சுமார் 37 வயதுடைய ஒருவர், நாடியில் பலன்கேட்க வந்தார்.
என் தந்தை எனது இருபதாவது வயதில் இறந்துவிட்டார். தாய் மட்டும்தான் இருக்கிறாள். அரசுத் துறையில் பணி செய்கிறேன். 28 வயதுமுதல் திருமணம் செய்ய முயற்சி செய்கிறேன் ஆனால் சரியான பெண் அமையவில்லை.
எனது நண்பர் "பாலஜோதிடம்' வாசகர். வாரம் தவறாமல் அந்த புத்தகத்தை வாங்கி விடுவார். அவர்தான் தங்கள் நாடிக் கட்டுரைகளைப் படித்து விட்டு, தங்களைப் பற்றிக் கூறி, "ஜீவநாடியில் பலன் கேட்டுப்பார். அகத்தியர் நல்லவழியைக் காட்டுவார்' என்று சொன்னார். அவரும் என்னுடன் வந்துள்ளார்; வெளியில்தான் அமர்ந்துள் ளார்'' என்றார்.
"உங்கள் நண்பரை, உள்ளே அழைத்துவாருங்கள்'' என்றேன்.
அழைத்துவந்தார். "நண்பரின் கஷ்டம் தீர நல்ல மனதுடன் உதவியுள்ளீர்கள்'' என்று கூறிவிட்டு, "எட்டு
சுமார் 37 வயதுடைய ஒருவர், நாடியில் பலன்கேட்க வந்தார்.
என் தந்தை எனது இருபதாவது வயதில் இறந்துவிட்டார். தாய் மட்டும்தான் இருக்கிறாள். அரசுத் துறையில் பணி செய்கிறேன். 28 வயதுமுதல் திருமணம் செய்ய முயற்சி செய்கிறேன் ஆனால் சரியான பெண் அமையவில்லை.
எனது நண்பர் "பாலஜோதிடம்' வாசகர். வாரம் தவறாமல் அந்த புத்தகத்தை வாங்கி விடுவார். அவர்தான் தங்கள் நாடிக் கட்டுரைகளைப் படித்து விட்டு, தங்களைப் பற்றிக் கூறி, "ஜீவநாடியில் பலன் கேட்டுப்பார். அகத்தியர் நல்லவழியைக் காட்டுவார்' என்று சொன்னார். அவரும் என்னுடன் வந்துள்ளார்; வெளியில்தான் அமர்ந்துள் ளார்'' என்றார்.
"உங்கள் நண்பரை, உள்ளே அழைத்துவாருங்கள்'' என்றேன்.
அழைத்துவந்தார். "நண்பரின் கஷ்டம் தீர நல்ல மனதுடன் உதவியுள்ளீர்கள்'' என்று கூறிவிட்டு, "எட்டு வருடமாகப் பெண் தேடிக்கொண்டிருப்பதாகக் கூறுகிறீர்கள். ஜோதிடர்களிடம் ஜாதகப் பலன் பார்த்தீர்களா? அவர்கள் கூறிய பரிகாரங்களைச் செய்தீர்களா?'' என்றேன்.
எவ்வளவு ஜோதிடர்களைப் பார்த்தோம்; எவ்வளவு பணம் செலவுசெய்து எங்கெங்கோ அலைந்து பரிகாரங்கள், தானம், தர்மம் செய்தோம் என்ற கணக்கில்லை. ஒரு பெரிய, விமரிசையான கல்யாணத்திற்கு எவ்வளவு ரூபாய் செலவாகுமோ, அவ்வளவு பணம் செலவுசெய்தோம். எனது நண்பரின் வற்புறுத்தலால்தான் ஜீவநாடியில் பலன்கேட்க வந்தேன்'' என்றார்.
நண்பரோ, "பாலஜோதிடம் புத்தகம்தான் அகத்தியர் ஜீவநாடியை வழிகாட்டி எங்களை இங்கு அழைத்து வந்தது. அகத்தியர்தான் என் நண்பனின் திருமணம் நடந்துமுடிய அருள்புரிய வேண்டும்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றிப் பலன்கூறத் தொடங்கினார்.
"இவனது திருமணத்தடைக்கு இவன்தான் காரணம். தனக்கு மனைவியாக வரப் போகிறவள் அழகாக இருக்கவேண்டும்;
அரசு உத்தியோகம் பார்க்கவேண்டும்; நல்ல வசதியுள்ள குடும்பமாக இருக்கவேண்டும்; ஓரளவு நகை, சீர்வரிசை, செய்பவர்களாக இருக்கவேண்டும் என்று திட்டம் போட்டு, கனவு, கற்பனை செய்துகொண்டு பெண் தேடுகிறான்.
இந்த பிறவியில் இவனுக்கு மனைவியாக வரக்கூடிய பெண் யார் என்று அடையாளம் கூறுகிறேன். அவளை மணந்துகொள்ளச் சொல்.
இவனுக்கு மனைவியாக அமையக்கூடிய பெண் இவன் சொந்த ஊரிலேயே இருக்கிறாள். இவன் தந்தை இறந்த பின்பு, இவன் குடும்பத்திற்கும், இவன் படிப்பிற்கும் உதவிசெய்து பாதுகாப்பாக இருந்தவன் மகளைத்தான் இவன் மணந்து கொள்ளவேண்டும். அவனும் இவன் தாய்வழியில் மாமன் முறை உறவுக்காரன்தான். கணவன் இறந்தபிறகு தன் குடும்பத்திற்கு அவன் செய்த உதவிக்கு நன்றிக் கடனாக அவன் மகளைத்தான், தன் மகனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டுமென்று இவன் தாய் மனதில் எண்ணியுள்ளாள்.
அந்தப் பெண்ணைப் பற்றியும், அவள் தந்தையைப் பற்றியும் கூறுகிறேன், அந்தப் பெண் லட்சுமியின் நாமங்களில் ஒன்றைப் பெயராகக் கொண்டவள். அவள் தந்தை முருகனின் நாமங்களில் ஒன்றைப் பெயராகக் கொண்டவன். அவர்கள் வீடு கிழக்கு- மேற்கு வீதியில் தெற்கு- வடக்கு வாசல் உள்ள வீடு. அவள் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் ஒரு வேப்ப மரம் உள்ளது. அந்த மரத்தின் கீழே, ஒரு திரிசூலத்தை ஊன்றி வைத்து, அந்த வீட்டுக்காரன், அம்மனாக வழிபட்டு வருகிறான்'' என்றார் அகத்தியர்.
ஓலையைப் படித்துவிட்டு, அவர்களைப் பார்த்தேன். இரண்டு பேர் முகத்திலும் எந்த சலனமும் இல்லை. சிறிதுநேரம் சென்ற பின்பு, அவன் நண்பர், "நீங்கள் கூறியது உண்மைதான். அந்தப் பெண்ணிற்கு 26 அல்லது 27 வயதிருக்கும். இவனைவிட பத்து வயது சிறியவள். படிப்பும் அதிகமில்லை. அவளை எப்படி திருமணம் செய்வது?'' என்றார்.
"ஆண்- பெண், திருமணங்களைக் கடவுளோ கிரகங்களோ பரிகாரங்களோ தீர்மானித்து செய்வதில்லை. இந்த பிறவியில், விதிப்படி மனைவியாக வாழப் போகிறவள் அந்தப் பெண்தான். இவன் தாயின் ஆசையும் அதுதான். இந்த மகன் தனது மனைவி பற்றிய கனவுகள், கற்பனைகளை விட்டுவிட்டு, அவளைத் திருமணம் செய்துகொள்ளட்டும்.
அமைதியான, ஆனந்த வாழ்க்கை அமையும்'' என்று கூறிவிட்டு ஓலையிலிருந்து மறைந்தார்.
அவருடன் வந்த நண்பரும், "அம்மாவின் ஆசைப்படி, அகத்தியர் கூறியபடி, அந்தப் பெண்ணையே திருமணம் செய்து வைக்கிறேன்'' என்று கூறி, விடை பெற்றுச் சென்றார்கள்.
செல்: 99441 13267