கடந்த இதழில் பஞ்ச அங்கங்களில் வாரம், திதி பற்றிப் பார்த்தோம். இங்கு நட்சத்திரம், யோகம், கரணம் பற்றிக் காணலாம்.
3. நட்சத்திரங்கள்
இது பஞ்சாங்கத்தின் மூன்றாவது அங்க மாகும். நட்சத்திரம் பஞ்சபூதங்களில் வாயு வைக் குறிக்கும். ஒருவரின் சிந்தனை, குணா திசயத்தைக் குறிக்கும். நட்சத்திரம் ஒருவரின் தினசரி புத்தி, செயல்பாட்டைக் குறிக்கும். பற்றைத் துறப்பது- அதைப்பற்றிக் கற்றுக் கொள்ளுதல், ஆத்மாவின் விருப்பங்கள் அனைத்தும் நட்சத்திரத்தில் அடங்கும். ஒருவரின் பிறந்த நட்சத்திரம் அவரின் செயல்பாட்டைத் தீர்மானிக்கும். பஞ்சாங்கத் தின் மூன்றாவது அடிப்படைக் கூறுகளில் ஒன்றான நட்சத்திரம் மனித வாழ்வியல் பலனை நிர்ணயம் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது.
ராசி மண்டலத்தி லுள்ள 12 ராசிகளிலும் அமைக்கப்பட்டுள்ள நட்சத்திரங்கள் வழி யாகத்தான் ஒன்பது கிரகங்களும் வலம் வருகின்றன. ஒவ்வொரு கிரகமும் மேஷம்முதல் மீனம்வரையுள்ள பன்னிரண்டு ராசி களில், அதனுள் குறிக் கப்பட்டுள்ள ஏதேனு மொரு நட்சத்திர பாதத்தில்தான் சுற்றிவர முடியும். சந்திரன் ராசி மண்ட லத்தை சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பயணிக்கும் நட்சத்திரமே அந்த நேரத்திற்குரிய நட்சத்திர மாகக் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் மூன்று நட்சத்திரங்கள் (9ல3=27) வீதம் மொத்தம் 27 நட்சத்திரங்கள்.
அவை 1. அஸ்வினி, 2. பரணி, 3. கிருத்திகை, 4. ரோகினி, 5. மிருகசீரிடம், 6. திருவாதிரை, 7. புனர்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம், 10. மகம், 11. பூரம், 12. உத்திரம், 13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. சுவாதி, 16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை, 19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம், 22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம், 25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி.
27 நட்சத்திரங்களை தலையற்ற நட்சத் திரங்கள், உடலற்ற நட்சத்திரங்கள், காலற்ற நட்சத்திரங்கள் என மூன்றாகப் பிரிக்கலாம்.
தலையற்ற நட்சத்திரங்கள்: சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் இவற்றிற்கு முதல் பாதம் ஒரு ராசியிலும், மீதம் மூன்று பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்குமென்பதால் இவை தலையற்ற நட்சத்திரங்கள் எனப் படும். தலையற்ற நட்சத் திரங்கள் வரும் நாளில், தலைப் பகுதியிலுள்ள நோய்களுக்கும் கண், காது, மூக்கு, மூளை சம்பந்தப்பட்ட நோய் குணமாகவும் முதன்முதலில் மருத்து வரை சந்திக்கக் கூடாது. தலைமைப் பொறுப்பேற்கக் கூடாது. இந்த நட்சத்திர நாட்களில் தலைப்பதவியை ஏற்றால் நிலைத்திருக்காது அல்
கடந்த இதழில் பஞ்ச அங்கங்களில் வாரம், திதி பற்றிப் பார்த்தோம். இங்கு நட்சத்திரம், யோகம், கரணம் பற்றிக் காணலாம்.
3. நட்சத்திரங்கள்
இது பஞ்சாங்கத்தின் மூன்றாவது அங்க மாகும். நட்சத்திரம் பஞ்சபூதங்களில் வாயு வைக் குறிக்கும். ஒருவரின் சிந்தனை, குணா திசயத்தைக் குறிக்கும். நட்சத்திரம் ஒருவரின் தினசரி புத்தி, செயல்பாட்டைக் குறிக்கும். பற்றைத் துறப்பது- அதைப்பற்றிக் கற்றுக் கொள்ளுதல், ஆத்மாவின் விருப்பங்கள் அனைத்தும் நட்சத்திரத்தில் அடங்கும். ஒருவரின் பிறந்த நட்சத்திரம் அவரின் செயல்பாட்டைத் தீர்மானிக்கும். பஞ்சாங்கத் தின் மூன்றாவது அடிப்படைக் கூறுகளில் ஒன்றான நட்சத்திரம் மனித வாழ்வியல் பலனை நிர்ணயம் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது.
ராசி மண்டலத்தி லுள்ள 12 ராசிகளிலும் அமைக்கப்பட்டுள்ள நட்சத்திரங்கள் வழி யாகத்தான் ஒன்பது கிரகங்களும் வலம் வருகின்றன. ஒவ்வொரு கிரகமும் மேஷம்முதல் மீனம்வரையுள்ள பன்னிரண்டு ராசி களில், அதனுள் குறிக் கப்பட்டுள்ள ஏதேனு மொரு நட்சத்திர பாதத்தில்தான் சுற்றிவர முடியும். சந்திரன் ராசி மண்ட லத்தை சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பயணிக்கும் நட்சத்திரமே அந்த நேரத்திற்குரிய நட்சத்திர மாகக் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் மூன்று நட்சத்திரங்கள் (9ல3=27) வீதம் மொத்தம் 27 நட்சத்திரங்கள்.
அவை 1. அஸ்வினி, 2. பரணி, 3. கிருத்திகை, 4. ரோகினி, 5. மிருகசீரிடம், 6. திருவாதிரை, 7. புனர்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம், 10. மகம், 11. பூரம், 12. உத்திரம், 13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. சுவாதி, 16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை, 19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம், 22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம், 25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி.
27 நட்சத்திரங்களை தலையற்ற நட்சத் திரங்கள், உடலற்ற நட்சத்திரங்கள், காலற்ற நட்சத்திரங்கள் என மூன்றாகப் பிரிக்கலாம்.
தலையற்ற நட்சத்திரங்கள்: சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் இவற்றிற்கு முதல் பாதம் ஒரு ராசியிலும், மீதம் மூன்று பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்குமென்பதால் இவை தலையற்ற நட்சத்திரங்கள் எனப் படும். தலையற்ற நட்சத் திரங்கள் வரும் நாளில், தலைப் பகுதியிலுள்ள நோய்களுக்கும் கண், காது, மூக்கு, மூளை சம்பந்தப்பட்ட நோய் குணமாகவும் முதன்முதலில் மருத்து வரை சந்திக்கக் கூடாது. தலைமைப் பொறுப்பேற்கக் கூடாது. இந்த நட்சத்திர நாட்களில் தலைப்பதவியை ஏற்றால் நிலைத்திருக்காது அல்லது அவப்பெயரே மிஞ்சும்.
உடலற்ற நட்சத்திரங்கள்: செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இவற்றிற்கு முதலிரண்டு பாதங்கள் ஒரு ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்குமென்பதால் உடலற்ற நட்சத்திரங்கள் எனப்படும். உடலற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில், உடல்வலி, ஜீரண உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் அகல முதன்முதலில் மருந்து மாத்திரைகளை சாப்பிடக்கூடாது.
காலற்ற நட்சத்திரங்கள்: குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு முதல் மூன்று பாதங்கள் ஒரு ராசியிலும், கடைசி பாதம் மட்டும் அடுத்த ராசியிலும் இருக்கும். காலற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில், உத்தியோகம் சம்பந்தமாக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு அது அனுகூலமாக இருக்காது. கால்வலி, காலில் உள்ள நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு கள் அகல மருத்துவரை சந்திக்ககூடாது.
பொதுவாக தலையற்ற, உடலற்ற, காலற்ற நட்சத்திர நாட்களில் திருமணம், கிரகப்பிரவேசம் வைக்கக்கூடாது. தூரதேசப் பயணங்களைத் தவிர்கவேண்டும்.
அஸ்வினி, ரோகிணி, பூசம், ஹஸ்தம், அனுஷம், மூலம், திருவோணம், உத்திரட் டாதி மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் சுப நிகழ்வுக்கு மிகவும் உன்னதமானவை.
பரணி, மிருகசீரிடம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சுவாதி, கேட்டை, பூராடம், உத்திராடம், அவிட்டம் மற்றும் சதயம் மத்திமமான பலனைத்தரும் சுப நட்சத்திரங்க ளாகும்.
கிருத்திகை, திருவாதிரை, புனர்பூசம், சித்திரை, விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திர நாட்களில் சுப நிகழ்வுகளைத் தவிர்ப்பது உத்தமம்.
தீதுறு நட்சத்திரங்களான பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கொடுத்தால் திரும்பவராது. நகை அடமானம் வைக்கக்கூடாது.
4. யோகங்கள்
பஞ்சாங்கத்தின் நான்காவது அங்கம் யோகம். விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கு முள்ள மொத்த தூரமாகும். அதாவது சூரியன், சந்திரனின் ஸ்புடங்களைக் கூட்டினால் வருவதே யோகமாகும். யோகங்கள் மொத்தம் 27. இதனை நாம யோகம் என்பார்கள். பஞ்ச பூதங்களில் ஆகாச தத்துவத்தைக் குறிக்கும். யோகம் ஒருவருக்கு வாழ்க்கையில் இருக்கும் பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதம், அறிவாற்றல், சந்தோஷத்தைக் குறிப்பிடும்.
1. விஷ்கம்பம், 2. ப்ரீதி, 3. ஆயுஷ்மான், 4. சௌபாக்யம், 5. சோபனம், 6. அதிகண்டம், 7. சுகர்மம், 8. திருதி, 9. சூலம், 10. கண்டம், 11. விருத்தி, 12. துருவம், 13. வியாகாதம், 4. ஹர்ஷணம், 15. வஜ்ரம், 16. சித்தி, 17. வியதீபாதம், 18. வரீயான், 19. பரீகம், 20. சிவம், 21. சித்தம், 22. சாத்தியம், 23. சுபம், 24. சுப்பிரமம், 25. பிராம்யம், 26. ஐந்திரம், 27. வைதிருதி.
ப்ரீதி, ஆயூஷ்மான், சௌபாக்யம், சோபனம், சுகர்மம், விருத்தி, ஹர்ஷனம், வஜ்ரம், சித்தி, வரீயான், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரமம், பிராம்யம், ஐந்திரம் ஆகியவை சுப நிகழ்வுக்கு உகந்த சுபயோகங்களாகும்.
விஷ்கம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், துருவம், வியாகாதம், வியதீபாதம், பரீகம் மற்றும் வைதிருதி ஆகியவை அசுப நாமயோகங்கள் என்பதால் சுபநிகழ்வுகளைத் தவிர்க்கவேண்டும்.
5. கரணங்கள்
பஞ்சபூதங்களில் பிருதிவி தத்துவத்தைக் குறிக்கும். கரணம் ஒருவர் எவ்வழியில் கர்மம் சேர்க்கிறார் என்பதை சுட்டிக்காட்டும். கரணமென்பது ஒரு திதியில் பாதியாகும்.
ஆறு பாகை கொண்டது ஒரு கரண மாகும். இரண்டு கரணம் கொண்டது ஒரு திதியாகும்.
கரணங்கள் 11 வகைப்படுகின்றன. மனிதர்கள் தாங்கள் பிறக்கும் கரணத்தின் பறவைகள், மிருகங்களின் குணங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்.
1. பவ கரணம்: இந்த கரணத்தின் விலங்கு சிங்கம் என்பதால், இந்த கரணத்தில் பிறந்தவர்கள் தைரியம் மற்றும் தன்னம் பிக்கை மிகுந்தவர்கள். எந்த காரியத்திலும் பின்வாங்காத தைரியம் உடையவர்கள். வீர தீர சாகசம் புரியும் இராணுவம், காவல் துறை போன்ற பணிகளில் சிறப்பாகச் செயல்படுவார்கள். மேலும் செல்வந்தர்கள்; ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப் பிடிப்பவர்கள்; சுகவாசிகள். இக்கரணத்தின் அதிபதி செவ்வாய். இதன் விலங்கு சிங்கம் என்பதால், இவர்கள் நாமக்கல் நரசிம்மரை வழிபடுவதால் மேன்மை பெறமுடியும்.
2. பாலவ கரணம்: இந்த கரணத்தின் விலங்கு புலி என்பதால், இவர்கள் எந்தவொரு காரியத்திலும் துணிந்து இறங்கி அதில் வெற்றியும் பெறுவார்கள். மிகுந்த தைரியசாலிகளான இவர்கள் அழகான தோற்றம் உடையவர்கள். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்; புகழ் உடைய வர்கள்; முயற்சியுடையவர்கள்; சிற்றின்பப் பிரியர்கள்; நீங்காத செல்வமுடையவர்கள். இதன் அதிபதி ராகு. இதன் விலங்கு புலி என்பதால், புலி வாகனன் சபரிமலை ஐயப்பன், தர்மசாஸ்தா மற்றும் கிராம தேவதைகளை வழிபட சுபம் உண்டாகும்.
3. கௌலவ கரணம்: விலங்கு- பன்றி. இக்கரணத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற் றல் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒருசிலர் தங்களின் சுயநலம் காரணமாக இரக்க மின்றி, பிறருக்குத் துன்பம் தருபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் அவப் பெயரைச் சம்பாதிப்பார்கள். இதன் காரணமாக இவர்கள் தங்கள் வாழ்வில் மிகவும் கஷ்டப்படுவார்கள். அரசாங்கப் பணியாளராக இருப்பார்கள். நல்ல ஆச்சாரமுடையவர்கள்; தந்தை- தாய்மீது பற்றுள்ளவர்கள்; நிலபுலன்கள், வாகனவசதி உண்டு. இதன் அதிபதி சனி. இதன் விலங்கு பன்றி என்பதால், கடலூர் ஸ்ரீ முஷ்ணம் பூவராகப் பெருமாளை வழிபட இன்பம் அதிகமாகும்.
4. தைதுல கரணம்: விலங்கு- கழுதை. இவர்கள் எப்போதுமே இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு பிரச்சினையில் தங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும், அதை அதிகாரத் தன்மையுடன் தீர்க்காமல் அமைதியான முறையில் தீர்ப்பார் கள். இயற்கையிலேயே மனவுறுதி கொண்ட வர்களாக இருப்பதால், எப்படிப்பட்ட சவால்களையும் ஏற்றுக்கொண்டு அதில் வெற்றியடைவர். எதிர்காலத்திற் கான பாதுகாப்பைக் கொடுக்கும் உத்தி யோகங்களில் சேர்ந்து பணிபுரிவர். குறிப்பாக அரசாங்கத்தில் பணிபுரிவார்கள். இதன் அதிபதி சுக்கிரன் என்பதால் ஜேஷ்டா தேவியை வழிபடலாம்.
5. கரசை கரணம்: இதன் விலங்கு யானை என்பதால் மக்கள் தலைவர்களாக- அச்சமற்ற வர்களாக- அரசர்களுக்கு ஆலோசனை சொல்பவர்களாக- பகைவரை வெல்பவர் களாக இருப்பார்கள். இந்த நபர்கள் எந்த வொரு விஷயத்தையும் மிகவும் திட்டமிட்டு செய்யக்கூடியவர்கள். சிறந்த பேச்சுத்திறனும் அதிகம் பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். கற்பனைத்திறன் அதிகம் கொண்டவர்கள் என்பதால் ஓவியம், சிற்பம், கவிதை, நாடகம், நடனம் போன்ற கலை சம்பந்தமான துறைகளில் சாதிப்பர். எல்லாருக்கும் உதவும் தரும சிந்தனையுடையவர்கள். இதன் அதிபதி சந்திரன். இதன் விலங்கு யானை என்பதால் விநாயகரை வழிபடலாம்.
6. வணிசை கரணம்: இதன் விலங்கு எருது என்பதால் இவர்களிடம் சிறந்த நிர்வாகத்திறன் இருக்கும். படித்தவர்; சாமர்த்தியசாலி; சுகவாசி; அன்பு நிறைந்தவர்கள். மேலும் வியாபாரத் தில் சாதிக்கக்கூடிய மிகச்சிறப்பான புத்தி சாலித்தனம் இருப்பதால் இவர்கள் எவ்வகையான தொழில்களிலும் முன்னிலைக்கு வந்துவிடுவர். மற்றவர்களிடம் இனிமையாகப் பேசி தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக்கொள்வார்கள். காரியங்களை திட்டமிட்டுச் செய்து வெற்றிகளைப் பெறுவார்கள். இதன் அதிபதி சூரியன் என்பதால் சிவ வழிபாடு சிறப்பு.
7. பத்திரை கரணம்: (கோழி- சேவல்). இந்த கரணத்தில் பிறந்தவர்கள் பயமறியாதவர்கள். சபலகுணம் உண்டு. மிகுந்த கருமித்தனமும், சஞ்சல மனமும் படைத்தவர்கள். மந்த குணத்தால் எந்த காரியத்தையும் சற்று தாமதமாகவே செய்து முடிப்பர். ஒவ்வொரு விஷயத்தையும் அறிந்துகொள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பர். மனிதாபிமான குணம் இருக்கும். இவர்களை யாரவது தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இதன் அதிபதி கேது. இதன் பறவை உருவம் சேவல் என்பதால் திருச்செந்தூர் முருகனை வழிபடலாம்.
8. சகுனி கரணம்: (காகம்). இக்கரணத்தில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள். புத்திசாலித்தனமும், சிறந்த அறிவாற்றலும் கொண்டவர்கள். மேலும் இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமிருப்பதால் இவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். எதிர்காலம் அறிந்தவர்கள். மிகுந்த செல்வம், தைரியம் உள்ளவர்கள். தங்களை மிகவும் பக்குவப்பட்ட மனிதர்களாக மாற்றிக்கொள்வார்கள். நோய் தீர இந்த கரணத்தில் மருந்து உட்கொள்ளலாம். இதன் அதிபதி சனி. இதன் பறவை காகம் என்பதால் சனி பகவானை வழிபடலாம்.
9. சதுஷ்பாத கரணம்: (நாய்). இக் கரணத்தில் பிறந்தவர்கள் சுதந்திரத் தன்மை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே பிறருக்குக்கீழ் அவர்கள் உத்தரவு களுக்குப் பணிந்து வேலைசெய்யாமல், தானே முதலாளியாக இருக்கக்கூடிய வியாபாரம், தொழில்களையே செய்வார் கள். பிறரிடம் அனைத்திலும் உண்மையாக நடந்துகொள்வார்கள். மிகவும் கடினமாக உழைக்கக்கூடிய தன்மை கொண்டவர் களாகவும் இருப்பார்கள். நிலையற்ற புத்தியுடையவர்கள். ஆரோக்கியக் கேடு, கொடூர குணமுண்டு. வறுமையுடையவர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவர்கள். இக்கரணத்தில் சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் கொடுப்பது சிறந்த பலன்களைக் கொடுக்கும். இதன் அதிபதி குரு. இதன் விலங்கு நாய் என்பதால் பைரவர் வழிபாடு நல்லது.
10. நாகவ கரணம்: (பாம்பு). இந்த கரணத்தில் பிறந்தவர்கள் வித்வான்; கோபம் உடையவர்கள்; குறைவாக சாப்பிடுவார்கள்; துன்பத்தை ஆள்பவர்கள். நாகவ காரணத் தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பூமி சம்பந்தப்பட்ட சுரங்கம், தாதுக்களை வெட்டியெடுப்பது போன்ற தொழில் களையோ, வியாபாரங்களையோ செய்வர். இவர்கள் ஆன்மிக வழியில் சென்றால், சிறந்த ஞானியாவார்கள். ஒருசிலர் பிறருக்குத் தீமை விளைவிக்கும் காரியங்களைச் செய்வர். இதன் அதிபதி ராகு. இதன் விலங்கு பாம்பு என்பதால் சர்ப்ப வழிபாடு சிறப்பு.
11. கிம்ஸ்துக்கினம் கரணம்: (புழு). இவர்கள் சுகவாசி; நகைச்சுவை உணர்வு மிக்கவர்; தன்னம்பிக்கை, சிறந்த அறிவாற்றலை உடையவர்கள். தீயவர்களுடன் சகவாசம் கொள்ளாதவரை இவர்கள் தவறான வழியில் செல்வதில்லை. இதன் அதிபதி புதன். இவர்கள் மகாவிஷ்ணுவை வழிபடலாம்.
செல்: 98652 20406