மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் செவ்வாய் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதும், 2-ல் குரு, புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய இனிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சனிபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அதிகாரியுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. மாணவ- மாணவியர்கள் கல்வியில் சுறுசுறுப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறுவார்கள். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் தெம்புடன் செயல்பட முடியும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் நற்பலன்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது நற்பலனைத் தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். ராகுபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் செவ்வாய் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக சின்ன சின்ன விஷயத்திற்குகூட உணர்ச்சிவசப்படக்கூடிய நேரமென்பதால் முடிந்தவரை கோபத்தை குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. பேச்சில் பொறுமையோடு இருப்பதன்மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் தேவையில்லாத போட்டிகள் வரும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. ஒருசிலருக்கு அரசுவழியில் நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் கணக்கு வழக்கு தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராதவகையில் பணவரவுகள் ஏற்படக்கூடிய ஒரு அதிர்ஷ்டகரமான நாட்களாக இருக்கும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் செவ்வாய் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 9-ல் சனி, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- குரு, புதன் சேர்க்கைப்பெற்று 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மற்றவர்களை நம்பி வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். பூர்வீக சொத்துவகையில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச்செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும் என்றாலும் அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் பிறரிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு சகஊழியருடைய வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை நிலவும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து விட்டு பயனுள்ள விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் கைக்கூடி குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 11-ஆம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன், குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து சகலவிதமான தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. செவ்வாய் 10-ல் இருப்பதால் கௌரவமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். கடந்த சில நாட்களாக இருந்த மனக்குழப்பங்கள் படிப்படியாக விலகி அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்ப ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய கிளையை நிறுவ வேண்டும் என்ற உங்களுடைய ஆசைகள் எல்லாம் தற்போது கைகூடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருந்த அலைச்சல் எல்லாம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரியுடைய ஆதரவு மிக மிக சிறப்பாக இருக்கும். நீண்டநாட்களாக புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து மகிழ்ச்சிதரக்கூடிய செய்திகள் தேடிவரும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படக்கூடிய நேரமாகும். வெளியூர் தொடர்புகள்மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதவும், பொருளாதார ரீதியாக உதவிகளும் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன்- புதன், சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து மன நிம்மதி உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடன் பிறந்தவரிடம் சுமூகமான நிலை ஏற்படும். பெண்கள்வழியில் ஒருசில ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குரு 10-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நேரமாகும். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். கூட்டாளிகள்மூலமாக சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொள்வது நல்லது. அதிகம் முதலீடுகள்கொண்ட செயல்களில் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது உத்தமம். இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலர் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொன்னாலும் உங்களின் தனித்திறமையால் அனைத்தையும் எளிதில் சமாளிக்கக்கூடிய ஒருபலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் நல்ல பெயர் எடுக்கமுடியும். வரும் ஞாயிற்றுக்கிழமை வீண் அலைச்சலும், தேவையில்லாத குழப்பங்களும், மன அமைதி குறைவும் உண்டாகும் என்பதால் எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன்- சுக்கிரன், குரு சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ல் இருப்பதால் நீங்கள் திட்டமிடக்கூடிய செயல்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் செய்துமுடித்து சமுதாயத்தில் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதர்களுடைய ஆதரவு உங்களுக்கு சிறப்பாக இருப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். பூமி, மனைமூலமாக தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய விஷயங்களில் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு போட்ட முதலை எளிதில் எடுப்பீர்கள். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையைக் குறித்த நேரத்தில் செயல்படுத்தக்கூடிய அளவுக்கு உங்கள்பலம் சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளும் பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு யோகமும் வரும் நாட்களில் உண்டு. மாணவ- மாணவியர்கள் முடிந்தவரை தேவையற்ற நட்புகளைக் குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்துவது மிகமிக நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் ஏதாவது ஒரு புதிய முடிவுகளை எடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் அதனை அந்த நாட்களில் மேற்கொள்வது மிகமிக நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தேவையற்ற மனகவலைகளும், வீண்செலவுகளும் உண்டாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 8-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானத்தோடு இருப்பது நல்லது. குறிப்பாக எந்த செயல் செய்வது என்றாலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. வயது மூத்தவர்களிடம் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட குடும்பத்தில் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. ஒருசிலருக்கு தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படக்கூடிய ஒரு நேரமென்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரித்து வைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகப்படியாக இருப்பது மட்டுமில்லாமல் அதன்காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வேலையில் இருக்கக்கூடிய நெருக்கடி காரணமாக குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்த்துவிட்டு பயனுள்ள விஷயங்களில் நேரத்தை செலவிடுவது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் உங்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாகவும், எதிர்பாராத தனச் சேர்க்கை ஏற்படக்கூடிய நாட்களாகவும் இருக்கும். புதன், வியாழன் கிழமைகளில் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய நிலை, பிறரிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். முருக வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமிக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய் ருண, ரோக ஸ்தானமான 6-ல் பலமாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் குரு, புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள், கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். நீண்டநாட்களாக தடைப்பட்ட சுப காரியங்கள் தற்போது கைகூடும். திருமணமான புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான நற்செய்தி கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் நீங்கள் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். உங்களுக்கு சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து மனமகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்பட்டு மற்றவர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். நீண்டநாட்களாக உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் தற்போது குறைந்து அதிகாரியிடம் சுமூகமான நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் உங்களுடைய திறமைகளை வெளிகாட்டி பெரியோர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் புதிய முயற்சி ஈடுபடாமல் இருப்பது, முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறுவீர்கள்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வேலைப்பளு காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்து உங்களின் தேவைகள் உரிய நேரத்தில் பூர்த்தியாகும். குடும்பத்தில் உறவினர்களிடம் ஒற்றுமையானது சிறப்பாக இருக்கும். பங்காளிவகையில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகமானநிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் திறம்பட செயல்பட்டு போட்ட முதலை எளிதில் எடுப்பீர்கள். தொழில் தொடர்பாக உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைந்து மனநிம்மதி உண்டாகும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான காரியங்களைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான ஊதியம் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரியுடைய பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சக ஊழியரிடம் பேசுகின்றபொழுது சற்று கவனத்தோடு பேசுவது நல்லது. குறிப்பாக தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று அவருடைய திறமையை வெளிக்காட்டி பாராட்டுதலை பெறக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவதன்மூலமாகவும், தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவதன்மூலமாகவும் வளமான பலன்களைப் பெறுவீர்கள்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் வருட கிரகமான குருபகவான்- புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிக மிக நன்றாக இருக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த நெருக்கடிகளைக் குறைத்துக் கொள்ளக்கூடிய யோகமும், வாங்கிய கடன்களை பைசல் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். அதிக வேலைப்பளு காரணமாக உடல் அசதி, தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழிலில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. உங்களின் தனித்திறமையால் உங்களுக்கு ஏற்படக்கூடிய போட்டி, பொறாமைகளைச் சமாளித்து ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். அதிகம் முதலீடுகள்கொண்ட செயல்களில் மிக சாமர்த்தியமாக செயல்படுவதன்மூலம் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியவாய்ப்புகள் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நாட்களாக இருக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக வளமான பலன்களைப் பெறுவீர்கள்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். சுக்கிரன், புதன் 4-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிலவிய தேவையற்ற கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகமான நிலை உண்டாகும். அசையும், அசையா சொத்துவகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஜென்ம ராசியில் சனி, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒருசில நல்லவாய்ப்புகள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லாவிட்டாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். தொழில் தொடர்பான விஷயங்களை வெளியாட்களிடம் வெளிப்படையாக பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. தொழில் நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு இருந்தால் ஒரு சில அனுகூலங்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடினமான காரியங்களில்கூட நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் முக்கிய முடிவுகளை எடுப்பது, புதிய பொருட்களை வாங்குவது போன்றவற்றில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதன்மூலம் ஏற்ற மிகுந்த பலன்களை அடையமுடியும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்தோடும், பேச்சில் பொறுமையோடும் இருக்கவேண்டிய நேரமாகும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். குருபகவான் 3-ல் இருப்பதால் பணவரவுகள் அவ்வளவு சாதகமாக இருக்காது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் பொறுமையோடு செயல்படவேண்டும். சூரியன் 3-ல் இருப்பதால் ஒரு பெரிய மனிதர்களுடைய நட்பு உங்களுக்கு கிடைப்பதால் இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் கடினமாக உழைத்தாலும் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்பட்டு உங்களின் மனஅமைதி குறையும். வேலையாட்கள் தேவையற்ற கோரிக்கைகளை வைத்து உங்களுக்கு பிரச்சினைகளைத் தருவார்கள். கொடுத்த வேலையைக் குறித்த நேரத்தில் செய்யமாட்டார்கள். அதன்காரணமாக மற்றவர்களுக்கு நீங்கள் பதில் சொல்லக்கூடிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியினுடைய கெடுபிடி சற்று அதிகப்படியாக இருக்கும். நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் வந்து விழும். மாணவ- மாணவியர்கள் முடிந்தவரை தேவையற்ற நட்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்கள் சந்திரன் சாதகமாக இருப்பதால் தடைபட்ட காரியங்களை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் அதில் அனுகூலமான பலன்களை அடைவதற்கான யோகம் உண்டு. சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வதன்மூலமாக ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள்.