மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, புதன் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சாரம் செய்வதும் மிகவும் சிறப்பான கிரக அமைப்பு என்பதால் சகல சௌபாக்கியங்களையும் நீங்கள் பெறக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களது கோபத்தை குறைத்துக்கொண்டு நிதானத்தோடு செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக ஆதாயம் அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உத்தியோகரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இடையூறு தந்தவர்கள் எல்லாம் தற்போது உங்களுக்கு அனுசரனையாக நடக்கக்கூடிய ஒரு நிலை உண்டாகும். பேச்சு திறமையால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான காரியங்களைகூட சுலபமாக செய்துமுடிப்பீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக்கவலைகள் எல்லாம் தற்போது மறையக்கூடிய ஒரு நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய ஆசியை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீண்டநாட்களாக தடைப்பட்ட சுப காரியங்கள் கைக்கூடி மனதில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு கால நேரத்தில் தீபமேற்றுவதன்மூலம் வளமான பலன்களை பெறமுடியும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் உங்கள் உழைப்புக்கான பலனை அடையும் வாய்ப்பு உண்டு. பெண்கள்வழியில் பொருளாதார உதவிகள் கிடைக்கும். ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். தொழில்ரீதியாக பார்க்கின்றபொழுது தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சில நேரங்களில் நீங்களே நேரடியாக தலையிட்டு செயல்பட்டால் மட்டுமேதான் போட்ட முதலை எடுக்கமுடியும். ஒரு சிலருக்கு தொழில் நிமித்தமாக தேவையற்ற பயணமும் அதன்மூலம் எதிர்பாராத செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். சக ஊழியரிடம் பேசுகின்ற பொழுது வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். ஒருசிலருக்கு உடன் வேலை செய்பவருடைய வேலையையும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை நிலவும். பிள்ளைகள்வழியில் தேவையில்லாத கவலை ஏற்படும். மாணவ- மாணவியர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்துவது, தேவையற்ற நட்புகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பணவரவுகள் கிடைத்து உங்களுக்கு உள்ள பொருளாதாரப் பிரச்சினைகளும் கடன்களும் குறையும். முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சனிபகவான் சாதகமாக அமையப்பெற்று லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு காரியத்திலும் உற்சாகத்தோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் தெம்போடும் சுறுசுறுப்போடும் செயல்படுவீர்கள். மாத கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், குரு சேர்க்கைப்பெற்று விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட குறித்த நேரத்தில் முடித்து வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயரை எடுப்பீர்கள். மறைமுக போட்ட
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, புதன் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சாரம் செய்வதும் மிகவும் சிறப்பான கிரக அமைப்பு என்பதால் சகல சௌபாக்கியங்களையும் நீங்கள் பெறக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களது கோபத்தை குறைத்துக்கொண்டு நிதானத்தோடு செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக ஆதாயம் அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உத்தியோகரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இடையூறு தந்தவர்கள் எல்லாம் தற்போது உங்களுக்கு அனுசரனையாக நடக்கக்கூடிய ஒரு நிலை உண்டாகும். பேச்சு திறமையால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான காரியங்களைகூட சுலபமாக செய்துமுடிப்பீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக்கவலைகள் எல்லாம் தற்போது மறையக்கூடிய ஒரு நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய ஆசியை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீண்டநாட்களாக தடைப்பட்ட சுப காரியங்கள் கைக்கூடி மனதில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு கால நேரத்தில் தீபமேற்றுவதன்மூலம் வளமான பலன்களை பெறமுடியும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் உங்கள் உழைப்புக்கான பலனை அடையும் வாய்ப்பு உண்டு. பெண்கள்வழியில் பொருளாதார உதவிகள் கிடைக்கும். ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். தொழில்ரீதியாக பார்க்கின்றபொழுது தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சில நேரங்களில் நீங்களே நேரடியாக தலையிட்டு செயல்பட்டால் மட்டுமேதான் போட்ட முதலை எடுக்கமுடியும். ஒரு சிலருக்கு தொழில் நிமித்தமாக தேவையற்ற பயணமும் அதன்மூலம் எதிர்பாராத செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். சக ஊழியரிடம் பேசுகின்ற பொழுது வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். ஒருசிலருக்கு உடன் வேலை செய்பவருடைய வேலையையும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை நிலவும். பிள்ளைகள்வழியில் தேவையில்லாத கவலை ஏற்படும். மாணவ- மாணவியர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்துவது, தேவையற்ற நட்புகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பணவரவுகள் கிடைத்து உங்களுக்கு உள்ள பொருளாதாரப் பிரச்சினைகளும் கடன்களும் குறையும். முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சனிபகவான் சாதகமாக அமையப்பெற்று லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு காரியத்திலும் உற்சாகத்தோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் தெம்போடும் சுறுசுறுப்போடும் செயல்படுவீர்கள். மாத கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், குரு சேர்க்கைப்பெற்று விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட குறித்த நேரத்தில் முடித்து வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயரை எடுப்பீர்கள். மறைமுக போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித் திறமையால் அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய வெளி உதவிகள் கிடைப்பதில் தேவையற்ற இடையூறு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக உடல் அசதி இருந்தாலும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்துமுடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பங்காளிகளுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பூர்வீக சொத்துவகையில் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று சிறப்புடன் செயல்படக்கூடிய பலம் உண்டாகும். இந்த வாரத்தில் புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் அனுகூலமான பலன்களைஅடையமுடியும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 10-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு சுபச்செய்தி கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் குரு, புதன், சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஒரு மிகச் சிறப்பான பலனை பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவு மிகமிக சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது விலகி தொழிலில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் அமையும். சக ஊழியர்கள் சில இடையூறுகளை தந்தாலும் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் விரும்பிய உயர் படிப்பைஅடையும் யோகம் உண்டு. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத தனச்சேர்க்கை ஏற்பட்டு உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, பெருமாள் வழிபாடு செய்வது நன்மை தரும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன்- சுக்கிரன், புதன் உடன் இந்த வாரத்தில் 10, 11-ல் ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். நீங்கள் வாங்கிய கடன்களை சற்று குறைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு உங்களின் பொருளாதாரநிலை நன்றாக இருக்கும். உங்களது பேச்சுத் திறமையால் இருக்கும் இடத்தில் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்ப தால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, கூட்டாளிகளை சற்று அனுசரித்துசெல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது என்றாலும் வேலையாட்களுடைய ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. இயந்திரங்கள் பழுதாவதால் சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சக ஊழியர்களிடம் பேசுகின்றபொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைக் குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து மனநிம்மதி ஏற்படும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை
1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குருபகவான் அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்ப்பதாலும் ராசியாதிபதி புதன்- சுக்கிரன், சூரியனுடன் இந்த வாரத்தில் 9, 10-ல் ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்வதாலும் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அசையும், அசையா சொத்துவகையில் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து மனநிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள்எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டமுடியும் என்பது மட்டுமில்லாமல் தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும்.
திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவ தால் உங்களுக்கு இருந்த வேலைப்பளு சற்று குறையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு மற்றவருடைய பாராட்டுதலை பெறுவது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தற்போது கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஒருசிலருக்கு தங்களது தனித்திறனை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள். வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
.துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். குரு, சூரியன் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்ற காரணத்தால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் கடைசி நேரத்தில் தடைப்படும். வயது மூத்தவர்களிடம் வீண்வாக்குவாதங் கள் செய்யாமல் சூழலுக்கு ஏற்றவாறு நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போடவேண்டிய நேரமாகும்.
நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அடையவேண்டிய லாபத்தை அடைய இடையூறுகள் ஏற்படும். கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் வேலையை இணைத்து செய்வது மட்டுமில்லாமல் நீங்கள்
சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் சொல்லக்கூடிய நேரமாகும். உங்களுக்கு ஒதுக்கப் பட்ட பணியில் மட்டும் சற்று கவனத்தோடு செயல்படு வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, சின்ன பாதிப்பு என்றாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் பெரியோர்களிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம்,
அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய், ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத் தோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது முழுமையாக விலகி வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் குரு, புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது மிகமிக சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துவகையில் தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் வரும் நாட்களில் ஒரு நல்ல தீர்வு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து சிறப்பான லாபத்தை அடைவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு அரசுவழி ஆதரவுகள் தக்க நேரத்தில் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லாவிட்டாலும் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையும் நேரமாகும். நீங்கள் நீண்டநாட்களாக விரும்பிய வாய்ப்புகள் தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்வார்கள். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலைவரை உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. காலபைரவரை வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்ப தால் நீங்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணவரவில் ஒரு ஏற்றஇறக்கமான நிலை இருந்தாலும் இக்கட்டான நேரத்தில் தக்க உதவிகள் கிடைத்து உங்களுடைய அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகி மனநிம்மதி குறைவு ஏற்படும். குறிப்பாக உடன்பிறந்தவர்கள்மூலமாக வீண்வாக்குவாதங்கள் ஏற்பட்டு மனஅமைதி குறையும். எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தாலும் ஒரு சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து விட்டு பயனுள்ள விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு மதியத்துக்கு பிறகு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் வீண் குழப்பங்கள், உங்கள் செயல்களுக்கு தேவையற்ற தடைகள் உண்டாகும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைத்து மனமகிழ்ச்சி கிடைக்கும். வரும் நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் குரு, புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு 3-ல் ராகு இருப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்களுடைய செயல்களுக்கு உடனிருப்பவர் களுடைய ஆதரவானது மிகமிக சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. ஒருசிலருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லி க் கொள்ளும்படி இருக்காது. எந்த ஒரு விஷயத்திலும் நீங்களே நேரடியாக செயல்பட்டால்தான் அடைய வேண்டிய இலக்கை அடையமுடியும். ஒரு சிலருக்கு எந்திரங்கள் பழுதாவதால் சுபச்செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. மாணவ- மாணவியர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், கல்வியில் கவனமும் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் வெளிநபர்கள்மூலம் அனுகூலமான பலன்களைஅடைவீர்கள். புதன், வியாழன், வெள்ளி மாலைவரை உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள், வீண் நிம்மதிக்குறைவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி
1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் மிகவும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுடைய அன்றாடதேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடும், சிக்கனத்தோடும் இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் சனி, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக்கொண்டு எதிலும் நிதானத்தோடு இருப்பது நல்லது. பேச்சில் பொறுமையோடு இருக்கவேண்டும். நீங்கள் வெளிப்படையாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய அளவிற்கு அனுகூலங்கள் கிடைக்காது. தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருநல்ல நிலையை அடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது என்பதால் அவர்களை அனுசரித்து சென்றால்தான் ஒரு சில விஷயங்களில் காரியத்தை சாதிக்கமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிறர் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி இருக்கும் வாய்ப்புகளை இழந்துவிட வேண்டாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தினால்அடையவேண்டியதை அடையமுடியும். மாணவ- மாணவியர்கள் நண்பர்களுடைய பேச்சைக் கேட்காமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது, புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு நெய் தீபமேற்றுவதன்மூலம் நன்மை அடையமுடியும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சனி சஞ்சரிப்பதால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். நீங்கள் எளிதாக முடிக்கலாம் என்றுநினைத்த காரியங்கள் தாமதமாகி உங்களின் மனஅமைதி குறையும். குருபகவான் 3-ல் இருப்பதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். பணவரவுகள் சற்று சாதகமாக இருந்தாலும் எதிர்பாராதவகையில் ஏற்படக்கூடிய வீண்விரயங்கள் காரணமாகஉங்களின் சேமிப்புகள் குறையும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியாது. தொழில்,வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்றாக இருக்கும் நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்கள் தேவையில்லாத நெருக்கடிகளை உங்களுக்கு ஏற்படுத்துவார்கள்.
நீங்கள் உங்களுடைய முயற்சிகளைக் குறித்தநேரத்தில் முடிக்காத காரணத்தால் வீண்செலவுகள் அதிகரிக்கும். வயது மூத்தவருடைய ஆதரவு கிடைப்பதால் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படுவது மட்டுமில்லாமல் உடனிருப்பவர்களிடம் வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சூரியன் 3-ல் இருப்பதால் எதிர்பாராத சில உதவிகள் காரணமாக இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவு செய்வதைவிட படிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாகசஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.