். "எள் என்பதற்கு முன் எண்ணெய் ரெடி' என்று பெருமைப்படும்படி வேலையாட்களும் சரி, உடன் இருப்பவர்களும் சரி, உத்தியோகத்தில் உடனிருப்பவர்களும் சரி- எல்லாரும் உங்கள் மனதைப் புரிந்து, கருத்துக்கேற்ப செயல்படுவார்கள்; ஒத்துழைப்புத் தருவார்கள். வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் பெருகும். மனதில் துணிவு அதிகமாகும். எதிர்ப்புகள் கட்டுக்கடங்கி இருக்கும். நம்பியவர்கள் அக்கறையோடும் பொறுப்போடும் செயல்படுவார்கள். பக்திமார்க்கத்தில் மனம்லயிக்கும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். ஆலயங்களுக்கு அள்ளிஅள்ளி தானம் செய்வீர்கள். சிவராத்திரி, குலதெய்வ வழிபாடு மன நிறைவாக செயல்படும்.